Thursday, November 2, 2017


Chennai rain: City schools to remain closed on Thursday, more showers forecast

Vinayashree J| TNN | Updated: Nov 1, 2017, 20:09 IST



A waterlogged road in Chennai on Wednesday (TOI photo by R Ramesh Shankar)

CHENNAI: Schools in Chennai district will remain closed for the third consecutive day on Thursday as more showers are forecast. The district collector declared the holiday for schools.

According to the India Meteorological Department, rain is likely to occur in most parts of south Tamil Nadu, north coastal Tamil Nadu and Puducherry and in a few places in north interior Tamil Nadu and on Thursday.

Chennai didn't receive heavy rain on Wednesday. However, it was drizzling in the city almost throughout the day.

Schools in Chennai, Kancheepuram and Tiruvallur districts remained closed for the second consecutive day on Wednesday. While several colleges were closed in Chennai on Tuesday, most institutions continued to function as semester examinations are ongoing on many campuses.
Many school grounds and campuses were inundated with water following rain on Monday and Tuesday night. The school education department has instructed schools to ensure that campuses are kept clean and stagnated water drained out.

A committee of health department and education department officials will be carrying out inspections on the campuses to check on the cleanliness level.

Sri Ranganathaswamy Temple in Srirangam bags Unesco award

Deepak Karthik| TNN | Nov 1, 2017, 15:56 IST



The Sri Ranganathaswamy Temple in Srirangam

TRICHY: The Sri Ranganathaswamy Temple in Srirangam has bagged an Award of Merit from Unescofor conserving cultural heritage.

The temple got the international recognition for the Rs 20crore beautification and renovation work taken up prior to a consecration ceremony in 2015, without affecting its centuries' old heritage.

Temple authorities said they received a communique from Unesco on Tuesday mentioning that the temple has been selected for the award. The Sri Ranganathaswamy Temple is the first temple in Tamil Nadu to receive a Unesco award, according to them.

There were 43 applications from 10 countries for the 2017 Unesco Asia-Pacific Awards for Cultural Heritage Conservation. The Sri Ranganathaswamy Temple is the only religious centre in south India to bag award this year. Mumbai's Christ Church and Royal Bombay Opera House were the other monuments in India that received the Award of Merit this year.

The awards are classified under four categories -- Award of Excellence, Awards of Distinction, Awards of Merit and Award for New Design in Heritage Context. The awards are being given to encourage the efforts of all stakeholders and the public in conserving and promoting the monuments and religious institutes with rich heritage in the Asia-Pacific region.

A jury comprising nine international heritage conservation experts reviewed the development and conservation work taken up by the Sri Ranganathaswamy Temple management.
Mudichur let down by politics, bureaucracy

Pradeep Kumar| TNN | Nov 2, 2017, 00:23 IST

CHENNAI: Why does it flood in Mudichur is not a relevant question anymore. Rather, what to do when it floods is what the Tamil Nadu government must answer. But on the ground, the government appears as clueless as it was in 2015.

On Wednesday, the third day of monsoon, the area recorded only 4cm of rainfall, yet the Mudichur Main Road resembled a water channel. When the water levels rose on one side of the road, the state highways department which maintains the road, broke the median and then some parts of the road for the water to flow out of the area.

It not only affected vehicular movement but also it became risky for two-wheeler riders to navigate the stretch. The Mudichur Road has been a slush track as the road was not relaid after Chennai Metrowater finished laying pipelines recently. With the highways breaking the road, loose gravel started peeling off under the force of flowing water.

According to Peter J, a resident, the highways department's incomplete storm water drains were complicating the situation. S R Raja, Tambaram MLA (DMK), said the work order was issued more than 18 months ago. He alleged the contractor illegally sublet the work to an unqualified person, resulting in poor construction quality. "Even if the drain is complete, Mudichur will still be flooded. Because the drain's capacity is small," said Raja, a point echoed by Tambaram municipality officials as well.

After the highways' workers broke the median, water gushed into the neighbouring residential locality of Mullai Nagar and Pandian Nagar. In minutes, the localities were submerged in 2ft water. This also resulted in a skirmish between residents, one of whom had encroached upon poramboke land blocking rainwater flow, said Shanthi, a resident.

"The municipality officials are in cohorts with the encroacher," she added. With the cops as mute spectators, the alleged encroacher engaged in fisticuffs with another person. Locals protested against the police inaction and staged a road roko affecting traffic for a short duration.

As the action unfolded, in neighbouring Varadarajapuram, rural industries minister P Benjamin was spotted posing for photographs. After two days of hip-deep water, the administration was alerted to Varadarajapuram residents' plight early on Wednesday.

Workers were engaged to desilt the flood carriers, again raising question about the monsoon preparedness. No sooner had the minister's convoy left, the workers followed suit leaving the job that they come to do unfinished.
திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் விரைவில் முடிவடையும் கோபால் எம்.பி., தகவல்



திருவாரூர் - காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் விரைவில் முடிவடையும் என கோபால் எம்.பி., கூறினார்.

நவம்பர் 01, 2017, 04:15 AM

திருவாரூர்,

மன்னார்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பினை ரெயில்வே துறை வெளியிட்டது. இதற்காக முயற்சி செய்த நாகை டாக்டர் கே.கோபால் எம்.பி.க்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். விழாவில் நாகை டாக்டர் கே.கோபால் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரெயில் பாதை, பேரளம்-காரைக்கால் அகல ரெயில் பாதை ஆகிய பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை துரிதப்படுத்திட ரெயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் பணி முடிந்து ரெயில் போக்குவரத்து தொடங்கும். திருவாரூர் மற்றும் நாகை பகுதிகளுக்கு சில ரெயில்கள் நீட்டிப்பு செய்யப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல தஞ்சாவூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்திடவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், நுகர்வோர் மைய செயலாளர் ரமேஷ், தலைவர் அண்ணாதுரை, நகர மேம்பாட்டுக்குழு பொதுச்செயலாளர் அருள், வர்த்தக சங்க துணைச்செயலாளர் அண்ணாதுரை, திருவாரூர் வளர்ச்சி ஆலோசனை குழும தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி வரவேற்றார். முடிவில் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.
சென்னை புறநகரின் பல பகுதிகளில் பாதிப்பு சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு



சென்னை புறநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 01, 2017, 04:15 AM

ஆலந்தூர்,

சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், வேளச்சேரி, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.

ஆலந்தூரில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மடிப்பாக்கம்–புழுதிவாக்கம் ராம்நகர் வடக்கு பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவு நீருடன் தேக்கம் அடைந்துள்ளது.

ஒரே நாளில் பெய்த மழையிலேயே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மீண்டும் மழை பெய்தால் வீடுகளை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றி நிரந்தரமாக வடிகால்வாய்களை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

வேளச்சேரி பாரதி நகர், உதயம் நகர் போன்ற பகுதிகளிலும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. கீழ்கட்டளை காசிவிஸ்வநாதபுரம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. கோவிலம்பாக்கம் என்ஜீனியர்ஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஓடை தூர் வாரப்படாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை வழியாக போரூர், வடபழனி போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சுரங்கப்பாதை மழைநீரினால் குளம்போல் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மின்மோட்டார் மூலம் அங்கு இருக்கும் தண்ணீரை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் அகற்றப்படாததே மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.
தாம்பரம் பகுதிகளில் கனமழை ரெயில் நிலையம், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு



தாம்பரம் பகுதிகளில் பெய்த கனமழையால் ரெயில் நிலையம், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நவம்பர் 01, 2017, 04:45 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலைவரை கனமழை பெய்தது. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை முழுவதும் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் நிரம்பியதால் போக்குவரத்து முடங்கியது. தாம்பரம்–வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். சேலையூர் பகுதி ஏரியில் மழைநீர் நிரம்பி சிட்லபாக்கம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டனர். சேலையூர்–அகரம்தென் பிரதான சாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்தனர்.

திருவஞ்சேரி, மப்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. நெடுஞ்சாலை துறையினர் முறையாக கால்வாய்களை அமைக்காததால் தான் மழைநீர் தேங்கி நிற்பதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலையூர் போலீசார் உடனே அங்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மழைநீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

தாம்பரம்–முடிச்சூர் சாலையில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் சென்றது. இதனால் கவுல் பஜார் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் சிக்னல் கிடைக்காமல் சானடோரியம் அருகே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் செங்கல்பட்டில் இருந்து வந்த ரெயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன.

பல்லாவரம் காமராஜர் நகர் பகுதியில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் மழை நீரோடு கலந்து வீடுகளில் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பகுதிகளை காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா, கலெக்டர் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். கழிவுநீர் செல்வதை தடுக்க பொதுமக்கள் 6 மாதமாக கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி, அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலையூர் ஏரி, திருவஞ்சேரி பகுதிகளையும் கண்காணிப்பு அலுவலர் அமுதா, கலெக்டர் பொன்னையா ஆகியோர் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உத்தரவிட்டனர்.

பலத்த மழை காரணமாக தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனால் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு மருத்துவமனையின் உட்பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

பொழிச்சலூர் ஊராட்சி 9–வது வார்டு தாங்கல் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியதால் பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சங்கர் நகர் போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தாம்பரம் அருகே வரதராஜபுரம் ஊராட்சி மகாலட்சுமி நகர், பி.டி.சி. காலனி, முல்லை நகர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 3 அடிக்கு மேல் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. அஷ்டலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீர் வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியேறினர்.

தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற பரிசல் படகை வருவாய் துறையினர் அப்பகுதிக்கு கொண்டு வந்தனர். வெள்ளத்தில் தவித்த மக்கள் பரிசல் மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவரப்பட்டனர். அப்பகுதியில் வருவாய் துறையினரும், போலீசாரும் தொடர்ந்து முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Wednesday, November 1, 2017


குழந்தைகளைக் காப்பாற்ற உயிரிழந்த சுகந்தி டீச்சரின் குடும்பம் எப்படி இருக்கிறது? #VikatanExclusive

வி.எஸ்.சரவணன்


மறதி என்பது பெருநோயாக நம்மைப் பீடித்திருந்தாலும் ஆசிரியை சுகந்தியை மறந்துவிட முடியுமா?



2009 டிசம்பர் 3...

பனி சூழ்ந்த காலை. சுகமாக உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை, வலுக்கட்டாயமாக எழுப்பினார்கள் தாய்மார்கள். பல் துலக்கி குளிப்பாட்டி, கெஞ்சி உணவூட்டும்போதே, வாசலில் பள்ளி வேன் சத்தம் கேட்டது. வேதாரண்யம் வட்டம், கரியாபட்டினம், 'கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி'க்கு அழைத்துச்செல்லும் வேன் அது. அழுத குழந்தைகளுக்கு மாலையில் சாக்லேட் வாங்கித் தருவதாக உத்தரவாதம் தந்து, முத்தம் தந்து வேனில் ஏற்றிவிட்டார்கள். அவர்களில் பலருக்குத் தெரியாது, தங்கள் குழந்தையின் சிரிப்பை இனி பார்க்க முடியாது என்பது.

வேனில் 20 குழந்தைகள், பாதுகாப்புக்குச் சுகந்தி டீச்சர், ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை, சுகந்தி. எளிய குடும்பத்தில் பிறந்து, விரும்பி ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தவர். மழை மெல்லிய சாரலாய் தூறிக்கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்த்தவாறும் பாட்டுப் பாடியவாறும் இருக்கும் குழந்தைகளைச் சுமந்து செல்கிறது வேன்.



பனையடிகுத்தகை சாலை அருகே செல்லும்போது ஓட்டுநரின் மொபைல் சிணுங்குகிறது.. எடுத்துப் பேசியவாறே ஓட்டுகிறார். திடீரென அவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன், அருகிலிருந்த குளத்துக்குள் பாய்ந்தது. குளத்தில் 20 அடிக்கும் மேல் நீர் இருந்ததால், விழுந்த வேகத்தில் வேன் மூழ்கத் தொடங்குகிறது. உள்ளிருந்த குழந்தைகளுக்கும் ஆசிரியைச் சுகந்திக்கும் அதிர்ச்சியிலிருந்து சுதாரித்து உதவிக் குரல் எழுப்பவும் அவகாசமில்லை. குழந்தைகள் வேனுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து நீரைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். 20 குழந்தைகளுமே எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள்.

ஆசிரியை சுகந்தி, வேன் ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். தன் பலம் முழுவதையும் திரட்டி செயலில் இறங்கும் சுகந்தி, ஒவ்வொரு குழந்தையாகப் பிடித்து கரைக்குக் கொண்டு வருகிறார். நீரின் ஆழத்திலிருந்து குழந்தையை மீட்டுவருவது எவ்வளவு சவாலானது. ஆனாலும், தன் உயிர் பற்றி துளியும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் குளத்தின் ஆழத்துக்குச் செல்கிறார் சுகந்தி. தன் உயிரின் இறுதி மூச்சுக் காற்று அந்தக் குளத்தின் நீரில் கலக்கும் வரை, குழந்தைகளைக் காப்பாற்றப் போராடினார். இறுதியில், குழந்தைகளை நேசித்து, அன்பு பாராட்டி, கல்வி போதித்த அந்த ஆசிரியை, குளத்தின் நீருக்குத் தன் உயிரை ஒப்படைத்துவிடுகிறார். அதற்குள் சத்தம் கேட்டு, அந்தப் பகுதி பொதுமக்கள் கூடிவிட்டார்கள். அவர்களைப் பார்த்த ஓட்டுநர், தப்பித்து ஓடிவிடுகிறார். என்ன நடந்தாலும் பரவாயில்லை எனக் குழந்தைகளை மீட்க, இறுதி வரை உதவுகிறார் கிளினர். 20 குழந்தைகளில் 11 குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர். 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்துபோனார்கள்.

இந்த நிகழ்வு கேட்பவரைக் கண்ணீரில் உறைந்துபோகச் செய்தது. ஊடகங்கள் வழியே கேட்டவர்களும் பார்த்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியை சுகந்தியை மானசீகமாக வாழ்த்தினார்கள். அவரின் இறப்பை, தன் வீட்டில் ஒருவரின் மரணமாக உணர்ந்தார்கள். வேதாரண்யம் வட்டம், நாகக்குடையான் கிராமத்தில் மாரியப்பன், அன்னலெட்சுமி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் சுகந்தி. அவருக்கு ஓர் அக்கா, ஒரு தம்பி. எளிமையான குடும்பம். ஆனாலும் படிப்புமீது ஆர்வம்கொண்ட சுகந்தி 10, 12-ம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றார். மேல் படிப்புக்குக் குடும்பச் சூழல் இடம் தராவிட்டாலும், சிரமப்பட்டு ஆசிரியர் பயிற்சியை முடித்தார். 78 சதவிகிதம் பெற்று, முதல் இடத்தில் தேர்ச்சியடைந்தார். மிகச் சொற்பமான சம்பளம் என்றாலும், தன் லட்சியப் பணியான ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்துகொண்டிருந்தார். மாலை நேரத்தில் தன் வீட்டின் அருகே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷனும் எடுத்துக்கொண்டிருந்தார்.

படிப்பு ஏழ்மையை விரட்டும் என பிள்ளைகளைப் படிக்கவைத்த பெற்றோருக்குச் சுகந்தியின் மரணம் பேரிடியாக விழுந்தது. தூக்கி வளர்த்த பெண்ணை, சடலமாகப் பார்க்க நேரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். வருத்தத்தைப்போலவே வறுமையும் குடும்பத்தைச் சூழ்ந்தது. சுகந்திக்கு அறிஞர் அண்ணா விருதும் 25,000 ரூபாய் பணமும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. சுகந்தி மரணத்தின்போது என்ன நடந்தது, என்னென்ன வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவை என்னவாயிற்று என சுகந்தியின் தம்பி ராஜ்மோகனிடம் பேசினோம்.

“சுகந்தி அக்கா இறந்ததிலிருந்து வீடு வீடாகவே இல்லை. எட்டு வருஷம் ஆயிடுச்சு. ஆனாலும், அந்த வலி இப்பவும் இருக்கு. அப்பா ஊரில் கிடைக்கும் ஏதாச்சும் வேலைகளுக்குப் போவாங்க... அம்மா நிலைமைதான் ரொம்ப கஷ்டம். கல்யாணம், காட்சின்னு போகிற இடங்களில் அக்காவோடு படிச்சவங்க, தங்கள் குழந்தையோடு வந்திருக்கிறதைப் பார்த்துட்டு வந்து அழுவாங்க. 'நம்ம சுகந்திக்கும் இந்நேரம் குழந்தைகளோடு சந்தோஷமாக இருந்திருப்பாளே'னு சொல்லிட்டே இருப்பாங்க. ரொம்ப சிரமப்பட்டுத்தான் பெரிய அக்கா கல்யாணத்தை முடிச்சோம். அவங்க டெம்பரவரியா ஒரு வேலைக்குப் போயிட்டிருக்காங்க. நான் கோயம்புத்தூரில் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். சுகந்தி அக்கா இறந்தப்போ, கலெக்டர் ஆபீஸிலிருந்து வந்தாங்க...'' என்ற ராஜ்மோகன், பேச்சை நிறுத்தி, கலெக்டர் வந்திருந்தாரா என யோசிக்கிறார். அருகிலிருந்து அம்மாவிடம் கேட்கிறார். வந்ததாக அவர் சொன்னதும் தொடர்கிறார்.

''கவர்மென்ட் தந்த ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தார். எனக்கு அரசு வேலை வாங்கித் தர்றதா சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, எட்டு வருஷமாக அலையறோம். எதுவும் நடக்கலை. 'டிப்ளமோதான் படிச்சிருக்கே, அரசு வேலை எதுவும் கிடைக்காது'னு சொல்றாங்க. இருந்தாலும் நம்பிக்கையோடு முயற்சி பண்ணிட்டிருக்கேன். அந்த வேலை கிடைச்சா குடும்பத்துக்கு உதவியா இருக்கும்" என்றவர், அம்மாவிடம் சுகந்தி பற்றிப் பேசச் சொல்கிறார். ஆனால், ''சுகந்தி...'' என்று பெயரை ஆரம்பித்ததுமே வார்த்தை வராமல் அழத் தொடங்கிவிட்டார் அந்தத் தாய்.



சுகந்தியின் தியாகத்தைப் பற்றி ஆவணமாக்கும் முயற்சியில் 'சுகந்தி டீச்சர்' எனும் சிறுநூலை வெளியிட்டுள்ளார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பாபு எழில்தாசன், "நான் அவங்க வீட்டுக்குப் போகும் ஒவ்வொரு முறையும் மனசுக்கு கஷ்டமாக இருக்கும். சுகந்தி டீச்சரோட இழப்பு அந்தக் குடும்பத்துக்கு ஈடே செய்ய முடியாதது" என்கிறார். (இப்படங்கள் அந்நூலிலிருந்து எடுக்கப்பட்டவை)

தன் உயிரையே கொடுத்து 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தி குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வது ஓர் அரசின் கடமை. நிறைவேற்றுவார்களா?

NEWS TODAY 06.12.2025