Tuesday, May 2, 2017

வங்கியா? வணிக நிறுவனமா?

By எஸ். கோபாலகிருஷ்ணன்  |   Published on : 02nd May 2017 02:31 AM  |   | 
DINAMANI 

அண்மையில் பாரத ஸ்டேட் வங்கி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.5,000/- இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அதற்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும் என்பதே அது.

குறைந்தபட்ச இருப்புத்தொகை பெருநகரங்களில் ரூ.5,000/- என்றும், நடுத்தர நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் சற்றுக் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்புக் கிளம்பியதில் வியப்பில்லை. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் கோபம் வெளிப்பட்டது. அந்தக் கோபக் கனல் வழக்கம்போல் பிறகு தணிந்து போனது. எனினும் வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
எந்த அடிப்படையில் இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது? வங்கி சேவைக்கு ஆகும் செலவு கணக்கிடப்பட்டதா? ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா? சர்வதேச அளவில் இதற்கெல்லாம் ஏதேனும் விஞ்ஞான ரீதியில் அளவுகோல்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா? இவை எல்லாவற்றிற்கும் இல்லை என்பதே பதில்.

நடந்தது இதுதான்: பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். பேச்சு வங்கிக் கட்டணங்கள் பக்கம் திரும்புகிறது.

உடனே அவர் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள வாடிக்கையாளர்களிடம் கேட்கிறார்: "உங்கள் சேமிப்புக் கணக்குகளில் யாரெல்லாம் ரூ.5,000/-க்குக் குறைவாக இருப்புத் தொகை வைத்திருக்கிறீர்கள்? அவர்கள் தயவுசெய்து கையைத் தூக்குங்கள்' என்கிறார்.

யாரும் கையைத் தூக்கவில்லை. உடனே, "பார்த்தீர்களா? இவர்கள் எல்லோருமே ரூ.5,000/-க்குக் குறையாமல் இருப்புத் தொகை வைத்திருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல. மிக, மிகச் சிலரே தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து மாதம் 10 தடவைக்கு மேல் பணம் எடுக்கின்றனர்' என்கிறார் எஸ்.பி.ஐ. தலைவர்!

என்னே, ஓர் ஆய்வு? அவர் பேசியது பெருநகரம்தான். நிகழ்ச்சியில் 500 அல்லது 600 பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். 125 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில், இது ஒரு நியாயமான கணக்கெடுப்பு ஆகுமா?
வாடிக்கையாளர்களின் "நீறு பூத்த நெருப்பு' போன்ற கோபத்தை வங்கிகள் புரிந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது. நல்ல வேளையாக ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் புரிந்து கொண்டுள்ளன. இந்த ஒரு விஷயத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் அரசு மக்கள் பக்கம் இருப்பதுபோல் தெரிகிறது.

ரூ.500, ரூ.ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு, டிஜிட்டல் முறை செயல்பாடுகளை விரைந்து புழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்கிற முனைப்பு அரசிடம் காணப்படுகிறது. அதற்கு வங்கிகளைப் பயன்படுத்திக் கொள்ள அரசு விரும்புவது இயல்பு. இந்த வேளையில், தேவையில்லாத கட்டண அதிகரிப்பின் மூலம், வங்கி வாடிக்கையாளர்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ள அரசு விரும்பவில்லை.

வங்கிச் சேவைக் கட்டணங்கள் ஒன்றா? இரண்டா? சேமிப்புக் கணக்கு இருப்புத் தொகையில் ஆரம்பித்து, டெபிட் கார்டு பயன்பாட்டுக் கட்டணம், ஏ.டி.எம்.களிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமான முறை பணம் எடுத்தால் அதற்குக் கட்டணம், கணக்கிலிருந்து பணம் மாற்றம் (டஹஹ்ம்ங்ய்ற் ற்ழ்ஹய்ள்ச்ங்ழ்) கட்டணம் என பட்டியல் நீள்கிறது.
கடன் அட்டை (கிரெடிட் கார்டு) அல்லது பற்று அட்டை (கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கான கார்டு) என எதுவாக இருந்தாலும் வங்கிகள் தங்கள் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனங்களிலிருந்தோ வசூலித்து விடுகின்றன.

சேமிப்புக் கணக்குகளில் ரூ.1,000/- முதல் ரூ.10,000/- வரை - கிராமங்கள், சிறு நகரங்கள், நடுத்தர நகரங்கள், பெரும் நகரங்கள் என - கிளைகள் இயங்கும் இடத்துக்கு ஏற்ப குறைந்தபட்ச இருப்புத்தொகை இருத்தல் வேண்டும் என நிர்ணயிக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால், கட்டணம் உண்டு.
அதேபோல், ஒரே சீரான கட்டணங்கள் வங்கிகளிடையே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டு வழங்குவதற்கும் ரூ.130/- முதல் ரூ.300/- வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏ.டி.எம்.களைப் பொருத்தவரை பெரும்பாலான வங்கிகள் மாதம் 5 முறை பணம் எடுத்தால் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் வசூலிப்பது கிடையாது. அதற்கு மேல் 6-ஆவது, 7-ஆவது முறை எடுத்தால் கட்டணம் உண்டு.

தங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கு மூன்று முறை பணம் எடுப்பதற்கு மட்டுமே கட்டணம் இல்லை. கட்டணம் ஒவ்வொரு முறையும் ரூ.15/- முதல் ரூ.20/- வரை வசூலிக்கப்படுகிறது.
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை வங்கிப் பணியாளர்கள் முகமலர்ச்சியுடன் வரவேற்ற காலம் மலை ஏறிவிட்டது. இப்போது வங்கிக் கிளைக்கு நேரில் சென்று சொந்தக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு அல்லது பணம் டெபாசிட் செய்வதற்கு மாதம் நான்கு முறைக்கு மேல் சென்றால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.150/- கட்டணம் செலுத்திட வேண்டும். நோக்கம், வங்கிக் கிளைகளில் கூட்டம் தவிர்ப்பது; ஆன் லைன் வங்கிப் பரிமாற்றங்களை அதிகரிப்பது.

தொடக்க காலங்களில், வாடிக்கையாளர், தான் வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைப்பார். தேவையானபோது செலவு செய்வதற்காகப் பணத்தை எடுப்பார் அல்லது பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு அல்லது காப்பீட்டு பிரீமியத்துக்கு காசோலை எழுதிக் கொடுப்பார்.

தன் மகன் அல்லது மகள் பல்கலைக்கழகப் பரீட்சை எழுதும்போது, பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு வங்கியில் டிமாண்டு டிராப்ட் (வரைவு ஓலை) சிறிய கட்டணம் செலுத்தி வாங்குவார்.
ஆனால், அதேநேரம் முன்பு, பணம் எடுப்பதற்கு அரை மணி நேரம்கூட ஆகும். இப்போது நிமிஷத்தில் பணம் எடுத்துவிடலாம். நாள் முழுவதும், வாரம் முழுவதும் எந்நேரமும் ஆன்லைன் சேவை கிடைக்கிறது.
முன்பு வீட்டுக்கடன், வாகனக்கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இப்போது எளிய மக்களும் இதுமாதிரியான கடன்களைப் பெறலாம்.
வங்கிச் சேவையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்ட பிறகும், சில விஷயங்களில் சாதாரண மக்களுக்குப் பாதகமாகவும், வசதி படைத்தவர்களுக்குச் சாதகமாகவும் வங்கியின் போக்கு அமைந்துள்ளது. உதாரணமாக, கடன் வழங்கும்போது சாதாரண மக்களிடம் விதிமுறைப்படி வட்டி விகிதத்தைக் கறாராக வாங்கிவிடுகிறார்கள்.

ஆனால் செல்வந்தர்களிடம் பெரிய நிறுவனங்களில் அவர்களது தரவரிசை (இழ்ங்க்ண்ற் தஹற்ண்ய்ஞ்) அ அ அ வாக இருக்குமானால், வங்கியின் வழக்கமான வட்டிவிகிதத்தைவிட குறைவான வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்களிடமிருந்து "செக்யூரிடி' (பிணையம்) கிடைக்கிறது, பலவகை சேவைக் கட்டணங்களை வசூலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கூடுதல் லாபம் கிடைக்கிறது' என்று பதில் வருகிறது.

முக்கியமான விஷயம் என்னவெனில், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்துவிட்டது. இதனால் இழப்பு ஏற்படுகிறது. இழப்பை ஈடுகட்ட சகட்டுமேனிக்கு சேவைக்கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கிவிட்டன வங்கிகள்.

வாராக்கடன் இழப்பைச் சரி செய்வதற்குத் திறமையான, துரிதமான, துணிவான செயல்பாடுகள்தான் தேவை. அதை விடுத்து, சேவைக் கட்டணங்களை உயர்த்தி எளிய வாடிக்கையாளர்களைத் துன்புறுத்துவது நியாயம் அல்ல.

சமீப காலத்தில், வங்கித் துறையில் டிஜிட்டல் வழிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, கிராமப்புறங்களில் கையடக்க ஏ.டி.எம்.களின் (ஙண்ஸ்ரீழ்ர் அபஙள்) பயன்பாடு அதிகரித்துள்ளது. 2,000 பேர் வசிக்கும் கிராமங்களில் வங்கிக் கிளைகளை அமைப்பதற்கு பதில் ஆஹய்ந்ண்ய்ஞ் இர்ழ்ழ்ங்ள்ல்ர்ய்க்ங்ய்ற்ள் எனப்படும் வங்கிப் பிரதிநிதிகளை நியமிக்கும் திட்டம் ஏற்கெனவே செயல்படுகிறது.
தற்போது கூடுதல் நன்மை என்னவெனில், புதிய டிஜிட்டல் வழிமுறைகளை வங்கிப் பிரதிநிதிகள் கையடக்க ஏ.டி.எம்.கள் மூலம் வங்கியின் கிராமக் கிளைகள் செய்யக் கூடிய பணிகள் அனைத்தையும் செய்து முடித்து விடுகின்றனர்.

அதாவது சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்தல், கணக்கில் பணம் டெபாசிட் செய்தல் போன்ற பணிகளை கிராமங்களில் வங்கிப் பிரதிநிதிகள் செய்து விடுகின்றனர். அவர்களுக்கு சொற்ப தொகைதான் கட்டணமாக (ஊங்ங்ள்) வங்கிகள் தருகின்றன. அதையும் குறைப்பதற்கு வங்கிகள் முயன்று வருகின்றன.

நியாயமாகப் பார்த்தால் அவர்களுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும். வங்கிகள் கிளைகளை அமைத்தால் ஆகக் கூடிய செலவை அவர்களை பயன்படுத்திக் கொண்டு மிச்சப்படுத்துகின்றன.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு எழுதி, கையடக்க ஏ.டி.எம்.களை கையாளும் வங்கிப் பிரதிநிதிகளுக்கு உரிய கட்டணம் (ஊங்ங்ள்) வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

வங்கிகள் குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் வெறும் வணிக நிறுவனங்கள் அல்ல. அவர்களுக்கு சமூக கண்ணோட்டம் தேவை. பொருளாதார வளர்ச்சி, எளிய மக்களையும் குறிப்பாக ஊரகப் பகுதி வாழ் மக்களையும் உள்ளடக்கியதாக (ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ஐய்ஸ்ரீப்ன்ள்ண்ர்ய்) மாற்றுவதில், வங்கிகளுக்கு பெரும் பங்கு உண்டு.
இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க முதல் நாளில் 4,738 விண்ணப்பம்

பதிவு செய்த நாள் 02 மே 2017 01:45

சென்னை, அண்ணா பல்கலை, இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, முதல் நாளான நேற்று, 4,738 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலை மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, மாலை, 6:00 மணி நிலவரப்படி, 4,738 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

அவர்களில், ௪௮ பேர் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, ஆன்லைன் பதிவு மையம் மூலமாக விண்ணப்பித்து உள்ளனர்.மே, 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பிரதியை, ஜூன், 3க்குள், அண்ணா பல்கலையில், தபாலிலோ, நேரிலோ
சமர்ப்பிக்கலாம். விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் சேர விரும்புவோர், உரிய ஆவணங்களுடன், அண்ணா பல்கலைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.'பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்புவோருக்கு விண்ணப்பிக்கும் தேதி, தனியாக அறிவிக்கப்படும்' என, இன்ஜி., கவுன்சிலிங் மாணவ சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பதிவு செய்த நாள் 02 மே  2017

சென்னை, இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால், டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, அரசு டாக்டர்கள், நடத்தி வரும் போராட்டம், நேற்று, 13வது நாளாக நீடித்தது. இதனால், நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். 'டாக்டர்களின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்' என, மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வில், இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. 'நீதிமன்ற உத்தரவை பொறுத்தே போராட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என, முடிவு செய்வோம்' என, டாக்டர்கள்
கூறுகின்றனர்.
முதியோர் இல்லம் அருகே மதுக்கடை கூடாதுஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 02 மே 2017

00:24 சென்னை, 'முதியோர் இல்லம் அருகிலும், மதுக்கடைகளை திறக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, அய்யம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜு தாக்கல் செய்த மனு:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும். வேறு இடங்களுக்கு மாற்றுவதாகக் கூறி, அய்யம்பாளையம் கிராமத்தில், முதியோர் இல்லம் அருகே, மதுக்கடையை திறக்க முயற்சி நடக்கிறது.

இங்கு, முதியோர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் பிரச்னைகளுக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுக்கடையை இங்கு திறந்தால், பொதுமக்கள் மட்டுமின்றி, முதியோரும் பாதிக்கப்படுவர்.
முதியோர் இல்லம் அருகே, மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை. எனவே, அய்யம்பாளையத்தில், முதியோர் இல்லம் அருகே, மதுக்கடையை திறக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மதுபான சில்லரை விற்பனை விதிகளில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே, மதுக்கடைகளை திறக்கக் கூடாது என, கூறப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட துாரத்தில் தான், மதுக்கடைகளை திறக்க முடியும்.

இந்த விதிகளில், முதியோர் இல்லம் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும், மன உளைச்சலுக்காக சிகிச்சை பெறும் முதியோர்களில், குறிப்பாக, பெண்கள் அதிகமுள்ள முதியோர் இல்லங்கள் அருகிலும், மதுக்கடைகளை திறப்பதில், வரையறுக்கப்பட்ட துாரத்தை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதிரடி.. .!
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்...
போலீஸ் உதவியுடன் மே 4ல் மனநலத்தை பரிசோதிக்க உத்தரவு


புதுடில்லி: 'கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, சி.எஸ்.கர்ணனுக்கு, வரும், 4ல், போலீஸ் உதவியுடன் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கடந்த ஆண்டு, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போது, அந்த உத்தரவை ரத்து செய்து, தானாகவே உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கினார். பின், மன்னிப்பு கேட்டு, கோல்கட்டா ஐகோர்ட்
நீதிபதியாக பொறுப்பேற்றார்.

அவமதிப்பு வழக்கு

இதனிடையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உட்பட, 20 நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார்; இதை, கோர்ட் அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், நேரில் ஆஜராக, நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆஜராக மறுத்ததால், நீதிபதி கர்ணனுக்கு எதிராக, தலைமை நீதிபதி அடங்கிய, ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, கைது, 'வாரன்ட்' பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி கர்ணன்

ஆஜரானார். தன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குதொடர்ந்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு எதிராக, தானாகவே அவதுாறு வழக்கை தொடர்ந்தார்.

இந்த நிலையில், 'நீதிபதி கர்ணன், எவ்வித நிர்வாக மற்றும் நீதித் துறை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நீக்க வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது.

இதற்கிடையே, இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, வரும், 4ல், கோல்கட்டா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழு பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் நீதிபதி கர்ணன் பங்கேற்பதை, மாநில போலீஸ் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். அதற்காக போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

கடைசி வாய்ப்பு

வரும், 8ல் மருத்துவ அறிக்கையை இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்பான, தன் தரப்பு வாதத்தையும் அறிக்கையாக அன்றைய தினம், நீதிபதி கர்ணன் தாக்கல் செய்யலாம். அவ்வாறு அவர் பதில் ஏதும் தாக்கல்செய்யாவிட்டால், அவர் கூறுவதற்கு ஏதுமில்லை என எடுத்துக் கொள்ளப்படும். வழக்கின் விசாரணை, 9ல் நடக்கும். இதனிடையில், பிப்., 8க்குப் பின், நீதிபதி கர்ணன் பிறப்பித்துள்ள எந்த உத்தரவையும், நாடு முழுவதும் உள்ள மற்ற கோர்ட்கள், தீர்ப்பாயங்கள் நிறைவேற்ற வேண்டியதில்லை.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளது.

ஒரு நீதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டே, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது, இதுவே முதல் முறை. மேலும், நீதிபதிக்கு மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளது, நீதித் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடும் விளைவை சந்திக்க நேரிடும் நீதிபதி கர்ணன் எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கோல்கட்டாவில் நிருபர்களிடம், நீதிபதி கர்ணன் கூறியதாவது: என்னை கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றால், போலீஸ், டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்வேன்.

அதற்கு முன்னதாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு, டில்லியில் உள்ள மருத்துவமனையில் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை, டில்லி போலீஸ் டி.ஜி.பி., செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சித்ரா பவுர்ணமி அன்னதானம் விண்ணப்பிக்க அழைப்பு

பதிவு செய்த நாள் 02 மே  2017

00:24 திருவண்ணாமலை'திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமி அன்று அன்ன தானம் செய்ய விரும்பு வோர், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலையில், 10ம் தேதி சித்ரா பவுர்ணமியன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர், இன்று முதல், 8ம் தேதி வரை விண்ணப்பித்து, முன் அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.

அலுவலக வேலை நாட்களில், கலெக்டர் அலுவலகத்தின், இரண்டாவது மாடியில், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனரிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, முன் அனுமதி பெற வேண்டும். காலக் கெடுவுக்கு பின் விண்ணப்பிக்கும் மனுக்கள் நிராகரிக்கப்படும்.அன்னதானம் வழங்குவோர், கிரிவல பாதையில் உணவு சமைக்கக் கூடாது. சமைத்து எடுத்து வரும் உணவை வழங்க வேண்டும். அவை தரமானதாக, துாய்மையானதாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே வழங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. இலை, தொன்னை, பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் குடிநீர் வினியோகிக்கக் கூடாது. சாப்பிடும் இடத்தில், குப்பை கூடைகள் வைக்கவேண்டும்.

அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கினால், போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வறுத்தெடுக்க போகுது கத்திரி 4ம் தேதி துவங்குவதால் உஷார்

பதிவு செய்த நாள் 01 மே  2017

23:07 சென்னை, கோடையின் உச்ச கட்டமான, அக்கினி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில், மே, 4ல் துவங்குகிறது. மே,28 வரை, வறுத்தெடுக்கும் என்பதால், பகல் நேரத்தில், வெளியில் தலை காட்டால் இருப்பது நல்லது.தமிழகத்தில், இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்தே, கோடையின் தாக்கம் துவங்கி விட்டது. காற்றின் ஈரப்பதமும் குறைந்து விட்டதால், வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், மக்கள் திணறி வருகின்றனர்.
கத்திரி வெயில் துவங்கும் முன்பே, தமிழகத்தில் பல மாவட்டங்களிலும், 40 டிகிரி செல்சியசுக்கு மேல், வெப்பம் பதிவானது.

'பகல் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம்' என, அரசே எச்சரிக்கும் விடும் அளவுக்கு, வெப்பத் தாக்கம் அதிகமாக இருந் தது. கத்திரி வந்தால், நிலைமை எப்படி இருக்குமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கத்திரி வெயில், நாளை மறுநாள் துவங்கி, 28ம் தேதி வரை நீடிக்க உள்ளது. இதனால், வெயில் வழக்கத்தை விட, வறுத்தெடுக்கும். எனவே, பகல் நேரங்களில், மக்கள், தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி, மதுரை, சேலம், வேலுார், நெல்லை, திருச்சி மாவட்டங்களில், 40 டிகிரி செல்சியசை தாண்டி, வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது
குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், 'அடுத்த சில நாட்களுக்கும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. சில இடங்களில் இயல்பை விட, 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்' என்றனர்.

NEWS TODAY 31.01.2026