Saturday, June 30, 2018

சவுதாலாவுக்கு, 'பரோல்' டில்லி ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 29, 2018 20:21


புதுடில்லி,: ஹரியானா மாநிலத்தில், ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, அஜய் சிங் சவுதாலா, தேர்வெழுதுவற்காக, அவருக்கு , 'பரோல்' வழங்கி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 200-0ம் ஆண்டு நடந்த, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதலா உட்பட, 53 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2016ல், தந்தை, மகன் இருவருக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது; இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.அஜய் சிங் சவுதாலா, சிறையில் இருந்தபடியே, ஹிசார் பல்கலையின் தொலைதுார கல்வித் திட்டத்தில், முதுநிலை பட்டய படிப்பு படித்து வந்தார். ஹரியானா மாநிலம், சிர்சா மையத்தில் தேர்வு எழுத, பரோலில் செல்ல அனுமதி கேட்டு, அஜய் சிங் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நேற்று, இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அஜய் சிங்குக்கு உடனடியாக பரோல் வழங்கியதுடன், தேர்வு முடிந்ததும், ஜூலை, 1ல் சரணடையும்படி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையான ஆவணங்கள்

Added : ஜூன் 29, 2018 22:01

சென்னை, மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அதற்கு, எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணம் குறித்த விபரங்களை, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மொத்தம், 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தர வரிசையில், 44 ஆயிரத்து, 332 பேர் இடம் பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்போர், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம்:* நீட் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்* கடைசியாக படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் நிறுவனத்தின், 'போனோபைடு' சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்* இருப்பிட; ஜாதி சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பெற்றோருக்கும், மாணவருக்குமான உறவை குறிப்பிடும் ஆவணம் மற்றும் தேவைப்படுவோருக்கு, முதல் பட்டதாரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்* தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலங்களில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்* மாணவரின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான, ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் கட்டாயம் எடுத்து வர வேண்டும். அசல் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு, திரும்ப கொடுக்கப்படும்; நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி இல்லை.போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்க, விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பெற்றோருக்கும், மாணவருக்குமான உறவை குறிப்பிட, தங்களிடம் உள்ள ரேஷன் கார்டு போன்ற, ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
தெரியாத நபருக்கு, 'லிப்ட்' கொடுப்பது சட்டப்படி குற்றம்!

Added : ஜூன் 29, 2018 20:17

தெரியாத நபருக்கு, 'லிப்ட்' கொடுத்த, கார் உரிமையாளருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், மும்பையில் நடந்துள்ளது.மனிதாபிமான அடிப்படையிலோ, அறியாமையாலோ செய்யும் காரியங்கள், சட்டத்தின் முன், தண்டனைக்கு உரியதாக மாறி விடுவதுண்டு; அப்படிப்பட்ட சம்பவத்தை விளக்குவது தான், இந்த செய்தி.சமீபத்தில், பரபரப்பான காலை நேரத்தில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், மழை வெளுத்து வாங்கியது. அவசரமாக, அலுவலகம் செல்ல விரும்பியோர், வழியில் சென்ற வாகனங்களை கை காட்டி, ஏறிச் சென்றனர்.நிதின் நாயர் என்பவர், தன் காரை ஓட்டிச் சென்ற போது, ஏர்ரோலி சர்க்கிள் பகுதியில், 60 வயது முதியவரும், ஐ.டி., நிறுவன ஊழியர் இருவரும், காந்தி நகர் வரை, 'லிப்ட்' கேட்டனர். காந்தி நகரை கடந்து, நிதின் செல்ல வேண்டி இருந்ததால், மூவருக்கும் லிப்ட் கொடுத்தார்.சிறிது தொலைவில், காரை மடக்கினார், போலீஸ் அதிகாரி. காரில் இருப்போரின் விபரம் கேட்டார். நாயர், லிப்ட் கொடுத்த விஷயத்தை சொன்னார். போலீஸ் அதிகாரி, நிதின் நாயரின் லைசென்சை பறித்து, அபராத ரசீதை நீட்டினார். அபராதத்தை கட்டி விட்டு, லைசென்சை வாங்கிச் செல்லும்படி கூறினார்.அபராத ரசீது, லஞ்சத்துக்கான அச்சாரமாக இருக்கலாம் என, எண்ணினார் நிதின். மறுநாள், போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவரை, நீதிமன்றத்தில் அபராதம் கட்டி, லைசென்சை பெற்றுக்கொள்ளும்படி, போலீசார் கூறினர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டது.'சொந்த வாகனத்தில், தெரியாத நபரை ஏற்றுவது, மோட்டார் வாகன சட்டம், 66/192ன் படி, தண்டனைக்குரிய குற்றம்' என்பதை, போலீசார் விளக்கினர். நீதிபதி முன், குற்றத்தை ஒப்புக்கொண்டு, நிதின் நாயர், அபராதத்தை கட்டினார்.லைசென்ஸ் வாங்க, போலீஸ் ஸ்டேஷன் சென்ற, நிதின் நாயரிடம், 'இனி யாருக்காவது லிப்ட் கொடுத்தால், உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்' என, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிதின், தன், 'பேஸ்புக்' பக்கத்தில், 'இப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தால், சாலையில் யாராவது உயிருக்கு போராடினால் கூட, யாரும் உதவ மாட்டார்கள்' என, குமுறி உள்ளார்.இது உண்மையா என்பது குறித்து, சென்னை வழக்கறிஞர், வி.எஸ்.சுரேஷ் கூறியதாவது:அறிமுகம் இல்லாத நபர்கள், வாகனங்களை மறித்து, ஏறிச் சென்று, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில், உடைமைகளையும், உயிரையும் பறித்து செல்கின்றனர். சிலர், வரியில் இருந்து விலக்கு பெற, சொந்த வாகனமாக பதிவு செய்து, அதை வணிக நோக்கில், பயணியர் வாகனமாக பயன்படுத்துகின்றனர்.இதனால், அரசுக்கு, வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பயணியருக்கு பாதுகாப்பும் கிடைப்ப தில்லை. இவற்றைத் தவிர்க்கவே, இந்த சட்டம் உள்ளது. ஒருவருக்கு லிப்ட் கொடுக்கும் முன், பலமுறை யோசிப்பது தான், சட்டம் கடந்து, பாதுகாப்புக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
'சிங்கம், புலியை பார்த்தவன் நான் நண்டுக்கு பயப்பட மாட்டேன்!'

Added : ஜூன் 29, 2018 21:09






சென்னை:''சிங்கம், புலியை பார்த்துள்ள நான், நண்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்,'' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - கீதா ஜீவன்: துாத்துக்குடி, மீன்பிடித் துறைமுகத்தில், மீனவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டப்படுமா?அமைச்சர் ஜெயகுமார்: துாத்துக்குடி துறைமுகத்தில், துறைமுக சபை நிதியிலிருந்து, 60 லட்சம் ரூபாய் பெறப்பட்டு, மீனவர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இப்பணி, 2019 ஜூலைக்குள் முடிக்கப்படும்.

கீதா ஜீவன்: அங்கு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது, பல்வேறு ஊர்களிலிருந்து, மீனவர்கள் துாத்துக்குடி வருகின்றனர். அவர்கள் தங்குமிடத்தில், பொருட்கள் திருடு போகின்றன. அதை தடுத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.அமைச்சர் ஜெயகுமார்: அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். துாத்துக்குடியில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

.தி.மு.க., - சீதாபதி: திண்டிவனம் தொகுதி, மரக்காணத்தில், மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும். அதேபோல், கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, துாண்டில் வளைவு அமைக்க வேண்டும்.அமைச்சர் ஜெயகுமார்: மரக்காணம் பகுதியில் துறைமுகம் அமைக்க, அறிக்கை கோரப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்ததும், பணிகள் துவக்கப்படும். அதேபோல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, துாண்டில் வளைவு அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அ.தி.மு.க., - நடராஜ்: சென்னை, பட்டினப்பாக்கம் கடல் பகுதியிலும், சீனிவாசபுரம் பகுதியிலும், கடல் அரிப்பு ஏற்பட்டு, 50 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாற்று இடம் வழங்க வேண்டும்.அமைச்சர் ஜெயகுமார்: பட்டினப்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இடம் ஒதுக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி, இவ்வாறு பாதிக்கப்படும் மீனவர்களுக்கு வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பட்டினப்பாக்கத்தில், கடல் அரிப்பு ஏற்பட்டதும், நேரில் சென்று மக்களை சந்தித்து பேசி, உரிய நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில், பெண் ஒருவர், மீனவர்களுக்காக, நண்டு விடும் போராட்டம் நடத்துவதாக கூறி, என் வீட்டிற்கு வந்தார். பத்திரிகையாளர்களும் உடனே குவிந்து விட்டனர்.அந்தப் பெண், அண்ணா நகரில் வசிக்கிறார். அவருக்கும், பட்டினப்பாக்கத்திற்கும், எந்த தொடர்பும் இல்லை. பட்டினப்பாக்கத்தில் இருந்து, ஒருவரும் வரவில்லை. விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவது, தற்போது அதிகரித்துள்ளது.

 நண்டு, ஆமை, சிங்கம், புலி என, அனைத்தையும் பார்த்துவிட்டு தான் வந்துள்ளேன். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.இவ்வாறு அமைச்சர் கூறியதும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சிங்கம், புலியை, எங்கு பார்த்தீர்கள்' என, குரல் எழுப்பினர்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், ''2001ல், வனத் துறை அமைச்சராக இருந்தபோது பார்த்துஉள்ளார்,'' என்றார்.
வடபழனியில் திருமணம் : ஆன்லைனில் முன்பதிவு

Added : ஜூன் 30, 2018 06:11

வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடத்துவதற்கு, 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுக்கு, 2,000 திருமணங்கள் நடக்கின்றன. கோவிலுக்குள் நடக்கும் அனைத்து திருமணங்களும், இடைத்தரகர்கள் ஏற்பாட்டில் தான் நடக்க வேண்டும் என்பது, இங்கு எழுதப்படாத விதியாக இருந்தது. இடைத்தரகர்கள் குறித்து, கோவில் நிர்வாகம் பல முறை, காவல் துறையிடம் புகார் அளித்துள்ளது. இருப்பினும், அரசியல் தலையீடு காரணமாக, கோவில் நிர்வாகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆன்லைன் மூலம் திருமணத்திற்கு முன்பதிவு செய்யும் முறையை, அறநிலையத் துறை அறிவித்துள்ளது.இனி, திருமணங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தான் நடைபெறும் என்றும், இதற்காக வடபழனி கோவிலின், vm.templepooja.in என்ற இணையதளத்தில், 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -
மாநில செய்திகள்

மருத்துவ கல்வி சேர்க்கை இணையதளம் 2 நாட்களாக முடக்கம் மாணவர்கள்-பெற்றோர் அவதி



கலந்தாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை இணையதளம் 2 நாட்களாக முடங்கி இருக்கிறது. இதனால் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள்-பெற்றோர் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

ஜூன் 30, 2018, 04:30 AM
சென்னை,

மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து இருப்பவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்டவர்கள் பார்ப்பதற்கு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தை மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருந்தது.

ஆனால் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை அந்த இணையதளம் சரிவர இயங்கவில்லை. சென்னையில் இருப்பவர்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று தரவரிசை பட்டியல் தொடர்பான தகவல்களை பெற்று வருகின்றனர். ஆனால் வெளியூரில் இருப்பவர்கள் எந்த தகவலையும் பெற முடியாமல் திண்டாடி உள்ளனர்.

கலந்தாய்வு தொடர்பான தகவல்களும் இதே இணையதளத்தில் தான் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனால் அந்த இணையதளம் 2 நாட்களாக இயங்காததால், கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இதுகுறித்து சென்னை அண்ணாநகரை சேர்ந்த நடராஜ் கூறியதாவது.

என்னுடைய மகள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, தரவரிசை பட்டியலிலும் இடம் பிடித்து இருக்கிறார். கலந்தாய்வுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அதுதொடர்பான தகவல் அந்த இணையதளத்தில் தான் பதிவிடுவோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் இதுவரை அந்த இணையதளம் முடங்கி இருக்கிறது.

மாநில பாடத்திட்டத்தில் படித்து, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று வருவதே பெரிய விஷயம். அப்படி வந்த எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்துவது போல இணையதளம் முடங்கி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Pension to freedom fighters an honour, not charity: HC

MADURAI, JUNE 30, 2018 00:00 IST




Do not reject claims on technicalities, government told


“Granting pension to freedom fighters is not a charity shown by government but a great honour bestowed on them for their selfless service rendered to the nation,” observed the Madurai Bench of the Madras High Court on Friday.

A Division Bench of Justices K.Ravichandrabaabu and T.Krishnavalli made the observation while dismissing an appeal preferred by the Centre against the order of a single bench which had directed the grant of pension to legal heirs of a freedom fighter.

The court observed that it is the duty of respective governments to identify great freedom fighters, particularly those who live in poverty and grant them pension instead of waiting for them to apply for it. The government should not look into the hyper-technical conditions and reject such claims. It is better to extend monetary support even if there is one evidence, enough to sufficiently establish the claims.

The court directed the Collector of Madurai to forward the application for pension of the freedom fighter to the State Government within four weeks. The State Government shall forward the application to the Union of India within six weeks, to consider and grant the pension.

A single bench had directed the Centre to grant pension under the Swatantrata Sainik Samman Pension Scheme to the legal heirs of freedom fighter P.S.Periaiah, the original petitioner who died during the pendency of the suit. P.S.Periaiah had filed the suit after his plea for pension was rejected by the Collector.

The Centre said that the petitioner had not satisfied the mandatory requirements. The petitioner had submitted two co-prisioner certificates, one by a co-prisioner who had spent only five months with him in prison. However, under the existing rules a co-prisioner can certify only if he had spent at least two years along with him in prison.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...