Monday, December 18, 2017

வரவிருக்கும் விசேஷங்கள்

டிசம்பர் 25 (தி) கிறிஸ்துமஸ்

டிசம்பர் 29 (வெ) வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 01 (தி) ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 02 (செ) ஆருத்ரா தரிசனம்

ஜனவரி 13 (ச) போகிப் பண்டிகை

ஜனவரி 14 (ஞா) தைப்பொங்கல்
திருப்பதியில் ஒரு மணிநேரத்தில் தரிசனம் :6 நாட்களுக்கு அமல்

Added : டிச 17, 2017 22:00 |



திருப்பதி:திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் நாளை முதல் 6 நாட்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.

நேரம் குறையும்

இது குறித்து கோவில் தேவஸ்தானம் கூறி இருப்பதாவது:பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு மணி நேர தரிசனம் செய்ய முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியமாகும். சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் குடோனில் காத்திருக்கும் நேரம் குறையும் . பக்தர்களின் ஆலோசனைப்படி, திட்டத்தை மேம்படுத்தி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழுச்செலவும் கிடைக்கும் வகையில் மருத்துவகாப்பீடுத்திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும்



மருத்துவக்காப்பீடுத்திட்டத்தின் கீழ் முழு மருத்துவ செலவையும் காப்பீட்டுக்கு கழகமே வழங்கும் வகையில் திருத்தி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமை சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
டிசம்பர் 17, 2017, 03:30 AM

விருதுநகர்,

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்நகர் ஏ.வி.கே.சி. திருமண அரங்கில் மாநில தலைவர் சோமநாதன் தலைமையிலும், முதன்மை ஆலோசகர் சுப்பையா, இணை செயலாளர் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் ஆறுமுகம் கூட்ட நடவடிக்கை குறித்து பேசினார். அதன் பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசின் மருத்துவ காப்பீடுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு மருத்துவ செலவு முழுவதையும் காப்பீடுக்கழகமே ஏற்றுக்கொள்ளும் வகையில் மருத்துவ காப்பீடுத்திட்டம் மாற்றி அமைக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் பயணத்தில் முதியோர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில் இம்மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக வளர்ச்சி அடைய செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

விருதுநகரில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அறிவித்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதல்–அமைச்சர் அறிவித்த பல் மருத்துவகல்லூரியை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகர் மாவட்ட தலைவர் திருப்பதி வரவேற்றோர். செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

Sunday, December 17, 2017

எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை.. வருகிறது புதிய சட்டம்

Posted By:
 

நியூயார்க்: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே எச்-1பி விசா வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகளும் சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்க அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியர்கள் பலரின் வேலை இதன் காரணமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது இந்த விதிமுறையை புதிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் இனி அமெரிக்காவில் இருக்கவும், வேலை பார்க்கவும் முடியாது என்று கூறப்படுகிறது.
ஒபாமா கொண்டு வந்த திட்டம்

ஒபாமா கொண்டு வந்த திட்டம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது 2015 வரை அமெரிக்காவில் வேலை பார்த்த இந்தியர்களுக்கு நிறைய நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்கள். மேலும் பல இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாங்கினார்கள்.
எதிர்ப்பு

எதிர்ப்பு

தற்போது இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிக்கு வேலை வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.அதாவது எச்-1பி விசா வைத்து, அங்கேயே குடியுரிமை பெற்று இருந்தாலும் அவர்களி ன் மனைவிக்கு வேலை வழங்க கூடாது. இதன் காரணமாக தற்போது அங்கு இருக்கும் பல இந்திய பெண்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
முன்னுரிமை

முன்னுரிமை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றாகத்தான் இந்த புதிய திருத்தமும் அறிவிக்கப்பட உள்ளது. இனி அமெரிக்க பெண்களுக்கே வேலையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் திருத்தம்

மேலும் திருத்தம்

தற்போது எச்-1பி விசா முறையில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்தமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனால் 70,000 பெண்கள் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட கால பாதிப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 85,000 பேர் எச்-1பி விசா விண்ணப்பித்து இந்தியாவில் காத்து இருக்கின்றனர்.

எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை.. வருகிறது புதிய சட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே எச்-1பி விசா வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகளும் சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்க அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியர்கள் பலரின் வேலை இதன் காரணமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது இந்த விதிமுறையை புதிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் இனி அமெரிக்காவில் இருக்கவும், வேலை பார்க்கவும் முடியாது என்று கூறப்படுகிறது.
ஒபாமா கொண்டு வந்த திட்டம்

ஒபாமா கொண்டு வந்த திட்டம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது 2015 வரை அமெரிக்காவில் வேலை பார்த்த இந்தியர்களுக்கு நிறைய நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்கள். மேலும் பல இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாங்கினார்கள்.
எதிர்ப்பு

எதிர்ப்பு

தற்போது இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிக்கு வேலை வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.அதாவது எச்-1பி விசா வைத்து, அங்கேயே குடியுரிமை பெற்று இருந்தாலும் அவர்களி ன் மனைவிக்கு வேலை வழங்க கூடாது. இதன் காரணமாக தற்போது அங்கு இருக்கும் பல இந்திய பெண்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
முன்னுரிமை

முன்னுரிமை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றாகத்தான் இந்த புதிய திருத்தமும் அறிவிக்கப்பட உள்ளது. இனி அமெரிக்க பெண்களுக்கே வேலையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் திருத்தம்

மேலும் திருத்தம்

தற்போது எச்-1பி விசா முறையில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்தமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனால் 70,000 பெண்கள் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட கால பாதிப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 85,000 பேர் எச்-1பி விசா விண்ணப்பித்து இந்தியாவில் காத்து இருக்கின்றனர்.
எங்கே செல்லும் இந்த ஆர்.கே.நகர் பாதை? எந்த நிமிடத்திலும் க்ளைமாக்ஸ் அறிவிப்பு?

 Posted By: Mathi Updated: Sunday, December 17, 2017, 17:47 [IST]

 சென்னை: தமிழகத்தின் மிகப் பெரும் அவமான சின்னமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ஆர்.கே.நகர். இம்முறையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் அரங்கேறிவிட்டது. எந்த நிமிடத்திலும் ஆர்கே நகர் தேர்தல் மீண்டும் ரத்து என்கிற அறிவிப்பு வெளியாகலாம் என்றே கூறப்படுகிறது.

 ஆர்.கே. நகரில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரலாறு காணாத வகையில் தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைத்தது. ஒட்டுமொத்த தமிழக அரசே களத்தில் குதித்து தினகரனுக்கு ஆதரவாக அப்போது வேலை பார்த்தது. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் அனைவருமே பண விநியோக சிக்கலில் மாட்டினர். இதனால் தேர்தலே ரத்து செய்யப்பட்டது. ஓட்டுக்கு ரூ10,000 ஓட்டுக்கு ரூ10,000 இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மிகச் சிறிய ஆர்.கே.நகர் தொகுதியின் ஒவ்வொரு வாக்காளர் வீடும் ஒரு ஓட்டுக்கு ரூ10,000 என குறையாமல் விலை பேசப்பட்டிருக்கிறது.

 வாக்காளர்கள் பிஸி ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு போவதுதான் இப்போது வாழ்வாதாரம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதில் அத்தனை வாக்காளப் பெருங்குடி மக்களும் படுமுனைப்புடன் இருக்கின்றனர். அன்றாட காட்சி அன்றாட காட்சி திரும்பிய பக்கமெல்லாம் பணபட்டுவாடா... தேர்தல் அதிகாரிகள் திணறுகிறார்கள்.. ஆட்சி அதிகாரத்தைக் கண்டு போலீஸ் தடுமாறுது... எதிர்க்கட்சிகளும் மல்லுக்கட்டுகிறது.. இதுதான் ஆர்கே நகரில் தினம் தினம் நடந்தேறும் காட்சி. ரத்தாகிறது தேர்தல்? ரத்தாகிறது தேர்தல்? தற்போது கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்று அனைத்து அரசியல் கட்சியினரும் கூடுதல் பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர். இன்றைய கூட்டத்திலும் புகார் ஓலைகள் மாற்றி மாற்றி வாசிக்கப்பட்டு ஆதாரங்களும் கொடுக்கப்படுகின்றன.

 தற்போதைய நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுமா என்பது நிச்சயம் சந்தேகம்தான். ஆர்கே நகர் தேர்தல் ரத்து என்கிற அறிவிப்பு மீண்டும் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/ec-again-cancel-rk-nagar-poll/articlecontent-pf282263-305353.html
தொப்பிக்கு மேல் குக்கர்... ரண களத்திலும் கலகலக்கும் தினகரன் அடிப்பொடிகளின் ஓட்டு வேட்டை 
 
Posted By: Lakshmi Priya Updated: Sunday, December 17, 2017, 19:09 [IST]
 
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகார்களுக்கு கிடையிலும் தினகரனின் அடிபொடிகளின் ஓட்டு வேட்டை கலகலப்பாக இருக்கிறது. ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முதல் பெரும்பாலான இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன.
 
 இன்றைய தினம் தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளும் கட்சி, தினகரன் அணி மீது புகார்கள் எழுந்தன. 
 
 A supporter of TTV Dinakaran campaigns with both of cap and cooker
இந்த ரணக்களத்திலும் ஆர்கே நகரில் பிரசாரத்துக்கு குறைவில்லாமல் களைகட்டி வருகிறது. ஆர்கே நகரில் தினகரனின் ஆதரவாளர் ஒருவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் தலையில் குக்கரை தொப்பி போல் கவிழ்த்திருந்தார். இன்னும் உற்று பார்த்தபோது குக்கருக்கு அடியில் தொப்பியும் போட்டிருந்தார். குக்கர் சின்னம் தற்போதைய தேர்தலில் தினகரனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொப்பி சின்னமோ கடந்த ஏப்ரல் மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலின் போது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த முறையும் தொப்பி சின்னம் கேட்டபோது அவருக்கு குக்கர் சின்னம்தான் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தலே ரத்தாகும் என கூறப்படும் நிலையில் இதுபோல் சுவாரஸ்யமாக சிலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/a-supporter-ttv-dinakaran-campaigns-with-both-cap-cooker-305369.html

NEWS TODAY 28.01.2026