Thursday, February 1, 2018

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம் : கிடப்பில் போன அரசு உத்தரவு

Added : பிப் 01, 2018 00:28

ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை, இடமாற்றம் செய்யும் அமைச்சரின் உத்தரவை, மின் வாரியம், ஆறு மாதங்களுக்கு கிடப்பில் போட்டுள்ளது, ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின் இணைப்பு, மின் தடை புகார் உள்ளிட்ட பணிகளுக்காக, மின் வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு வருவோரிடம், சில ஊழியர்கள், பொறியாளர்கள் லஞ்சம் கேட்பதாக, மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவுக்கு புகார்கள் சென்றன. விசாரணையில், வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், 'போர்மேன்' ஆகிய பதவிகளில் உள்ளோர், அதிகம் லஞ்சம் வாங்குவது தெரிய வந்தது.

பரிந்துரை : இதையடுத்து, இந்த பணியிடங்களில், ஒரே இடத்தில், மூன்று ஆண்டு களுக்கு மேல் பணிபுரிவோரை, இடமாற்றம் செய்ய, விஜிலென்ஸ் பிரிவு, 2017 செப்.,ல் மின் வாரியத்திற்கு பரிந்துரைத்தது. பின், அனைத்து பதவிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் இருப்போரை இடமாற்றம் செய்ய, வாரியம் முடிவு செய்தது. இந்த இடமாற்ற உத்தரவு, சில அரசியல்வாதிகள் வாயிலாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'இடம் மாற்ற உத்தரவு, வரும், பிப்ரவரி முதல், நடைமுறைக்கு வரும்' என, மின்துறை அமைச்சர், தங்கமணி, 2017 அக்டோபரில் அறிவித்தார்.
இதன்படி, இன்று முதல், இடமாற்ற உத்தரவை, நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அதற்கான பணிகள் ஏதும் துவக்கப்படவில்லை. இடமாற்ற உத்தரவை, ஆறு மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட, மின் வாரியம் முடிவு செய்துள்ளதால், ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முறைகேடான செயல் : இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: மின் உற்பத்தி, மின் வழித்தடம், மின் வினியோகம், நிதி என, அனைத்து பிரிவுகளிலும், தற்போது, மின் வாரியம், முன்னேற்ற பாதையில் செல்கிறது. ஆனால், சில பொறியாளர்கள், ஊழியர்கள் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடான செயல்களால், ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றால், தவறு செய்தால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயம் வர வேண்டும். அதற்கு, ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும். அதை செயல்படுத்தாமல், இதற்கான உத்தரவை, சிலரின் சுயநலத்திற்காக கிடப்பில் போட்டால், நிர்வாகத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை வராது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...