Tuesday, May 2, 2017

வறுத்தெடுக்க போகுது கத்திரி 4ம் தேதி துவங்குவதால் உஷார்

பதிவு செய்த நாள் 01 மே  2017

23:07 சென்னை, கோடையின் உச்ச கட்டமான, அக்கினி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில், மே, 4ல் துவங்குகிறது. மே,28 வரை, வறுத்தெடுக்கும் என்பதால், பகல் நேரத்தில், வெளியில் தலை காட்டால் இருப்பது நல்லது.தமிழகத்தில், இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்தே, கோடையின் தாக்கம் துவங்கி விட்டது. காற்றின் ஈரப்பதமும் குறைந்து விட்டதால், வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், மக்கள் திணறி வருகின்றனர்.
கத்திரி வெயில் துவங்கும் முன்பே, தமிழகத்தில் பல மாவட்டங்களிலும், 40 டிகிரி செல்சியசுக்கு மேல், வெப்பம் பதிவானது.

'பகல் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம்' என, அரசே எச்சரிக்கும் விடும் அளவுக்கு, வெப்பத் தாக்கம் அதிகமாக இருந் தது. கத்திரி வந்தால், நிலைமை எப்படி இருக்குமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கத்திரி வெயில், நாளை மறுநாள் துவங்கி, 28ம் தேதி வரை நீடிக்க உள்ளது. இதனால், வெயில் வழக்கத்தை விட, வறுத்தெடுக்கும். எனவே, பகல் நேரங்களில், மக்கள், தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி, மதுரை, சேலம், வேலுார், நெல்லை, திருச்சி மாவட்டங்களில், 40 டிகிரி செல்சியசை தாண்டி, வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது
குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், 'அடுத்த சில நாட்களுக்கும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. சில இடங்களில் இயல்பை விட, 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்' என்றனர்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...