Wednesday, February 28, 2018

பிஎஃப் கணக்கை ஆதாருடன் இணைக்கும் வசதி அறிமுகம்

By DIN | Published on : 28th February 2018 01:17 AM

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளை உமங் என்ற செயலி மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. அந்த அமைப்பின் இணையதளத்தில் பிஎஃப் கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் வசதி ஏற்கெனவே இருக்கிறது. அதனுடன் உமங் செயலி மூலம் ஆதாரை இணைக்கும் புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளவும், பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளவும் ஏற்கெனவே வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் கையொப்பம் அளிக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி அவர்கள் இந்த வசதிகளைப் பெறலாம்.
உமங் என்ற செயலியானது செல்லிடப்பேசி மூலம் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்காக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...