Monday, March 30, 2015

ரூ.5-க்கு பயணச் சீட்டு எடுத்துவிட்டு 10 ரூபாய் பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சமாளிக்கலாமா? - ‘திட்டத்துடன்’ வரும் பயணிகளுக்கு அபராதம் நிச்சயம்



ரயில்வே பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு வரும் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ரூ.5-க்கான பயண டிக்கெட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத பிளாட்பாரத்தில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. அதே நேரம், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய்தான். அது மட்டுமின்றி, பிளாட்பார டிக்கெட் எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், பாசஞ்சர் ரயில் டிக்கெட் அந்த நாள் முழுக்க செல்லுபடியாகும். புறநகர் ரயில் டிக்கெட்கூட 1 மணி நேரம் வரை செல்லுபடியாகும். எனவே, 5 ரூபாய்க்கான பயணச் சீட்டை எடுத்து வைத்துக்கொண்டு, பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சமாளித்துவிடலாம் என்ற மனநிலையில் சில பயணிகள் உள்ளனர்.

இதற்கு வாய்ப்பு இல்லை. ரயில்வே நிலையங்களில் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்கின்றனர் ரயில்வே உயர திகாரிகள். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு தினமும் 7 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். பயணிகள், அவர்களை வழி யனுப்ப வருபவர்களைவிட மற்றவர்களின் கூட்டம் அதிகம் உள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் ரகசிய ஆய்வு நடத்தியது. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக தங்கியிருப்பவர்கள் பலர் தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வந்து காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டுப் போகின்றனர். கட்டிட வேலைக்கு செல்பவர்கள் பலர், ரயில் நிலையத்திலேயே படுத்து தூங்கி, காலையில் எழுந்து குளித்துவிட்டுச் செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து சொந்த வேலைக்காக வருபவர்கள் பலரும் ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், பல பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் பயன்பாட்டில் இல்லை.

இவர்கள் நடமாட்டத்தைக் குறைக்கவே பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. பிளாட்பார டிக்கெட் இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் முறை ஏப்.1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த ரயில்கள் வரும் இடத்துக்கு மட்டும் செல்லவேண்டும். புற நகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த பகுதிக்கு மட்டும் போய் வர வேண்டும். பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் ரூ.10-க் கான பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். ரூ.5 கட்டணம் கொண்ட பயணச் சீட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத பிளாட்பாரத்தில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VALLIAMMAI COLLEGE WINS "A" GRADE FROM NAAC

CHETTINAD ADMISSION NOTIFICATION 2015-15


மருத்துவச் சேவையில் குறைபாடா?

ஒரு மனிதன் வாழ்நாளில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது தனது உடல் நலத்தைப் பேணுவதில்தான். இதற்காக நடைப் பயிற்சி, யோகா, தியானம் போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்கிறான்.

காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற சிறிய அளவிலான நோய்களைத் தவிர, பிறவற்றை அறியாத நிலையில் மக்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தனர். மேலும், அவற்றைக் குணப்படுத்துவதற்கு அவர்கள் அலோபதி மருத்துவரை நாடிச் செல்லவில்லை. மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்தி குணம் அடைந்தனர்.

ஆனால், இன்றைய நிலை? தலைவலி என்று மருத்துவமனைக்குச் சென்றால், பல்வேறு பரிசோதனைகளைச் செய்து, பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக வசூலித்துவிட்டு, "உங்களுக்கு மூளையில் கட்டி உள்ளது. இதை உடனடியாக அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து' என மருத்துவர் நமக்கு பீதியை ஏற்படுத்துகிறார்.

வசதி படைத்தவர்களால் சில லட்சங்களைச் செலவிட முடியும். ஆனால், ஏழைகளுக்கு இது சாத்தியமா? மேலும், மூளையில் கட்டி ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவது இல்லை.

ஏழைகளுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குபவை அரசு மருத்துவமனைகள். அங்குதான் உயர் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கென சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்குகின்றன.

தமிழக அரசு 2015-16-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத் துறைக்கென ரூ.8,245 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 4.52 சதவீதமாகும்.

2010-11-ஆம் நிதியாண்டில் இத் துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.4,395.31 கோடி. அதாவது, ஆண்டுக்கு ஆண்டு இத் துறைக்கென ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரித்து வருகிறது.

இதுதவிர, தேசிய சுகாதார இயக்கம், உலக வங்கி இவற்றின் உதவியுடன் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கென கணிசமான நிதி ஒதுக்கப்படுகிறது.

மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், புதிய மருத்துவமனைகளையும், புதிய மருத்துவக் கல்லூரிகளையும் துவக்குவதிலும் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.735.42 கோடியும், உபகரணங்கள் வாங்க ரூ.360.51 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.

கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பெரு நகரங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் வரை பல்வேறு நிலைகளில் மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு வசதிகள் செய்யப்பட்டிருந்தும், முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

ஒரு கர்ப்பிணிப் பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றால், அங்கு அவரது பிரசவத்துக்கு உரிய வசதிகள் இல்லை என்று அருகில் உள்ள வட்ட அளவிலான மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கர்ப்பிணி படும் துயரம் சொல்லி மாளாது. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளி உயிரிழந்த உதாரணங்கள் ஏராளம். இதனால், மருத்துவமனைகளைச் சேதப்படுத்துவதும், மருத்துவமனை ஊழியர்களைத் தாக்குவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன.

இறக்குமதி செய்யப்படும் பல்வேறு நவீன இயந்திரங்களை இயக்குவதற்கு போதிய தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லாததால், அவை பல மருத்துவமனைகளில் காட்சிப் பொருளாக உள்ளன. இதில் வீணாவது மக்களின் பணம் என்பது ஏன் நிர்வாகத்துக்குத் தெரிவதில்லை?

மேலும், அரசு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சைக்கு வரும் நோயாளி, அங்குள்ள சிறப்பு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்.

அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்று கூறினாலும், ஒவ்வொரு சோதனைக்கும் சில நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டாவிட்டால், எதுவும் நடக்காது.

அண்மையில் தென் மாவட்டம் ஒன்றின் தலைநகரில் உள்ள தலைமை மருத்துவமனையில் நிகழ்ந்த காட்சி நமது வேதனையை அதிகரிக்கிறது. இரண்டு வயதுக் குழந்தைக்கு காய்ச்சல். நேரம் இரவு 10 மணி. அரசு மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச் செல்கிறார் தந்தை. பணி நேரத்தில் மருத்துவர் அங்கு இல்லை. இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

காத்திருங்கள், மருத்துவர் வருவார் என ஒருவர் கூறுகிறார். குழந்தையுடன் அரை மணி நேரம் காத்திருக்கிறார் அந்தத் தந்தை. அருகிலிருந்த ஓர் அறையில் இருந்து தூங்கி எழுந்த நிலையில், அரைத் தூக்கத்துடன் வெளியே வருகிறார் மருத்துவர். குழந்தையுடன் மருத்துவர் முன் அமர்கிறார் தந்தை.

குழந்தைக்கு என்ன பிரச்னை என்று தந்தையிடம் கேட்ட அந்த மருத்துவர், குழந்தையைப் பரிசோதிக்காமல் மருந்து, மாத்திரைகளை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு, மீண்டும் தமது தூக்கத்தைத் தொடர அறையை நோக்கிச் செல்கிறார்.

அரசுப் பணத்தில் படித்து, அரசுப் பணியைப் பெற்று, கைநிறைய ஊதியம் பெற்றுக் கொண்டு இப்படி விரும்பத்தகாத வகையில் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம்?

இதற்காக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் முறையாக பணிபுரியவில்லை என்று கூறவில்லை. சிலர் செய்யும் தவறுகள், ஒட்டுமொத்த மருத்துவர் இனத்தையும் பழிக்கு ஆளாக்குகிறது என்பது கசப்பான உண்மை.

வேண்டாமே மானியம்!

சமையல் எரிவாயு உருளை பெறுகின்ற வசதி படைத்த நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று தாங்களாகவே அறிவிக்க முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுதில்லியில் மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்ற எரிசக்தி சங்கம் நிகழ்வில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட பிரதமர், இதுவரை 2.80 லட்சம் நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று விட்டுக்கொடுத்திருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி சேமிப்பு கிடைக்கும். இதனை ஏழை, எளியோர் நலனுக்காகப் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வசதி படைத்தோருக்கு சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படுவது குறித்து அரசு யோசித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியபோது பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதன்பிறகு, அது குறித்து அமைச்சர் பேசவில்லை. இருப்பினும், வசதி படைத்தவர்கள் தாமாகவே முன்வந்து மானியம் தேவையில்லை என்று அறிவிக்கலாம் என்று கூறிய ஜேட்லி, மானியம் இல்லா எரிவாயு உருளையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, சில பா.ஜ.க. அமைச்சர்களும் தங்கள் சுட்டுரையில், தாங்களும் மானியம் பெறாத எரிவாயு நுகர்வோராக மாறிவிட்டதாக அறிவித்தனர்.

தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று விரும்பும் நுகர்வோர் இதற்கான படிவத்தை எரிவாயு உருளை முகவரிடம் கொடுக்கலாம் அல்லது இதற்கான இணையதளத்தில் தாங்களே பதிவு செய்யலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இப்போது பிரதமர் அறிவிப்பின்படி நாட்டில் மொத்தம் 2.80 லட்சம் பேர் இவ்வாறாக மானியம் பெறா எரிவாயு நுகர்வோராக மாறியிருக்கின்றனர்.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ஒரு நாளைக்கு 30 லட்சம் எரிவாயு உருளைகள் (அதாவது ஆண்டுக்கு 90 கோடி உருளைகள்) விநியோகம் செய்யப்படுகின்றன. 15 கோடிப் பேர் வீட்டுச் சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள். இவர்களில், அதிகபட்சமாக 5 கோடிப் பேர் மானியம் பெறா நுகர்வோராக மாறும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். இருப்பினும், வெறும் 2.8 லட்சம் நுகர்வோர் மட்டுமே இவ்வாறு மானியம் பெறா நுகர்வோராக மாறியுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

இதுதொடர்பான நீடித்த பிரசாரம்தான் இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும். குறைந்தபட்சம் சொந்த வீடு, சொந்த அடுக்ககத்தில் வசிக்கும் ஒரு நுகர்வோர் இந்த எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதால் அவருக்கு பெரும் இழப்பு ஏதுமில்லை. ஒரு கார் வைத்திருக்கும் வசதி படைத்தவர் தன்னைத் தானே மானியம் பெறா எரிவாயு நுகர்வோராக மாற்றிக் கொள்வதால் அவருக்கு நட்டமில்லை. நான் எரிவாயு மானியம் பெறா நுகர்வோர் என்று சொல்லிக் கொள்வது பெருமை என்கிற மனமாற்றத்தை ஏற்படுத்தத் தொடர்ச்சியான பிரசாரம் தேவை. எந்தவிதப் பலவந்தமான திணிப்பும் இல்லாமல் அவரவர்களே தங்களது வசதியை நிர்ணயித்துக் கொள்ளட்டும்.

பெட்ரோலியப் பொருள்களுக்காக மட்டும் ரூ.46,458 கோடி மானியம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வேறு பயன்பாட்டுக்கு திருப்பும் வகையில் மானியத்தை விட்டுக் கொடுத்து, அரசுக்குத் தோள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அரசின் மானியம் வேண்டாம் என்று சொன்ன நபர்களுக்கு வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பது ஒன்று விட்டு ஒன்று பற்றியதாக முடியும். வசதி படைத்தோர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மானியத்தை துறந்துவிடுவதுதான் சரி.

மத்திய அரசின் திட்டத்தில் மட்டுமல்ல, மாநில அரசின் திட்டங்களிலும்கூடப் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து, தங்களால் இயன்ற இனங்களில் மானியத்தைத் தவிர்க்க முன்வர வேண்டும். இதன்மூலம், அரசின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன், முறைகேடுகளுக்கு மறைமுகமாக துணை போகாதவராக அந்த நுகர்வோர் மாறலாம்.

பொது விநியோக மையத்தில் 20 கிலோ விலையில்லா அரிசி எனக்கு வேண்டாம் என்று பொதுமக்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தால், தமிழ்நாட்டில் ஏழைகள் மட்டுமே 20 கிலோ விலையில்லா அரிசியைப் பெற்று பயன்பெறுவர். இதனால் வாங்கப்படாமல், அனைத்து குடும்ப அட்டைகளிலும் அரிசி வாங்கியதாகப் பதியப்பட்டு, அந்த அரிசி மெருகூட்டப்பட்டு, மீண்டும் சந்தைக்கு நம்மிடமே கிலோ ரூ.45-க்கு வரும் அவலநிலை ஏற்படாது.

இதே நிலைப்பாட்டை மக்கள் தாங்களாகவே முன்வந்து, விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை எனக்குத் தேவையில்லை என்று எழுத்துமூலமாகப் பதிவு செய்வார்கள் என்றால், இவற்றைப் பெறுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இந்த விலையில்லாப் பொருள்களை கள்ளச்சந்தையில் தள்ளிவிடும் வழக்கமும் இருக்காது.

இதற்கான வழிமுறையை எண்ணெய் நிறுவனங்களைப் போல தமிழக அரசும் உருவாக்க வேண்டும்.

ஒரு கோயில் வாசலில் யாரோ ஒருவர் வழங்கும் அன்னதானத்தை வாங்க கெüரவம் பார்க்கிற மனித மனம், அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்கள், மானியப் பொருள்களை மட்டும் வேண்டாம் என்று சொல்லத் தயங்குகிறது. காரணம், இது நமது அரசு, நமக்கு கொடுக்கும் பொருள் என்ற உரிமைக்குரல் ஒவ்வொருவருக்குள்ளும் ஒலிக்கிறது. நமக்கு வசதி இருப்பதால் நாம் அதை வேண்டாம் என்று சொல்வதன் மூலம் அரசின் நிதிச் சுமை குறையும், முறைகேடு குறையும் என்பதைப் புரிந்து கொண்டால், தயக்கம் இருக்காது.

Sunday, March 29, 2015

REMARKS BY PRIME MINISTER TO THE MEDIA AT SINGAPORE

Friends, I am visiting Singapore at a sad moment. 

The passing away of H.E. Mr. Lee Kuan Yew marks the end of an era.

He was among the tallest leaders of our times.

Singapore's transformation in one generation is a tribute to his leadership.

In the 50th anniversary year of Singapore's independence, I am sure that he left satisfied with Singapore's achievements and confident about its future.

He inspired not just Southeast Asia, but all of Asia, to believe in its own destiny.

He was a global thinker, who saw things ahead of others. He was an advocate of economic progress, but also made tireless efforts to advance peace and stability in our region.

In India, we deeply valued his friendship and his support for India's economic progress and global role.

He believed in India's potential more than many of us did.

India's economy is growing rapidly.

India's relations with Singapore is one of our strongest relationships in the world.

India's integration with Southeast Asia and beyond is growing. Singapore is a key pillar of India's Act East Policy.

So, his vision is coming true. The seeds he sowed are bearing fruits today.

Personally, he was a source of inspiration for me. His achievements and thoughts give me confidence in the possibility of India's own transformation.

The people of India share this nation's grief over the loss of its founding father and leader.

We are observing a day of public mourning in India today in honour of the departed leader and the deep bonds of friendship that we share with Singapore.

I bring here today the condolences and prayers of the people of India.

5 Dead, Several Injured as A Portion of an Under Construction Building Collapses in Tamil Nadu

NDTV

TIRUVARUR, TAMIL NADU: At least Five persons were killed and 16 injured when a portion of an under construction guest house of the Central University collapsed in Tiruvarur district, Tamil Nadu, early today morning.

Superintendent of Police Jayachandran said, "the portico portion of the under construction structure crashed. We are investigating." The toll could increase as several of the injured were in a serious condition, the police said.

The injured, who are mostly migrant labourers, have been rushed to Thanjavur government hospital.

Police and fire service personnel were searching whether more persons were trapped in the debris. A team of doctors had been rushed to the spot to give treatment and first aid, police said.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...