Sunday, May 3, 2015

நாளை முதல் வறுத்தெடுக்கப்போகிறது அக்னி நட்சத்திரம்

சென்னை: கோடைகாலத்தில் வரும் அக்னி நட்சத்திர காலம் நாளை (4-ம் தேதி ) துவங்குகிறது. நாளை துவங்கி 29-ம் தேதி வரை 24 நாட்கள் வாட்டி வறுத்தெடுக்கப்போகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை அவ்வப்போது குளிர வைத்தாலும் கத்திரி வெயில் குறைந்த பாடில்லை. எனினும் வழக்கமாக நாளை அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இதன் காரணமாக கத்திரி வெயிலால் பகலில் அனல் காற்று வீசும், சில நேரங்களில் உக்கிரமாக இருக்கும் .

Saturday, May 2, 2015

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் அ.மருதகாசி



மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்த தவறாத கவிஞர் மருதகாசி ‘கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே’ என்று காதலின் ஆரம்பத்தையும் ‘எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே’ என்று காதலின் மடிவையும் எழுதிக் காட்டியவர்தான் கவிஞர் மருதகாசி.

பிறப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு என்னும் கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பிறந்தார்.

தந்தை: அய்யம்பெருமாள் உடையார்

தாய்: மிளகாயி அம்மாள்:

கல்வி: உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார்.

திருமணம்: 1940 இல் தனக்கோடியை மணந்தார். இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

நாடகப் பணி: அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புகளுக்குப் பிறகு குடந்தையில் தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். மு.கருணாநிதி எழுதிய மந்திரகுமாரி போன்ற நாடகங்களுக்கும் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபால அய்யரிடம் உதவியாளராக இருந்தார்.

திரைப்படப்பாடல்கள்:

தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.

1949-இல் வெளிவந்த "மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. ""பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல். அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.

மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.

1950 இல் வெளிவந்த பொன்முடி படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், "நல்லவன் வாழ்வான்' படத்துக்காக "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார். இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.

""புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது "நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.

1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர்,

எம்.ஜி.ஆரால் மீண்டும் திரையுலகில் மருதகாசி:

சொந்த ஊருக்கே திரும்பிச் சென்ற மருதகாசி மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.

தேவர் பிலிம்ஸின் "விவசாயி' படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். "கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி', "இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை' போன்ற "விவசாயி' திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.

இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம் படத்தின் மருதகாசி பாடல்கள் அரசுடைமை.

டி.எம்.செளந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.

குரு: உடுமலை நாராயணகவியை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர்.

என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள் கவிஞரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது எனக் கூறியவர்.

பட்டம்: திரைக்கவித் திலகம் என்னும் பட்டம்

அரசுடைமை:

மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, அன்றைய முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

மனதை விட்டு மறையாத பாடல்கள்:

-"மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு வூட்டி வயக்காட்டை உழுதுபோடு சின்னக் கண்ணு"

-"வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்"

-"மாசில்லா உண்ணைக் காதலே"

-"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா...
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா"

-"சமரசம் உலாவும் இடமே - நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே"

-"ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை"

-"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, விவசாயி"

- ஆளை ஆளைப் பார்க்கிறார்

-சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு

-கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த

-ஆனாக்க அந்த மடம்…

-கோடி கோடி இன்பம் பெறவே

-ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே

-கடவுள் என்னும் முதலாளி

-வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

-முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல

-காவியமா? நெஞ்சின் ஓவியமா?

இப்படி திரைப்பட உலகில் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்தக் கவிஞரும் இவரே.

திரைப்பட பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர் மருதகாசி.

மறைவு: தமிழ் திரைப்பட உலகில் காதலுக்கும் பாட்டு. கல்யாணத்துக்கும் பாட்டு. உழவர்க்கும் பாட்டு. உழைப்பாளிக்கும் பாட்டு என இவர் தொடாத துறையில்லை. எழுதாத பாட்டில்லை. அதாவது 1949–ல் ‘மாயாவதி’ என்ற படத்தில் தொடங்கி 1983–ல் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ திரைப்படம் வரை தொடர்ந்த கவிஞரின் திரையுலக சகாப்தம் 29.11.1989 இல் தூங்கியது.

வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருவது குறைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலாப் பயணிகள்

குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் வலசைப் பறவைகள் வரத்து குறைந்து, வெறிச்சோடி காணப்படும் வேடந்தாங்கல் சரணாலயம்.

வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் இல்லாததால், சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் வருகை முற்றிலும் நின்றுவிட்டது. அதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின் றனர். சரணாலயத்தை மூடுவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என சரணாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந் தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சியில் 73 ஏக்கரில் பரந்து விரிந்து காணப் படும் ஏரியின் நடுவே அடர்ந்த மரங்களுடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந் துள்ளது. இங்கு நிலவும் இதமான தட்பவெப்பம் மற்றும் சூழலைத் தேடி வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.

ஆண்டுதோறும் நவம்பர் மாதத் தில் சீசன் தொடங்கும். அப்போது நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன. ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து பிறகு குஞ்சுகளையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பு கின்றன. அவ்வாறு வரும் வெளி நாட்டு பறவைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகை யில் நவம்பர் மாதத்தில் சரணா லயம் திறக்கப்படும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகிழக்கு பருவ மழை சிறிதளவு பெய்ததால், பறவை களுக்கு ஏற்ற இதமான தட்பவெட் பம் காணப்பட்டது. வெளிநாட்டு பறவைகளும் வரத் தொடங்கின. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி சரணாலயம் திறக்கப்பட்டது.

ஆனால், வேடந்தாங்கல் சரணாலய ஏரியின் நீர் ஆதாரமாக கருதப்படும் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இத னால், சரணாலயத்தில் தற்போது பறவைகளே இல்லை என்ற நிலை யுள்ளது. பறவைகளை காணவரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத் துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, சரணாலய வட் டாரங்கள் கூறியதாவது: மழை சீசன் தொடங்கியதும் வழக்கம் போல பறவைகள் வந்தன. ஆனால், ஏரிக்கு தண்ணீர் வரத்து இன்றி நாளுக்கு நாள் நீர் மட்டம் குறைந்ததனால், சரணாலயத்தில் தங்கியிருந்த பறவைகள் வேறு இடங்களுக்கு சென்றன. ஏரியில் தண்ணீர் நிரம்பினால் மட்டுமே மீண்டும் சரணாலயத்துக்கு பறவைகள் வரும் நிலை உள்ளது.

கடந்த ஆண்டு இதே சீசனில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பறவைகள் வரை தங்கியிருந்தன.

இதுகுறித்து, சுற்றுலாப் பயணி கள் சிலர் கூறியதாவது: ஆண்டு தோறும் பள்ளி விடுமுறை நாட் களில், இங்கு வந்து வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சரணாலயத்தில் முற்றிலும் பறவை களே இல்லை. இதனால், நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தோம். பற z வைகள் இல்லாதது தொடர்பாக, அரசு அறிவிப்பு வெளியிட்டிருந் தால், வேறு ஏதேனும் சுற்றுலா பகுதிக்கு சென்றிருப்போம் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த வேடந்தாங் கல் பறவைகள் சரணாலய வனச் சரகர் முருகேசன் கூறியதாவது: ‘பறவைகள் இல்லை என்றாலும் சரணால யத்தையாவது சுற்றி பார்த்து செல்கிறோம் என சுற்றுலாப் பயணி கள் கூறுகின்றனர். இங்கு வரு வோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக்கூடாது என்பதற்காக சரணாலயத்தை மூடாமல் வைத்துள் ளோம். எனினும், சரணாலயத்தை மூடுவது தொடர்பாக உயர் அதி காரிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம். விரைவில் அறிவிப்பு கள் வெளியாகும்’ என்றார்.

சிறப்பு தள்ளுபடி விலையில் ஆவின் நெய் விற்பனை



தமிழகம் முழுவதும் இன்று (மே 1) முதல் சிறப்புத் தள்ளுபடி விலையில் ஆவின் நெய் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக ஆவின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் 2-ம் வெண்மை புரட்சியை செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் என்ற இலக்கை எட்டியுள்ளது. இத்தருணத்தில் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் ஆவின் நெய்க்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இது மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி விலை தமிழகம் முழுவதுக்கும் பொருந்தும். இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். அதனால் இந்த சலுகையை நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் ஜகதலப் பிரதாபன்!- பி.யு. சின்னப்பா

‘குபேர குசேலா’ பட போஸ்டர்

மே 5: பி.யு. சின்னப்பா 99-வது பிறந்த தினம்

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொள்பவர்களை ‘சகல கலா வல்லவர்’ என்று கூறுவது 80களில் பிரபலம். வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணியின் வேடம் பிரபலமானதால் 90களில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று அழைக்க ஆரம்பித்தனர். இப்போது சந்தானத்தின் தயவால் ‘அப்பா டக்கர்’.

ஆனால் 1950களில் இப்படிப்பட்டவர்களை எப்படி அழைத்தார்கள்!? “ ஜகதலப் பிரதாபன்!”. அழைக்கக் காரணமாக இருந்தவர் பி.யு. சின்னப்பா. அடுத்த ஆண்டு (2016) நூற்றாண்டு நாயகராகக் கொண்டாடப்பட இருக்கும் இவர், கலை வாழ்வில் மட்டுமல்ல நிஜவாழ்விலும் ஜகதலப் பிரதாபன்தான்.

1944-ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து இயக்கிய படம் ‘ஜகதலப்பிரதாபன்’. இந்தியப் புராணக்கதை மரபில் புகழ்பெற்ற ஒன்று ‘பன்னிரண்டு மந்திரிமார் கதை’. அதில் ஒரு கதைதான் ஜகதலப் பிரதாபனின் கதை.

பூலோக அரசனாகிய பிரதாபன், இந்திரலோகம், நாகலோகம், அக்னிலோகம், வருணலோகம் ஆகிய நான்கு லோகங்களின் ராஜகுமாரிகளைத் தனது அழகாலும் திறமைகளாலும் கவர்ந்து மணம் முடித்து வாழ்பவன். ஒருமுறை தேவலோக ராஜகுமாரியாகிய இந்திராணி கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட அவளை அழைத்துவர இந்திரசபைக்கு வருகிறான் பிரதாபன். மனைவியை அனுப்பிவைக்கும்படி தேவேந்திரனிடம் கேட்கிறான். “ ஆய கலைகளில் உனக்குத் திறமை இருந்தால் இந்த சபையில் அதைக் காட்டிவிட்டு உன் மனைவியை அழைத்துச் செல்” என்று இந்திரன் சவால்விடுகிறார். சவாலை ஏற்கும் பிரதாபன் (சின்னப்பா) “ தாயே பணிந்தேன்” என்ற பாடலைப் பாடிக் காட்டி சவாலில் வெற்றிபெறுகிறார்.

ஜி. ராமநாதன் இசையில் அமைந்த இந்தப் பாடல் காட்சியில் ஐந்து வேடங்களில் அற்புதமாகப் பாடி நடித்தார் பி.யு. சின்னப்பா. பாடும் வித்வானாக நடுநாயகமாக அமந்து பாட, அவரது வலப்பக்கம் வயலின் வித்வான், கடம் வித்வான், இடப்பக்கம் புல்லாங்குழல் வித்வான், கொன்னக்கோல் வித்வான் என்று ஐந்து வேடங்களில் அந்தந்தக் கலைஞர்களுக்கே உரிய உடல்மொழியைக் கச்சிதமாக வெளிப்படுத்தி பி.யு சின்னப்பா நடித்திருந்தார். இந்தக் காட்சியை அந்நாளின் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் மிகத் தந்திரமாகப் படமாக்கியிருந்தார். இந்தப் பாடல் காட்சியைப் பார்த்து அவரை ‘ஜகதலப் பிரதாபன்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். 280 நாட்கள் ஓடிய இந்தப் படம், தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ வெளியான பிறகே திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டது.

நீள்வட்ட முகம், காந்தக் கண்கள். நீள மூக்கு, பேசும் உதடுகள், தோள்களில் புரளும் பாகவத சிகையழகு. கொஞ்சம் புஷ்டியான உடல் என்று அந்த நாளின் நாயகனுக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் நாடகம் வழியே சினிமாவுக்கு வந்த இந்த சகல கலா சக்ரவர்த்திக்குத் தெரியாத விஷயங்களே இல்லை.

சின்னப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை. உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்த இருவருக்கு இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் ஐந்து வயது முதலே நாடக ஆர்வம். அப்பாவிடம் நாடகப் பாடல்களைக் கற்றுக்கொண்டு பாடத் தொடங்கிய சின்னப்பா ஆறு வயதில் ‘சதாரம்’ என்ற நாடகத்தில் குட்டித் திருடனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

பிறகு எட்டு வயதில் குஸ்தி, சிலம்பம் கற்று, பத்து வயதில் தத்துவ மீனலோசனி வித்வபால சபாவில் சேர்த்துவிடப்பட்டார். பிறகு பன்னிரண்டு வயதில் புதுக்கோட்டைக்கு நாடகம் போட வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தவருக்கு மாதச் சம்பளம் 15 ரூபாய். பிறகு மதுரைக்கு குழுவுடன் பயணித்த சின்னப்பாவுக்கு 14 வயதில் 75 ரூபாய் சம்பளம் கொடுக்க உத்தரவிட்டார் முதலாளி.

ஒரு நாள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் அனைவரும் தங்கியிருக்கும் வீட்டில் ‘சதி அனுசூயா’ நாடகத்தில் இடம்பெறும் பாடல்களை ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். இவர் சாரீரமும் பாவமும் காற்றைக் கிழித்துக்கொண்டு மேல் மாடியிலிருந்த ஸ்ரீ சச்சிதானந்தப் பிள்ளையின் காதுகளை நிறைத்தது. அவர்தான் கம்பெனி முதலாளி. “இவ்வளவு திறமையான பாடகன் யாரப்பா!?” என்று எழுந்துபோய்ப் பார்த்திருக்கிறார்.

முதலாளி எதிரில் வந்து நின்றாலும் பாடலைப் பாதியில் நிறுத்தாத சின்னப்பாவின் ஈடுபாட்டையும் திறமையையும் பார்த்துச் சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாய்க்கு உயர்த்திவிட்டார். இதன் பிறகு சின்னப்பா நாடக உலகில் சிகரம் தொட ஆரம்பித்தார். சாதாரண நடிகராயிருந்த சின்னப்பா ராஜபார்ட்டாக (கதாநாயகன்) உயர்த்தப்பட்டார்.

அதே கம்பெனியில் நடித்துவந்த எம்.ஜி.ஆர். , எம்.ஜி.சக்ரபாணி, பி.ஜி.வெங்கடேசன், பொன்னுசாமி , அழகேசன், காளி என்.ரத்தினம் என எண்ணற்ற நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். அதிக நண்பர்கள் இருந்தாலும் சின்னப்பாவிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பார்களாம். காரணம் அவர் கொஞ்சம் கோபக்காரர்.

இன்று நமது கதாநாயகர்கள் ‘சிக்ஸ் பேக்’ ‘ எய்ட் பேக்ஸ்’ என்று உடலை முறுக்கேற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 190 பவுண்ட் எடை வரை தூக்கி பரிசுகளை வென்று முறுக்கான வெயிட் லிஃப்டராக விளங்கினார் சின்னப்பா. இந்தியா, பர்மா, பினாங்கு, மலேசியா, ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நடித்து வந்த ‘சந்திரகாந்தா’ நாடகத்தின் புகழ் பிரிட்டிஷ் இந்தியா முழுக்கப் பரவியது. அதை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து 1936-ல் வெளியிட்டது. டெல்லியிலும் கல்கத்தாவிலும்கூட மேடையேறியது.

அதில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் வரவு தமிழ் சினிமாவின் முதல் சகல கலா கதாநாயகனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ஆர்யமாலா, ஜகதலப் பிரதாபன், கண்ணகி, குபேர குசேலா, ஹரிச்சந்திரா, மஹாமாயா, பிருதிவிராஜன், மனோன்மணி, உத்தமபுத்திரன் (இரட்டை வேடம்), மங்கயர்க்கரசி, கிருஷ்ண பக்தி என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்த கதாநாயகனாகக் கவர்ந்தார்.

தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிக் குவித்தார். இதை அறிந்த புதுக்கோட்டை ராஜா, இனி சின்னப்பா இங்கே வீடுகளை வாங்கக் கூடாது என்று தடையே போட்டாராம்.

பிருதிவிராஜன் படத்தில் பிருதிவியாக நடித்த சின்னப்பாவுக்கும், சம்யுக்தையாக நடித்த ஏ.சகுந்தலாவுக்கும் இடையிலான திரைக்காதல் நிஜத்திலும் காதல் மணமாய் முடிந்தது. பாட்டையும் நடிப்பையும் தன்னிரு கண்களெனக் காத்து வந்த பி.யு. சின்னப்பா தனது 35வது வயதிலேயே திடீர் உடல்நலக்குறைவால் பூவுலகை விட்டு நீங்கினார். ஆனால் அவர் நடித்த படங்களும் பாடிய பாடல்களும் இன்னும் மவுசு குறையாமல் கலையுலகின் பொக்கிஷங்களாக விளங்குகின்றன.

HC Quashes Circular on Entrance Exam for NRIs

BENGALURU:The High Court on Thursday quashed the circular issued by the Medical Council of India to conduct entrance exams for NRI students for admission to MBBS course from the academic year 2015-16.

A division bench of Justice Patil and Justice P S Dinesh Kumar quashed the circular issued on January 16, while allowing a batch of petitions including one filed by S N Medical College in Bagalkot.

Referring to the apex court’s verdict on P A Inamda’s case, the bench observed that MCI’s circular is against the law. The executive committee of the council cannot amend or interpret the regulations by issuing a circular without following the procedure under Section 19 (a) of IMC Act, 1956, which provides prescription of minimum standards of medical education, the bench said.

HC allows docs to finish PG course despite ESIC move to shut

The Bombay High Court has held that doctors currently undergoing PG medical course in colleges affiliated to Employees State Insurance Corporation (ESIC) in Maharashtra shall be allowed to complete their course despite a decision taken by ESIC to close down these institutions.

The degrees obtained by such doctors shall also be recognised under the Indian Medical Council Act, said a division bench of justices K R Shriram and Anoop Mohata in their judgement two days ago.

Six doctors undergoing post graduation course in ESIC hospital at Parel had filed a petition challenging ESIC's decision to close down its college in Parel and Andheri.

One doctor among them has completed second year of the three-year degree course, while the others have to appear for final examination in the third year.

"The petitions are hereby disposed of by observing that the medical qualifications that will be granted to petitioners when they successfully clear the examination conducted by the respondents shall be a recognised medical qualification for the purposes of Indian Medical Council Act," the bench said.

The court also directed the respondents to recognise the post graduate degree that may be awarded to petitioners on completion of post graduation examination scheduled to be held in May 2015 or May 2016, as the case may be, for all purposes.

"It would otherwise, in any event, be unjust and unfair to the petitioners if they are told that though at the time of their joining the course, the college was recognized but they cannot be given the benefit of such recognition and the certificates obtained by them would be futile, because during the pendency of the course or just before completion of the course, the respondent no 5 (ESIC) had decided to close down the respondent no 2 (Parel college of ESIC)," the bench said.

NEWS TODAY 12.12.2025