Monday, December 25, 2017

ஏழுமலையான் தரிசனம் 15 மணி நேரம் காத்திருப்பு

Added : டிச 25, 2017
 
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 12 மணிநேரம் காத்திருக்கின்றனர்.
கிறிஸ்துமஸ், வார இறுதி விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை இணைந்து வந்ததால், ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். டிச.,23 வரை, தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமலில் இருந்ததால், பக்தர்கள் எளிதாக ஏழுமலையானை தரிசித்தனர். மீண்டும் நேர ஒதுக்கீடு முறை, வரும் மார்ச் மாதம் முதல் நிரந்தரமாக அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, நேற்று முதல் பழைய நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது. அதனால், ஏழுமலையானை தரிசிக்க, 31 காத்திருப்பு அறைகளை கடந்தும், பக்தர்கள் காத்திருந்தனர். தர்ம தரிசனத்திற்கு, 15 மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு, எட்டு மணி நேரமும் ஆனது.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...