Saturday, August 26, 2017

வட தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ர.பரத் ராஜ்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அதேபோல, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் இன்று மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கும் எனப்படுகிறது. மேலும், இதுவரை தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 5,000 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சென்னையில் இருந்து 5000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18-ம் தேதி வருகிறது. இந்த பண்டிகையின்போது, சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதற்கிடைய, அக்டோபர் 16, 17-ம் தேதிகளில் அனைத்து தென்மாவட்ட விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டன. இருப்பினும், பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளில்தான் பயணம் செய்வார்கள்.

போக்குவரத்து நெரிசல்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தீபாவளி பண்டிகையின்போது, பொதுமக்களின் வசதிக்கு ஏற்றவாறு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக, சென்னையில் இருந்து மட்டுமே 5000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கடந்த ஆண்டு போல் அண்ணாநகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்கிடையே, தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது’’ என்றனர்.

திருந்தி வாழப்போவதாக அறிவித்து திருடிய 93 பவுன் நகைகளை திருப்பிக் கொடுத்த திருடன்

சாஸ்திரி முதல் சுரேஷ் பிரபு வரை: ரயில் விபத்தும்-பதவி விலகலும்!

By DIN  |   Published on : 25th August 2017 04:28 PM  |    
train accident -mumbai

இந்தியாவின் மிகப்பெரிய பொதுச்சேவைத் துறையாக ரயில்வே துறை அமைந்துள்ளது. நாடு முழுவதும் தினமும் பல லட்சம் பேர் இதன்மூலம் பயணித்து பயனடைகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போது இந்த ரயில் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையாக ரயில்வே உள்ளது. மேலும், உலகளவிலும் அதிகளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்படும் துறையாகவும் விளங்குகிறது.

இந்தியாவின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்க குறைந்த கட்டணம் மற்றும் நேரம் உள்ளிட்ட காரணங்களால் இவை மிகவும் விரும்பப்படுகின்றன. இந்நிலையில், ஆங்காங்கே மிகப்பெரிய ரயில் விபத்துககள் நடைபெற்றும் வருகின்றன.

போதிய நிர்வாகமின்மை காரணமாகவே இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் அவ்வப்போது குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. மேலும், ரயில்வேத்துறையை தனியார்மயமாக்கும் முடிவை பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அவ்வாறு சமீபத்தில் கூட உத்தரபிரதேச மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு விபத்துகள் நடந்தன. இதனால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ராஜிநாமா செய்தார்.

இதுதவிர, தமிழகம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் முன்னதாக ஏற்பட்ட மாபெரும் ரயில் விபத்துகள் காரணமாக அப்போதைய ரயில்வே துறை அமைச்சர்களும் ராஜிநாமா செய்தனர்.


முன்னதாக 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். எனவே இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அதுபோல 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஸ்ஸாமில் நடந்த மற்றொரு கோர ரயில் விபத்தில் சிக்கி 290 பேர் மரணமடைந்தனர். இதனால் அப்போதைய ரயில்வே துறை அமைச்சரான நிதீஷ் குமார், ராஜிநாமா செய்தார்.

இளமை திரும்ப இளைஞர்களின் ரத்தம்: முதியவர்களுக்கு ஒரு வித்தியாச சிகிச்சை முறை!

By DIN  |   Published on : 25th August 2017 08:09 PM  |   

 சான் பிரான்சிஸ்கோ: வயதானவர்கள் தங்கள் இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை செலுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வயதானவர்கள் தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக் கொள்வதன் மூலம் உத்வேத்துடன் செயல்படலாம் என அறிவிப்பு அளித்துள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 8,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முதலில் இது தொடர்பான சோதனை சிகிச்சை முறை எலிகள் மத்தியில் செய்து பார்க்கப்பட்டதாகவும், அந்த முடிவுகள் தந்த நம்பிக்ககையில்தான் தற்பொழுது இது பரீட்சார்த்த அடிப்படையில் செய்யப்படுவதாகவும்  அது தெரிவித்துள்ளது 
முதலில் இதில் 60 முதியவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இந்த முறையில் ஆரோக்கியமான இளைஞர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா என்னும் திரவம் உடலில் செலுத்தப்பட்டது.
பிளாஸ்மா எனப்படுவது மனித உடலில் இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் ஒரு திரவமாகும். இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்று அந்நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜெஸ்ஸி கர்மாசின் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையின் முடிவில் வயதாவதனால் ஏற்படக்கூடிய தோற்றம், நீரிழிவு நோய், இதய செயல்பாடு அல்லது நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஆரம்பத்தில் எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு சரிப்பட்டு வரும்  என்ற கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.

பதவி விலகுவதால் ஆயிற்றா?

By ஆசிரியர்  |   Published on : 26th August 2017 01:17 AM  |    
ஒரு வாரத்திற்கு முன்பு தடம் புரண்ட புரியிலிருந்து ஹரித்வார் செல்லும் உத்கல் விரைவு ரயிலைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த முறை விபத்துக்குள்ளானது கைஃபியாத் விரைவு ரயில். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் ஆஸம்கர் நகரிலிருந்து தில்லி நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது அச்சல்டா ரயில் நிலையத்தில் விபத்து நேர்ந்தது. 10 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. 100 பயணிகள் காயமடைந்தனர். 
ரயில்வே கட்டுமானப் பொருள்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து நின்றிருக்கிறது. இது நிச்சயமாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது. அப்படியிருந்தும் அவர்கள் கவனக்குறைவாக கைஃபியாத் விரைவு ரயில் கடந்து செல்வதற்கு அனுமதித்தார்கள் என்று சொன்னால், அதை விபத்து என்று எப்படிக் கூறுவது?
தொடர்ந்து நடைபெற்ற இரண்டு விபத்துகளின் விளைவாக ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மிட்டல் பதவி விலகியிருக்கிறார். ரயில்வே நிர்வாகத்தில் அடிமட்டத்திலிருந்து தனது கடின உழைப்பால் முன்னேறி ரயில்வே வாரியத்தின் தலைவரானவர் ஏ.கே. மிட்டல். இவருக்குப் பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அடிமட்ட ஊழியர்களின் தவறுக்காக ஏ.கே. மிட்டல் அதிரடியாக பதவி விலகியிருக்க வேண்டாம். 
நீதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா பதவி விலகியதைப் போல அல்ல, மிட்டலின் பதவி விலகல். ரயில்வே என்பது தொழில்நுட்பமும் நிர்வாகத் திறமையும் ஒருசேர தேவைப்படும் துறை. தொழில்நுட்பத்துடன் அதிநவீன ரயில்கள் இயக்கப்பட்டால் மட்டும் போதாது. அவற்றை முறையாக இயக்குவதற்குத் தேவையான மனிதவளமும் வேண்டும். அதனால் அடிமட்டத்திலிருந்து தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கும் மிட்டல் போன்ற அனுபவசாலிகள் ரயில் விபத்துக்காக தார்மிகப் பொறுப்பேற்று விலகியிருப்பது அர்த்தமற்றது என்றுதான் தோன்றுகிறது.
ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மிட்டல் மட்டுமல்ல, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் தனது பதவி விலகல் கடிதத்தைப் பிரதமரிடம் அளித்திருக்கிறார். பிரதமர் இன்னும் அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, அமைச்சர் சுரேஷ் பிரபுவின் பதவி விலகலும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதுதான் உண்மை.
அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் தனது பதவியைத் துறந்த முதல் மத்திய அமைச்சர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. அவருக்குப் பிறகு மாதவ ராவ் சிந்தியா, நிதீஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோரும்கூட அவர்கள் ரயில்வே துறையின் அமைச்சர்களாக இருந்தபோது நடந்த ரயில் விபத்துகளின் பின்னணியில் பதவி விலக முன்வந்தனர். ஆனால் அன்றைய பிரதமர்கள் அவர்களது பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை. 
ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபுவின் செயல்பாடு பாராட்டுதலுக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. இந்திய ரயில்வே நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பதிலும் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வம் காட்டியவர் அவர். 
ஓரளவுக்கு ரயில்களின் பராமரிப்பிலும் பயணிகள் ரயிலின் சுத்தத்திலும் அவர் அக்கறை காட்டியதை மறுக்க முடியாது. அவரது ரயில் கட்டணக் கொள்கை ஏற்புடையது அல்ல என்றாலும்கூட, ரயில் முன்பதிவு குறித்து செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் நிச்சயமாக வரவேற்புக்குரியவை.
இந்திய ரயில்வே மிகவும் சோதனையான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ரயில்வே துறையின் நவீனமயமாக்கலுக்கு ஏற்றாற்போல ரயில் ஊழியர்களின் பொறுப்புணர்வு அதிகரித்திருப்பதாகத் தெரியவில்லை. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை 28 பெரிய ரயில் விபத்துகள் நடந்திருக்கின்றன. 259 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 973 பேர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் 2016-17 நிதியாண்டில்தான் ரயில் தடம் புரண்டதால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த புள்ளிவிவரம் நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 11, 2017-இல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 
பதவி வகிக்கும் ஒவ்வொரு ரயில்வே துறை அமைச்சரும் பயணிகளின் பாதுகாப்புதான் தங்களது முதல் குறிக்கோள் என்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து முழங்கி வருகிறார்களே தவிர, செயல்பாடு என்னவோ அதற்கு நேர் எதிர்மாறாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை.
ரயில் மோதல் தடுப்புக் கருவிகள் அமைப்பது என்கின்ற நீண்டகால தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் இன்னும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. பழைய ரயில் இன்ஜின்கள், பயணிகள் செல்லும் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் ஆகியவை மாற்றப்படாமல் இருக்கின்றன. வழிகாட்டுதல் கருவிகள் (சிக்னல்கள்) இன்னும் நவீனப்படுத்தப்படவில்லை. இந்தியாவிலுள்ள 40% தண்டவாளங்கள் மிகவும் பழைமையானவை. சில 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை. இவை உடனடியாக மாற்றப்பட்டாக வேண்டும், அல்லது செப்பனிடப்பட வேண்டும். அதற்கெல்லாம் மிகப்பெரிய நிதியாதாரம் தேவைப்படுகிறது.
இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது அமைச்சரும் வாரியத் தலைவரும் பதவி விலகுவதால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 590 ரயில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. என்ன செய்யப் போகிறோம்?

I will be happier if he is released: Arputhammal

Long-awaited reunion:Perarivalan’s mother Arputhammal at their house in Jolarpet, Vellore.C. Venkatachalapathy  

Perarivalan’s parents want him to get married



Happy as she is over the State government granting A.G. Perarivalan a 30-day parole, Arputhammal, his mother, says what will make her happier is his release from prison.
“All this happened so suddenly. I was astonished, and happy at the same time. I am happy that he has come home after so many years,” she said. “This should not stop with the parole and the State government should announce his release soon. Both I and Perarivalan are expecting this decision soon,” she told The Hindu on Friday.
The 70-year-old mother has been petitioning the State government to grant him parole as he and his father had health problems. Last year, Perarivalan sought parole to meet his ailing father. This was the first time that he had sought parole since his imprisonment in 1991.
Ms. Arputhammal said she wants her son to take rest during the parole period. “I wish he gets married. But we cannot do anything hastily when it comes to his marriage. He should also undergo treatment for his health problems too,” she said.
Like a dream
“It is still like a dream” for 75-year-old Gnanasekaran alias Kuyildasan, Perarivalan’s father. “I spoke to him last night, and when I woke up in the morning, I saw him in the room and wondered if I was dreaming,” Mr. Kuyildasan said. Refusing to believe what television channels reported, he waited for his son to arrive. “We have been deceived on two earlier occasions. So, when my son-in-law told me about news reports, I refused to believe,” he added. He too wants Perarivalan to be released and have a family of his own. Perarivalan has two sisters – Anbumani and Arulselvi.
Perarivalan’s advocate K. Sivakumar said they considered parole as the first step to his freedom.
I wish he gets married. But we cannot do anything hastily
Arputhammal,
Perarivalan’s mother

NEWS TODAY 10.07.2026