Thursday, February 1, 2018



ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தகமிஷனுக்கு ரூ.3.02 கோடி செலவு

சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷனுக்கு, 3.02 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.




ஜெ., மறைவால் காலியான, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, எம்.எல்.ஏ., பதவி காலியானது. அதை நிரப்ப, டிச. 21ல், தேர்தல் நடந்தது. இதில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பொதுவாக இடைத்தேர்தலுக்கு, ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு,

மூன்று பொதுப் பார்வையாளர்கள், மூன்று செலவினப் பார்வையாளர்கள், இரண்டு போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். பாதுகாப்புப் பணிக்கு, 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர்.தொகுதியில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

பறக்கும் படை, கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டது. இதன் காரணமாக, தேர்தல் செலவு அதிகரித்தது. பொதுவாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு, 70 லட்சம் ரூபாய் செலவாகும். ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, 3.02 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 27 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உரியவர்கள், கணக்கு காட்டியதையடுத்து, அவர்களிடம், பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.தேர்தல் கமிஷன் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. இதுவரை இல்லாமல், முதன் முறையாக,

ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்த நிகழ்வும் அரங்கேறியது.

பணம் பட்டுவாடா செய்தவர்களை பிடிக்க முடியாத நிலையில், அதிகப்படியான துணை ராணுவம், கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமான நடைமுறைப்படி தேர்தலை நடத்தி இருந்தால்,அரசுக்கு, இரண்டு கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கும்.

புகார் அளிக்க வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 59 வேட்பாளர் கள் போட்டியிட்டனர். அவர்கள், தங்களின் செலவு கணக்கை, தேர்தல் செலவினப் பார்வையாளர்களிடம் சமர்ப்பித் தனர். அந்த விபரம், செலவினப் பார்வையாளர்கள் பராமரித்த, நிழல் கணக்கு விபரம், தேர்தல் கமிஷன் இணையதளமான, tn.electiond.gov.inல், வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், செலவு கணக்கை காண்பிக்காமல் இருந்தால், பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் நிரூபண மானால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் தகுதி யிழப்பு செய்யப்படுவதுடன், மூன்று ஆண்டு கள், தேர்தலில் போட்டியிட,தடை விதிக்கபடும்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...