Wednesday, December 6, 2017


"இந்த விவகாரத்தை சும்மா விட மாட்டோம்..!" முஷ்டி முறுக்கும் விஷால்
தரப்பு




செ ன்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துடன், வேட்புமனுவையும் தாக்கல் செய்தது, தமிழக அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தல் குறித்து அவருடன் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், நடிகர் விஷால் சுயேச்சையாக ஆர்.கே.நகரில் நிற்க, டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் அலுவலரிடம் தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான சேரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில், இத்தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடந்தது. விஷால் மனுவில் பல்வேறு குறைகள் இருப்பதால் அதனை ஏற்கக்கூடாது என அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. எனவே, விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்ற தகவல் வெளியானதால் ஆர்.கே.நகரில் பெரும் பரபரப்பு நிலவியது. 'தன் மனுவை நிராகரிக்கக் கூடாது' என விஷால்தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

பிற்பகலுக்குப் பிறகு விஷால் மனுவில் அவரை முன்மொழிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட இருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தேர்தல் அலுவலகம் முன் விஷால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு தொடர்ந்து நீடித்தது. அதன் பின்னர் தன்னை முன் மொழிந்தவர்களை, அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர்கள் மிரட்டியதற்கான தொலைபேசிய ஆடியோ ஆதாரங்களை தேர்தல் அலுவலரிடம் விஷால் சமர்ப்பித்தார். மீண்டும் தேர்தல் அலுவலரைச் சந்தித்துமுறையிட்டார் "தேர்தலில் நின்று வெற்றி பெற்று இத்தொகுதி மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என எண்ணுகிறேன்" என்று கேட்டுக்கொண்டார். பின்னர் விஷால் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 11 மணியளவில், போதிய எண்ணிக்கையிலானோர் விஷால் மனுவை முன்மொழியவில்லை என்று கூறி அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த விவகாரம் அரசியல்களத்தில் பெரும் தீயாகப் பற்றிக் கொண்டுள்ளது.



அரசியல் அழுத்தம் காரணமாகவே விஷால் மனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முன் மொழிந்தவர்கள், மிரட்டப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதால் இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் விஷால் அணுக வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமன்றி விஷால் வேட்பு மனு விவகாரம் முடியும்வரை இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக விஷாலின் செய்தித் தொடர்பாளர் முருகராஜைத் தொடர்பு கொண்டு பேசினோம். "சுயேச்சை வேட்பாளர்களில் நேர்மையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு ஆதரவாக விஷால் பிரசாரம் செய்யவுள்ளார். அதேநேரத்தில் இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை. மனு நிராகரிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்துள்ளனர். இதனை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம். தேர்தல் அலுவலரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவர் வெளியில் சென்று பேசிவிட்டு வந்து, விஷாலின் மனுவை நிராகரித்தார். அதனால் அவருடைய மொபைல் போனுக்கு வந்துள்ள அனைத்து அழைப்புகளின் பட்டியலைத் தயரித்து வருகிறோம். தேர்தல் ஆணையத்தை அணுகி, அனைத்து ஆவணங்களையும் வழங்க இருக்கிறோம். மேலும் முன் மொழிந்தவர்கள் இருவர் மிகவும் பயத்துடன் உள்ளனர். அந்த நபர்களிடமும் பேசி வருகிறோம். சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் இந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும்" என்றார்.

இதுகுறித்து தேர்தல் அலுவலர்களை பலமுறை தொடர்பு கொண்டும் நமது அழைப்பை அவர்கள் யாரும் ஏற்கவில்லை. விஷால் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.. "உங்களுடைய கேள்விகளை 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பி வையுங்கள். நான் பதில் தருகிறேன்" என்றார். ஆனால், அவருக்கு கேள்விகளை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் பலமுறை தொடர்பு கொண்டோம். ராஜேஷ் லக்கானியும் நம்முடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக, பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்தமுறை நீதிமன்ற தலையீட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படாமல், முறையாக, நேர்மையாக வாக்குப்பதிவு நடந்தால் சரி...

Dailyhunt
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: 350 சிறப்பு பஸ்கள் இயக்கம் 



காரைக்கால்: திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தெர்பாரண்யேஸ்வரர் கோயில்(சனி பகவான் கோயில்) உள்ளது. இங்கு வரும் 19ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கேசவன் பேசுகையில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து பக்தர்களை திருநள்ளாறுக்கு அழைத்து வருவதுபோல் மீண்டும் அதே பகுதிக்கு பக்தர்களை கொண்டு செல்வதிலும் பேருந்து நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட தொலைதூர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விழா முடியும் வரை சீர்காழி, சிதம்பரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் ஏறி இறங்கும் பயணிகளை ஏற்ற மாட்டோம் என்று கூறக்கூடாது. பக்தர்கள் வசதிக்காக காரைக்கால்- கும்பகோணம் வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், காரைக்கால்- சென்னை வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், எஸ்இடிசி பேருந்துகள் 50, காரைக்கால்- புதுச்சேரி வழியாக 40 புதுச்சேரி சாலை போக்குவரத்து பேருந்துகள், 25 தனியார் பேருந்துகள் உள்ளிட்ட 350 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருநள்ளாறு யாத்ரிகா நிவாஸ் அருகில் ஒரு பேருந்து நிலையம், தேனூர் சுரக்குடி அருகில் ஒரு பேருந்து நிலையம் உட்பட 3 பேருந்து நிலையங்கள் மற்றும் வேன், கார், டூவீலர்கள் நிறுத்த தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். கோயில்கள் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக, தமிழக சாலை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர். 

 
Dailyhunt

Doctor who does not use computer can not regain license: Judge

Doctor who does not use computer can not regain license: Judge

Age Limit of Senior Residentship revised in New Delhi

Age Limit of Senior Residentship revised in New Delhi
MBBS student fails by one mark, but Karnataka HC gives no respite 

DECCAN CHRONICLE. | SHASHIPRASAD SM

Published Dec 3, 2017, 3:21 am IST


He has been a good student and he does not have any backlog subjects.

Karnataka High Court

Bengaluru: Every mark scored has its own value, especially in situations when that single mark turns out to be a decider about your academic standard and even your future.

In one such situation, a final year MBBS student, who fell short of a mark to obtain minimum pass marks in a subject had approached High Court seeking directions to the authorities to revaluate his answer scripts pertaining to Obstetrics and Gynaecology, Theory papers 1 and 2 and to further apply the system of moderation or awarding of grace marks in accordance with MCI guidelines and other incidental and ancillary reliefs.

However, the court refused to grant any relief to the student citing that it cannot interfere in matters pertaining to academic standards, particularly with regard to evaluation of answer scripts.

It said that no relief can be granted to the student except directing the University to accept the fee for supplementary examination, which is to take place in December-2017, in the event the student tenders the fee within a stipulated period as directed.

Earlier the advocate for the student had submitted that the student appeared for the examination in Obstetrics and Gynaecology in his Final Year MBBS Course. He has been a good student and he does not have any backlog subjects. It is also noted that he has failed in Theory Papers 1 and 2, Theory Viva-voce in Obstetrics and Gynaecology paper, his advocate had argued, adding that the University ought to have granted 'five' grace marks.

But even after getting those grace marks, his total would be 119 out of 240 marks (currently it is 114). He would still be short by 'one' mark, as it is necessary to have at least 120 out of 240 marks (50%) to secure a pass in a subject.

In respect of certain answers, it was argued that the evaluator has awarded 'zero' marks, which is impermissible. In circumstances, the advocate had sought relief for the petitioner, so that he could clear the final year MBBS course and take up his housemanship or permit him to enroll for housemanship and in the interregnum he would clear his papers in Obstetrics and Gynaecology.

However, the advocate for the University submitted that no doubt grace marks have not been awarded in this case, but even after grace marks the petitioner would be short by one mark. That revaluation of the papers has already taken place. Despite that, the petitioner has not been able to clear his papers. That the Rules do not provide for revaluation of the answer scripts once again through an expert of the University or an outside expert, it argued.

After taking the submissions into account, the court was of the option that in this case no right of the student has been violated. "Even if a direction is to be issued to the respondent-University to award grace marks to the petitioner in the instant case, as it has not been awarded, that would not give any redressal of petitioner's grievance as he would still be short by one mark and cannot clear the papers in the subject Obstetrics and Gynaecology. In the circumstances, writ petition is dismissed," court ordered.

300 தனியார் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க தடை: ஏ.ஐ.சி.டி.இ

By DIN  |   Published on : 04th December 2017 11:22 AM  |
aicte
நாடு முழுவதும் உள்ள 300 தனியார் பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. 
இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவற்றில் 800 கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 
கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. என்ஜினீயரிங் படிப்பு மீதுள்ள மோகம் குறைந்ததால் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை.

சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட கல்லூரிகளை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை புறக்கணித்தனர். இதனால் அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சேர்கை இல்லாமலும் மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்த மாணவர்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து கல்லூரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை விரைவில் மூடப்பட வேண்டும். அந்த கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை சேர்க்கையை உடனிடியாக நிறுத்த வேண்டும் என அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அனுமதி அளித்துள்ளது.

மேலும் மாணவர் சேர்க்கை 30 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 500 பொறியியல் கல்லூரிகளை கண்காணித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள கல்லூரிகள் விரும்பினால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாகவோ, தொழில்பயிற்சி கல்லூரிகளாகவோ மாறிக்கொள்ளலாம் என ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது. 

பொறியியல் கல்லூரிகளின் வங்கிக்கடன், முதலீட்டுத்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற வாய்ப்பு அளிக்கப்படுவதாக ஏ.ஐ.சி.டி.இ. விளக்கமளித்துள்ளது.

ஜெயலலிதா நினைவுநாளில் சசிகலா என்ன செய்து கொண்டிருந்தார்?

By DIN  |   Published on : 06th December 2017 04:49 PM 
0000sasi_pays_homage_to_j

ஜெயலலிதா நினைவுநாளான நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் கருப்புச் சட்டை அணிந்து மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பேரணி சென்றனர். அங்கே அவர்களது ‘அம்மா’ விற்கு அஞ்சலி செலுத்தியபின் அம்மா வழியில், புரட்சித் தலைவர் எம்ஜிஆரை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சியை நடத்திக் கொண்டு செல்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவையெல்லாம் அனைத்து தமிழ் ஊடகங்களிலும் காணொலிக்காட்சிகளாக விவரிக்கப்பட்டு செய்தியாகின.

ஆனால், அதே நேரம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவுடனே இருந்து அவர் முதல்வராக இருந்த போதும் நிழல் ஆட்சி நடத்தியவராகக் கருதப்பட்ட சசிகலா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ளத்தானே வேண்டும். சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறிய சமயம், கணவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டது. அதே போல, தற்போது ஜெயலலிதா நினைவுநாளன்றும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி துக்கம் அனுஷ்டிக்க தனக்கு பரோல் கிடைக்குமா என சசிகலா தனது வழக்கறிஞர் வட்டாரத்தில் விசாரித்ததாகவும். ரத்த சம்மந்தம் உடையவர்களுக்கு மட்டுமே அப்படி அனுமதி வழங்க சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால், இவரது பரோல் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டதால் அந்த முயற்சியைத் தவிர்த்து விட்டு, பெங்களூர் அதிமுக நிர்வாகியான புகழேந்தி மூலமாக ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று நேற்று சசிகலா இருக்கும் சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா புகைப்படத்தில் கண்ணாடி இருக்கக் கூடாது என்ற உத்தரவின்படி லேமினேட் செய்யப்பட்ட புகைப்படம் சிறைக்குள் சசிகலா இரங்கல் தெரிவிக்க வேண்டி அனுமதிக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவுநாளான நேற்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்த சசிகலா, உடனே தயாராகி ஜெயலலிதா புகைப்படத்துக்கு மாலை சூட்டி அஞ்சலி செலுத்தி விட்டு, புகைப்படத்தின் முன்பாகவே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்து விட்டாராம். தியானம் முடிந்ததும் ஜெயலலிதா படத்தைப் பார்த்து கதறி அழுத சசிகலா, ‘அக்கா இறந்து ஒரு வருடம் முடிந்து விட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை, அவர் இப்போதும் என்னுடனேயே இருப்பது போலத்தான் உணர்கிறேன்’ என்றாராம்.

அதுமட்டுமல்ல, இளவரசி மகன் விவேக்கை அழைத்து, சென்னையில் ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று அவர்களது அன்றைய சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு உணவிடச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி விவேக்கும், அவர் மனைவி கீர்த்தனாவும் நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்குச் சென்று மதியம் மற்றும் இரவு உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கே ஜெயலலிதா நினைவாக உணவிட்டுத் திரும்பினர்.

NEWS TODAY 26.01.2026