Friday, September 25, 2015

இது காலக் கட்டாயம்!


Dinamani


By ஆசிரியர்

First Published : 24 September 2015 01:19 AM IST


ஒவ்வொரு தொழிலாளிக்கும், கடைக்கும் வார விடுமுறை கட்டாயமாக உண்டு. அதேபோல, மகிழுந்துகளுக்கும் (கார்) ஒரு நாள் வார விடுமுறை விடுத்தால் என்ன என்ற எண்ணம் இலேசாகத் தோன்றி, அழுத்தமாகப் பரவியதன் விளைவாக, ஹரியாணா மாநிலத்தில் குர்கான் நகரில் செப்டம்பர் 22-ஆம் தேதி மகிழுந்து ஓய்வு நாள் (CAR FREE DAY) அனுசரிக்கப்பட்டது.
முதலில் இது வெற்றி பெறுமா என்ற அவநம்பிக்கை இருந்தாலும், கடந்த செவ்வாயன்று விடுக்கப்பட்ட அழைப்புக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. பல லட்சம் மகிழுந்துகள் புழங்கிய சாலைகளில் அன்றைய தினம் மொத்தம் சுமார் 10,000 மகிழுந்துகள் மட்டுமே காணப்பட்டன. குர்கான் நகரின் காற்று மாசு அளவு, அன்றைய தினம் வழக்கத்தைவிட 21% குறைவாக இருந்தது. பேருந்துகளில் வழக்கத்தைவிட ஒன்றரை மடங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன. ரயில்களில் வழக்கத்தைவிட 10% பயணிகள் அதிகமாக இருந்தனர்.
மகிழுந்துகளின் நெரிசல் சாலைகள் முற்றிலும் இல்லாமல் இருந்தது என்பது மட்டுமன்றி, பல்வேறு வணிக வளாகங்களின் தரைத்தளத்தில் நிறுத்தப்படும் மகிழுந்துகளின் எண்ணிக்கை மிகச் சிலவாகவே இருந்தன. வழக்கமாக 1,500 மகிழுந்துகள் நிறுத்தப்படும் முக்கிய நகர்ப் பகுதியில், அன்றைய தினம் மகிழுந்துகளே இல்லாமல் வெற்றிடமாக இருந்தது.
அதுமட்டுமல்ல, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பெட்ரோல், டீசலை நிரப்பின. மகிழுந்துகள் மிகமிக அரிதாகவே இருந்தன. இதனால், பெட்ரோல் விற்பனை பாதியாகக் குறைந்தது. இது விற்பனை நிலையத்துக்கு தனிப்பட்ட இழப்பாக இருப்பினும், தேசத்துக்கு மிகப் பெரிய லாபம்தான்.
கணினி நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் குர்கானில் பல லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவோரும்கூட பேருந்து, மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தினர். பலர் சைக்கிளில் பயணம் செய்தனர். நகரின் காவல் துறை ஆணையர் நவதீப் சிங், போக்குவரத்துக் காவல் ஆணையர் பாரதி அரோரா ஆகியோருடன் காவலர்களும்கூட சைக்கிளில் அலுவலகம் வந்தனர்.
மகிழுந்து ஓய்வு நாள் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, குர்கானில் அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மகிழுந்து ஓய்வு நாளாக அனுசரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தில்லியில் அடுத்த மாதம் அக்டோபர் 22-ஆம் தேதி இதேபோன்று மகிழுந்துகளுக்கு ஓய்வு நாள் அனுசரிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, வேறு நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வோர் ஊரிலும் வாரத்தில் ஒரு நாள், பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்படுவது பல காலமாக தொடர்ந்து வரும் வழக்கம். அத்தகைய நாள்களில் மிகச் சில கடைகளே திறந்திருக்கும். சில ஊர்களில் இந்த வார விடுமுறை தொழிலுக்கு ஏற்றபடி மாறியிருப்பதும் உண்டு. தங்க நகைக் கடைகள் இருக்கும் பகுதிகளுக்கு ஒரு நாளாகவும், வெல்ல மண்டி, அரிசி மண்டி, வெங்காய மண்டி ஆகியவற்றுக்கு வேறொரு நாளும் வார விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுவது உண்டு. இதெல்லாம் அந்தந்த ஊரின் பழக்க வழக்கம், அப்பகுதியின் வாரச் சந்தையைப் பொருத்து அமையும். சில ஊர்களில் சரக்கு லாரிகள் நிறுத்த இடமில்லாததால் ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் ஒரு நாள் விடுப்பு என வணிகர்கள் அவர்களுக்குள்ளாகவே தீர்மானித்துக்கொள்வது உண்டு. இதுபோன்ற நடைமுறைதான் தற்போது மகிழுந்துகளுக்கு ஓய்வு நாள் அனுசரிக்கும் திட்டமும்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையில் 7.95 லட்சம் வீடுகளில் மகிழுந்துகள் இருக்கின்றன. தற்போது இந்த எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கக் கூடும். இவை தவிர, சென்னைக்கு வெளியூர்களிலிருந்து நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மகிழுந்துகள் வந்து செல்கின்றன. வாரத்தில் ஒருநாள் சென்னையில் மகிழுந்து ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டால், வெளியூர்களிலிருந்து வரும் மகிழுந்துகள் மற்றும் உள்ளூரில் இன்றியமையாத் தேவைக்காக இயங்கும் மகிழுந்துகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருக்கும். பத்தில் ஒரு பங்காக மகிழுந்துகளின் எண்ணிக்கை குறையும்போது சென்னை சாலைகளில் நெரிசல் நிச்சயமாகக் குறைந்திருக்கும்.
இவ்வாறு மகிழுந்து ஓய்வு நாள் அனுசரிக்கும்போது, காரில் செüகரியமாகச் சென்று பழக்கப்பட்ட வசதி படைத்தோரும், உயர் அதிகாரிகளும் நெரிசல் இல்லாத பொதுப் போக்குவரத்தையே விரும்புவர். மகிழுந்து ஓய்வு நாளில் அதிக எண்ணிக்கையில் கூடுதலான பேருந்துகளை இயக்கி, பொதுப் பயணத்தை இலகுவாக்குவதன் மூலமும், புறநகர் ரயில் போக்குவரத்தில் கூடுதல் பெட்டிகளை, குறிப்பாக, முதல் வகுப்புப் பெட்டிகளைக் கூடுதல் எண்ணிக்கையில் இணைப்பதன் மூலமும் பலரையும் பொதுப் போக்குவரத்துப் பயணத்துக்கு ஈர்க்க முடியும்.
மகிழுந்துகளுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தால், சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் புத்துணர்வை ஏற்படுத்த முடியும். அதேநேரத்தில், இந்த முயற்சி வெற்றி பெற்று, மக்கள் பெருமளவில் பொதுப் போக்குவரத்தை நாடும்படி செய்வதற்குப் பேருந்துகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, வசதிகளும் அதிகரித்தாக வேண்டும். பேருந்துகளின் காலம் மேலைநாடுகளில் அநேகமாக முடிந்துவிட்டது. சொகுசு சிற்றுந்துகள்தான் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. மகிழுந்துகளில் பயணிக்கும் வசதியுடனான சொகுசு சிற்றுந்துகளும், மெட்ரோ, புறநகர் ரயில்களும் அதிக அளவில், சற்று அதிகமாகவே இருந்தாலும்கூட, இயக்கப்பட்டால்தான் போக்குவரத்து நெரிசலும் குறையும். சுற்றுச்சூழல் மாசும் கட்டுக்குள் இருக்கும்.

Thursday, September 24, 2015

இன்பாக்ஸ் பாதுகாப்பு

Return to frontpage

சைபர்சிம்மன்


‘உங்கள் இ-மெயிலை இங்கே சமர்ப்பிக்கவும்’- இணைய சேவை அல்லது செயலிகளைப் பயன்படுத்த முயலும்போது வரவேற்கும் இந்த வாசகம். இ-மெயில் முகவரியைச் சமர்ப்பிக்கலாமா, வேண்டாமா? தேவையில்லாத குப்பை மெயில்கள் (ஸ்பேம்) இன்பாக்ஸுக்கு வந்துவிடுமோ-என்றெல்லாம் தோன்றும்.

இந்த இணைய எச்சரிக்கை தேவையானதுதான். ஆனால் இதற்குத் தீர்வாகத் தற்காலிக மெயில் சேவைகள் இருக்கின்றன. அதாவது ஒருமுறை பயன்படுத்திய பிறகு மறந்துவிடக்கூடிய இ-மெயில் சேவைகள். கொரில்லா மெயில், 10 மினிட் மெயில் என்று பல சேவைகள் இருக்கும் இந்தப் பிரிவில் மெயில்டிராப் புது வரவு.

இணையவாசிகள் தங்களது சொந்த இ-மெயில் முகவரியைச் சமர்ப்பிக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் எல்லாம் மெயில்டிராப் முகவரியை மாற்று மெயில் முகவரியாகப் பயன்படுத்தலாம்.

இதில் புதிய முகவரியை உருவாக்கிக் கொள்வது மிகவும் சுலபம். மனதில் தோன்றிய ஒரு பெயரை இதில் சமர்ப்பித்துத் தற்காலிக மெயில் முகவரியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-மெயில் முகவரியை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் தைரியமாக சமர்ப்பிக்கலாம். அதே நேரத்தில் அந்த இணையதளத்தின் அறிவிப்பைப் பார்க்க வேண்டும் என்றால் மெயில்டிராப் தளத்தில் நுழைந்து உங்கள் இ-மெயில் கணக்கை இயக்கிக்கொள்ளலாம். பதிவு செய்வது, பாஸ்வேர்டு உருவாக்குவது என எந்தத் தொல்லையும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய தற்காலிக மெயில் சேவை இது.

இணையதள முகவரி: http://maildrop.cc/

Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015


Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015

No.1/2/2015-E-II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 23rd September, 2015.
OFFICE MEMORANDUM

Subject: Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015

The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.1/2/2015-E-II (B) dated 18th September, 2015 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 113% to 119% with effect from 1st July, 2015.

2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No. 1(3)/2008-E-II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.

3. The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.

4. These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will be issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.

5. In so far as the employees working in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued with the concurrence of the Comptroller and Auditor General of India.

Sd/-
(A. Bhattacharya)
Under Secretary to the Government of India

Authority: www.finmin.nic.in

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்



தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற் காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டு களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக் கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன.

2010-ம் ஆண்டுமுதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டு களுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறி ஞர் தொழில் செய்வதை தற்காலிக மாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

20-3-2015 அன்று சில வழக்கறி ஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி.மணிகண்டன், ஆர்.மதன்குமார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களே வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தியது தொடர்பான அறிக் கையை அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாததால் ஜூன் மாதம் 582 பேர், ஜூலை மாதம் 498 பேர், ஆகஸ்ட் மாதம் 571 பேர், செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை 289 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, ஜூலை மாதம் மட்டும் ஹெல்மெட் கட்டாய உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவ்வாறு அமல்படுத்தப் படவில்லை என்று தெரிகிறது.

நகரங்கள், சிறிய நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். கிராமப்புறங்களில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு சரிவர அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் கட்டாய உத்தரவை மாநிலம் முழுவதும் அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் வடிவமைப்பு, தயாரிப்பு தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 138 (எப்)-ன்படி இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து ஹெல்மெட் தரவேண்டும். பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்துடன் கூடிய 2 ஹெல்மெட்டுகளை வாகனத்துடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இதன்மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தரமற்ற ஹெல்மெட் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். ஹெல்மெட்டை வைத்து பூட்டுவதற்கான வசதியுடனேயே இருசக்கர வாகனங்களை தயாரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் விபத் தில் சிக்கி அரசு மருத்துவமனை களுக்கு கொண்டுவரப்பட்டு இறந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க உத்தரவிடும்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கண்ட தகவல்களை தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

முன்னதாக விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன், ‘‘ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்பு தொடர்பான வீடியோ காட்சிகளை ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது காண்பிக்கலாம். ஹெல்மெட் விழிப்புணர்வு முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஹெல்மெட் கட்டாயம் என்பதை மக்கள் இயக்கமாகவே மாற்ற வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தார்.

கல்விக் கடன் செலுத்தாதவரை பணியிலிருந்து நீக்க முடியுமா? - பயனாளி - வங்கிக்கிளை மோதல்

Return to frontpage

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின் ஊழியரான குப்புசாமி, தன் மகளுக்கு வாங்கிய கல்விக் கடனை செலுத்தாததால், மகளை வேலையைவிட்டு நீக்க வங்கி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

புகார் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “என் மகள் மீராவின் பல் மருத்துவப் படிப்புக்காக மன்னார்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் 2006-ல் கல்விக் கடன் பெற்றேன். 2 தவணைகளில் ரூ.1.98 லட்சம் வழங்கினர். என் பெயரில் தனிச் செலவுக் கடன் (Personal Loan) இருப்பதாகச் சொல்லி 3-வது தவணையை தர மறுத்துவிட்டனர். அந்த பாக்கியைச் செலுத்தியதும், 26.05.2010-ல் ரூ.2.47 லட்சத்தை ஒரே தவணையாக வழங்கினர்.

இந்நிலையில், 09.10.2014-ல் ரூ.9,98,850 கல்விக் கடன் பாக்கி இருப்பதாக தகவல் வந்தது. ரூ.4.45 லட்சம் வாங்கியதற்கு இவ்வளவு பெரிய தொகையை சொல்கிறீர்களே? என்று கேட்டதும் முரண்பட்ட கணக்குகளைச் சொல்லி, பின்னர் ரூ.7,59,467 பாக்கி இருப்பதாக 24.08.2015-ல் ஒரு கடிதம் அனுப்பினர்.

இதற்கிடையில், அதே வங்கி யில் எனக்கிருந்த நகைக் கடன் பாக்கியைச் செலுத்திவிட்டு நகையைத் திருப்ப முயன்றபோது, கல்விக் கடன் நிலுவையில் இருப்பதால், தவணையை வரவு வைக்க உள்ளதாகக் கூறி நகையை ஏலம் விட்டனர்.

இதுவரை, 4-5 தவணைகளாக ரூ.39,000 வரை கட்டியுள்ளேன். ஆனால், மாதம் ரூ.30,000, ரூ.40,000 கட்டுங்கள் என்கின்றனர். மின்வாரியத்தில் காசாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாலும், என் மகள் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணிபுரிவதாலும், வங்கி கூறும் தொகையைக் கட்ட இயலவில்லை. எனினும், இருதய நோயாளியான எனக்கு வங்கி அதிகாரிகள் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால் நியாயம் கேட்டு, ரிசர்வ் வங்கி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பி னேன். அதற்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இப்போது முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியில் இருக்கும் என் மகளை வேலையை விட்டு நீக்கும்படி மருத்துவத் துறையினரை வங்கி அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்” என்றார்.

கொடுத்தது ரூ.5,49,600

இதுகுறித்து மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை மேலாளர் ஆர்.தியாகராஜனிடம் கேட்டபோது, “நான், 2013-ல் இங்கு மேலாளராகப் பொறுப்பேற்றேன். வங்கியில் உள்ள பதிவேடுகளின்படி மீராவுக்காக, அவர் படித்த கல்லூரி பெயருக்கு, குப்புசாமியிடம் மொத் தம் ரூ.5,49,600 கல்விக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்று, 10 ஆண்டுகளாகியும், அவர் மாதத் தவணையை கட்டாததால், வட்டி சேர்ந்து விட்டது. முறையாக கடன் தவணை செலுத்தியிருந்தால் இந்த அளவுக்கு வட்டி உயர்ந்திருக்காது.

அரசு அளித்த வட்டி தள்ளு படியும் கிடைத்திருக்கும். அதனால் தான், கூடுதலாக கட்டும்படி கூறினோம். மாதாந்திர கடன் தொகை, அதற்கான பட்டியல் அனைத்தையும் குப்புசாமி பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்ட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எங்கள் தரப்பில், அவருக்கு எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் கடன் தொகையை கட்டக் கூடாது என்பதற்காக, பல் வேறு குறுக்கு வழிகளை கையாள் கிறார்.

தனிச் செலவுக் கடனுக்காக, கல்விக் கடன் தவணை 6 மாதங் கள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. அடமானம் வைத்து மூன்றாண்டு களுக்கு மேலாகிவிட்டால் நகை களை ஏலம் விடுவதுதான் வங்கி நடைமுறை. கல்விக் கடன் தொடர் பாக மக்கள் நீதிமன்றத்துக்கு குப்புசாமியை அழைத்து, ‘அசலை மட்டுமாவது ஒரே தவணையில் செலுத்துங்கள்’என்றோம். ஆனால், அவர் அசலையும் குறைக்க வேண்டும் என்கிறார். இதெப்படி முடியும்? அவருடைய மகள் கல்விக் கடன் பெற்றிருப்பது குறித்து மருத்துவத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். வேலையை விட்டு நீக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கவில்லை” என்றார்.

வங்கிகள் செய்யும் 26 தவறுகள்

இப்பிரச்சினை தொடர்பாக பேசிய கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.ராஜ்குமார், “தனிச் செலவு கடன் பாக்கிக்காக கல்விக் கடன் தவணையை நிறுத்தி வைக்கவோ, கடன் வாங்கியவரின் மகளை வேலையைவிட்டு நீக்கச் சொல்லவோ வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வங்கிகள் செய்யும் 26 வகையான தவறுகளைச் சரிசெய்யுங்கள் என்று மனிதவள மேம் பாட்டு அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு சில வங்கி களைக் குறிப்பிட்டு 27.05.2015-ல் கடிதம் எழுதியுள்ளது” என்றார்.

தவணை விவரத்தை தெரிவிக்கவில்லை

பல் மருத்துவர் கு.மீரா கூறியபோது, “கல்விக் கடன் வாங்கும்போது, படித்து முடித்த பின்னர், மாதம் ரூ.8,000 கட்ட வேண்டும் என்றனர். எத்தனை மாதம் கடன் கட்ட வேண்டும், அதற்கான மாதாந்திர கடன் நிலுவைப் பட்டியல், மாதத் தவணைத் தொகை எவ்வளவு என்பது போன்ற எந்த விவரத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை” என்றார்.

சினிமா எடுத்துப் பார் 27- எம்.ஜி.ஆர் வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட்! எஸ்பி.முத்துராமன்

Return to frontpage

கடந்த வார கட்டு ரையை ‘எம்.ஜி.ஆரை வைத்து நான் ஏன் படம் இயக்கவில்லை’ என்று கேட்டு முடித்திருந்தேன். நடிப்பு துறையில் இருந்து அரசியல் துறைக்கு வந்து முதலமைச்சராக ஆனதும் அவர் நடிக்கவில்லை. அதனால் அவரை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது இல்லை. அதைப் போல எனக்கு எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அது நிறைவேறாத ஆசையாகவே ஆகிவிட்டது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் ஒருமுறை படம் பார்க்க ஏவி.எம் ஸ்டுடி யோவுக்கு வந்தார். இந்தத் தகவல் ஸ்டுடி யோவில் இருந்த எல்லோருக்கும் தெரிய வர, எல்லோரும் தியேட்டர் வாசலுக்குப் போய் நின்றுவிட்டோம். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர் எங்களை எல்லாம் பார்த்ததும் ரொம்பவும் சந் தோஷப்பட்டார். என்னைப் பார்த்தார். அவரை நான் இரு கைக் கூப்பி வணங்கி னேன். என் அருகில் வந்து, ‘‘உனக்கு என்ன வேணும்?’’னு கேட்டார். எதுவும் புரியாத வனாக நின்றேன். மீண்டும் ஒருமுறை, ‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றார். ‘‘உங்க வீட்டுல செய்ற சிக்கன் நெய் ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். அது வேணும்’’னு கேட்டேன்.

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘‘யாரெல்லாமோ, என் னென்னமோ கேட்குறாங்க… நீ போயி!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அடுத்த நாள் மதிய சாப்பாட்டு நேரம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வந்த ஓர் ஆள், ‘‘உங்களுக்கு எம்.ஜி.ஆர் சிக்கன் நெய் ரோஸ்ட் கொடுக்க சொன்னார்’’ என்று சொல்லி ஒரு கேரிய ரைக் கொடுத்தார். வியந்து போனேன். எம்.ஜி.ஆர் இருக் கும் பிஸியில் ஓர் உதவி இயக்குநர் கேட்டதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி. எம்.ஜி.ஆர் எனக்கு ‘கலைமாமணி’ விருது கொடுத்து கவுரவித்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதை திரை யுலகம் ஒன்றுசேர்ந்து கொண்டாடியது. கலைக் கல்லூரி எதிரில் ஒரு பெரிய மேடை அமைத்து, அதில் எம்.ஜி.ஆர் நிற்க, திரையுலகினர் அனைவரும் ஊர்வலமாக வந்து அவரை வாழ்த் தினர். பெரிய விழாவாக அது கொண் டாடப்பட்டது. அந்த விழாவில் ஏவி.எம். சரவணன் சார் எல்லோருடைய சார்பிலும் வெள்ளி கோப்பை ஒன்றை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகமே பாராட்டுகிற காட்சியாக அந்த விழா அமைந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது உல கமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். எம்.ஜி.ஆருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் எம்.ஜி.ஆர் அவர்கள் குணமாகி சென்னை வந்தார்கள். இங்கு வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் டாக்டர் எலி ப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளிலும் சரவணன் சார் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று சரவணன் சார் கேட்டார். அப்போது அவர், ‘‘ ‘அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றார். வெளி நாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெற்றிருந் தார். அவரது விருப்பத்தை சரவணன் சார் நிறைவேற்றினார். மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!

எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தலையீடு அதிகமாக இருக்கும் என்று அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ‘அன்பே வா’ படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்தவிதத்திலும் அவர் தலையிடவில்லை. இந்த சந்தேகத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். நகைச்சுவையாக பேசக் கூடியவர். சாதரணமாக எம்.ஜி.ஆரிடம் பேசுவார். அவர் கேட்டால்தான் சரியா இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் அவரை அனுப்பினோம். அவர், எம்.ஜி.ஆரிடம் ‘‘நீங்க படப்பிடிப்பில் எல்லா விஷயத் திலும் தலையிடுவீங்கனு கேள்விப்பட் டோம். இங்கே எதிலுமே தலையிடவில் லையே?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?’’ என்று கேட்டவர், அங்கே இருந்த எங்கள் எல்லோரையும் அருகே அழைத்தார்.

‘‘நான் நடிகன் மட்டுமல்ல. டெக்னீஷியனும்கூட. ஒரு வேலையைத் தப்பா செய்யும்போது அதைப் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாதே. முகத்தில் குத்து விழுவதுபோல காட்சி எடுக்கும்போது கேமராவை சரியான கோணத்தில் வைத்து எடுத்தால்தான் ரியலாக முகத் தில் குத்து விழுவதுபோல இருக் கும். கேமரா கோணத்தைத் தவறாக வைத்தால் காட்சி சரியாக அமையாது. அதனால் கேமராவை சரியான கோணத் தில் வைக்குமாறு கூறுவேன். எப்போதும் தவறைத்தான் சுட்டிக் காட்டுவேனே தவிர, மற்றபடி தேவையில்லாமல் தலையிடு வதில்லை. ‘அன்பே வா’ படத்தை பொறுத்தவரை திறமையான இயக்கு நர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழு வினர் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்கள். அதனால் நான் தவறை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

மெய்யப்ப செட்டியாரின் கடைசி மகன் பாலசுப்ரமணியன் அவர்களுக் குத் திருமணம் நடந்தது. அப்போது செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மை யாரும் 21 தொழிலாளர்களுக்கு திருமணங்களை செய்து வைத்தார்கள். அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் திருமணம் நடந்த 21 தொழிலாளர்களுக்கும் பணமும், பரிசும் கொடுத்தார். அந்த அளவுக்கு தொழிலாளர்களின் மீது அன்பு வைத்திருந்தார் அவர்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் வெள்ளி விழா. அந்தப் படம் வெளியாகும் வரை ‘பட்ஜெட்’ இயக்குநர் என்ற பெயரை நான் பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் விசு அவர்கள் குறைவான நாட்களில், குறைந்த செலவில் பட்ஜெட் போட்டு அந்தப் படத்தை எடுத்து எனக்கு சவால்விட்டார். இதனை இன் றைய இயக்குநர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் துண்டு விழாது. தயாரிப் பாளர்களுக்கு நஷ்டம் வராது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இந்திய அரசின் தங்க பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப் படம். அந்தப் படத்தின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளைப் பாராட்டி கேடயம் வழங்கினார்.

அந்தக் கேடயம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நினைவுக் கேடயம். ‘‘முக்கியமானவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். மற்றவர்களுக்கு நாகி ரெட்டியாரைக் கொடுக்கச் சொல்கிறேன்’’ என்று சரவணன் சார் கூறினார். எம்.ஜி.ஆர், ‘‘எல்லா கலைஞர்களுக்கும் நானே வழங்குகிறேன். பெரிய டெக்னீஷி யனுக்கு மட்டும் நான் கொடுத்தால், மற்றவர்கள் என் கையால் வாங்கவில் லையே என்று வருத்தப்படுவார்கள்’’ என்று களைப்பையும் பொருட்படுத்தாது எல்லோருக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இவ்வளவு பேரும், புகழும் பெற்ற எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவரைப் பற்றி அடுத்த வாரம் எழுத இருக்கிறேன். யார் அவர்?

- இன்னும் படம் பார்ப்போம்…

NEWS TODAY 06.12.2025