Monday, March 30, 2015

தொலைதூர அரசு பஸ்களில் ஏப்ரல் 1 முதல் ‘வை-ஃபை’

தனியார் பஸ்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் வரும் 1-ம் தேதி முதல் தொலை தூரம் செல்லும் அரசு பஸ்களில் கம்பியில்லா இணையதள (வை-ஃபை) வசதி வழங்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித் துள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில அரசு பஸ் ஊழியர் சங்க தலைவர் ஸ்ரீஹரி நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தனியார் பஸ்களின் போட்டியை சமாளிக்க ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் அரசு சொகுசு பஸ்களில் வை-ஃபை வசதி வழங்கப்படும்.

இந்த வசதியை பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து இந்த வசதி தேவைப் படும் பயணிகளிடம் கூடுதலாக மணிக்கு ரூ.10 வசூலிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக விசாகப்பட்டினம், குண்டூர், திருப்பதி ஆகிய நகரங் களில் இருந்து புறப்படும் அனைத்து அரசு சொகுசு பஸ்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.

மேலும் இந்த வசதி உள்ள பஸ்களில் ஒரு கணினியும் இருக்கும். இதில் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் 500 சி.டி.கள் இருக்கும். இதில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான படத்தைக் காணலாம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...