Wednesday, August 16, 2017

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி

பதிவு செய்த நாள்15ஆக
2017
22:42




சிதம்பரம்,: சுதந்திர தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், நேற்று காலை, 8:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, நடராஜர் சன்னதி சித்சபையில் வெள்ளி தட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட தேசியக் கொடியை, மேள தாளங்கள் முழங்க, தீட்சிதர்கள் கிழக்கு கோபுரத்திற்கு எடுத்து வந்தனர்.

கோபுரத்திற்கு தீபாராதனை செய்து, கோபுர உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினர். கோவில் பொது தீட்சிதர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...