Thursday, February 1, 2018

மருத்துவக் கல்வி இயக்குனர் நியமன வழக்கு: டீனுக்கு மிரட்டல் : நீதிமன்றத்தில் தகவல்

Added : பிப் 01, 2018 02:32

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்த, டீனுக்கு மிரட்டல் வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி   இயக்குனராக 2017 ஏப்.,25ல் தமிழக அரசு நியமித்தது.இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி,உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

 தனிநீதிபதி, 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராகநியமித்த அரசாணையைரத்து செய்கிறேன். மனுதாரரை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்,' என்றார். இதை எதிர்த்து, தமிழக அரசுமற்றும் எட்வின் ஜோ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 டிச.,12ல் நீதிபதிகள், 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்விஇயக்குனராக நியமித்த அரசாணை மற்றும் ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். எட்வின் ஜோ, ரேவதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரிடீன் மீனாட்சி சுந்தரத்தின் தகுதி, திறமை, பணி மூப்பு அடிப்படையில் மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.

ரேவதி,'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது நீதிமன்றஅவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,''உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பாக, புதிய பட்டியல் தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவெடுத்து தெரிவிக்க 2 நாட்கள் அவகாசம்தேவை,'' என்றார். மனுதாரர் வழக்கறிஞர், ''வழக்கால் எட்வின் ஜோ டீனாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் நீங்கள்தான் எனக்கூறி, ரேவதிக்கு பல்வேறு வகைகளில் மிரட்டல் வருகிறது,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் அரசுக்கு அவகாசம் அளித்து பிப்.,2 க்குஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...