Wednesday, July 18, 2018


சினிமாவில் ரஜினி வருவார்... நிஜத்தில் யார் வருவார்?

எம்.புண்ணியமூர்த்தி

தி.விஜய்


தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் குடிசைப்பகுதி நிலத்தைக் கைப்பற்றுவதற்காக, அவர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளும் அதன் பின்னால் உள்ள அரசியலும்தான், ‘காலா’ திரைப்படத்தின் கதை. சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் இப்படிப் பல இடங்களில் நடக்கிறது.

கோவையிலிருந்து தடாகம் செல்லும் வழியில் இருக்கிறது முத்தண்ணன்குளம். அந்தக் குளத்தையொட்டி, 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தப் பகுதிகளில், சில இஸ்லாமியக் குடும்பங்களும் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களில் பலர், இப்போது இங்கிருந்து வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாலை மட்டத்தைவிட உயரமாகக் கட்டப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால்தான் அனைத்துக்கும் காரணம்.



இஸ்மாயில் என்பவர், “நான் இங்கே குடியேறி 50 வருஷத்துக்கு மேல் ஆகுது. இந்த வீட்ல ஒன்பது பேர் குடியிருக்கோம். போன வருஷம் மழைநீர் வடிகால் அமைக்கிறோம்னு சொல்லி, வீட்டு வாசல்ல கான்க்ரீட் தடுப்புகள் போட்டாங்க. நல்லது பண்றாங்கனு நெனச்சோம். அது, எங்களை விரட்டியடிக்க வைக்கப்பட்ட வேட்டுனு பிறகுதான் தெரிஞ்சது. அந்தக் கால்வாயை ரோடு மட்டத்தைவிட மூணு அடி உயர்த்திக் கட்டிட்டாங்க. இதனால, ரொம்ப அவஸ்தைப்படுறோம். வெளில ஓடுற சாக்கடைத் தண்ணி வீட்டுக்குள்ள வருது. பல வருஷமா இந்த இடத்துக்குப் பட்டா கேட்டு போராடுறோம். எங்களை எப்படியாவது இங்கிருந்து துரத்திடணும்னு பாக்குறாங்க. இதைவிட்டா எங்களுக்கு வேற போக்கிடம் இல்லை” என்றார் இயலாமையுடன்.

மகாலெட்சுமி என்பவர், “தண்ணி பிடிச்சு வீட்டுக்குள்ள தூக்கிட்டுப் போறதுக்குள்ள தாவு தீந்துருது. எங்க நன்மைக்காக மழைநீர் வடிகால் கட்டுறோம்னு சொல்லிட்டு, எங்க வீடுகளைப் புதைச்சுட்டாங்க” என்றார் வேதனையுடன். 

முன்னாள் மாமன்ற உறுப்பினர் வேல்முருகன், “இங்கிருந்து மக்களை வெளியேத்தணும்னு அதிகார வர்க்கம் நினைக்குது. அதற்காகவே, மழைநீர் வடிகாலை இப்படி உயர்த்திக் கட்டியிருக்காங்க. பெருமழை காலத்தில் மொத்தக் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கும். இங்கே என்னதான் அழுக்குல உழன்றாலும், நமக்குனு மண்ணு இருக்குனு ஒரு நம்பிக்கை இருக்கு. குடிசைமாற்று வாரியம் தர்ற வீடுகளோ, பூர்வகுடிகளை அகதிகளைப்போல அடைத்துவைப்பதற்கு கட்டப்படும் கான்க்ரீட் கூண்டுகள். இவர்களை இங்கிருந்து வெளியேற்றி நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்படியான கூண்டுக்குள் அடைப்பதற்குத்தான் அரசு இப்படியான இடையூறுகளைச் செய்யுது. கோவை நகரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்காக, உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையிலும், அம்மன் குளத்திலும் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டினாங்க. திறப்புவிழா காணும் முன்பே அந்த வீடுகள் தரையிறங்கிருச்சு” என்று குமுறினார்.



இந்த விவகாரம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், “இந்தப் பிரச்னை சமீபத்தில்தான் என் கவனத்துக்கு வந்தது. நேரில் போய் விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

குடிசைவாழ் மக்களைக் காப்பாற்ற சினிமாவில் ரஜினி வருவார். நிஜத்தில் யார் வருவார்?


- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்
இரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்!

எஸ்.மகேஷ்




சென்னை சைதாப்பேட்டையில் இளம்பெண்ணிடமிருந்து செல்போனை, பைக்கில் வந்த இரண்டு பேர் பறித்தனர். அவர்களைத் தைரியமாகப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளார் சென்னை வாலிபர்.

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி. அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு 9 மணி அளவில் வேலை முடிந்து அவர் வீடு திரும்பினார். சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ப்ரீத்தி, நடந்து வந்தபோது அவரின் செல்போனை பைக்கில் வந்த இரண்டுபேர் பறித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ப்ரீத்தி, அவர்களுடன் போராடினார். இதில் கீழே விழுந்த ப்ரீத்தி, படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தை அவ்வழியாகச் சென்ற சின்னமலைப் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் பார்த்தார். பைக்கில் வந்த கொள்ளையர்களுடன் விக்னேஷ் போராடினார்.

ஆனால் ப்ரீத்தி, விக்னேஷ் ஆகியோரின் பிடியிலிருந்து தப்பிய கொள்ளைக் கும்பல் பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர். அவர்களை விக்னேஷ், தன்னுடைய பைக்கில் விரட்டினார். தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கொள்ளையர்கள் பைக்கின் வேகத்தை குறைத்தனர். அப்போது அவர்களை விரட்டிச்சென்ற விக்னேஷ், தன்னுடைய பைக்கைக் கொண்டு மோதினார். இதில் கொள்ளையர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விக்னேஷ் மடக்கிப்பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் செல்போனை பறித்தது ஆலந்தூரைச் சேர்ந்த நவீன், நிர்மல் என்று தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

போலீஸார் கூறுகையில் ``சம்பவத்தன்று ப்ரீத்தி, மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள தோழியைச் சந்திக்கச் சென்றுள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்று கேட்பதற்காக போனில் பேசியுள்ளார். ப்ரீத்தியைப் பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், அவரிடமிருந்த செல்போனை பறித்துவிட்டுச் சென்றுள்ளனர். அப்போதுதான் விக்னேஷ் அதைப்பார்த்து கொள்ளையர்களிடமிருந்து செல்போனை மீட்க போராடியுள்ளார். விக்னேஷ், டிப்ளமோ படித்துள்ளார். கார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், அந்த வேலையை விட்டுவிட்டு புதிய வேலையைத் தேடி வருகிறார். விக்னேஷ் போல எல்லோரும் செயல்பட்டால் திருட்டு, வழிப்பறி சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்" என்றனர்.



இதுகுறித்து விக்னேஷ் கூறுகையில், ``நேற்றிரவு வீட்டுக்கு பைக்கில் சென்றேன். அப்போது, ஒரு இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த இரண்டு பேர் செல்போனைப் பறித்தனர். அவர்களுடன் அந்தப் பெண் போராடிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும் நானும் அந்தப் பெண்ணுக்கு உதவினேன். அதற்குள் பைக்கில் வந்த கொள்ளையர்கள் இளம்பெண்ணைத் தள்ளிவிட்டு பைக்கில் சென்றுவிட்டனர். நான், அவர்களை விரட்டிச் சென்று பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தேன். நான் பிடிக்கும்போது எனக்கு மிரட்டல் விடுத்தனர். அதற்குள் பொதுமக்கள் கூடிவிட்டனர். இன்று காலை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து வாட்ச் பரிசாகக் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் என்னை அழைத்துப் பாராட்டினார். நான் உதவி செய்த இளம்பெண் நன்றி என்று கூறியபோதுதான் உதவிக்கு கிடைத்த மரியாதையைப் புரிந்துகொண்டேன்" என்றார்.

சுமார் 4 கி.மீட்டர் தூரம் பைக்கில் விரட்டிச் சென்று செல்போன் கொள்ளையர்களைப் பிடித்த விக்னேஷை போலீஸார் பாராட்டினர். இந்த தகவல் சைதாப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனுக்கு தெரிந்ததும் விக்னேஷை நேரில் அழைத்து வாழ்த்தினார். பிறகு 20,000 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.

ஏற்கெனவே, சென்னை அண்ணாநகரில் சூர்யா என்ற சிறுவன், தைரியமாக கொள்ளையனைப் பிடித்தான். 18 வயது பூர்த்தியானதும் அவனுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
``பார்க்க வர்றவங்க கைச்செலவுக்குப் பணம் தரமாட்டாங்களான்னு தவிக்கிறேன்!’’ கோமாவில் கணவர், கலங்கும் மனைவி

நவீன் இளங்கோவன்

ரமேஷ் கந்தசாமி

அவரே உலகமா இருந்தேன். அவர் படுத்த படுக்கையாப் போனதுக்கு அப்புறம் குடும்பமே நொடிஞ்சுப் போச்சு.



விபத்தில் அடிபட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக கணவர் கோமாவில் இருக்க, எப்படியாவது அவரைக் காப்பாற்றிவிடும் நம்பிக்கையில் தன் இரண்டு குழந்தைகளுடன் போராடிவருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த பெண்மணி.

ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணியம். தனியார் துணி நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்தவர். 2017 ஏப்ரல் மாதத்தின் ஒருநாள், இளைய மகன் கவினேஷை அழைத்துக்கொண்டு, ஈரோடு அருகேயுள்ள சோலார் பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களின் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியம், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக, கவினேஷுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.






இதோ... அந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. அன்று சுயநினைவு இழந்து கோமாவுக்குச் சென்ற பாலசுப்பிரமணியம், தற்போது வரை நினைவு திரும்பாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். கணவரை எப்படியாவது காப்பாற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று சிகிச்சை அளித்து வந்திருக்கிறார் மனைவி உமா மகேஸ்வரி. பிள்ளைகளின் கல்விச் செலவும் கழுத்தை நெறிக்க, என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தவர், ஆம்புலன்ஸ் மூலம் கோமாவில் இருக்கும் கணவரை அழைத்துவந்து, ஈரோடு கலெக்டரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

கணவரின் உடல்நிலை, மகன்களின் பள்ளிப் படிப்பைத் தொடர இயலாத நிலை குறித்து மனுவில் கண்ணீரோடு தெரிவித்துள்ளார். இதைப் படித்ததும், குழந்தைகளின் படிப்பு தொடர உதவி செய்வதாகவும், கோமாவில் இருக்கும் பாலசுப்பிரமணியத்தை ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிறப்பான சிகிச்சை அளிக்கவும் கலெக்டர் பிரபாகர் உறுதி அளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை மருத்துவச் செலவுக்காகவும் கொடுத்தார்.



தற்போது, ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சேர்க்கப்பட்டுள்ளார். அழுது அழுது கண்ணீர் தீர்ந்த கண்களுடன் கணவர் அருகே அமர்ந்திருந்த உமா மகேஸ்வரி, ``என் வீட்டுக்காரர் பைக் மேலே கார் மோதிடுச்சுன்னு போன் வந்ததும் பதறியடிச்சு ஓடினேன். அவர் தலையில் பலமா அடிபட்டு, மூக்குல ரத்தம் வந்து கோமாவுக்குப் போயிட்டாரு. எப்படியாவது அவரைக் காப்பாத்திடணும்னு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்தேன். வீடு, நகைகளை அடகு வெச்சு ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டினேன். கோமாவுக்குப் போய் ஒருவருஷம் ஆயிடுச்சு. இன்னும் நினைவு திரும்பலை. `எப்போ நினைவு வரும்னு சொல்ல முடியாது'னு டாக்டர் சொல்லிட்டாங்க.

அவரே உலகமா இருந்தேன். அவர் படுத்த படுக்கையாப் போனதுக்கு அப்புறம் குடும்பமே நொடிஞ்சுப் போச்சு. அவர் நல்லா இருந்தவரைக்கும் என்னை ஒரு சாமான் வாங்கக்கூட கடைக்கு அனுப்பினதில்லை. இப்போ, சாப்பாட்டுக்கே கஷ்டம். அக்கம்பக்கத்துல வீட்டு வேலைக்குப் போய்ட்டிருக்கேன். அதுல கிடைக்குற வருமானம் வீட்டுச் செலவுக்கே பத்தலை. இதுல மருந்துச் செலவு, பசங்க படிப்புன்னு கஷ்டமா இருக்கு. மாமியார்கிட்ட போய் செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுங்கன்னு கேட்டேன். `அவன் உனக்குத்தானே சம்பாதிச்சுப் போட்டான். நீயே பாத்துக்கோ, என்னால முடியாது'னு சொல்லிட்டாங்க.

இன்னைக்கு ஒத்த ஆளா வீட்டுக்காரரையும் ரெண்டு புள்ளைகளையும் கவனிச்சுட்டு வர்றேன். அழுது அழுது ஓஞ்சி போயாச்சு. யாராவது என் வீட்டுக்காரரைப் பார்க்க வர மாட்டாங்களா, போறப்ப ஏதாவது கை செலவுக்குப் பணம் கொடுக்க மாட்டாங்களான்னு எதிர்பாக்குற அளவுக்குச் சூழ்நிலை இருக்கு. கோமாவில் இருக்கும் என் வீட்டுக்காரருக்கு நிச்சயமாக நினைவு வந்துடும். எங்களோடு பழையபடி பேசுவார்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. பேசறது, சாப்பிடறது, குளிக்கிறது, பாத்ரூம் போறதுன்னு அவரோட நிலைமை முன்னேறிட்டாலே போதும், நான் வேலைக்குப் போய் குடும்பத்தை கரை சேர்த்துடுவேன்” என்றபடி கண்களைத் துடைத்துக்கொண்டார்.

உமா மகேஸ்வரிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. `நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்’ என்றோம். நம்பிக்கைதானே ஏழை, பணக்காரர் எல்லோருக்குமான ஒரே சக்தி!
Dismiss corrupt govt. servants’

CHENNAI, JULY 18, 2018 00:00 IST

Holding that all government employees found guilty of accepting illegal gratification should be either removed or dismissed from service without any scope for a lesser punishment, the Madras High Court has made a suggestion to the State government to bring in appropriate amendments to the disciplinary rules applicable to government employees.

Justice V. Parthiban directed the High Court Registry to forward his judgement to the Chief Secretary for necessary action. He made the suggestion while dismissing a writ petition filed by a dismissed Sub-Inspector of Police to reduce the punishment imposed on him to compulsory retirement and consequently settle his retirement benefits.
HC orders Rs. 2 crore compensation to 8 students

CHENNAI, JULY 18, 2018 00:00 IST

They were admitted by the dental college in 2016-17 without clearing NEET

The Madras High Court on Tuesday directed Saveetha Dental College and Hospital at Rajankuppam near here to pay a compensation of Rs. 2 crore to eight students who were admitted in Bachelor of Dental Surgery (BDS) course under the Non-resident Indian quota during the academic year 2016-17.

Though none of them had cleared the mandatory National Eligibility-cum-Entrance Test (NEET) conducted for medical admissions.

Justice S. Vaidyanathan passed the order on a batch of individual writ petitions filed by all eight students who were discharged from the course after payment of the second year fee.

He directed the college to also refund the fee collected for the last two years and expressed concern over the practice of educational institutions attempting to encash “medical illiteracy” under the guise of providing medical education.

The judge agreed with the counsel for Dental Council of India (DCI) S. Haja Mohideen Gisthi that no medical institution could be permitted to either admit or continue to educate students who had been admitted without clearing NEET.

The counsel had contended that the eight students before the court could not be allowed either to continue in Saveetha dental college or migrate to some other college affiliated to Tamil Nadu Dr. MGR Medical University as requested by them.

In a counter affidavit filed on behalf of the college, its Registrar V. Thiagarajan had stated that the students under NRI quota were only given provisional admission subject to approval by the DCI.

“The fourth (Saveetha University) and fifth respondent (dental college) had worked tirelessly to protect the future of these students. They did not either fool or cheat the petitioners,” the counter read.
TTD may revoke ban on darshan from Aug 11-16

TIMES NEWS NETWORK

Tirumala:18.07.2018

Faced with flak from various sections, especially from social media and opposition parties, on the move to close Lord Venkateshwara Temple at Tirumala for six days from August 11as part of a once every 12-year ritual, Tirumala Tirupati Devesthanams (TTD) will reconsider its decision and is likely to climb down from imposing a total ban on darshan to pilgrims on those six days.

The need to review its decision was also influenced by an appeal from chief minister N Chandrababu Naidu who urged the temple administration not to inconvenience devotees by denying darshan to them. Now, TTD executive board will take a final call on the matter at its meeting here on July 24.

Addressing a press conference along with TTD chairman Putta Sudhakar Yadav, executive officer A K Singhal said, “Apart from devotees, chief minister N Chadrababu Naidu told us to reconsider our decision and ensure that pilgrims are not put to any inconvenience during the six days of the ritual. On July 23, we will take the opinion of devotees and the next day take a final decision on the issue.” In case it goes ahead with allowing darshan on those six days, TTD will have to then decide whether the darshan should be provided on a firstcome-first-served basis or on the basis of the tickets issued online. “However, in view of the Maha Samprokshanam from August 11-16, we will be able to allow darshan only for about 30 hours during those six days. This would mean only about 15,000 devotees will be able to get darshan on each one of those days,” the EO said. According to Singhal, the temple can be kept open for devotees only for nine hours on August 11, four hours each on August 12 and 13, five hours each on August 14 and 15 and four hours on August 16.



DIVINE FAITH: Pallaki Utsavam at Tirumala on Tuesday
Pay ₹25L each to NRI students given seats without NEET: Court

TIMES NEWS NETWORK

Chennai: 18.07.2018

The Madras high court on Tuesday directed Saveetha University, a deemed university, to pay ₹25 lakh each to students who were admitted to the BDS course without NEET under NRI quota.

Justice S Vaidyanathan also directed the college management to return all the fees collected from the students whose career had been affected by the college authorities’ move.

The judge passed the order on a batch of pleas moved by V S Subeeksha and others, all second year BDS students in the college.

The petitioners wanted the court to quash the January 22 order of the Dental Council of India directing the university to discharge 13 students admitted under the NRI category without writing NEET.

Disposing of the pleas, the judge said, “Though the relief sought for by the petitioners cannot be granted, the students had already completed two years of study in the university and they are now forced to stay away from the third year. As the students had lost two years and any admission to the course is invalid, the fees paid by the students to the university under all heads have to be refunded to them.”

This apart, the students will be entitled to ₹25 lakh each as compensation to be paid by the institute. The amount will have to be paid within 45 days, failing which it is open to the government to attach the properties of the university to bring it to sale, the judge said.

The court also directed the institute to return all original certificates of the petitioners and issue transfer certificates to them within a week.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...