Monday, May 1, 2017

HC cancels bail for father of married minor
Chennai:
TIMES NEWS NETWORK


The Madras high court has cancelled the anticipatory bail granted to a man who had got his daughter married though she was a minor. In August last year, Justice S Vaidyanathan granted anticipatory bail to him after he submitted that only the betrothal of his daughter had been completed by the time child rights volunteers stepped in, and that marriage had been called off.
 
However, now the volunteers have brought to the notice of the court the fact that the man had actually married off his daughter, and the girl's marriage had been consummated.
The court then ordered verification of the claims, and asked for medical examination of the girl.
After the medical report confirmed that the girl was in a physical relationship, the judge said: “The medical report states that there was physical relationship with the victim-girl. Only on the ground that the betrothal, which had been arranged, was cancelled, and that no marriage was performed, that this court granted anticipatory bail to the accused.“

Justice Vaidyanathan further said: “The complainant has now sought for cancellation of anticipatory bail, and it now appears from the pleading that the marriage itself has taken place and that there was physical relationship.“
Referring to a statement by the girl's mother, the judge said: “There appears to be marriage and that physical relationship after marriage has also been complained of, more particularly, in the light of the statement made by the mother of the girl, coupled with the fact that the medical records have also been produced to substantiate the same.“
He then cancelled the anticipatory bail, exposing the man to the danger of getting arrested, if police choose to do so.



HC names special bench to hear PG med admission cases
Chennai:
TIMES NEWS NETWORK 
 


The Madras high court on Saturday named a special division bench to hear all cases relating to the stalled postgraduate medical admissions in the state.
 
A bench of Justice K K Sasidharan and Justice S M Subramanian has been constituted to hear the appeals filed by the Tamil Nadu government as well as aggrieved doctors in government service. The bench will hear the cases on Tuesday and Wednesday , sources told TOI. “Since it is not a vacation bench, but a specially constituted bench, now the onus is upon the arguing counsel to make most of it, and ensure that they not only complete their submissions quick, but also give sufficient time for the bench to write the verdict at the end of the deliberations without much delay ,“ sources said. PG medical admissions have already been delayed, as the government could not commence it in the beginning of the month as scheduled, because of court cases and agitations by government doctors.
It all began when an assistant civil surgeon working in the Nilgiris district moved the court seeking a direction to state authorities to adhere to this year's MCI regulations on awarding incentives to in-service candidates. As against the state policy of awarding one mark for each year in government service for all doctors, besides two marks each year for those employed in certain notified areas, the MCI envisaged a scheme wherein 10% of a candidate's NEETPG marks will be awarded every year of his service, subject to the maximum of 30%.

On April 17, Justice Pushpa Sathyanarayana ordered accordingly and made it clear that this year's PG medical admissions must follow the MCI guidelines and not state policy. This resulted in agitation by several thousand government doctors who wanted no interference with the 35-yearold practice of awarding incentives to all in-service candidates. A division bench on Thursday said the issue was complex and required comprehensive hearing. It also advised counsel to approach the Chief Justice for constitution of a special bench or listing in a vacation bench, in view of the urgency .
130 tonnes concrete used to fill Anna Salai crater
Chennai:
TIMES NEWS NETWORK


Around 130 tonnes of concrete have been used to fill the sinkhole that appeared on Anna Salai, near thr Gemini flyover, earlier this month due to metro rail construction. The traffic flow on the damaged stretch will be restored in about 10 days as metro rail will remove the metal sheets placed on the surface.
“The crater is spread over 130 cubic metres. For every cubic metre, we needed one tonne grout. So far, we have filled the crater with about 130 tonnes of concrete. But we keep grouting in the area post midnight, so we may use more concrete,“ a metro rail official said. “We will remove the existing metal sheets in about 10 days once we confirm that the crater is completely filled with concrete, compacted and packs the aggregate is set and hardened.“ The road had caved in on pril 9, when metro rail engi April 9, when metro rail engineers were building tunnels underground, trapping an MTC bus carrying 35 passengers and a car. The incident created a crater of 10 feet wide and 15 feet deep.Chennai Metro Rail Ltd (Cmrl) claimed it was due to loose soil below the road surface. Officials said they had be grouting -filling the cra en grouting -filling the crater with fluid form of concrete -daily since the cave-in. A team of metro rail workers have been permanently deputed to keep a tab on soil settlement once in six hours.Settlement markers had already been installed on the road along the alignment of the tunnels being built for the purpose. The team also fills fluid concrete in the entire area under the road and looks for any cracks that may develop due to concrete setting.

Soon after the incident, Cmrl workers began filling the crater with grout. They also dug nearby spots to check for similar cavities and fill them with concrete.The entire area was sealed with metal sheets. A concrete mixer has been permanently placed on the pave ment nearby for grouting every night. “We have also filled the cracks that developed when the concrete began hardening. We are also ensuring that no more cracks develop as the concrete sets,“ an official said.

But the placement of metal sheets to cover the concrete filling posed a problem for traffic movement. Motorists have had to slow down as they neared the spot and it leads to traffic piling up frequently. It also posed a risk of road accidents as the metal sheets sealed to the road with liquid cement came off and workers had to repeatedly pour cement to seal them.

“Our tunnel boring machines have moved ahead from the location where the road caved in. About 15 metres from ther cave-in spot the soil is completely rocky. So, the chances of cave-ins are slim,“ the official said.

அரசு மருத்துவமனை நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு பரிதவிப்பு: மதுரையில் டாக்டர்கள் போராட்டத்தால் சிக்கல் நீடிப்பு

பதிவு செய்த நாள்
மே 01,2017 02:17



மதுரை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்ய ஆளின்றி ஆபத்தான நிலையில் உள்ளனர்.'இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் படி, தொலைதுார கிராமங்களில் பணி செய்யும் அரசு டாக்டர்கள் பட்டமேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது. தமிழகத்துக்கு ஒதுக்கப்படும், பட்டமேற்படிப்பு இடங்களில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம், விடுப்பு எடுக்கும் போராட்டம், சாலை மறியல் போன்ற வடிவங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் இல்லாததால், ஒவ்வொரு நொடியையும் ஆபத்தான நிலையில்கடந்து வருகின்றனர்.ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்ட நோயாளிகள் இம்மருத்துவமனையை நம்பி உள்ளனர். தினமும் 2,500 வெளி நோயாளிகளும், 8,000 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.இங்கு பல்வேறு மருத்துவ பிரிவுகளுக்கான, 17 அறுவை சிகிச்சை அரங்குகளில் 52 படுக்கைகள் உள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனையாக இது திகழ்கிறது. ஆண்டுக்கு, 25 ஆயிரம் 'மேஜர்' அறுவை சிகிச்சைகளும், 42 ஆயிரம் 'மைனர்' அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன.

ஆனால், தற்போதைய போராட்டம் காரணமாக பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால், இருதயவியல், புற்றுநோயியல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சிறுநீரகவியல் போன்ற முக்கிய துறைகளில் 'மேஜர்' அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. துறை தலைவர்கள் மற்றும் பணிக்கு வரும் ஓரிரு டாக்டர்கள் சேர்ந்து, சில 'மைனர்' அறுவை சிகிச்சைகளை மட்டும் செய்து சமாளித்து வருகின்றனர்.
டாக்டர் ஒருவர் கூறியதாவது: உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், தொலைதுார கிராமங்களில் பணி செய்யும் டாக்டர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீதம் வழங்க உத்தரவிட்டுள்ளதே தவிர, 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை. சில இடங்களில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது. இதனால், 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.டாக்டர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் நோயாளிகளை கடுமையாக பாதித்துள்ளது. பணி செய்ய விரும்பும் டாக்டர்களுக்கு சங்க நிர்வாகிகள் மிரட்டல் விடுக்கின்றனர்.

அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் இருதய நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், உயிரிழப்பு நேரலாம். புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தாமதித்தால், நோய் முற்றி குணப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுவர். டாக்டர்களுக்கு இது குறித்து சொல்லித்தர வேண்டியதில்லை. எனவே, அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும், என்றார்.
பல்கலைகள், கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப தடை

பதிவு செய்த நாள் 01 மே
2017
02:11

பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில் உள்ள காலியிடங்களில், புதியவர்களை நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அண்ணாமலை பல்கலையில், அதிக நஷ்டம் ஏற்பட்டதால், அதன் நிர்வாகம் தனியாரிடமிருந்து, அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்திற்காக, மாதம், 50 கோடி ரூபாய் வரை அரசின் நிதி செலவிடப்படுகிறது.இந்த, பல்கலையில், 5,000க்கும் மேற்பட்டோர், பணியின்றி, சம்பளம் வாங்குவதாக, உயர் கல்வித்துறை கண்டறிந்துள்ளது. இவர்களில், முதலில், 369 பேர், அரசு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

அடுத்ததாக, 547 பேராசிரியர்களும், 1,500 ஊழியர்களும் மாற்றப்பட உள்ளனர். மீதமுள்ள, 3,000 பேரையும், மாற்ற பட்டியல் தயாராகி வருகிறது. இவர்களை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் நியமிக்க, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் காலியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. 'காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிட்டிருந்தால், அதை திரும்பப்பெற வேண்டும். மீறி, புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட்டால், அந்த பல்கலைக்கான நிதி மற்றும் மானிய தொகை கிடைக்காது' என, பல்கலை துணை வேந்தர்களுக்கு, உயர் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

- நமது நிருபர் -
இன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்


பதிவு செய்த நாள் 01 மே
2017

00:33 இன்ஜினியரிங் கல்லுாரிகளின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படும், ஒற்றைசாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூன், 27ல், துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மே, 31 வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான அறிவிக்கை மற்றும் விதிகள், நேற்று வெளியிடப்பட்டன.

ஆன்லைன் வழியே, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்தோர், அதன் பிரதியை நகல் எடுத்து, செயலர், தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை, அண்ணா பல்கலை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Saturday, April 29, 2017

பாரதிதாசன்

Bharathidhaasan

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 29, 1891

பிறப்பிடம்: புதுவை

இறப்பு: ஏப்ரல் 21, 1964

பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

இல்லற வாழ்க்கை

பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

பாரதியார் மீது பற்று

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை

பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

அவரது படைப்புகள்

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது

2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

இறப்பு

எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

NEWS TODAY 31.01.2026