Monday, December 25, 2017

After complaints, Madras university plans to improve guest houses

| TNN | Dec 25, 2017, 06:53 IST

CHANGE FOR THE BETTER:The vice-chancellor's official residence in Kotturpuram will be converted into a VIP guest house. 
 
CHANGE FOR THE BETTER:The vice-chancellor's official residence in Kotturpuram will be converted into a VIP guest house.
 
CHENNAI: After an audit report in March found that the international hostel and guest houses of University of Madras were being utilised poorly, the university has framed detailed guidelines to improve the facilities ensuring that the rooms aren't misused.
The vice-chancellor has relinquished his official bungalow, beside the Anna Centenary library in Kotturpuram, which will be converted into a VIP guest house for international and national visiting professors, scientists and other top officials.

Though the university has several properties for visiting faculty and students in the city, most of them remain vacant or were used by politicians and research scholars for unlawful activities, said sources. Professors said international students and academics invited for conferences and PhD viva-voce had to stay in hotels as facilities in the university guest houses were poor. The university authorities recently formed a committee which looked into the issue and came out with a set of recommendations, sources said. All the guest houses and the international hostel will be managed by a professor rank faculty nominated by the vice-chancellor.

The university has a beach-facing guest house beside its Marina campus and another such facility, known as the UGC-Human Resource Development Centre (HRDC) hostel behind it. This is the only such sea-facing guest-house on the stretch owned by the government. A separate hostel for international students has been constructed at the Taramani campus. But the March audit report stated that though crores of rupees had been pumped into construction of the hostel in Taramani, 203 rooms remained unoccupied. The HRDC guest-house was completed in May 2016 but that too was not put to use. There was considerable loss in revenue because of this, the report noted.

Vice-chancellor P Duraisamy said the syndicate had given approval for the revamp of these facilities and had prepared guidelines for its usage. "Earlier, the registrar and public relations officer were in-charge and it was inefficiently managed, now a professor has been put in charge and a separate bank account has been created," he said. The maximum rent for a suite is Rs2,500 per day. Guidelines on who can use the rooms, period of stay and who will be authorised to give permission for use has been laid out. Senate, syndicate members, visiting academics, experts on exam duty and parents will be allowed to use the facilities.
 ஆருத்ரா தரிசன திருவிழா துவக்கம்
Added : டிச 25, 2017

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின் பஞ்சமூர்த்திகள் கொடி
மரம் அருகே எழுந்தருளினர்.கொடி மரத்தடியில், அட்ஷராயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பன்னிரு திருமுறை வழிபாடும், காலை, 8.30 மணிக்கு, உற்சவக்கொடி ஏற்றப் பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். ஆருத்ரா விழாவில், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு, தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளும், காலையில், பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், மாலையில், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. வரும், 28ம் தேதி, தெருவடைச்சான் உற்சவமும், ஜனவரி, 1ல் தேரோட்டமும், 2ல், ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.
 வாருங்கள் துணைவேந்தர்களே வாருங்கள்!
Added : டிச 25, 2017

சமீபத்தில், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, 241 பேரும், இன்னொரு பல்கலையில், 194 பேரும் விண்ணப்பித்துள்ளனர். வி.ஏ.ஓ., எனப்படும், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தான், அதிகமான விண்ணப்பங்கள் குவிந்ததை பார்த்திருக்கிறோம்.'பசையுள்ள' பதவி என்பதால், அப்படியொரு விண்ணப்ப சாதனை படைத்தது, வி.ஏ.ஓ., பதவி. இப்போது, துணைவேந்தர் பதவியும் அப்பெருமையை பெற்றுள்ளது

.தேர்வுக்குழுக்கள் இரவு பகலாக பாடுபட்டு, விண்ணப்பித்தவர்களின் பண்புகளை ஆராய்ந்து, மதிப்பெண்கள் போட்டு, அவர்களின் ஆளுமை திறன்களை கணித்து, இரண்டு பல்கலைக்கழகங்களும், தலா, பத்து பேரை தேர்ந்தெடுத்துள்ளன.

இன்னுமொரு சல்லடை சலிப்பில், பத்தை மூன்றாக்கி, பெயர் பட்டியல் கொடுக்கப்பட்டு விடும். தேர்வுக்குழுவால் ஒரு முறையும், பிறகு கவர்னரால் இன்னொரு முறையுமாக, இரண்டு நேர்முகத் தேர்வுகள் நடக்கும்.பிறகென்ன, வடித்தெடுத்த திறமை மிக்கவர்கள், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக அமரப் போகின்றனர்.பதவியில் அவர்கள் அமர போவது இருக்கட்டும். அவர்கள் தலைமையேற்க போகும் பல்கலைக்கழகங்களின் அருமை, பெருமை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா!-சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லையில் உள்ள பல்கலைக்கழகங்களில் சில உள்கட்டமைப்புகள் உள்ளன.

 தமிழ்த்துறை, இயற்பியல் துறை போன்ற தனித்தனிப் பாடங்களுக்காக அமைந்திருக்கும் துறைகள் என்பது ஓர் அமைப்பு.இவை ஒவ்வொன்றிலும், அந்தப் பாடத்தில் அல்லது அதன் உட்பிரிவுகளில் சிறப்பறிவும், பயிற்சியும் பெற்றவர்கள் பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர் பணிகளில் அமர்த்தப்படுவர்.தனியாக ஆய்வுகள் செய்வதும், ஆய்வு மாணவர்களூக்கு வழிகாட்டுவதும், பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் கற்பிப்பதும், தேர்வுகள் நடத்துவதும் இவர்களின் தலையாய பணிகளாகும்.ஓரளவுக்கு இந்தப் பணிகளை செய்ய, குறைந்தது ஏழு ஆசிரியர்களாவது, ஒரு துறையில் இருக்க வேண்டுமென, பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுகிறது.

துறைகளோடு, மையங்கள் மற்றும் பள்ளிகள் என, இரண்டு சிறப்பு அமைப்புகளும், பல்கலைக்
கழகங்களில் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் உயராய்வுகளில் உலகப் புகழ்பெற்ற அளவுக்கு சிலர் விளங்கினால், அவர்கள் தலைமையில் சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
ஒரு பாட ஆய்வுக்கோ அல்லது பட்ட மேற்படிப்பு பயிற்சிக்கோ, ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளின் உதவி தேவைப்படலாம். அப்படி, ஒன்றுக்கொன்று பயன்பெறும் வகையிலான துறைகள் சில இணைந்து, 'பள்ளி' என்ற அமைப்பு செயல்படும்.இங்கு பொதுமையான கட்டமைப்பு வசதிகளை எளிதில் பெற்று, ஆசிரியர்கள் கூட்டாய்வுகள் செய்தும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு களம் விரிந்த பயிற்சிகள் கொடுத்தும், பயன் விளைவிப்பர். பல்கலைக்கழக நிர்வாகத்தையும், இந்த அமைப்பு எளிமைப்படுத்தும்.ஆனால், நம் பல்கலைக்கழகங்களில் தற்போது இயங்கும் துறைகள், மையங்கள், பள்ளிகள், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.இந்தப் பல்கலைக்கழகங்களின் துறைகள், பள்ளிகள், மையங்களின் பணி- பயன்களை ஆராய்ந்து பார்த்தால், வேதனைகள் வெடிக்கின்றன. எந்த துறையிலும் துறை தாண்டிய பாடத்திட்டங்கள் இல்லை. பெயருக்குத்தான் விருப்பப்பாடத்திட்ட முறை உள்ளது.

பல துறைகளில் பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கம் தான்; சிலவற்றில் மாணவர்கள் இல்லை.எந்தப் பள்ளியிலும் கூட்டு ஆய்வுகள், பயிற்றுவிப்புகள் இல்லை. பள்ளிகளும், மையங்களும் ஆய்வு, பயிற்சி மேம்பாட்டுக்கு எந்த
விதத்திலும் உதவி செய்யவில்லை.சில ஆசிரியர்கள் மட்டுமே உள்ள துறைகளும் உடைக்கப்பட்டு, ஓராசிரியர், இரண்டாசிரியர் துறைகள் -உருவாக்கப்பட்டுள்ளன. துறைகளை உடைப்பதில் இரண்டு நன்மைகள்!ஒரு துறைத்தலைவர், துணைவேந்தருக்கு உடன்படாதவர்
என்றால் அவர் துறையை உடைத்து, அதே துறையிலிருக்கும் இன்னொருவரை, புதிய துறைக்கு தலைவராக்கி விட்டால், அவர் துணைவேந்தரின் கட்டுக்குள் வந்து விடுவார்.
இப்படித்தான், இத்தனை ஆண்டுகளை கடந்தும், இந்த பல்கலைக்கழகங்கள் இன்னும் ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாமலும், ஓரிரு ஆசிரியர்களுடனும், இணை, துணைப் பேராசிரியர்களை தலைவர்களாக கொண்டும், தம்மை அடையாளம் காட்டி கொண்டிருக்கின்றன.இந்நிலையில், எங்கிருந்து, யாரிடமிருந்து, உயராய்வுக் கட்டுரைகளையும், கண்டுபிடிப்புக்களையும், உரிமங்களையும், தேசிய, பன்னாட்டு விருதுகளையும் பல்கலைக்கழகத்தால் எதிர்பார்க்க முடியும்...இங்கு பார்வைக்குக் கொண்டு வராத ஏனைய மாநிலப் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிக் கருத்து கூறலாம். இவை வெளியுலகுக்கு - கூட்டமைப்புள்ள பள்ளிகள், துறைகள், ஆய்வுகள், பாடங்கள், கற்பித்தல் - என்றெல்லாம் தம்மை வெளிச்சம் போட்டுக்காட்டி, உண்மையில் காட்சிப்பிழைகளாக இருக்கின்றன.உயர்கல்வி மாளிகையின் உச்சப்பகுதிகளில், இப்படி தோன்றிய விரிசல்களையும், ஒட்டடை படலங்களையும் அண்ணாந்து பார்க்காமல், நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.இந்த அவலங்களை வெளிக்காட்டும் போது, ஒன்றை நாம் மறந்து விடலாகாது. 'சென்னை, மதுரை, திருச்சிப் பல்கலைக்கழகங்களில் அண்மை காலம் வரை ஒரு சில ஆசிரியர்கள் தம் ஆய்வுகளால் உலக அளவில் தலை நிமிர்ந்து நின்றனர்' என்பது தான் அந்த உண்மை.அவர்களெல்லாம் இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்று, நமக்கு பெருமை சேர்த்தனர். அவர்களெல்லாம் இப்போது ஓய்வுபெற்று வெளியேறி விட்டனர். அவர்களை பாராட்டுவோம்.'அத்தகையவர்களை இனி மேல் நம் பல்கலைக்கழகங்களால் உருவாக்க முடியுமா...' என்ற கேள்விக்கு உரிய விடை நமக்குக் கிடைக்கும் என்ற எண்ணம், தொடு வானத்தைத் தொடும் நம்பிக்கை தான்!இறுதியாக, இப்போதெல்லாம் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர்களின் நெஞ்சை நெருடும் ஒரே ஓரு உண்மை, பதவியேற்கும் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக இருக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் தான்!அவற்றை விரைந்து நிரப்ப வேண்டுமென்ற தீவிர நல்லுணர்வை நாம் குறை சொல்லக் கூடாது. ஆனால், நிகழ்வுகள் சரியில்லையே!நாம் விவரித்த ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்றில் நான்காசிரியர்களுக்கு குறைவான துறைகளே இல்லை என்று மகிழ்ந்தோமே, உண்மையில் அதுவும் ஒரு வேதனை தரும் காட்சிப்பிழை தான்!அண்மைக்காலங்களில் அங்கு நடைபெற்ற ஆசிரியர் தேர்வுகளை நாம் சுட்டாமல் இருக்க முடியவில்லை. பல்கலைக்கழக வகுப்புகளில் காலடி வைத்து, பட்டங்கள் பெறாமல், இடம் கிடைத்த கல்லுாரிகளில் பட்டங்கள் பெற்று, பி.எச்டி., பட்டங்கள் பெற்றவர்கள், 40 பேருக்கு குறையாமல் இணைப் பேராசிரியர்களாகவும், துணைப்பேராசிரியர்களாகவும் நியமனம் பெற்றிருப்பதை செரிக்க முடியவில்லையே!இத்தகைய நிகழ்வுகள், வேறு வளாகங்களிலும் தொடரும் சூழ்நிலையென்றால், வரும் காலத்தில் நம் உயர்கல்வி மாளிகையின் கூரையே வீழ்ந்து விடுமே!தேர்வுக்குழுக்கள் துணைவேந்தர்களையும், ஆசிரியர்களையும்
தேடித்தேடி, 'பொறுக்கும்' முறைகள் இனியும் தொடர வேண்டுமா?இப்போதைக்கு 'வாருங்கள்
துணைவேந்தர்களே' என, வாழ்த்துவோம்.

ப.க.பொன்னுசாமி, முன்னாள் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்
இ-மெயில்: ponnu.pk@gmail.com
 பெரியார் பல்கலையில் ஆவணங்கள் மாயம் : பதிவாளரிடம் அறிக்கை கேட்பு
Added : டிச 25, 2017

சேலம்: பெரியார் பல்கலையில், ஆவணங்கள் மாயமான விவகாரத்தில், அறிக்கை அளிக்கும்படி, பதிவாளரிடம் கேட்டுக்கொண்டுள்ள போலீசார், அதில் சிக்கப்போகும் அதிகாரிகளின் உத்தேச பட்டியலை தயாரித்து, அவர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

சேலம், பெரியார் பல்கலையில், 2012 முதல், 2015 வரை பணியில் சேர்ந்த பேராசிரியர்கள், இணை, உதவி பேராசிரியர்களின் நியமன உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள் மாயமாகின.
இதுகுறித்து, ஏற்கனவே பதவி வகித்த பதிவாளர்கள், அவர்களின் கீழ் பணிபுரிந்த அதிகாரி
களுக்கு விளக்கம் கேட்டு, பதிவாளர் மணிவண்ணன், 'மெமோ' அனுப்பியிருந்தார். அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை.இதனால், அவர் கடந்த, 16ல், போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார்
அளித்தார். இதையடுத்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த, 18ல், ஆவணங்கள் மாயமான விவகாரத்தில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, 57, மற்றும் நிர்வாகத்தினர் மீது,
வழக்குப்பதிந்தனர்.போலீசார், விசாரணையை துவங்க இருந்த நிலையில், அங்கமுத்து தற்கொலை செய்தார். கடந்த, 20ல், போலீசார் விசாரணையை துவக்கினர்.

முதல் கட்டமாக, பதிவாளர் மணிவண்ண னிடம், 2012 முதல், 2015 வரை பதிவாளர்
பதவி வகித்தவர்கள், அவர்களின் கீழ் பணிபுரிந்த ஊழியர்கள், அதற்கு பின்னர் வந்த அதிகாரி
களின் தகவல்களை, அறிக்கையாக அளிக்கும்படி கேட்டுள்ளனர்.இதை பெற்ற பின்,
தங்கள் முழு விசாரணையை, போலீசார் துவக்க உள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக சந்தேகிக்கப்படும் பெண் அதிகாரி உள்பட, 20 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பெரியார் பல்கலையில், ஆவணங்கள் மாயமானதால், 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், இணை, உதவி பேராசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.நியமன உத்தரவு இருந்தால் மட்டுமே, சம்பள நிர்ணயம், உயர்வு உட்பட பிற சலுகைகளை, அவர்கள் பெற முடியும். இதனால், ஆவணங்கள் மாயமானதில், பெரிய சதி நடந்துள்ளதாக சந்தேகிக்கிறோம்.பதிவாளர் அளிக்கும் அறிக்கைப்படி, முழு விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவரும்.இதில், முதல் குற்றவாளியாக உள்ள அங்கமுத்து மறைந்து விட்டதால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படலாம். ஆனால், ஒருவர் மட்டும், இத்தவறை செய்திருக்க வாய்ப்பில்லை.தவறு செய்ய துாண்டியவர்கள், உடந்தையாக செயல்பட்டவர்களின் விபரங்களை, பதிவாளர் அறிக்கை அளிக்கும் முன், சந்தேகத்தின் அடிப்படையில் சேகரித்து வருகிறோம்.அறிக்கையில், சந்தேகப்படும் நபர்கள் பெயர் இடம் பெற்றிருந்தால், முதலில், அவர்களிடம் இருந்து விசாரணை தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழுமலையான் தரிசனம் 15 மணி நேரம் காத்திருப்பு

Added : டிச 25, 2017
 
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 12 மணிநேரம் காத்திருக்கின்றனர்.
கிறிஸ்துமஸ், வார இறுதி விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை இணைந்து வந்ததால், ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். டிச.,23 வரை, தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமலில் இருந்ததால், பக்தர்கள் எளிதாக ஏழுமலையானை தரிசித்தனர். மீண்டும் நேர ஒதுக்கீடு முறை, வரும் மார்ச் மாதம் முதல் நிரந்தரமாக அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, நேற்று முதல் பழைய நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது. அதனால், ஏழுமலையானை தரிசிக்க, 31 காத்திருப்பு அறைகளை கடந்தும், பக்தர்கள் காத்திருந்தனர். தர்ம தரிசனத்திற்கு, 15 மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு, எட்டு மணி நேரமும் ஆனது.
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை
 
“சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம் தான்”, என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 
 
சென்னை,

இதுகுறித்து தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1967-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்குமுன், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றியைப் பறி கொடுக்க நேர்ந்தது. பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள் ‘தர்மபுரி இடைத்தேர்தல் வெற்றி குறித்து என்ன கருதுகிறீர்கள்?’, என்று கேட்டனர். உடனே, ‘தர்மபுரியில் வாக்காளர்களுக்கு கொடுத்த தர்மம் வென்றது’, என குறிப்பிட்டார்.

அதேபோல இன்று ஆர்.கே.நகர் தொகுதியிலும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்’ வென்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி, தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்கு 24 ஆயிரத்து 651 வாக்காளர்கள், தங்களின் விலைமதிக்க முடியாத வாக்குகளை அளித்திருப்பது நேர்மையான, உயிரோட்டமுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீது, இன்றைய சூழலிலும் அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்குத் துணைநின்று, ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பண மழையிலிருந்து ஜனநாயகத்தை, எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் அதனை சந்தித்துப் போராடிப் பாதுகாத்திட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தி.மு.க. சந்தித்தது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் தொடங்கி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவது வரை பல முனைகளிலும் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படியான உதவியையும், முறையான கண்காணிப்பையும் நாடினோம். தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டியபோது, ஐகோர்ட்டு சென்று போராடினோம்.

ரூபாய் நோட்டுகள் குத்தீட்டிபோல் தேர்தல் ஜனநாயகத்தின் மார்பில் ஊடுருவி உயிருக்கே உலை வைத்துக்கொண்டிருந்த நேரத்தில், தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாராமுகமாக இருந்ததே தவிர, பண வினியோகத்தைத் தடுக்கவில்லை. சுதந்திரமான தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அதிகார எந்திரமும் துரும்பைக்கூட எடுத்துப்போட முயற்சிக்கவில்லை. இதற்குமுன் நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் இப்படியொரு கரும்புள்ளியை தேர்தல் ஆணையம் தனக்குத்தானே திலகம் என நினைத்து இட்டுக்கொண்டது இல்லை நடுநிலையாளர்கள் கருதும் அளவுக்கு தேர்தல் ஆணையம் பரிதாபமாக நின்றதைக் காணமுடிந்தது.

தேர்தல் பார்வையாளர்கள் வந்தார்கள், சென்றார்கள்; அவ்வளவுதான். சுதந்தி ரமாகத் தேர்தலை நடத்துவதற்கு இரும்புக்கரம் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவிட்டும்கூட, ஹவாலா பாணியில் வாக்குப்பதிவு தினத்தன்று கூட வாக்காளர்களுக்குப் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும், போலீசாரும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துள்ள இமாலய தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை, மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுமா? என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு ‘தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்த கூட்டுசதியின் வெளிப்பாடு’ எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கூட்டறிக்கை
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் செய்த கூட்டு சதியின் வெளிப்பாடு. இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது” என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சட்டமன்ற தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சந்தித்து இருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை தி.மு.க.வுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். அதேவேளையில், அதற்கு பின்னணியாக தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டுசதியை அறிந்து, பதவி ஆசைக்காக இப்படியும் சதி செய்வார்களா? என்று தி.மு.க.வினரை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள் தமிழக மக்கள்.

இரட்டை இலை சின்னத்தை தோற்கடிப்பதன் மூலம் ஒன்றுபட்டு அசைக்க முடியாத சக்தியாக நிற்கும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை எப்படியாவது பறித்துவிட வேண்டும். எம்.ஜி.ஆரின் செல்வாக்கிற்கும், ஜெயலலிதாவின் புகழுக் கும், களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் திட்டமிட்டு செய்த கூட்டு சதியின் வெளிப்பாடாக இந்த தேர்தல் முடிவு அமைந்து இருக்கிறது.

தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், ஜெயலலிதா வாழ்ந்த போதும், வாழ்வுக்கு பின்னும், அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரனும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ரகசிய உடன்பாட்டின் விளைவுதான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு.

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன், தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் உள்ள செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்பதற்காகவே, டி.டி.வி.தினகரனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, தனது வாக்கு வங்கியை தினகரனுக்கு திருப்பிவிட்டு அதிக வாக்குகள் பெற செய்திருக்கிறது தி.மு.க.

எம்.ஜி.ஆர். கண்டெடுத்த வெற்றி சின்னம், ஜெயலலிதா மீட்டெடுத்த மக்கள் சின்னம் இரட்டை இலையை தோற்கடிப்பேன் என்று தினகரன் கூக்குரல் இட்டதும், அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்வேன் என்று கூப்பாடு போட்டதும், தி.மு.க. வுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம் தந்த துணிவின் காரணமாகத்தான் என்பது தற்போது நிரூபணம் ஆகி இருக்கிறது.

ஜெயலலிதா வாழும் போதே அவருக்கு எதிராக சதிச்செயல் புரிந்து, ஜெயலலிதாவால் தன்னுடைய கண்ணிலேயே படக்கூடாது என்று போயஸ் தோட்டத்தைவிட்டு விரட்டப்பட்டதுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தோடு கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் தனக்கு வாழ்வு தந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னும், தொடர்ந்து துரோகம் செய்வதையே தனது வாழ்க்கை முறையாக கொண்ட தி.மு.க.வுடன் கைக்கோர்த்து இருப்பது துரோகத்தின் உச்சம் ஆகும்.

தி.மு.க.வை லஞ்ச ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக உலகத்தின் முன் நிறுத்திய 2ஜி ஊழலை, வெளிச்சம் போட்டு காட்டியவர் ஜெயலலிதா தான் என்பதை நாடே அறியும். ஆனால் இந்த ஊழல் வழக்கில் இருந்து ஆ.ராசாவும், கனிமொழியும் விடுதலையானது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று வாழ்த்துச்சொல்லி, ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகத்தை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெளிப்படுத்தி காட்டிக்கொண்டார் டி.டி.வி.தினகரன். அந்த துரோக செயலுக்கு பரிசாக தி.மு.க.வின் வாக்குகளை வெட்கமின்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவு எடுத்து காட்டுகிறது.

அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் நேரடியாக மோதி எந்த ஜென்மத்திலும் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய கட்சிக்கும் தன்னை சார்ந்திருக்கும் தொண்டர்களுக்கும் பச்சை துரோகம் செய்து தி.மு.க.வின் வாக்குகளை டி.டி.வி.தினகரனுக்கு வாரி கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அகற்றிட வேண்டும், அவரது மக்கள் செல்வாக்கை தகர்த்து விடவேண்டும் என்று காலமெல்லாம் செயல்பட்ட தி.மு.க.வும், ஜெயலலிதாவுக்கு பச்சை துரோகம் இழைத்த டி.டி.வி.தினகரனும் ரகசிய கூட்டு சேர்ந்தது, தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, திருமங்கலம் பார்முலா என்ற புதிய சொல்லை தீய சக்தி தி.மு.க. உருவாக்கியது. அதேவழியில் இப்போது ஆர்.கே.நகரில் நூதனமுறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பார்முலா எனும் தீயசொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்த டி.டி.வி.தினகரன் குழுவினர், பிரசாரத்தின் கடைசி நாளில் 20 ரூபாய் நோட்டை வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு குறிவைத்து கொடுத்து வெற்றி பெற்றதும், அதற்கு ஈடாக ரூ.10 ஆயிரம் தரப்படும் என்று மக்களை நம்பவைத்து பிரசாரம் செய்தும், மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தீராத பழியை தன்மேல் கொண்டுள்ள தினகரனும், ஊழல் பழியை தனது தலைமேல் தாங்கி கொண்டிருக்கும் தி.மு.க.வும், ரகசிய ஒப்பந்தம் செய்து பெற்ற இந்த வெற்றியை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த சட்டசபை தொகுதிக்கும் சற்றும் பொருந்தாது.

தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் கூட்டு சதி செய்து, மக்களை ஏமாற்றி பெற்றுள்ள இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது. 1½ கோடி தொண்டர்களும் ஒரே சிந்தனையுடன் எம்.ஜி.ஆரின் வழிநடந்து, ஜெயலலிதாவின் புகழ்காத்து, தமிழக மக்களின் நலன்காக்க ஓர் உருவாய் செயல்படுவோம் என்று பணியாற்றும் கட்சி தொண்டர்களை பிளவுபடுத்தவோ, அ.தி.மு.க.வை யாரும் அசைத்துவிடவோ முடியாது.

தமிழக மக்களுக்காகவும், தமிழக நலனுக்காகவும் ஜெயலலிதா உருவாக்கி தந்த ஆட்சியை சிறப்புடன் வழி நடத்தி, அவரின் திட்டங்களை தொடர்ந்து செயலாற்றி அவரின் பெருமை சேர்க்க உளமார பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

இதே வகையில் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளும், செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் நம்முன் நிற்கின்றன. அந்த பணிகளை தொய்வின்றி செயல்படுத்தி ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்ப்போம்.

ஜெயலலிதாவின் எண்ணங்கள் ஈடேற, அவரது சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றிட, அவரின் நோக்கங்கள் அழியாது என்றும் வெற்றி பெற்றிட தொடர்ந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

NEWS TODAY 29.01.2026