Friday, August 3, 2018

மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் வீடுகளில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை




தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். #AnnaUniversity

பதிவு: ஆகஸ்ட் 03, 2018 05:45 AM

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அதில் தேர்ச்சி பெற்ற 90 ஆயிரம் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்ச பணம் பெற்று மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள விஜய குமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரி உமா சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டில் நடந்த சோதனையில், பணம், நகை போன்ற எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களும், அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் மட்டுமே சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்குள்ளான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயகுமார், உதவி பேராசிரியர் (கணக்கு) சிவக்குமார் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்காக சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் திண்டிவனம் சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் திண்டி வனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனை பின் புறம் உள்ள விஜயகுமார் வீடு, திண்டிவனம் மயிலம் சாலை இந்திராநகரில் உள்ள சிவக் குமார் வீடு ஆகிய இடங்களிலும் 3 குழுவாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை 7 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை இந்த சோதனை நீடித்தது. சோதனையின் போது 2 வீட்டு கதவுகளும் பூட்டப்பட்டு, அவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மிகவும் ரகசியமாக நடந்தது.

சோதனையின்போது அவர்களிடம், திண்டிவனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து மறுமதிப்பீட்டுக்கு எத்தனை மாணவர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் மாலையில் சோதனையை முடித்த போலீசார் விஜயகுமார் வீட்டில் இருந்து 64 முக்கிய ஆவணங்களையும், உதவி பேராசிரியர் சிவக்குமார் வீட்டில் இருந்து 14 ஆவணங்கள் என மொத்தம் 78 முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இப்போதைக்கு கைது நடவடிக்கை இருக்காது என்று தெரிய வந்துள்ளது.

10 பேராசிரியர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

10 பேர் வீடுகளிலும் 50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா வீட்டில் ஒரு கூடுதல் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது வழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. பிரச்சினைக்குரிய மாணவர்களின் பெயர் பட்டியலும் சிக்கி உள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்தபோது, முறைகேடு தொடர்பாக நிறைய தகவல்கள் கிடைத்துள்ளது.

முதலில் எழுதிய தேர்வில் ஒரு மாணவன் 7 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளான். அந்த மாணவனுக்கு மறுமதிப்பீட்டின் போது 70 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. 10 மடங்கு அதிகமாக மதிப்பெண் போடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு தான் இது. இதுபோல் நிறைய மாணவர்களுக்கு முறைகேடாக மதிப்பெண்கள் போட்டிருக்கிறார் கள். அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்

தேர்வுத்தாள் திருத்துவதில் முறைகேடா?




மாணவர்கள் எழுதும் தேர்வுத்தாளை திருத்துவது ஆசிரியர்களுக்கு ஒரு புனிதமான கடமையாகும். இதில் விருப்பு, வெறுப்பு, முறைகேடு என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது.

ஆகஸ்ட் 03 2018, 03:00

மாணவர்கள் எழுதும் தேர்வுத்தாளை திருத்துவது ஆசிரியர்களுக்கு ஒரு புனிதமான கடமையாகும். இதில் விருப்பு, வெறுப்பு, முறைகேடு என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது. நீதி தேவதைபோல கையில் துலாக்கோலை வைத்துக்கொண்டு, விடைத்தாளை துல்லியமாக மதிப்பிட வேண்டிய கடமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரி படிப்பில் ஆசியாவில் முன்னணியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில், 13 உறுப்புக் கல்லூரிகளும், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவையில் மண்டல மையங்களும் இருக்கின்றன. இதுதவிர, 593 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில், பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2011–ம் ஆண்டு முதல் இதுவரை தேர்வு எழுதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள் என்று ஏற்கனவே புகார் வந்தது. இப்போது, 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த மறுமதிப்பீட்டில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில், 73 ஆயிரத்து 733 மாணவர்கள் பாஸ் மார்க் பெற்றுள்ளனர். 16 ஆயிரத்து 636 மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்றதாக அறிவிக்கப்பட்ட மதிப்பெண்களைவிட கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஆக, 90 ஆயிரத்து 369 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதில், பெரிய முறைகேடு லஞ்சஒழிப்பு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மாணவர், தான் தேர்வில் பெற்ற மதிப்பெண் திருப்தியில்லாமல் மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.300 பணம் கட்டி முதலில், குறிப்பிட்ட விடைத்தாளின் போட்டோ காப்பியை பெறவேண்டும். அதில், மதிப்பெண் குறைவாக போடப்பட்டிருப்பது தெரியவந்தால், மீண்டும் ரூ.400 கட்டி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு மறுமதிப்பீடு செய்வதற்காக, அமைக்கப்பட்ட மையத்தில்தான் இந்த முறைகேடு நடந்திருக்கிறது. லஞ்சஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், ஒவ்வொரு தேர்வுத்தாளுக்கும் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக முன்பு பணியாற்றிய பேராசிரியை ஜி.வி.உமா உள்பட 10 ஆசிரியர்கள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பேராசிரியர்கள் மத்தியிலும், இவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு பெரிய மவுசு உண்டு. கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை விட, பணம் கொடுத்து சரியாக படிக்காத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக விடைத்தாள் திருத்தும் முறை, மறுமதிப்பீட்டு முறையில் ஒரு கண்டிப்பான நடைமுறையை கொண்டுவர வேண்டும். மறுமதிப்பீட்டில் சிறிதும் தவறு ஏற்படக்கூடாது. மறுமதிப்பீட்டில் பெரிய மாற்றம் இருந்தால், ஏற்கனவே விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இதை செய்யாவிட்டால் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது நம்பிக்கை இழந்து, இங்குவந்து கேம்பஸ் இண்டர்வியூ நடத்த தயங்கிவிடுவார்கள். இது மாணவர்களின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

Thursday, August 2, 2018

மருத்துவம்: கூடுதல் இடம் இல்லை

சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு  02.08.2018

புதுடில்லி : தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



தமிழகத்தில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு, 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள், தாங்களும்

மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்களை உருவாக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் முடிந்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கி, இதற்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்; அத்தகைய உத்தரவுகளை, நீதிபதிகள் பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அதை, நாங்கள் மீண்டும் செய்யப் போவதில்லை.

மருத்துவக் கல்லுாரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கும்படி, நீதிபதிகள் கூற முடியுமா என்பதே, தற்போதுள்ள கேள்வி.

சட்டப்படி, இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்த எண்ணிக்கையை விட அதிகமாக, ஒரு இடத்தைக் கூட புதிதாக உருவாக்க முடியாது.

அவ்வாறு உருவாக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசு சம்மதித்தாலும், நாங்கள் அதை செய்ய முடியாது. இட ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமா என்பதை மட்டுமே, நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்ஜினியருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரி துறை குளறுபடி

Added : ஆக 02, 2018 00:43

பல்ராம்கர்: ஹரியானா மாநிலத்தில், 585 சதுர அடி வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற இன்ஜினியருக்கு, 27 கோடி ரூபாய் முதலீடு குறித்து விளக்கம் கேட்டு, வருமான வரி துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
முதலீடு : ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரீதாபாத் மாவட்டத்தில் வசிப்பவர் நந்த கிஷோர்.தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி, 2010ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் கிடைத்த, ஏழு லட்சம் ரூபாயை, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.குறிப்பிட்டபடி, முதலீட்டு தொகைக்கு வட்டி தராமல், நிதி நிறுவனம் ஏமாற்றியது. மேலும், அசல் தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்தது. இதுகுறித்து போலீசில், நந்த கிஷோர் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில், வருமான வரித் துறையில் இருந்து, 27 கோடி ரூபாய் முதலீடு குறித்து விளக்கம் அளிக்கும்படி வந்த நோட்டீசை பார்த்து, நந்த கிஷோர் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கூறியதாவது:ஏற்கனவே, முதலீடு செய்த பணத்தை தராமல், மோசடி செய்த, தனியார் நிதி நிறுவனம் மீது அளித்த புகார், விசாரணையில் உள்ளது. 585 சதுர அடிதற்போது இருக்கும், 585 சதுர அடி வீட்டை தவிர, வேறு எந்த சொத்தும் இல்லை. வருமான வரி நோட்டீசில் கூறியது போல், என் பெயரில் எந்த முதலீடும் இல்லை.வருமான வரி துறை துணை இயக்குனர் கவுரவ் பாரிலை தொடர்பு கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் துவங்கின : மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Added : ஆக 01, 2018 23:42





சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேற்று வகுப்புகள் துவங்கின. மாணவர்களை, மூத்த மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கின. கல்லுாரிக்கு வந்த புதிய மாணவர்களுக்கு, ரோஜா மலர் கொடுத்தும், மரக்கன்றுகள் நட்டும், மூத்த மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.'ராகிங் செய்ய மாட்டோம்' என, மூத்த மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தனர். மேலும், 'விடுதிகளில் அளிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும்' என, பெற்றோரிடம் விடுதி காப்பாளர்கள் தெரிவித்தனர்.சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், செயலர், ராதாகிருஷ்ணன் புதிய மாணவர்களை வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை மருத்துவக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், டீன், ஜெயந்தி பேசியதாவது:பள்ளிகளை போல், மருத்துவக் கல்லுாரி வகுப்பறை இருக்காது. மாணவர்கள் தாங்களாகவே படிக்க, கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்க உள்ளதால், பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் விடுதியில் இருக்கும் நேரங்களில் தொடர்பு கொண்டு, பெற்றோர் ஆறுதலாக பேச வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசுகையில், ''இந்த பருவத்தில், மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும். மாணவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும். ''பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர் சந்தித்து, அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.

ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி டீன், நாராயணபாபு பேசுகையில், ''நோயாளிகள் நம்மிடம் மருத்துவ சிகிச்சை போலவே, ஆறுதலையும் எதிர்பார்க்கின்றனர். எனவே, சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் அன்பாக பழக வேண்டும்,'' என்றார்.

ராகிங் தொல்லையா? புகார் தெரிவிக்கலாம் : ராகிங் குறித்து, அந்தந்த கல்லுாரிகளில் உள்ள, ராகிங் தடுப்புக்குழு மற்றும், டீன்களிடம் புகார் அளிக்கலாம். எம்.சி.ஐ., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சிலில், ராகிங் தடுப்புக்கான ஒழுங்குமுறை கமிட்டிக்கு, 18001 11154 என்ற இலவச எண்ணிலும், 011 - 2536 7033, 2536 7035, 2536 7036 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும், mci@bol.net.in, contact@mciindia.org என்ற இ - மெயில் முகவரிகள் மற்றும், www.mciindia.org என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம். இதுதவிர சிறப்பு அவசர உதவிக்கான, 011 - 2536 1262 என்ற எண்ணிலும், 2536 7324 பேக்ஸ் எண்ணிலும், antiragging-mci@nic.in என்ற, இ - மெயிலிலும், மருத்துவ மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்.

மொபைல் போனுக்கு தடை : மாணவர்கள், ஜீன்ஸ், டி - சர்ட் அணியக்கூடாது. பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணியலாம். மாணவியர் சேலை, சுரிதார் ஆகிய உடைகளை அணியலாம்; மேற்கத்திய உடைகளை தவிர்க்க வேண்டும். மாணவியர் தலை முடியை விரித்து போடக்கூடாது. மாணவர்கள் விடுதியில், மொபைல் போன் பயன்படுத்தி கொள்ளலாம்; வகுப்பறைக்குள் பயன்படுத்தக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்கள், வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எட்வின் ஜோ, மருத்துவ கல்வி இயக்குனர்
லண்டன் டாக்டர் வருகை கருணாநிதிக்கு சிகிச்சை

Added : ஆக 01, 2018 23:20


சென்னை/: கருணாநிதியின் உடல் நலம் விசாரிப்பதற்காக, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நேற்றும் மருத்துவமனை வந்து சென்றனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக, ஜூலை, 27ம் தேதி நள்ளிரவு, 1:30 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும், இன்னும் சில தினங்கள், அவர் மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்றும், மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, தினமும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை, முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவருமான, அஜித் சிங், மருத்துவமனைக்கு வந்தார். தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, த.மா.கா., தலைவர் வாசன், நடிகர் விவேக், தொழில் அதிபர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீத் அன்சாரி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ் ஆகியோர், தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, கருணாநிதி யின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

லண்டன் டாக்டர் : முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில், லண்டன் மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற, தொற்று நோய் சிகிச்சை நிபுணர், நேற்று காவேரி மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர், கருணாநிதியின் உடலை பரிசோதித்தார்; சிகிச்சை ஆவணங்களை பார்த்தார். பின், 'கருணாநிதியின் வயது முதிர்வால், அவருக்கு தற்போது அளித்து வரும் மருத்துவ சிகிச்சை போதுமானது' என, தெரிவித்தார். மேலும், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். 

நொறுக்கு தீனி, 'மாஜி' : கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், பக்கோடா, மிக்சர், முறுக்கு, காரசேவ் போன்ற நொறுக்கு தீனிகளை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, இரண்டு எழுத்து முன்னாள் அமைச்சர் ஒருவர், அடிக்கடி வரவழைத்து சாப்பிடுவது வழக்கம். அதை, காவேரி மருத்துமனையிலும் அவர் விட்டு வைக்கவில்லை. அங்கேயும், தன் அறைக்கு, நொறுக்கு தீனிகளை கொண்டு வர வேண்டும் என, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்பு, மருத்துவமனை பாதுகாப்பு தாண்டி, அந்த, 'மாஜி'க்கு நொறுக்கு தீனி எடுத்து செல்லப்படுகிறதுகருணாநிதியை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை, கருணாநிதியின் சார்பில், உதவியாளர் சண்முகநாதனும், ஸ்டாலின் சார்பில், நவீன் உள்ளிட்ட இரு இளைஞர்களும், பதிவு செய்கின்றனர். அவர்களிடம், இரண்டு எழுத்து மாஜி, 'அழகிரியை சந்திக்க வரும் பிரமுகர்களின் பெயர்களை குறிப்பு எடுக்க வேண்டாம்' என, கூறியதாக தெரிகிறது.
DMK men attack hotel staff for biriyani in Chennai

DECCAN CHRONICLE.

PublishedAug 2, 2018, 2:06 am IST

Police arrest a person in connection with attack.



CCTV grab shows biriyani stall staff being attacked.

Chennai: In a shocking incident, a group of inebriated DMK men attacked employees of a restaurant in Virugambakkam after they told them they were closed for the day. The police arrested a person in connection with the attack.

According to police, the incident happened on July 29 and the action has been taken after the CCTV footage of the attack went viral on Wednesday and Virugambakkam police arrested Rudrakumar.

However main accused K.L. Yuvaraj, a DMK functionary, who is seen punching the hotel staff in their faces several times injuring them severely, was in RSS and Tamil Manila Congress earlier. Soon after the incident came to light on Wednesday, DMK working president M.K. Stalin suspended Yuvaraj and another party member Diwakar for attacking the hotel staff and cautioned the cadre of stern action on Twitter if their actions bring disrepute to the party.

The police said that the incident happened at Salem RR Biriyani restaurant on Kamarajar Salai in Virugambakkam. "A group of men led by Yuvaraj entered the restaurant and demanded food for about 30 party members who have camped outside the Kauvery hospital, where DMK leader M. Karunanidhi has been admitted. When the manager Prakash told them that they were closed for the day, Yuvaraj got into an argument with him and started attacking him," the police said.

He was soon joined by his other men who were waiting at the doorstep and a few other waiters of the restaurant were also attacked. Anbu, the owner of the biriyani shop, has told police that Yuvaraj has the previous enmity with him after an argument over parking his vehicle in front of the shop.

DMK suspends biriyani boxer for attacking staff

Upset at not getting biriyani at a hotel, a burly DMK functionary along with his musclemen brutally beat up the staff of a biriyani hotel at Virugambakkam here on Sunday. With the CCTV visuals of the rowdyism going viral and lapped up by the TV channels, DMK general secretary K. Anbazhagan suspended the gang leader, Yuvraj, said to be the secretary of the party's thondar-ani (volunteers' wing), as well as one of his associates named Dhivakar, from the primary membership as both "behaved in a manner that is not in line with the party discipline and brought disrepute to the party".

DMK working president M.K.Stalin tweeted his deep anger at the party members' unruly conduct. "The attack on the shop staff in Virugambakkam is highly condemnable. We have removed the men who violated the principles of our party. Strict action will be taken against those who act in a manner that brings disrepute to the party", he tweeted.

While the DMK's action in merely suspending the two men from the party and not sacking them outright received much flak on the social media, party leaders took pains to explain to the media that the DMK constitution does not allow expulsion from the party right away without first giving the delinquent a notice seeking explanation and slapping suspension on the person awaiting his reply.

Yuvraj and his gang members bashed up the hotel staff when the latter told them that the hotel had run out biriyani and they were about to down the shutters.

"They seemed drunk. We pleaded that our stock of biriyani got over and there was no more food available. They started punching us, causing bleeding injuries as they were wearing metal bangles. Some of the staff needed stitches", said a hotel staff still not recovered from the brutal attack.

CCTV footage showed Yuvraj jumping up and down like a boxer to deliver his fast punches at the hapless hotel cashier and his staff. The other members of the rowdy gang joined their leader in delivering their own share of hard blows at the quivering workers in the eatery. The gang pulled down the hotel shutter after the attack and walked away. Police arrested one of them much later, while the rest of the gang, including Yuvraj, remained untraceable.

NEWS TODAY 05.12.2025