Saturday, October 3, 2015

அரசு விளம்பரங்களில் ‘முதல்–அமைச்சர்’ படம்

logo

இந்திய ஜனநாயகத்தில், மத்திய அரசாங்கம் பிரதமர் தலைமையிலும், மாநில அரசுகள் முதல்–அமைச்சர் தலைமையிலும் இயங்குகின்றன. மாநில அரசில் முதல்–அமைச்சர் என்பவர் அந்த மாநிலத்தின் முகமாக கருதப்படுகிறார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியே அதன் முதல்–அமைச்சரை பொருத்துத்தான் இருக்கிறது. பொதுவாக அரசின் சாதனைகள் என்றாலும் சரி, திட்டங்கள் என்றாலும் சரி, கொள்கைகள் என்றாலும் சரி, சமூகநலப்பணிகள் என்றாலும் சரி, வளர்ச்சி பணிகள் என்றாலும் சரி, அரசு செயல்படுத்துவது மக்களுக்குப்போய் சேர்ந்தால்தான் மக்கள் அதை நன்றாக தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு அதன்பலனை அனுபவிக்க முடியும். என்னதான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டாலும், நிச்சயமாக எந்த பத்திரிகையாலும் இந்த தகவல்களை முழுமையாக கொண்டுபோய் சேர்க்கமுடியாது. இதற்கு கைகொடுப்பது பத்திரிகைகளில் அரசு வெளியிடும் விளம்பரம்தான். இதுபோன்ற திட்டங்களுக்கு மக்களின் கவனம் ஒரு விளம்பரத்தில் அதிகமாக செல்ல வேண்டும் என்றால் வெறுமனே வாசகங்கள் இருந்தால் போதாது. அந்த விளம்பரங்களில் படங்கள் நிச்சயமாக இருக்கவேண்டும். மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், ‘‘பத்திரிகையில் ஒரு பக்கத்தில் படம் இல்லாமல் வெறும் செய்தி மட்டும் இருந்தால், அந்த பக்கம் பாலைவனம்போல இருக்கிறது’’ என்று கூறுவார். நிச்சயமாக விளம்பரத்துக்கும் அது பொருந்தும். அந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல்–அமைச்சர் படம் இருந்தால் நிச்சயமாக அதைப்பார்க்க தூண்டும் ஆர்வத்தை மக்களுக்கு ஏற்படுத்தும்.

ஆனால், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முதல்– அமைச்சர்களின் படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறக்கூடாது என்ற வகையில், ஒரு வழக்கை பதிவு செய்தனர். இதையொட்டி, வழிமுறைகளை வகுக்க உச்சநீதிமன்றம் ஒரு மூவர் கமிட்டியை அமைத்தது. அந்த மூவரும் பத்திரிகை துறைக்கே சம்பந்தம் இல்லாதவர்கள். அவர்கள் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி படங்களை தவிர, வேறு யார் படங்களும் அரசு விளம்பரங்களில் இருக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போதே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அரசு விளம்பரங்களில் முதல்–அமைச்சர் படங்களை மறைப்பதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது?, அதே விளம்பரத்தை கட்சி சார்பில் கொடுத்து அதில் முதல்–அமைச்சர் படத்தை வைத்தால் யார் தடை செய்ய முடியும்?, இப்படி ஏட்டிக்கு போட்டி விளம்பரங்கள் வந்தால் உச்சநீதிமன்றத்தின் எந்த நோக்கம் நிறைவேறும்? என்றெல்லாம் விமர்சனங்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில், கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த தீர்ப்பின் மீதான மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, மத்திய அரசாங்கத்துக்கு ஒரு நோட்டீசை அனுப்பியுள்ளது. இதுபோல, உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. மத்திய அரசாங்கம் இப்போது ஒரு நல்ல முடிவை எடுத்து, மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் மாநில முதல்–அமைச்சர்கள் படங்கள் இருப்பதில் தவறில்லை என்பதை தங்கள் நிலையாகவும், அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தங்கள் பதில் மனுவில் தெரிவிக்கலாம். பிரதமர் படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறலாம் என்றால், கண்டிப்பாக மாநிலங்களிலும் முதல்–அமைச்சர் படங்கள் இடம்பெறவேண்டும். அதுதான் கூட்டாட்சியின் தார்ப்பரியம்.

Friday, October 2, 2015

விமானம் பறக்கட்டும்... விமான நிலைய மேற்கூரையும் பறக்க வேண்டுமா?...vikatan



சுமார் 2,300 கோடி ரூபாய் செலவில் புதிதாக (?) கட்டப்பட்ட சென்னை விமான நிலைய வளாகத்தில், அவ்வப்போது மேற்கூரை மற்றும் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி விட்டது. விமானம் பறக்கும் முன்பே மேற்கூரையும், சத்தம் போட்டு பேசினால் உடையும் கண்ணாடி தடுப்புகளும் சென்னை விமான நிலையத்தின் அடையாளங்கள்.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்த புதிய விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இங்கு கண்ணாடி மேற்கூரைகள், தானியங்கி கண்ணாடி கதவுகள், தடுப்பு கண்ணாடிகள், விளக்கு கண்ணாடிகள் உடைந்து, நொறுங்கி விழும் சம்பவங்கள் இதுவரை 54 முறை நிகழ்ந்துள்ளன. கிரிக்கெட் வீர்களைப் போல தலைக்கவசம், கை, கால் மூட்டு கவசம் அணிந்து செல்லும் அளவிற்கு, எது எப்போது பறக்கும் என்பது தெரியாமல் ஒரு வித பயத்தில் 'பறக்கும் தட்டு' உலகத்தில் நடப்பது போன்ற அனுபவத்தை பயணிகள் பெற்றுள்ளனர்.

நம் பணத்தில் விமானத்தில் பறக்க கூட பல முறை சோதனை செய்வதும், உள்ளே வரக் கூட பணம் கட்டினால்தான் விமானத்தை கண்ணில் காண்பிக்கும் அரசு அதிகாரிகள், இப்படி ரூ.2300 கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட விமான நிலைய தரத்தை பரிசோதிக்காமல் விட்டு விட்டார்களா, இல்லை மறந்து விட்டார்களா? சி.பி.ஐ அதிகாரிகள் படை, கட்டாயம் விமான நிலைய ஒப்பந்ததாரர்களை நெருங்குவார்களா என்று கேள்வி கேட்கும் நிலையில் கூட, மேலும் பல பொருள்கள் உடைந்து சென்னை விமான நிலையம் 'சாதனையை' நோக்கி நடை போட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றிற்கு சுமார் 342 விமானங்கள் இயக்கப்படுகின்றன. பல லட்சம் பேர் வந்து செல்லும் விமான நிலையத்தின் தரம் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய மதிப்பு போன்றவைகள் கேலிக்குரியதாக்கி உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதை பற்றி மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.

அரசு அனுமதி பெறாத கட்டடத்தை இடிக்கச் சொல்லும் நீதிமன்றம் அரசு ஆதரவு பெற்ற லஞ்ச ஊழல் ஒப்பந்ததாரர்களால் போடப்படும் மோசமான சாலைகள், கட்டப்படும் கட்டுமானங்கள், விமான நிலைய பராமரிப்பு பணியை கேள்வி கூட கேட்காத மர்மம் என்ன? சாலை, பாலம், கட்டடம் திறப்பு விழா என கட்சி விழாவாக கொண்டாடும் கட்சிகள், அடுத்த சில மாதங்களிலேயே பல்லைக் காட்டும் பாதாள குழிச் சாலைகள், பலவீனமான பாலங்களின் அவல நிலைக்கும் பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

கவனக் குறைவால் பணம் போட மறந்த காசோலை வழக்கிற்கு கூட கடுமை காட்டும் நீதிமன்றம், கோடிக்கணக்கில் கணக்கில்லாத பணத்தை வாரிச் சுருட்டும் அரசு ஒப்பந்த வேலைகள் பற்றி கடுமை காட்டாதது ஏன்? நூறு ரூபாய் திருடிய ஆண், பெண்ணை புகைப்படத்துடன் வெளியிடும் காவல் துறை, பல கோடி ஏப்பமிட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஒப்பந்த வேலை செய்த ஊழல்வாதிகளின் படங்களைப் போட முடியுமா?



அரசு ஒப்பந்தப் பணியில் உள்ள லஞ்சத்தை ஒழித்தாலே நாட்டின் கடனை அடைத்து விட முடியும். ப்ளெக்ஸ் போர்டு வைத்து, பொதுப்பணித் துறையை சேர்ந்த லஞ்ச அதிகாரிகளை அடையாளம் காட்டியும் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை தானாகவே வழக்கை விசாரிக்காமல், கண்டுகொள்ளாமல் போனது லஞ்சத்தின் பலம், நேர்மையானவர்களை விட அதிகம் என்பதை படம் போட்டு காட்டி விட்டது.

சென்னையை சிங்கப்பூராக்குவேன், கூவத்தை கோபுரமாக்குவேன், கடலை கடைந்து குடிநீர் தயாரிப்பேன் என பல கோடிகள் கொட்டி திட்டம் தீட்டி, இவர்களே ஊழலுக்கு வழி செய்து விட்டு, பின் கருப்பு பண மீட்பு அறிவிப்பும், வருமான வரித்துறை சோதனையும் செய்வது வேடிக்கையாக உள்ளது.

அரசு ஒப்பந்த வேலை தரம் உயர...

மத்திய, மாநில அரசு ஒப்பந்த வேலைகளை கண்காணிக்க, அதி நவீன குழுக்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டும். ஒப்பந்த வேலைக்கு தரச்சான்று, ஆயுள் உத்தரவாதம் அளிக்க சட்டம் வேண்டும். சான்று தவறாக அளிக்கும் பட்சத்தில், தவறும் பட்சத்தில் பணப்பட்டுவாடா நிறுத்தம், சொத்துக்கள் பறிமுதல், வாரிசுகள் அரசு வேலையில் சேரத் தடை வேண்டும்.

பொதுவாகவே அரசு ஒப்பந்த வேலைகளில் பல கட்டங்களில் பணம் கை மாறுவதாக செய்திகள் வருகின்றன. தேவை இல்லாமல் பணத்தைக் கொட்டி வேலை செய்வது, திட்ட மதிப்பீட்டு தொகையை அதிகமாக காண்பித்து 

பணத்தை கொள்ளை அடிப்பது, ஒப்பந்தம் போடுவதில் ஊழல், வேலையில் பயன்படுத்தப்படும் தரமற்ற பொருள்களின் பயன்பாடு, வேலையை கண்காணிக்காத அரசு அதிகாரிகள், பணம் பெறுவதில் என பலவகையான ஊழல் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட விஷயங்களையும் லஞ்ச ஒழிப்பு, மத்திய புலானய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு குழு கண்டறிந்தால் பெரும்பாலான அரசு வேலைகள் தரத்துடன் நடக்கும்.

ஒருவர் வாங்கும் லஞ்சப்பணம் பணத்தோடு, அவரோடு தொலைவதில்லை. தரமற்ற ஒப்பந்த வேலையால் பல கோடிபேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பும், தரமற்ற விமான நிலைய பராமரிப்பால் நம் அரசைப்பற்றிய 'மானமும்' சேர்ந்தே பறக்கிறது.

லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்காத வரையில் ஸ்மார்ட் சிட்டி, தொழில் முனையம் எனப் பல பெயர்களில் பணத்தைக் கொட்டினாலும், விமான நிலையக் கூரை மற்றும் கண்ணாடி சிதைந்து உடைவதுபோல பணம் சிதறி ஓடும் என்பது உறுதி.

-எஸ்.அசோக்

இனியும் தயக்கம் வேண்டாம்!..dinamani


By ஆசிரியர்

First Published : 02 October 2015 12:58 AM IST


இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்கள் அனைவரும் தலைக்கவசம் வாங்குவதில் ஆர்வம் காட்டியபோது, இந்தத் தீர்ப்புக்கு வழக்குரைஞர்களில் சிலர் தலைவணங்க மறுத்தனர். மதுரையில் தலைக்கவசத்தைத் தீயிட்டுக் கொளுத்தித் தீர்ப்பை விமர்சனம் செய்தனர். பிரச்னை தலைக்கவசத்தில் தொடங்கியது என்றாலும், உண்மையான காரணம் அதுவல்ல.
ஏற்பில்லாத தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டிய வழக்குரைஞர்களே, தீர்ப்பை விமர்சனம் செய்வதை, போராட்டம் நடத்துவதை நீதிமன்றம் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? மதுரை வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏ.கே.ராமசாமி, தர்மராஜ் இருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் மேற்கொண்டது.
இதைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம், உயர்நீதிமன்றத்தைக் கண்டிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, மதுரை வழக்குரைஞர்கள் 14 பேரை அகில இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கும் உத்தரவிட்டது. இதனிடையே, நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர் சங்கம் செயல்படும் உரிமை ரத்து செய்யப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம், சில வழக்குரைஞர்களின் செயல்பாடுகள் பொறுக்க முடியாத அளவுக்குப் போனதும், வழக்குரைஞர்கள் சங்கமே போராட்டத்தில் இறங்கியதும்தான். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால் சென்ற ஆண்டு தனது விடையனுப்பு விழாவில் வழக்குரைஞர்களின் செயல்பாடுகள் குறித்து மனம் வெதும்பி சில கருத்துகளை வெளியிட்டார். "எனது 37 ஆண்டு கால நீதித் துறை அனுபவத்தில் சந்திக்காததையும், கேள்விப்படாததையும் இங்கு எதிர்கொண்டேன். வழக்குரைஞர்கள் ஜாதியரீதியாக நீதிபதிகளைக் கொச்சைப்படுத்திப் பேசும் போக்கினால், சக நீதிபதிகள் என்னை அணுகி வேறு உயர்நீதிமன்றங்களுக்கு இடமாறுதல் கேட்டனர். வெளி மாநிலங்களில் உள்ள சக நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர மறுத்தனர்' என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
"போராட்டம் நடத்துவது, நீதிமன்ற விசாரணை அரங்கினுள்ளும், நீதிபதி அறைக்குள்ளும் அத்துமீறி நுழைவது, எதிர்ப்புக்குரல் எழுப்புவது என்று செயல்படுபவர்கள் வழங்குரைஞர்கள்தானா? இதையெல்லாம் சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் ஏன் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது?' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் 21-ஆம் தேதி கேள்வி எழுப்பினர். அதுநாள்வரை மெüனம் காத்த தமிழ்நாடு பார் கவுன்சில், அடுத்த நாளே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 2,495 வழக்குரைஞர்கள் செயல்படத் தடை விதித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு பார் கவுன்சில் இத்தனைக் காலம் தாமதித்ததுதான், தமிழ்நாட்டில் நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கே அடிப்படைக் காரணம்.
சட்டப் படிப்பில் இணையான தகுதி இல்லாதவர்கள், பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வு எழுதாதவர்கள் உள்ளிட்ட பலர் வழக்குரைஞர் தொழிலை முறையாகச் செய்யாமலும், சட்ட நுணுக்கம் தெரியாமலும், வாதத்திறமை இல்லாமலும், நீதித் தரகு வேலைகளில் ஈடுபட்டதால்தான் நீதிமன்றங்கள் அன்றாடப் போராட்டக் களங்களாக மாறத் தொடங்கின. தங்களுக்கு இசைவாக இல்லாத நீதிபதிகளை நீதிமன்ற வளாகத்தில் விமர்சிக்கும் போக்கு இவர்களால்தான் அதிகரித்தது. புதுப்புதுக் காரணங்களைக் கண்டுபிடித்து நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர். தங்களை அனுசரிக்காவிட்டால் நீதிமன்றமே நடக்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் போக்கு தொடங்கியது. அதன் உச்சக்காட்சிதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு பார் கவுன்சில் 2,495 வழக்குரைஞர்களை செயல்படத் தடை விதித்ததன் விளைவு வெளிப்படையாகவே தெரிகிறது. வழக்குரைஞர்கள் சங்கங்கள் செப்டம்பர் 28-ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்த நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் வெற்றி பெறவில்லை. 60% வழக்கு விசாரணைகள் நடந்தன. இதிலிருந்து பிரச்னைகளுக்கு யார் காரணம் என்பது தெளிவாகி இருக்கிறது.
நீதிமன்ற வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை, வழக்குரைஞர் விசாரணைக்கு ஆஜராகாவிடில், வழக்குத் தொடுத்தவர் இழப்பீடு கோரலாம் என்று தற்போது உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை, பல ஆண்டுகளுக்கு முன்பே தயக்கமின்றிப் பிறப்பித்திருந்தால், இத்தகைய களங்கமான சூழல் நீதித் துறைக்கு வந்திருக்குமா? வழக்குரைஞர்கள் இந்த அளவுக்கு இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், சில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மறைமுக ஆதரவும்தான் அதற்குக் காரணம் என்கிற கசப்பான உண்மையையும் மறுக்க முடியுமா?
நீதிமன்றத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், "சில காலத்துக்கு சென்னையில் வழக்குகளைப் பதிவு செய்யலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை தாற்காலிகமாக சட்டப்படி மூடலாம்' என்றும் பரிந்துரைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இதற்குக் காரணம், வழக்குரைஞர்கள் சிலர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆதிக்கம் செலுத்தி, சில வழக்குகளைப் பதிவு செய்ய வற்புறுத்துகிறார்கள், மறுத்தால் வேறு காரணங்களை முன்வைத்து பிரச்னை செய்கிறார்கள் என்பதுதான்.
தவறு செய்கிற, தகுதியில்லாத வழக்குரைஞர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகள்தான் நீதித் துறை களங்கத்தைப் போக்கும்.

முதுமையில் இயலாமையின்றி வாழ...


Dinamani


By வ.செ. நடராசன்

First Published : 01 October 2015 01:17 AM IST


முதுமையில் மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் ஏற்படும் இயலாமை. அதாவது, வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது.
உதாரணம்: குளிப்பதற்கு, உடை உடுத்துவதற்கு, சாப்பிடுவதற்கு, நடப்பதற்கு இப்படி தன்னுடைய ஒவ்வொறு தேவைகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது.
இந்த இயலாமையைத் தடுத்து, தன் சொந்தக் காலிலேயே நிற்க ஏதாவது வழிகள் உண்டா?
உடல் நோய்கள்: பக்கவாதம், உதறுவாதம் (பார்க்கின்சன்ஸ்), மூட்டு வலி, உடல் பருமன், கண் பார்வைக் குறைவு, காது கேளாமை, ஆஸ்துமா.
மனநோய்கள்: மனச்சோர்வு, மறதி நோய் எனும் டிமென்சியா.
குடும்பம், நிதி சார்ந்தவைகள்: நிதி வசதியின்மை, மனைவி இழந்தவர்கள், விதவைகள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள்.
முதுமையில் எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் மறைந்திருக்கும் பல நோய்களைக் கண்டுகொள்ள முடியும் மற்றும் அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க முடியும்.
இயலாமை இன்றி வாழ, வருமுன் காக்க, கால முறைப்படி பரிசோதனை செய்ய வேண்டும்.
முதியவர்கள் இறப்பிற்கு முக்கியக் காரணம் நுரையீரல் சார்ந்த நோய்களாகும். இதைத் தவிர்க்க தடுப்பூசிகள் உள்ளன.
உ.ம். நிமோனியாவுக்கு ஒரே ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆயுள் முழுவதும் இந்நோயிலிருந்து விடுபடலாம். முதியவர்கள் அடிக்கடி கீழே விழ வாய்ப்புகள் அதிகம் இருப்பதினால், டெட்டனஸ் தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்வது நல்லது.
குளிர்காலத்தில் வரும் ப்ளூ காய்ச்சலைத் தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை ப்ளூ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவு நடப்பது நல்லது அல்லது 30 முதல் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிதறி ஓடும் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்துவதே தியானம். தியானத்தால் மனம் அமைதி அடைகிறது.
தெளிவான சிந்தனை கிடைக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தி, நாம் நினைத்ததைச் சாதிக்கக்கூடிய தெளிவு பிறக்கிறது.
சமீப காலமாக நமது உணவுப் பழக்கத்தில் பழைமையை நோக்கிப் புறப்பட வேண்டியதாயிற்று. அதுதான் மில்லட்ஸ் என்னும் சிறுதானியங்கள் அடங்கிய உணவுகள்.
முதுமைக் காலத்திற்கு வேண்டிய எல்லா வகையான சத்துகளும் சிறுதானியங்களில் இருப்பதால், அதை முடிந்தவரையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மற்றும் உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், நீரை அதிகம் அருந்த வேண்டும்.
எவ்வளவு வயதானாலும் குழந்தை மனநிலையில் இருக்கவே பலரும் விரும்புவார்கள். நம்மை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நீங்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாய நிலையே உருவாகும்.
அதனால், உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பும் வந்துவிடும். எந்தவொரு சின்ன வேலையாக இருந்தாலும் அதை யாருடைய துணையும் இல்லாமல் நீங்களாகவே செய்யப் பழகுங்கள்.
முதுமைக் காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிக மிக அவசியம். வேகமான வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய உலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. முதுமையில் ஏற்படும் இயலாமையைத் தடுக்க, நடுத்தர வயதிலிருந்தே முயற்சியைத் தொடங்க வேண்டும்.
கால முறைப்படி பரிசோதனை, தினமும் செய்யும் உடற்பயிற்சி, சிறுதானியங்கள் அடங்கிய உணவுப் பழக்கம், தடுப்பூசி போட்டுக் கொள்வது, தினமும் தியானம் செய்வது, முடிந்தளவிற்கு சொந்தக்காலில் நிற்பது அவசியம்.
இத்துடன் தேவையான நிதி வசதியை வைத்துக் கொண்டால், முதுமையில் ஏற்படும் இயலாமை எனும் அரக்கனை கண்டிப்பாக விரட்ட முடியும்.
பிறர் உதவியின்றி சொந்தக்காலில் நிற்க முடியும்.

இன்று உலக முதியோர் நாள்.

கட்டுரையாளர்:
முதியோர் நல மருத்துவர்.
முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

Thursday, October 1, 2015

பணியின்போது உயிரிழக்கும் அரசு அலுவலர் குடும்பத்துக்கு முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்வு



பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர் குடும்பத்தின் உடனடி தேவைக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை, பொதுத்துறை, ஓய் வூதியங்கள் உள்ளிட்ட துறை களின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்:

பணியின்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளர் குடும்பத்துக்கு உடனடி தேவைக்காக வழங்கப் படும் முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த் தப்படும். முன்னாள் படைவீரர் களுக்கு தொழில் சார்ந்த செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.1 கோடி வழங்கப்படும்.

முப்படைகளில் பரம்வீர்சக்ரா, அசோக சக்ரா, மகாவீர் சக்ரா உள்ளிட்ட விருதுகள் மற்றும் பதக்கங்கள் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு மற்றும் ஆண்டு உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும். இரண்டாம் உலகப்போரின்போது பணிபுரிந்த தமிழக முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படும்.

டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவில் இருந்த பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 1956-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் 23 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திருச்சி மாவட்டம், திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், கரூர் தீரன் சின்னமலை, பெரம்பலூர் திருவள்ளுவர் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின. இதனால் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. 1997-ம் ஆண்டு முதல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படத் தொடங்கியபோது இவை திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களாயின. கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது முதலில் மணப்பாறையும், அதன்பின் முசிறியும் கரூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அதன்பின் அவை மீண்டும் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் 2895.57 ச.கி.மீட்டர் கொண்டது. மக்கள் தொகை 10,76,588 (2011). மாவட்ட பிரிவினையின்போது எட்டரை லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிறகு மீண்டும் 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2007-ம் ஆண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் செயல்படத் தொடங்கியது. தமிழகத்தில் மத்திய மண்டலத்தில்தான் அதிக மாவட்டங்களும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களும் அதிகளவில் உள்ளன. குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்திலும், அரியலூர் 3-வது இடத்திலும் அதனைத் தொடர்ந்து கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களும் உள்ளன.

Return to frontpage
க.ராதாகிருஷ்ணன்

கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவில் இருந்த பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 1956-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தில் 23 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திருச்சி மாவட்டம், திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், கரூர் தீரன் சின்னமலை, பெரம்பலூர் திருவள்ளுவர் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின. இதனால் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. 1997-ம் ஆண்டு முதல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படத் தொடங்கியபோது இவை திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களாயின.

கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது முதலில் மணப்பாறையும், அதன்பின் முசிறியும் கரூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அதன்பின் அவை மீண்டும் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் 2895.57 ச.கி.மீட்டர் கொண்டது. மக்கள் தொகை 10,76,588 (2011). மாவட்ட பிரிவினையின்போது எட்டரை லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிறகு மீண்டும் 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2007-ம் ஆண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் செயல்படத் தொடங்கியது. தமிழகத்தில் மத்திய மண்டலத்தில்தான் அதிக மாவட்டங்களும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களும் அதிகளவில் உள்ளன.

குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்திலும், அரியலூர் 3-வது இடத்திலும் அதனைத் தொடர்ந்து கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களும் உள்ளன.

ரயில் டிக்கெட் வித்தவுட்!

Return to frontpage


சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்

பத்ரி சேஷாத்ரி


சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. கிண்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்துவிட்டார். என்னிடம் சரியான டிக்கெட் இல்லை என்றும் நான் அபராதம் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்.

என்னிடம் கோவில்பட்டியிலிருந்து சென்னை எழும்பூர் செல்வதற்கான டிக்கெட் இருந்தது. நான் தாம்பரத்தில் இறங்கி, புறநகர் மின்சார ரயிலில் ஏறி, கிண்டி ரயில்நிலையம் வந்து இறங்கியிருந்தேன். என் டிக்கெட் எப்படிச் செல்லுபடியாகாது என்று கேட்டேன். அவர் விதிப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். பக்கம் 281-ல், விதி எண் 20-ல் நான் செய்தது தவறு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயில் பயணத்தில், ஒரு குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் அந்த ரயிலைத் தவிர வேறு எதிலும் பயணம் செய்யக் கூடாது; முக்கியமாகப் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை என்று அந்த விதியில் போடப்பட்டிருந்தது.

இதே நீங்கள் டிக்கெட் கவுண்டரில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் என்று சொல்லி டிக்கெட் வாங்கிக்கொண்டு, பதிவு செய்யப்படாத கம்பார்ட் மெண்டில் ஏறி, தாம்பரம் வந்து இறங்கி, புறநகர் மின் ரயிலில் ஏறி கிண்டி வந்தால் நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையாம். ஆனால், முன்பதிவு செய்துவிட்டால் போச்சு. நீங்கள் தனியாக புறநகர் மின்ரயிலுக்கான டிக்கெட் வாங்க வேண்டும்.

எனவே, என் தவறுக்காக, ரூ. 250 அபராதமும், தாம்பரத்திலிருந்து கிண்டி வருவதற்காக ரூ. 5-ம் சேர்த்து ரூ. 255 கட்டினேன். (ரசீதைப் பெற்றுக்கொண்டேன்.) அதேபோல எழும்பூரிலிருந்து மதுரைக்கோ, திருச்சிக்கோ நீங்கள் முன்பதிவு டிக்கெட் வாங்கியிருந்தால், நீங்கள் கிண்டியில் அல்லது பரங்கிமலையில் வசித்தால், தாம்பரம் சென்று ஏறிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தால், கிண்டி-தாம்பரம் தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்றது அந்த விதி.

ஆனால், இது மிகவும் அபத்தமான விதி என்று தோன்றியது; இதைப் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதப்போகிறேன் என்று சொன்னேன். இதுதொடர்பாக வலைதளத்தில் எழுதியபோது பலரும் கேலி செய்தனர் என்பது வேறு விஷயம்! என்னைப் போலவே ஏகப்பட்ட பேர் புகார் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

30.7.2015 அன்று ரயில்வே நிர்வாகம் விதியை மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும் சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம். வேறு எந்த டிக்கெட்டும் வாங்க வேண்டியதில்லை.

தகவல் உரிமச் சட்டம் மூலம் தகவல் பெற்றுத்தந்த பாலாஜிக்கு நன்றி. இதுகுறித்து ஃபேஸ்புக்கில் எழுதி என் கவனத்தை ஈர்த்த வலைப்பதிவர் ‘பிச்சைக்காரன்’ அவர்களுக்கும் நன்றி!

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...