Wednesday, August 16, 2017

Pedestrian subway construction delays trains


By Express News Service  |   Published: 14th August 2017 01:20 AM  |  

CHENNAI: Construction work on a pedestrian subway between East and West Tambaram delayed trains passing through the area by a few hours on Saturday night.
The construction work slowed down due to a sudden downpour, which halted power supply for the tunneling work.
Pedestrians cross railway
tracks near the site of the
subway, under construction
in Tambaram
The ambitious project, which employs more than 600 workers, involves tunneling under four railway tracks to connect a bus stop in West Tambaram to the bus stop on the other side near Fathima Church. Labourers at the project site claimed they had managed to tunnel under two of the four tracks during Saturday night.
On completion, the subway will allow pedestrians to cross from West to East Tambaram without using the railway overbridge, which is the only safe alternative.
“Lots of people cross the railway  tracks to reach the other side and put themselves in unnecessary danger,” said a railway official wishing to remain anonymous. “Since the tracks have been re-laid in the morning, trains are running on schedule,” he said while inspecting the tracks.
The stretch of railway track which sees many daily commuters crossing over to Irumbuliyur town on the other side, is covered with shrubbery. Scampering pedestrians avoiding fast trains is also a common sight here.
“Once the subway is completed, we won’t have to cross the tracks,” said Shanthi, who was crossing the tracks with her family.  Work on the subway is expected to resume on Monday evening.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 'ஆண்ட்ராய்டு ஆப்' - தேர்தல் ஆணையம் அசத்தல்

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துகொள்வதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈரோ-நெட் (ERO-NET) என்ற இணையதளம் மற்றும் 'ஆண்ட்ராய்டு ஆப்'-ஐ அறிமுகம்செய்திருக்கிறது. 

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநிலத் தேர்தல் அலுவலகத்தில், இந்த 'ஆப்'-ஐ மாநிலத் தேர்தல் ஆணையர் கந்தவேலு அறிமுகப்படுத்தினார்.அப்போது பேசிய அவர், ''தவறு இல்லாத வாக்காளர் பட்டியல்தயாரிக்கவும், நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும் இந்த 'ஆப்' உதவியாக இருக்கும்.மேலும், வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்தை National Voters Service Porters ( www.nvsp.in ) என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய முடியும். அப்படிப் பதிவுசெய்யப்படும் விண்ணப்பங்கள் UNPER (Unified National Photo Electoral Rolls) என்ற தகவல் அறையில் பராமரிக்கப்படும். அனைத்து மண்டல மொழிகளிலும் இந்த 'ஆப்' செயல்படும். இதன்மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயரைச்சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவுடன்அவருக்கு ஒரு தனிப்பட்ட எண் அவரது செல்போனுக்கு வரும்.அந்த எண்ணைக்கொண்டு அந்த விண்ணப்பத்தின் பல்வேறு நிலைகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் வாக்காளருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த விண்ணப்பத்தின் அப்போதைய நிலை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.

அதிகாரிகள், வாக்காளர் பட்டியலைப் பராமரிக்கவும், வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கவும் மற்ற மாநில வாக்காளர் பதிவு அதிகாரிகளை எளிதில் தொடர்புகொண்டு, சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளைச் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தவறுகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவுசெய்வது தவிர்க்கப்படும். மேலும், ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துகொள்ளலாம். இந்த வசதியை இணையதளம் மூலமாகவும் 'ஆண்ட்ராய்டு 'ஆப்' மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்.
மாவட்ட செய்திகள்

விடுமுறை முடிந்து திரும்பி செல்வதால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்



விடுமுறை முடிந்து திரும்பி செல்வதால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
ஆகஸ்ட் 16, 2017, 04:15 AM
சேலம்,

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை(12-ந் தேதி) முதல் நேற்று செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை தினமாகும். அதாவது 14-ந் தேதி கிருஷ்ணஜெயந்தி, 15-ந் தேதி சுதந்திரதினம் விடுமுறை ஆகும். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பணி நிமித்தமாக குடும்பத்துடன் வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்திருந்தனர். நேற்றுடன் விடுமுறை முடிந்ததால், சேலம் வந்திருந்த அனைவரும் மீண்டும் பணிநிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஊர் செல்ல விரும்பும் பயணிகள் குடும்பத்துடன் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் இரவு 10 மணிவரை அலைகடலென திரண்டனர். இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் அதிகமாக இருப்பதை கண்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்கப்பட்டது. இதனால் பஸ்நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு பஸ் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் டோக்கன் வழங்கப்பட்டது. சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது



பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

ஆகஸ்ட் 16, 2017, 05:00 AM
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை விடிய-விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெங்களூரு தெற்கு பகுதிகளில் கனமழை பெய்தது.

மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதனால் ஜெயநகர், மாதவன் பார்க், வி.வி.புரம், கோரமங்களா, பசவனகுடி, லால்பாக், எச்.எஸ்.ஆர். லே-அவுட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவ்வாறு முறிந்த மரங்கள் வீடுகள் மீதும், வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் மீதும் விழுந்தன. இதனால் அந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தூங்க முடியாமல் பரிதவித்தார்கள்.

இதுதவிர எச்.எஸ்.ஆர். லே-அவுட், கோரமங்களா, சாந்திநகர், நாகவாரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்று காலையில் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்கள். எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டாரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது. அங்குள்ள வகுப்பறைகளுக்குள் தண்ணீர் தேங்கி நின்றது.

கார்கள் மிதந்தன

சாந்திநகரில் உள்ள அரசு பஸ் பணிமனைக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களை வெளியே எடுக்க முடியாமல் டிரைவர்கள் சிரமத்தை அனுபவித்தார்கள்.

கோரமங்களாவில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திற்குள் மழைநீர் தேங்கியதால் கார்கள் மிதந்தன.

பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. அந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் அந்த பகுதியில் இருந்த முஸ்லிம்களும் ஈடுபட்டனர். இது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

கொட்டி தீர்த்த மழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், நேற்று வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பரிதவித்தார்கள்.

12 செ.மீ. மழை

நேற்று காலையில் இருந்து மாலை வரை நகரின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. பெங்களூருவில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை - மதுரை 2வது ரயில் பாதை டிசம்பருக்குள் மின் மயமாகும்

பதிவு செய்த நாள்15ஆக
2017
22:44


திருச்சி, :திருச்சி கோட்ட ரயில்வே பயிற்சி மையத்தில் நடந்த, சுதந்திர தினவிழாவில், கோட்ட மேலாளர் உதயகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு
மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:சென்னை - மதுரை வரை, 497 கி.மீ.க்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு, மின் மயமாக்கப்படுகிறது. எஞ்சியுள்ள, 25 கி.மீ.,க்கு, இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு, டிசம்பர் மாதத்துக்குள் மின் மயமாக்கும் பணிகள் முடிக்கப்படும். 

பொன்மலை - தஞ்சாவூர் இடையிலான, 47 கி.மீ., வழித்தடமும், இந்த ஆண்டுக்குள் இரட்டை ரயில் பாதையாக்கப்படும். ரயிலை சுத்தமாக வைத்திருக்க துவங்கப்பட்டுள்ள புதிய ஆப் வழியாக பயணிகள் தரும் புகார், 30 நிமிடங்களில் சரி செய்யப்படும். தென்னக ரயில்வேயில், 40 சதவீதம் ரயில் பெட்டிகளில், 'பயோ டாய்லெட்' பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி

பதிவு செய்த நாள்15ஆக
2017
22:42




சிதம்பரம்,: சுதந்திர தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், நேற்று காலை, 8:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, நடராஜர் சன்னதி சித்சபையில் வெள்ளி தட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட தேசியக் கொடியை, மேள தாளங்கள் முழங்க, தீட்சிதர்கள் கிழக்கு கோபுரத்திற்கு எடுத்து வந்தனர்.

கோபுரத்திற்கு தீபாராதனை செய்து, கோபுர உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினர். கோவில் பொது தீட்சிதர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
துணைவேந்தர் பதவி விண்ணப்பிக்க அவகாசம்
பதிவு செய்த நாள்15ஆக
2017
22:33

'அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவிக்கு, ஒரு வாரத்தில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்ய வேண்டும்' என, தேடல் குழு அவகாசம் வழங்கி உள்ளது.

அண்ணா பல்கலையில், துணைவேந்தராக இருந்த ராஜாராம் பதவிக்காலம், 2016 மே மாதம் முடிந்தது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது.

தேடல் குழுவினர், 10 மாதங்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் பெற்று, மூன்று பேர் கொண்ட பட்டியலை, கவர்னரிடம் வழங்கினர். பட்டியலில் இடம் பெற்றவர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ், நேர்முகத் தேர்வு நடத்தினார். பின், பட்டியலை நிராகரித்து, தேடல் குழுவையும் கலைத்தார்.
இதையடுத்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய தேடல் குழு அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான, இந்த குழுவினர், ஜூலை, 20ல், புதிய அறிவிக்கையை வெளியிட்டனர்.அதன்படி, தகுதியான பேராசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பணி நடக்கிறது. கல்வித்தகுதி, ஆராய்ச்சி விபரங்கள் உட்பட, பல்வேறு தகவல்கள், விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், வரும், 22 வரை மட்டுமே பெறப்பட உள்ளன.
கடைசி தேதிக்கு, இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளதால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த முறை, சிறந்த தலைமை பண்பும், ஆராய்ச்சியில் முன்னிலையும், தரமான கல்வியை வழங்குவதில் ஆர்வமும் உடையவர், துணைவேந்தராக தேர்வு செய்யப்
படுவார் என, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

- நமது நிருபர் -

NEWS TODAY 28.01.2026