Wednesday, August 9, 2017

தலையங்கம்
வரதட்சணை வழக்கில் தீவிர விசாரணை




ஆகஸ்ட் 09 2017, 03:00 AM

சமுதாயத்தில் களையப்படவேண்டிய ஒன்று ‘வரதட்சணை கொடுமை’ என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆண்டாண்டு காலமாக பல சமுதாய சீர்திருத்த தலைவர்கள் இந்த கருத்தைத்தான் வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். தந்தை பெரியார் இதில் மிகத்தீவிரமாக இருந்தார். எவ்வளவோ தலைவர்கள் இதற்காக முயற்சி எடுத்தும் வரதட்சணை என்ற களையை இன்னமும் முழுமையாக அகற்றமுடியவில்லை. எவ்வளவுதான் நற்குணங்கள் இருந்தாலும், படித்திருந்தாலும் திருமணம் என்று வந்துவிட்டால், மாப்பிள்ளை வீட்டார் உங்கள் பெண்ணுக்கு எவ்வளவு நகைகள் போடுகிறீர்கள், எவ்வளவு ரொக்கம் தருவீர்கள், என்ன சொத்து எழுதிவைப்பீர்கள் என்பதுபோன்ற பல பேரங்களை பேசுவது சமுதாயத்தில் ஏழை முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து மட்டங்களிலும் இன்னும் நிலவிவருகிறது. திருமணம் முடிந்தபிறகு கேட்ட வரதட்சணையை தரவில்லை என்ற ஆத்திரத்தில் பல மணப்பெண்கள் அடித்து விரட்டப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகிறார்கள், தற்கொலை செய்யும் அளவுக்கும் தூண்டப்படுகின்றனர். இத்தகைய கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்.

ஆனால், இப்போதெல்லாம் வரதட்சணை கொடுமை என்று ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டால், உடனடியாக இந்திய தண்டணைச் சட்டம் 498ஏ–ஐ பயன்படுத்தி, அந்த பெண்ணின் கணவர், மாமனார், மாமியார், கணவனுடன் உடன் பிறந்தோர், ஏன் சில நேரங்களில் தாத்தா, பாட்டி மற்றும் மைனர் குழந்தைகள் எல்லோரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கும் நிலைமை இருக்கிறது. எல்லோருமே தவறு செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒருசில நேரங்களில் இந்த வரதட்சணைக் கொடுமை என்ற ஆயுதத்தை தவறாக பயன்படுத்துவதால், ஒருசில பெண்கள் தங்கள் கணவனையும், மாமனாரையும், மாமியாரையும், வேறு சில குடும்ப பிரச்சினைகளுக்காக பழிவாங்கவேண்டும் என்ற நோக்கில் தவறாக புகார் கொடுத்துவிடுவதால், அப்பாவிகளான கணவனின் குடும்பத்தினரும் சிறையில் வாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுவரையில், போலீஸ் நிலையத்தின் வாசலுக்குச் சென்றிருக்காதவர்கள், ஜெயில்வாசல் என்னவென்றே தெரியாதவர்கள், இந்த புகாரில் ஜெயிலில் அடைக்கப்பட்டு மிகுந்த மனஉளைச்சலும், சொல்லொணத் துயரத்தையும் அடைகின்றனர். தொடர்ந்து நீண்டநெடுங்காலமாக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறி இறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற ஒரு வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர், இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு சிறையில் அடைப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்கள், அதிகாரிகளின் மனைவிகள், சட்டப்பூர்வமான தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பநல குழுவை மாவட்ட சட்டபணி ஆணைக்குழு அமைக்க வேண்டும். ஏதாவது வரதட்சணை புகார்கள் வந்தால் ஒருமாதத்திற்குள் இந்தக்குழு விசாரித்து, அந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா?, இல்லையா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதுவரை புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை கைது செய்யக்கூடாது. அந்த புகாரில் முகாந்திரம் இருந்தால்தான் போலீஸ் அதிகாரிகள் புலன் விசாரணை செய்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். உண்மையிலேயே இந்த தீர்ப்பு வரவேற்கத்தகுந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய குடும்பநல குழுக்களை தமிழக அரசு அமைத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வரதட்சணை கொடுமை புகார் செய்யப்பட்டால், உடனடியாக இந்த குழுவுக்கு அனுப்புவதற்கான உத்தரவுகளையும் பிறப்பிக்கவேண்டும். நீதி நிச்சயமாக நிலைநாட்டப்படவேண்டும். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது.
மாநில செய்திகள்
நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு வழங்கப்படும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஆகஸ்ட் 09, 2017, 05:30 AM

சென்னை,

நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

சென்னை அருங்காட்சியகம், தொல்லியல் துறை மற்றும் சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:-

பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மத்திய அரசின் நீட் தேர்வை எழுதுவதற்கு வசதிபடைத்த மாணவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவு செய்து பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையை போக்குவதற்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் 54 ஆயிரம் கேள்விகள் உரிய புகைப்படத்துடன் 30 மணி நேரம் ஓடக்கூடிய குறுந்தகடு (சி.டி.) வழங்க உள்ளோம்.

தொல்லியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிகளவில் நிதி ஒதுக்க முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். கீழடியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு குடியிருந்திருக்கின்றனர். ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைக்க அரசு ரூ.1 கோடி வழங்கியதுடன், மத்திய அரசுக்கு 2 ஏக்கர் நிலமும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் 3 வகையான சீருடை வழங்க உள்ளோம். 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையும், 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு என 3 பிரிவாக சீருடை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மாணவர்களின் கல்வி முறை மாற்றப்பட்டு, சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம் கொண்டுவரப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்-டாப் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச அளவில் நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் பள்ளிக்கல்வி துறை பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறது. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மதுரையில் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. மக்களின் மனநிலையை பொறுத்தவரை 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவர வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள இடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாதம் ரூ.7,500 சம்பளத்தில் ஆசிரியரை நியமிக்கும்படி கூறியுள்ளோம். தனியார் பள்ளிகளுக்கு ஆயிரக்கணக்கான பேர் தடையில்லா சான்று பெற்றுச் சென்றுள்ளனர். நான் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறேன். எனவே மற்றவர்கள் கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உதயசந்திரன் இடமாற்றம்?

பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்படப்போவதாக அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

Tuesday, August 8, 2017


11 லட்சம் பான் கார்டுகளை முடக்கிய அரசு: உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?




மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார் வெளியிட்டுள்ளார்.

ஒரு நபரின் பெயரிலேயே பலபான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், "பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர்அல்லது பொய்யான அடையாளம்கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும், உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில்,

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html

என்ற Link-ஐ Click செய்யுங்கள். அடுத்ததாகத்திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத்(உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

Posted by kalviseithi.net

HC query on cut in prisoners’ salary

Notices issued on a PIL petition filed by Madurai-based activist K.R. Raja

The Madras High Court Bench here on Monday wanted to know from the State Government why convicts lodged in prisons were not being paid as per the Minimum Wages Act, 1948, and whether it was justified in deducting 50% of the wages earned by them through hard labour towards expenses incurred by the State for their upkeep.
Justices K.K. Sasidharan and G.R. Swaminathan issued notices to the Home Secretary as well as the Additional Director General of Police (Prisons) after passing a detailed order in which they recalled that the Supreme Court had on December 23, 1996 held that a substantial amount of prisoners’ wages could not be deducted for their upkeep.
The order was passed on a public interest litigation petition filed by Madurai-based activist K.R. Raja who urged the court to declare as illegal Rule 481 of the Tamil Nadu Prison Rules, 1983, in so far as it required deduction of 50% prisoners’ salary towards their upkeep and 20% towards payment of compensation to victims of crime.
Puducherry paid more
Arguing the case on behalf of the petitioner, his counsel R. Alagumani claimed that skilled, semi-skilled and unskilled prisoners in the State were paid just Rs. 100, Rs. 80 and Rs. 60 a day respectively though the Union Territory of Puducherry was paying them at the rate of Rs. 180, Rs. 160 and Rs. 150 a day for the same kind of jobs.
In his affidavit, the petitioner had stated that most of the convicts languishing in the State prisons were those who had murdered their spouses in a spurt of anger and therefore it was essential to pay them a reasonable amount of money so that their children, living without their parents, could be taken care of and educated well. He also claimed that while replying to an application under the Right to Information Act, 2005, the Superintendent of Palayamkottai Central Prison in Tirunelveli had stated that Rs. 66.83 lakh was collected from the prisoners’ salaries between 2000 and 2013, and the amount was kept idle without being distributed to the victims of crime.

Rousing reception given to Shraddha Sethu express

The express halts briefly at Kumbakonam station

Train travellers accorded a rousing reception to the new express service Shraddha Sethu Express that halted briefly in Kumbakonam station on Monday during its inaugural run between Rameswaram and Faizabad.
Faizabad MP Lallu Singh had made an appeal to the Railway Ministry for a new train service connecting two important Ramayan centres Ayodhya and Rameswaram. The Thajavur District Train Travellers Association appealed to Mr. Singh to seek the service linking Kumbakonam, also called Dakshin Ayodhya.
The pleas got fructified and Prime Minister Narendra Modi flagged off the inaugural service from Rameswaram on July 27. But to the surprise of the Association members the train halted only in Thanjavur and the members took the issue up with Mayiladuthurai MP R.K. Bharathi Mohan who petitioned the Ministry for a halt at Kumbakonam.
Consequently, the first regular trip of the Shraddha Sethu Express arrived at Kumbakonam Station at 7.50 a.m. on Monday.
Mr. Bharathi Mohan, Thanjavur MLA M. Rengasamy, Association vice-president A. Giri, secretary Dinesh Kumar, Papanasam Train Travellers Welfare Association president T. Saravanan, All Traders Association secretary V. Sathyanarayanan gathered at the Station to receive the train.
A twist of novelty was provided at the reception with the chief priest from the Dakshin Ayodhya Sri Ramaswamy temple Soundararaja Bhattar performed a small puja, offered the temple’s sacred garland and distributed temple prasadam to the crew and passengers. Loco pilots Arvind Sreekumar and Karthikeyan as also the train guard Balu were honoured on the occasion.
Later, the train left Kumbakonam for Faizabad. The train leave Rameswaram on Sundays to reach Kumbakonam on Monday to reach Ayodhya on Wednesday. On return, the service will leave Faizabad on Wednesdays to reach Kumbakonam on Saturdays to reach Rameswaram the same day.
×


Chennai – Mangalore West Coast Express, a few other trains to be delayed on August 8, 9

Siddharth Prabhakar| TNN | Aug 7, 2017, 09:12 PM IST

(

CHENNAI: Southern Railway has announced that a few trainswill be delayed on August 8 and 9 due to engineering work at Kavanur yard on the Katpadi - Jolarpettai section.

No 22637 Chennai Central - Mangalore Central West Coast Express will be regulated / delayed at Latteri and will reach Jolarpettai late by two hours and five minutes on August 8.

No 22637 Chennai Central - Mangalore Central West Coast Express will reach Jolarpettai late by two hours and five minutes on August 9.

No 12539 Yesvantpur - Lukcnow Express and No.22864 Yesvantpur - Howrah express will reach Renigunta late by 25 minutes on August 9.


No 17209 KSR Bengaluru - Kakinada Town Seshadri Express will reach Katpadi late by 25 minutes on August 9.

Suburban Train services

Southern Railway also announced changes in the pattern of suburban train services on the Chennai - Arakkonam section on August 8 and 9 due to engineering work at Tiruninravur yard.

No 43801 Chennai Beach - Arakkonam EMU local, scheduled to leave Chennai Beach at 1.20am on August 8 and 9, will run on the fast line between Pattabiram East Siding and Tiruvallur and will not stop at Pattabiram, Nemilichery, Tiruninravur, Veppampattu and Sevvapet Road railway stations.
சென்னை - கன்னியாகுமரி ரயில் பாதை : பெருங்குடி - கடலூர் ஆய்வுக்கு 'ஓகே!'
பதிவு செய்த நாள்07ஆக
2017
22:02


சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரையோரம் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், முதல் கட்ட மாக, பெருங்குடி - கடலுார் இடையே ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் இருந்து, மாமல்லபுரம் வழியாக கன்னியாகுமரி வரை, கிழக்கு கடற்கரையையொட்டி, புதிய அகல ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கடந்த, 2008-09ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், சென்னை பெருங்குடியில் இருந்து, மாமல்லபுரம், புதுச்சேரி, கடலுார் வரை, கிழக்கு கடற்கரையோரம், 178 கி.மீ., கிழக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. 

இதற்கு, அபோது, 532 கோடி ரூபாய் செலாகும் என, தெரிவிக்கப்பட்டது. இப்பாதை குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், இத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்பாதை அமைக்கப்பட்டால், சென்னை எண்ணுார், புதுச்சேரி, கடலுார், காரைக்கால் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு நேரடியாக ரயில் பாதை அமைக்கவும், கடலோர மாவட்டங் களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதனால் இப்பாதை அமைக்க, ரயில்வே அமைச்சகத்திற்கும், வாரியத்துக்கும், கடற்கரையோர மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி, பெருங்குடியில் இருந்து, மாமல்ல புரம் வழியாக, கடலுார் திருப்பாதிரிபுலியூர் வரை, புதிய அகல ரயில் பாதை அமைக்க, மீண்டும் ஆய்வு செய்யவும், அடுத்த கட்டமாக, காரைக்குடியில் இருந்து, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம், துாத்துக்குடி, திருச்செந்துார், கூடங்குளம், கன்னியாகுமரி வரை புதிய பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றியும் ஆய்வு செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய பாதை அமைக்கப்படும் போது, கடலுாரில் இருந்து, திருவாரூர் வரை, தற்போது, பயன்பாட்டில் உள்ள அகல ரயில் பாதை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை, மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதை பணி முடிந்த பின், இப்பாதையை பயன்படுத்திக்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: இப்பாதைக்கு, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், தங்கள் பங்களிப்பை செய்யும் என்ற நோக்கில், இத்திட்டத்திற்கான, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக, சென்னை பெருங்குடியில் இருந்து, கடலுார் வரை, ௧௭௮ கி.மீ., புதிய பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து, இரண்டு மாதத்தில், ஆய்வு பணி துவங்கப்பட உள்ளது. இதையொட்டி, பெருங்குடி - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுார் இடையே, புதிய பாதைக்கு தேவையான நிலம் குறித்து, தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்வதற்கு, 60லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு பணி, அக்டோ பரில் துவங்கி, 2018 மார்ச்சுக்குள் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது .இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

NEWS TODAY 26.01.2026