Tuesday, September 12, 2017

Govt staff, teachers protest delay in salary revision, launch indefinite strike

TNN | Updated: Sep 12, 2017, 00:01 IST

Chennai: A section of government employees and teachers in schools, colleges and universities started an indefinite strike on Monday protesting against the delay in implementing salary revision as per the seventh pay commission recommendations. In many districts, teachers boycotted classes and raised slogans against the government.

Political parties have criticized the government for trying to gag the teachers by threatening to invoke Essential Services Maintenance Act (ESMA) against them. But the protesters have decided to go ahead with their strike. They have threatened to intensify the agitation by staging demonstrations in front of district collectorates on Tuesday.

So far, more than 70 employee associations have had talks with the government committee on pay commission. But now, the government has appointed another former IAS official to hold talks with the associations. "This shows that the government is not interested in implementing the pay commission recommendations," said Tamil Nadu Government Employees' Association general secretary M Anbarasu.

"We have three main demands. Reversion to the old pension system, granting minimum pension to more than 3.5 lakh workers employed in various welfare programmes like noon-meal and anganwadi and filling up of 2 lakh vacancies in various departments," said commercial tax officer and a member of Tamil Nadu Government Employees' Association, R Tamil Selvi.

The demands of the employees are as old as 2003. "It is not to pressurise the government. We have been fighting since 2003 and then AIADMK government did not yield to our demands. The DMK government relented and implemented some of our demands but the main ones mentioned above have been on paper as both the parties did not implement it," said Tamil Selvi.

While many government offices in Chennai as well as districts functioned with less number of employees, functioning of schools and colleges were affected in some areas as both teachers and students were on strike.

Students boycotted classes protesting against NEET.
MBBS students attempt protest at Annamalai univ

TNN | Sep 12, 2017, 00:11 IST

Cuddalore: Tension prevailed at Annamalai University, Chidambaram, on Monday morning, after a section of MBBS students from Rajah Muthiah Medical College and Hospital attempted to stage a protest within the campus demanding that the state take over the medical college-cum-hospital.

The students dispersed after a police team, which reached the university, informed them that the Supreme Court had issued them a warning not to hold protests within the campus.

The Tamil Nadu government in 2013 took over administrative control of the Annamalai University following widespread financial and administrative irregularities and appointed an IAS officer as the administrator of the university. However, Rajah Muthiah Medical College and Hospital affiliated to Annamalai University continued to function under self-financing mode.

Students of the college launched an indefinite strike on September 1 demanding that the government take over the college. They argued that the college, affiliated to a state university, charged exorbitant fees (Rs 4.5 lakh per annum for MBBS course), while other state-run colleges charged only a few thousand rupees per annum for the course.

The college administration said the government took control of the university and not the college, which continued to function under self-financing mode. The administration also said the Madras high court passed an order in favour of the college administration regarding the fee structure after a section of students approached the court.

The students have filed an appeal before the Supreme Court. " We can't take any action as the matter is pending before the Supreme Court. We expect a verdict soon," said a spokesperson of the college administration.
Girl plays Candy Crush on cellphone as Chennai doctors remove her brain tumour

Pushpa Narayan| TNN | Updated: Sep 11, 2017, 23:36 IST

HIGHLIGHTS

The awake surgery is done in nearly 2% of brain tumour patients who are adults, but is rare in children

The surgery was performed in SIMS Hospital in Chennai

The girl was discharged from hospital two days after the surgery

(Representative image)

CHENNAI: When surgeons were removing a tumour from the most sensitive part of a 10-year-old girl's brain in a Chennai hospital last Wednesday, she was playing her favourite game on her uncle's cellphone. By staying awake, talking and moving her limbs, the girl gave her doctors the confidence that they were on the right track.

Nandini, a Class V student and a Bharatanatyam dancer, was brought to SIMS Hospital with complaints of sudden onset of fits. Brain scan revealed that she had a tumour in an important area of brain which controls the movement of the left half of the body, including face, hand and leg.

SIMS Hospital neurosurgeon Dr Roopesh Kumar told her parents that if the tumour grew further, it could cause paralysis or could be fatal.

In a conventional procedure, called craniotomy, a disc of bone is removed from the skull using special tools to give surgeons access to the brain when the patient is unconscious.

"I did not want to go in for the conventional method of removing the tumour. It was in the sensitive part of the brain and if we accidentally touched a wrong nerve, it could cause complete paralysis of left half of her body," he said.

The doctors decided to do the same procedure by keeping the patient awake and alert. "That way, I will know exactly which areas of your brain control those functions and avoid them," Dr Kumar said.

The awake surgery is done in nearly 2% of brain tumour patients who are adults, but is rare in children, said SIMS Institute of Neurosciences director Dr Suresh Bapu. The patients feel no pain during the surgery since the neurons in the brain don't have pain receptors.

While her parents were initially hesitant, the surgeons took the help of the patient's uncle in Puducherry, who is a doctor, to convince them.

"I was in the theatre when the removed the tumour. Nandini was playing Candy Crush on my cellphone. She moved her hands and legs when we asked her to do so. The surgeon had to make sure that the point he is operating on does not affect her mobility. She was brave," said her uncle.

The family told doctors that they were worried about the post-surgical stress but doctors said studies from medical literature showed that such surgeries were safe in children.

"It's rare in children, but we did have enough evidence," he said.

In June 2017, World Neurosurgery, a medical journal, published the psychiatric and psychological impact of the awake brain tumour surgeries in children after following up on case sheets of seven children -- aged between 8 and 16 -- post surgery.

The results showed that none of the children had initial psychiatric problems. While parents experienced anxiety, no child showed signs of post-traumatic stress disorder.

Such studies gave confidence to the entire team, said neuro anesthetist Dr Sudhakar Subramaniam, who stood by the patient side during the three and a half hour surgery.

At the end of the procedure, she was moving her hands and legs. She was discharged from hospital on Friday, two days after the surgery.

Nandini told the doctors that she would resume Bharatanatyam practice in a few days.

அச்சம் தவிர்!

By மாலன்  |   Published on : 12th September 2017 03:32 AM  |   
கலை உலக நட்சத்திரங்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை இன்று கவலைப்படுகிற ஒரு விஷயம் நீட். ஆனால் அவர்கள் கவலைக்குக் காரணங்கள் உண்டா? பொதுவாக காபிக் கடை கலந்துரையாடல்களிலும் பேஸ்புக் போன்ற நட்பு ஊடக விவாதங்களிலும் வைக்கப்படும் கேள்விகளை ஆராய்ந்த போது எனக்குக் கிட்டிய பதில்கள் இவை.
நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களே?
சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை +2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது. நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆண்டில் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்ற ஆண்டைவிட அதிக இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூரிலிருந்து சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றவர்கள் 4 பேர். ஆம் வெறும் நான்கே பேர். இந்த ஆண்டு 21 பேர்.
மாவட்ட வாரியாகத் தகவல் இதோ. அடைப்புக் குறிக்குள் இருப்பவை சென்ற ஆண்டு பெற்ற இடங்கள் சென்னை 471 (113), வேலூர் 153 (54), கோவை 182 (102), நெல்லை162 (83), கடலூர் 114 (40), மதுரை 179 (110), காஞ்சிபுரம் 140 (72), கன்னியாகுமரி 135 (69), தூத்துக்குடி 79 (25), திண்டுக்கல் 75 (27), திருவண்ணாமலை 67 (27), திருவாரூர் 28 (2), சிவகங்கை 39 (14), நீலகிரி 24 (2), திருப்பூர் 105 (83), தேனி 46 (25), விருதுநகர் 66,(47), நாகப்பட்டினம் 28,(10), அரியலூர் 21 (4), சேலம் 192 (180), புதுக்கோட்டை41 (32), ராமநாதபுரம் 39 (31), தஞ்சாவூர் 97 (89), விழுப்புரம் 93 (88), கரூர் 35 (32).
சில மாவட்டங்கள் பின் தங்கிவிட்டன. திருவள்ளூர் 158 (185), திருச்சி 130 (184), பெரம்பலூர் 23 (81), ஈரோடு 100 (230), தர்மபுரி 82 (225), கிருஷ்ணகிரி 82 (338), நாமக்கல் 109 ( 957). தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சென்ற ஆண்டு மொத்தமுள்ள 3,377 இடங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு இடங்களை நாமக்கல் மாவட்டம் பெற்றது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து மாத்திரம் 957 பேர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார்கள். திருவாரூர், அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஒற்றை இலக்கத்திலேயே இடம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு பரவலாக எல்லா மாவட்டங்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. அதாவது வாய்ப்பு பரவலாகி உள்ளது. நாமக்கல் முட்டை "நீட்'டிடம் வேகவில்லை!
நீட் தேர்வு நகர்ப்புற மாணவர்களுக்குத்தான் சாதகமானது என்கிறார்களே?
சென்ற ஆண்டு திருவாரூர் பெற்ற இடங்கள் 2 இந்த ஆண்டு 28. அதாவது 14 மடங்கு அதிகம். நீலகிரி சென்ற ஆண்டு 2 இந்த ஆண்டு 24. அதாவது 12 மடங்கு அதிகம். சிவகங்கை, கடலூர் ஆகியவை ஏறத்தாழ மூன்று மடங்கு. காஞ்சிபுரம், தேனி இவை ஏறத்தாழ இரண்டு மடங்கு. இவை நகரங்கள் நிறைந்த மாவட்டங்களா?
பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது சமூக நீதிக்கு எதிரானது என்றும் சொல்கிறார்களே?
ஏற்கனவே இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதாவது மொத்த இடங்களில் 69% இடங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் சேர முடியும். ஆனால் அவர்கள் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தப் பிரிவு மாணவர்களுக்கு அது கடினமானதல்ல என்பதை நீட் முடிவுகள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதலிடம் பெறுபவர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இரண்டாம் இடம் பெற்றவரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மூன்றாம் இடம் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவருக்கு. முதல் பத்து இடங்களில் ஆறு இடங்களைப் பிடித்தவர்கள் பிற்பட்ட வகுப்பினர். இரண்டு இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு. இரண்டு இடம் மற்ற பிரிவினருக்கு.
இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் முன்பு இருந்ததைவிடப் பலன் பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வு இல்லாதபோது அவர்கள் பெற்ற இடங்கள் 149. இந்த ஆண்டு 164. அதேபோல பட்டியல் இனத்தவர், அதற்குள் உள் ஒதுக்கீடு பெற்ற அருந்ததியர், பழங்குடியினர் இவ்ர்களுக்கும் பெரிய இழப்பு இல்லை.
இந்தாண்டு தேர்வு பெற்றவர்களில் பெரும்பான்மையோர் பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி பெற்றவர்கள் எனச் சொல்லப்படுகிறதே?
அப்படிச் சொல்கிறவர்கள் ஆதாரம் எதையும் கொடுப்பதில்லை. மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்களோடு, கல்விச் சான்றிதழ், நீட் மதிப்பெண்கள், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். ஆனால் பயிற்சி பெற்றீர்களா என்ற கேள்வி விண்ணப்பபடிவத்தில் கிடையாது. அப்படி இருக்கும் போது எத்தனை பேர் பயிற்சி பெற்றவர்கள் என்ற தகவலைத் துல்லியமாகப் பெற இயலாது. அப்படிப் பெற வேண்டுமானால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள ஒவ்வொரு மாணவரையும் பேட்டி கண்டு தகவல் திரட்ட வேண்டும். அப்படி ஒரு நேர்காணலோ, சர்வேயோ நடந்ததாகத் தெரியவில்லை.
+2 மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடத்தப்பட்ட போது +2 மாணவர்களில் சிலர் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து டியூஷன் படித்தார்களே? அப்போது மட்டும் அதில் சமநிலை இருந்ததா?
நீட் தேர்வு பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறதா?
தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 15% இடங்களை நிர்வாகத்தினரே நிரப்பிக் கொள்ளலாம். நிர்வாகத்தினர் இந்த இடங்களை வசதியுள்ள மாணவர்களுக்கு விலைக்கு விற்று வந்தனர். கடந்த ஆண்டு இடம் ஒன்றுக்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை என விலை வைத்து விற்கப்பட்டது. இந்தப் பணம் பெரும்பாலும் ரசீதுகள் ஏதும் கொடுக்கப்படாமல் ரொக்கமாகவே பெறப்பட்டு வந்தது. அதனால் அவை கருப்புப் பணமாகவும் குவிந்து கொண்டிருந்தன.
ஆனால் உச்சநீதிமன்றம் நிர்வாக இடங்களில் சேர்வதானாலும் நீட் தேர்வு எழுதி அதில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற வேண்டும் என்று சொல்லிவிட்டது. அதன் விளைவுகளில் ஒன்று இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் 974 இடங்கள் காலியாக உள்ளன. இது அவர்களிடம் உள்ள இடங்களில் 90 சதவீதம்
மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களை சி.பி.எஸ்.இ. திட்டத்தின் கீழ் தேர்வு எழுதச் சொன்னது சரியா?
நீட் கேள்வித்தாள்கள் ஒரு பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுவதில்லை. பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் மத்திய கல்வி கவுன்சில் (ouncil Board of School Education - COBSE), தயாரித்துள்ள பாடத்திட்டத்தையும், மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education - CBSE) கல்வி, ஆய்வு, பயிற்சி ஆகியவற்றிற்கான தேசிய கவுன்சில் (National Council of Education Research and Training - NCERT) ஆகியவை தயாரித்துள்ள பாடத்திட்டம் ஆகியவற்றையும் ஆராய்ந்து தனது கேள்வித்தாளைத் தயாரிக்கிறது. அதில் 11-ஆம் வகுப்புப் பாடங்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவை முன் கூட்டியே இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன. 2018-ஆம் ஆண்டில் நடக்க உள்ள தேர்வுக்கான பாடத்திட்டம் இப்போதே இணைய தளத்தில் உள்ளது. (https://www.sarvgyan.com/articles/neet}syllabus)
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய பின்னும் இன்னுமொரு தேர்வு எழுத வேண்டும் என்பது நியாயமா?அப்படியானால் +2வில் எடுத்த மதிப்பெண்களுக்கு அர்த்தமில்லாமல் போகிறதே?
குறைவான இடங்கள் அதிகமான விண்ணப்பதாரர்கள் என்று வரும் போது ஏதோ ஒரு வகையான வடிகட்டல் தேவைப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும். காலியாக இருக்கும் 10 இடங்களுக்கு 500 பேர் விண்ணப்பித்தால் என்ன செய்வார்கள்? ஒரு தகுதிகாண் தேர்வு வைப்பார்கள். அது கல்லூரி பிளேஸ்மெண்ட் ஆனாலும் சரி அரசுப் பணியானாலும் சரி, அதுதானே வழக்கம்..
நீட் என்பது ஒரு தகுதி காண் தேர்வு. இதே போன்று தகுதி காண் தேர்வு பல கல்விகளுக்கும் நடத்தப்படுகிறது. ஆனால் நீட் தேர்வில் சில சீர்திருத்தங்கள் தேவை. அதாவது மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக தர வரிசைப் பட்டியலை நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மாத்திரம் கொண்டு தீர்மானிக்காமல், +2வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் (weightage) கொடுத்து தயாரிக்கலாம்.
நாம் வாழும் சூழல் போட்டி நிறைந்தது. பக்கத்து பெஞ்சுக்காரனோடு போட்டி போடுகிற காலங்கள் முடிந்து விட்டன. உலகமயமான ஒரு காலகட்டத்தில் பக்கத்து மாநிலத்துக்காரர்களோடு அல்ல, பக்கத்து நாட்டினரோடு மட்டுமல்ல, அமெரிக்கர்களோடு, ஜப்பானியர்களோடு, ஜெர்மானியரோடு போட்டியிடும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரலாம். கல்வியில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கூட.
போட்டிகளை எதிர் கொள்ளும் திறனையும் கல்வியையும் நம் குழந்தைகளுக்கு ஊட்டியாக வேண்டும். அதைவிட முக்கியமாக தோல்விகளை எதிர் கொள்ளும் மனத் திடத்தை வளர்த்தாக வேண்டும். வாழ்வில் தோல்விகளை எதிர் கொள்ளாத மனிதர்களே கிடையாது. ஆனால் நாம் நம் குழந்தைகளை சின்ன ஏமாற்றத்தைக் கூட எதிர்கொள்ள முடியாதவர்களாக வளர்க்கிறோம்.
நினைவில் கொள்க: தீதும் நன்றும் பிறர் தர வாரா.

மனிதநேயம் தேவை


By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 12th September 2017 03:33 AM  
மனிதாபிமானம் என்ற வார்த்தை மனிதர்களிடம் காட்ட வேண்டிய நேசத்தைக் குறிக்கிறது.
எந்த ஒரு மனிதனின் இதயத்தில் இயற்கையிலேயே ஈவு, இரக்கம், அன்பு ஆகியவை ஊற்றெடுக்குமோ அவரிடத்தில் மனிதநேயம் இருக்கும். அப்படிப்பட்டவரின் நேசம் மற்ற மனிதர்களிடத்து ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு பார்த்து வெளிப்படாது.
அப்படிப் பாகுபாடு பார்த்து அன்பு காட்டுபவர்கள் மனிதர்களும் அல்லர். அவர்களின் மனதில் தம் சமூகம் சாராத மக்களின் மீது துவேஷமும், வன்மமுமே நிறைந்திருக்கும்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார் வள்ளலார். ஓரறிவு உயிர்களிடம் இத்துணை அன்பு காட்டவேண்டுமென்றால், ஆறறிவு படைத்த மனிதர்களிடம் எத்துணை நேசம் காட்ட வேண்டும் என்பது நம் அறிவுக்கு எட்ட வேண்டும்.
மனிதநேயதிற்கென எல்லைகள் கிடையாது. பசித்தோருக்கு உணவளித்தல், ஆடை இல்லாதோருக்கு ஆடை அளித்தல் போன்ற செயல்கள் மனிதநேயத்தின் வெளிப்பாடு. சக மனிதரைப் பார்த்து நேசத்துடன் புன்னகைப்பது குறைந்தபட்ச மனிதநேயம்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று உவகை கொண்ட கணியன் பூங்குன்றனாரின் மனிதநேயம் எல்லைகள் தாண்டியது. எந்நாட்டினர் என்றாலும் என் இனம் என்பது, சுருங்கி என் நாடு, என் மக்கள், என் மதம், என் மொழி, என் ஊர் என்று இன்னும் சுருங்கி நான், எனது குடும்பம் என்ற சிறிய வட்டத்திற்குள் ஒடுங்கி விட்ட மனிதநேயம், இன்னும் சில காலங்களுக்குள் நான், எனது தேவை, என் நலம் என்று ஒரேயொரு ஒரு புள்ளியில் நின்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உள்நாட்டுப் போர்களினால் இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மனிதநேயம் சிதைந்து போனதென்றால், வளர்ந்த நாடுகளின் பேராசை, ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு, போன்றவற்றால் பாலஸ்தீனம் உள்ளிட்ட நலிந்த நாடுகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் பலிகடா ஆக்கப்பட்டார்கள்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அகதிகளாக்கப்பட்டார்கள். பிரிட்டனில் இருந்து செயல்படும் மனிதஉரிமை அமைப்பு, உள்நாட்டுப் போரினால் சிரியாவில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்
துள்ளது.
இம்மக்கள் அந்நிய நாட்டு மண்ணில் அகதிகள் முகாமில் தங்கும் அவல நிலையையும், கடல் மார்க்கமாக அண்டை நாடுகளுக்குச் செல்லும் பொழுது நீரில் மூழ்கி இறந்து போனதையும் செய்தித்தாள்களில் படித்தோம்.
அலைகளின் தாக்குதல்களில் சிக்கிய மீன் குஞ்சுபோல, கரையில் சடலமாக ஒதுங்கிக் கிடந்தவர்களின் புகைப்படம் நம் மனதை பதைபதைக்க வைத்தது. இப்பொழுது மியன்மரில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறையும் மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவால்தான்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்பாக முகமூடியிடப்பட்ட, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் இருப்பது போன்ற ஒளிப்பதிவுகளில் மண்டியிட்டது கைதிகள் மட்டுமா? மனிதநேயமும்தான்.
அடிமைகளிடமும், கைதிகளிடமும் பரிவும், பாசமும் காட்ட வேண்டும் என்றும், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் சொல்லும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்படும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்.
தனிமனித ஒழுக்கங்களே சமுதாய ஒழுக்கமாக மேம்படும்.
மனிதநேயம் என்னும் விதை முதலில் வீட்டில் குழந்தைகளின் மனதில் விதைக்கப்பட்டு தொடங்க வேண்டும். தான் காயப்படும்பொழுது தனக்கு வலிப்பது போல, மற்றவர்களைக் காயப்படுத்தும் பொழுது அவர்களுக்கும் வலிக்கும் என்பதை இளம் பருவத்திலேயே சொல்லிக் கொடுக்கும் பொழுது மனிதநேயம் அவர்களின் நெஞ்சங்களில் மலர ஆரம்பிக்கும்.
தான் விரும்பிய பொருள் அல்லது அன்பு கிடைக்கவில்லை என்றால் அந்தப் பொருளையோ, அன்பை மறுத்த மனிதரையோ வெறுக்கவோ, வெறி கொண்டு கொலை செய்யவோ மனம் துணியாது. சில பெற்றோர்களின் மனதில் மனிதநேயம் மரித்துப் போவதால் தாங்கள் பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தைகளை கருணைக் கொலை செய்வதற்கு நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.
வீடுகள் மட்டுமின்றி, கல்விக் கூடங்களும் மாணவர்களுக்கு மனிதநேயத்தைக் கற்றுக் கொடுக்கத் தவறுவதால் இன்று பள்ளிகளிலேயே மனிதாபிமானமற்ற செயல்கள் அரங்கேறுகின்றன.
மனிதநேயமற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கலவரப் பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஊடகங்கள் திரும்பத், திரும்பக் காட்டுவதால் அதனைப் பார்க்கும் மக்களின் உணர்சிகள் தூண்டப்படும்.
குற்றம் செய்பவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் மதம்,சமூகம் ஆகியவற்றை குறிப்பிடுவது நிலைமையை இன்னும் மோசமாகவே ஆக்கும். துவேஷத்தைப் பரப்பும் வகையில் அரசியல்வாதிகளோ, சமூக விரோதிகளோ பேசும் பேச்சுகளால் வன்முறை பெரிதாகி, மதக் கலவரமாக வெடிக்கும்.
ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டால் அசம்பாவிதங்களை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஒவ்வொருவரும் மனிதநேயம் தழைப்பதற்கு நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலி: மருத்துவ விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு


By DIN  |   Published on : 12th September 2017 02:59 AM  |   
ஜாக்டோ -ஜியோ சங்கத்தைச் சேர்ந்தவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்புகளை எடுப்பதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஒருபிரிவினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் திங்கள்கிழமை முதல் பணிக்குச் செல்லாமல் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் கட்டுப்பாடுகள்: ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடங்கிய நாளில் இருந்தே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாதாரண விடுப்புகளை எடுக்கக்கூடாது என்று முதலில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒருபகுதியினர் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
போராட்டக் காலம் முடிவடையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புகள் எதுவும் கோரக் கூடாது. மேலும், மருத்துவ விடுப்புகளுக்கு உடனடியாக அனுமதி தரப்படமாட்டாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவ விடுப்பு தொடர்பான விண்ணப்பங்கள் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்படும். குழு பரிசீலித்து விடுப்பு அளிக்கலாம் என ஒப்புதல் கொடுத்த பிறகே மருத்துவ விடுப்புக்கு அனுமதி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1.25 லட்சம் பேர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார் யார் என்பது குறித்து தமிழக அரசால் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை பணி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.25 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மேலும், அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


By DIN  |   Published on : 12th September 2017 02:58 AM  | 
maduraicourt
Ads by Kiosked
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தொடங்கியுள்ள ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இப்பள்ளிகளை இங்கு தொடங்க முடியவில்லை. எனவே தமிழகத்தில் ஜவாஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் ஆஜரான புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 ஆம் வகுப்புகளில் கூடுதல் பாடமாகவும் தமிழ் கற்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைப் பதிவு செய்த நீதிமன்றம், இந்த வாதத்தை நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதே போல, நவோதயா பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது முடிவைத் தெரிவிக்க அவகாசம் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் தெரிவிக்கையில், ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் பயில்வதற்கான வசதியுடன் கூடிய தாற்காலிக கட்டடத்தில் பள்ளி இயங்கலாம் என விதி உள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளியைத் தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால், மத்திய அரசு, பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ.20 கோடிவழங்கும் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என்று நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இது தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையை மீறும் வகையில் அமையாது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், அதற்கான அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளியே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமையாததற்கு காரணம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

NMC adds 950 MBBS seats to state roster Clears Decks For 9,911 More Seats In India

NMC adds 950 MBBS seats to state roster Clears Decks For 9,911 More Seats In India  TIMES NEWS NETWORK 16.07.2026 Chennai : Medical colleges...