Thursday, February 1, 2018



ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தகமிஷனுக்கு ரூ.3.02 கோடி செலவு

சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷனுக்கு, 3.02 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.




ஜெ., மறைவால் காலியான, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, எம்.எல்.ஏ., பதவி காலியானது. அதை நிரப்ப, டிச. 21ல், தேர்தல் நடந்தது. இதில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பொதுவாக இடைத்தேர்தலுக்கு, ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு,

மூன்று பொதுப் பார்வையாளர்கள், மூன்று செலவினப் பார்வையாளர்கள், இரண்டு போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். பாதுகாப்புப் பணிக்கு, 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர்.தொகுதியில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

பறக்கும் படை, கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டது. இதன் காரணமாக, தேர்தல் செலவு அதிகரித்தது. பொதுவாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு, 70 லட்சம் ரூபாய் செலவாகும். ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, 3.02 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 27 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உரியவர்கள், கணக்கு காட்டியதையடுத்து, அவர்களிடம், பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.தேர்தல் கமிஷன் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. இதுவரை இல்லாமல், முதன் முறையாக,

ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்த நிகழ்வும் அரங்கேறியது.

பணம் பட்டுவாடா செய்தவர்களை பிடிக்க முடியாத நிலையில், அதிகப்படியான துணை ராணுவம், கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமான நடைமுறைப்படி தேர்தலை நடத்தி இருந்தால்,அரசுக்கு, இரண்டு கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கும்.

புகார் அளிக்க வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 59 வேட்பாளர் கள் போட்டியிட்டனர். அவர்கள், தங்களின் செலவு கணக்கை, தேர்தல் செலவினப் பார்வையாளர்களிடம் சமர்ப்பித் தனர். அந்த விபரம், செலவினப் பார்வையாளர்கள் பராமரித்த, நிழல் கணக்கு விபரம், தேர்தல் கமிஷன் இணையதளமான, tn.electiond.gov.inல், வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், செலவு கணக்கை காண்பிக்காமல் இருந்தால், பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் நிரூபண மானால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் தகுதி யிழப்பு செய்யப்படுவதுடன், மூன்று ஆண்டு கள், தேர்தலில் போட்டியிட,தடை விதிக்கபடும்.
மருத்துவக் கல்வி இயக்குனர் நியமன வழக்கு: டீனுக்கு மிரட்டல் : நீதிமன்றத்தில் தகவல்

Added : பிப் 01, 2018 02:32

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்த, டீனுக்கு மிரட்டல் வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி   இயக்குனராக 2017 ஏப்.,25ல் தமிழக அரசு நியமித்தது.இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி,உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

 தனிநீதிபதி, 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராகநியமித்த அரசாணையைரத்து செய்கிறேன். மனுதாரரை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்,' என்றார். இதை எதிர்த்து, தமிழக அரசுமற்றும் எட்வின் ஜோ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 டிச.,12ல் நீதிபதிகள், 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்விஇயக்குனராக நியமித்த அரசாணை மற்றும் ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். எட்வின் ஜோ, ரேவதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரிடீன் மீனாட்சி சுந்தரத்தின் தகுதி, திறமை, பணி மூப்பு அடிப்படையில் மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.

ரேவதி,'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது நீதிமன்றஅவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,''உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பாக, புதிய பட்டியல் தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவெடுத்து தெரிவிக்க 2 நாட்கள் அவகாசம்தேவை,'' என்றார். மனுதாரர் வழக்கறிஞர், ''வழக்கால் எட்வின் ஜோ டீனாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் நீங்கள்தான் எனக்கூறி, ரேவதிக்கு பல்வேறு வகைகளில் மிரட்டல் வருகிறது,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் அரசுக்கு அவகாசம் அளித்து பிப்.,2 க்குஒத்திவைத்தனர்.

காலநீட்டிப்பிலேயே காலம் தள்ளும் வல்லுனர் குழு : போராடத்தயாராகும் ஊழியர்கள்

Added : பிப் 01, 2018 02:36

சிவகங்கை: ஓய்வூதியத் திட்ட வல்லுனர் குழுவின் இயங்கும் காலத்தை 7 முறை நீடித்தும் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என, அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் செயல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். ஊழியர்களின் சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் 22 ஆயிரம் கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை.
இதனால் ஓய்வூதிய பணப்பலன் பெறுவதில் சிக்கல் உள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டத்தையடுத்து ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலாநாயர் தலைமையில் 5 பேர் வல்லுனர் குழுவை 2016 பிப்., 26 ல் அரசு அமைத்தது. அரசு ஊழியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது.
இப்பிரச்னை சட்ட சபையில் எழுப்பப்பட்டதால், இக்குழு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இக்குழு அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது. அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் நவ., 14 மற்றும் 2017 மார்ச் 2 என, இரண்டு முறை தலா மூன்று மாதங்களுக்கு
நீட்டிக்கப்பட்டது. குழுத் தலைவராக இருந்த
சாந்தாஷீலா நாயர் ராஜினாமா செய்ததால்
வல்லுனர் குழு நடவடிக்கை முடங்கியது.

ஆக., 3 ல் புதிய தலைவராக ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை அரசு நியமித்தது. இக்குழுவின் அறிக்கையை பெற்று நவ., 30 க்குள் ஓய்வூதியத் திட்டம் குறித்து முடிவு அறிவிக்கப்படும் என, உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. அதன்பின் டிச., 14 மற்றும் ஜன., 4ல் இரண்டு முறை தலா ஒரு மாதத்திற்கு அக்குழு நீடிக்கப்பட்டது. அந்த நீட்டிப்பும் நேற்றுடன் முடிவடைந்தது. அக்குழு இதுவரை அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஓய்வூதிய மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழுவை ஏழு முறை நீடித்தும் பயன் இல்லை. எங்களை ஏமாற்றவே நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் அளித்த உறுதியை கூட காப்பாற்ற அரசு தயாராக இல்லை. இதனால் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி
வருகிறோம், என்றார்.
கும்பகோணம் மாசிமக விழா; மார்ச் 1ல் தீர்த்தவாரி

Added : பிப் 01, 2018 02:52

தஞ்சாவூர்: கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், மாசிமக விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும், மகாமக விழா சிறப்புடையது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டு மாசி மாதத்தில், மகம் நட்சத்திரம், பவுர்ணமியன்று, மாசிமக விழா நடைபெறுவது வழக்கம்.

அன்று மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகையம்மன் தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி, ஏராளமானோர் புனித நீராடுவர்.
இத்தகைய சிறப்பு பெற்ற மாசிமக விழாவை முன்னிட்டு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் முன்புறமுள்ள தேருக்கு, 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின் முகூர்த்தகாலுக்கு அபிஷேகங்கள் செய்து, தேரின் மேல் பந்தக்கால் நடப்பட்டது.
மாசிமக விழா, வரும் பிப்., 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, 20ம் தேதி கொடியேற்றமும், 23ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலாவும், 24ம் தேதி தன்னைத்தானே பூஜித்தல், ஓலைச்சப்பரம், ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், 27ம் தேதி ஐந்து தேரோட்டமும், மார்ச், 1ம் தேதி முக்கிய விழாவான, தீர்த்தவாரி மகாமககுளத்தில் நடக்கிறது.

நான்கு நாட்கள் நடக்கும்

குருஷேத்ரா விழா, நான்கு நாட்கள் நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, பிறமாநில மாணவர்கள், இந்தோனேஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மாணவர்கள் என, 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கான மாணவர் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள், தொழில்நுட்ப தகவல் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
தொழிற்கல்விக்கான உதவி ரூ.50 ஆயிரமாக உயர்வு

Added : பிப் 01, 2018 00:53

சென்னை: தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது.

இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 - 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம்.

இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்.
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம் : கிடப்பில் போன அரசு உத்தரவு

Added : பிப் 01, 2018 00:28

ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை, இடமாற்றம் செய்யும் அமைச்சரின் உத்தரவை, மின் வாரியம், ஆறு மாதங்களுக்கு கிடப்பில் போட்டுள்ளது, ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின் இணைப்பு, மின் தடை புகார் உள்ளிட்ட பணிகளுக்காக, மின் வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு வருவோரிடம், சில ஊழியர்கள், பொறியாளர்கள் லஞ்சம் கேட்பதாக, மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவுக்கு புகார்கள் சென்றன. விசாரணையில், வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், 'போர்மேன்' ஆகிய பதவிகளில் உள்ளோர், அதிகம் லஞ்சம் வாங்குவது தெரிய வந்தது.

பரிந்துரை : இதையடுத்து, இந்த பணியிடங்களில், ஒரே இடத்தில், மூன்று ஆண்டு களுக்கு மேல் பணிபுரிவோரை, இடமாற்றம் செய்ய, விஜிலென்ஸ் பிரிவு, 2017 செப்.,ல் மின் வாரியத்திற்கு பரிந்துரைத்தது. பின், அனைத்து பதவிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் இருப்போரை இடமாற்றம் செய்ய, வாரியம் முடிவு செய்தது. இந்த இடமாற்ற உத்தரவு, சில அரசியல்வாதிகள் வாயிலாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'இடம் மாற்ற உத்தரவு, வரும், பிப்ரவரி முதல், நடைமுறைக்கு வரும்' என, மின்துறை அமைச்சர், தங்கமணி, 2017 அக்டோபரில் அறிவித்தார்.
இதன்படி, இன்று முதல், இடமாற்ற உத்தரவை, நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அதற்கான பணிகள் ஏதும் துவக்கப்படவில்லை. இடமாற்ற உத்தரவை, ஆறு மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட, மின் வாரியம் முடிவு செய்துள்ளதால், ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முறைகேடான செயல் : இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: மின் உற்பத்தி, மின் வழித்தடம், மின் வினியோகம், நிதி என, அனைத்து பிரிவுகளிலும், தற்போது, மின் வாரியம், முன்னேற்ற பாதையில் செல்கிறது. ஆனால், சில பொறியாளர்கள், ஊழியர்கள் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடான செயல்களால், ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றால், தவறு செய்தால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயம் வர வேண்டும். அதற்கு, ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும். அதை செயல்படுத்தாமல், இதற்கான உத்தரவை, சிலரின் சுயநலத்திற்காக கிடப்பில் போட்டால், நிர்வாகத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை வராது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


 போராட்டத்தில், ஈடுபட்ட, பஸ் ஊழியர்கள், சம்பளம், 'கட்!'
சென்னை:ஊதிய உயர்வு கோரி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, பொது மக்களை பாதிப்படைய செய்ததால், பஸ் ஊழியர்கள் மீது, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்ட நாட் களுக்கான, சம்பளம், 'கட்' செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு, அதிகபட்சமாக, 7,000 ரூபாய் வரை, சம்பளத்தில், 'துண்டு' விழுந்துள்ளது; 'தொழிற்சங்கங்களை நம்பி மோசம் போய் விட்டோம்' என, ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.




அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின், 13வது ஊதிய ஒப்பந்தம், 2016, ஆகஸ்டில் முடிந்தது. போக்குவரத்து துறை அமைச்சர், தொழிற்சங்கத்தினருடன், 11 முறை பேச்சு நடத்தினார். ஜன., 4ல் நடத்தபேச்சில், 2.44 சதவீத ஊதிய உயர்வு தர, அரசு முன்வந்தது. இதை, 37 தொழிற்சங்கங்கள் ஏற்றன. தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்கவில்லை.

வேலை நிறுத்தம்

ஒப்பந்தத்தை ஏற்காத தொழிற்சங்க   நிர்வாகிகளின் அறிவுரையை ஏற்று, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

'போராட்டம் தொடரும்' என, அடுத்தடுத்த நாட்களில், தொழிற்சங்கத்தி னர் அறிவித்தனர். நீதிமன்றம் தலையிட்டு, ஊழியர்களை பணிக்கு திரும்ப உத்தரவிட்டது. 'கோரிக்கை நிறை வேறும் வரை, பணிக்கு திரும்ப மாட்டோம்' என, தொழிற்சங்க கூட்டமைப்பு, விடாப்பிடியாக இருந்தது.

பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில், பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், வியாபாரிகள், பொதுமக்கள் என, அனைவரும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தீர்வு காண, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை, மத்தியஸ் தராக நியமித்தது. ஜன., 12 முதல், தொழிலாளர் கள் பணிக்கு திரும்பினர்.

வாக்குறுதி

'போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது, நிர்வாகம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காது' என, ஊழியர்களுக்கு, தொழிற் சங்கத்தினர் வாக்குறுதி அளித்தனர். நேற்று, தொழிலாளர்களுக்கு, புதிய ஊதிய உயர்வுடன் சம்பளம் வழங்கப்பட்டது. அதில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பளம்
பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது, தொழிலா ளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:'ஊதியத்தை, 2.57 சதவீதம் உயர்த்த வேண்டும்; தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை, ரத்து செய்ய வேண்டும்; வேலைநிறுத்தத்தில் ஈடு பட்ட நாட்களை, விடுப்பு நாட்களாக கணக் கிட வேண்டும்; அவற்றை அடையும் வரை, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம்' என, தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

ஆனால், நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதுாறாகப் பேசி, அனைத்தையும் கெடுத்து விட்டனர். சம்பளம் பிடித்தம் மட்டுமின்றி, அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என, அதிகாரிகள் மிரட்டுகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகளின் பேச்சை நம்பியதால், எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'போராடியதால் பலன்'

இது குறித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது: தொழிற் சங்கத்தினர் நிர்வாகத்திலும், நீதி மன்றத்திலும் போராடியதால் தான், ஓய்வு பெற்றோருக்கான பலன்கள் கிடைத்துள்ளன. தொழிலாளர் களுக்கு, ஓரளவாவது ஊதிய உயர்வு கிடைத்து உள்ளது.தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இன்று, சென்னையில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் கலந்து பேசி, முடிவெடுக் கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 14.06.2026