Wednesday, August 7, 2019

Lok Sabha endorses Centre’s decisions on Kashmir 

President’s declaration ending special status under Art. 370 notified in gazette 


  07/08/2019 , Sandeep Phukan , Vijaita Singh, New Delhi 



 

Sounds of silence: A milkman goes about his work in Jammu on Tuesday.PTIPTI

The Centre’s decisions setting new terms of engagement with Jammu and Kashmir — by reorganising it as Union Territories, ending its special status under Article 370 and 35 (A) and extending to it all the provisions of the Constitution — were endorsed by the Lok Sabha on Tuesday after a debate that lasted close to seven hours.

The Lok Sabha approved a resolution abrogating special status to Jammu and Kashmir under Article 370 of the Constitution and a Bill for splitting the State into two Union Territories. The resolution was adopted by the House with 351 members voting in its support and 72 against it, while one member abstained.

The Bill to create the Union Territories of Jammu and Kashmir and Ladakh was passed by 370 votes in favour and 70 against. Prime Minister Narendra Modi was present in the House.

The President’s declaration as passed by both Houses of Parliament that “all clauses of Article 370 shall cease to be operative in the State of Jammu and Kashmir” was notified in the Gazette of India later in the evening.

The declaration will come into effect from August 6, the notification issued within hours of the Lok Sabha passing the resolution said.

The resolution and the Bill were approved by the Rajya Sabha on Monday.

Replying to the debate, Home Minister Amit Shah assured the House that the government could restore full Statehood to Jammu and Kashmir if the situation improved and expressed its willingness to engage with the local population. “We don’t want to talk to the Hurriyat, but we are ready to speak to the people of Kashmir,” he said, adding that the security forces would not be moved out of the Valley until the situation became fully normal.

Mr. Shah also asserted that the Centre’s decision did not impact in any way India’s claim over Pakistan-occupied Kashmir, and the government would continue to press it.

Mr. Modi termed the passage of the resolution and the Bill “a momentous occasion in our Parliamentary democracy”.

Lok Sabha Speaker Om Birla adjourned the House sine die after the resolution and the Bill were passed.

(With PTI inputs)
‘Two-day wait for Athi Varadar darshan’ 

No VIP darshan on August 16 and 17, says Collector

07/08/2019 , Special Correspondent


CHENNAI 


 

Differently abled persons waiting to have a darshan on Tuesday. B. Velankanni RajB. Velankanni Raj

With lakhs of devotees thronging the Sri Devarajaswamy Temple daily for darshan of Athi Varadar, the Kancheepuram district administration, in consultation with the Hindu Religious and Charitable Endowments Department, has decided not to have VIP darshan on August 16 and 17.

Addressing presspersons on Tuesday, Collector P. Ponniah said that to manage the increasing number of devotees, a total of 12,000 policemen would be pressed into service. Three additional waiting halls have been provided along the general darshan queue. He said devotees should be prepared to wait for two days for darshan.

On Monday, 3.2 lakh devotees had darshan. “A new ramp would be provided at the exit point at West gopuram for VIPs and those with donor passes so that free darshan devotees can exit faster,” he said.

Since the idol would be placed in the Ananthasaras tank on August 17, darshan would be allowed only till noon that day.

Woman dies

A 65-year-old woman from the Nilgiris died in Olimohammed Pettai in Kancheepuram when she was on her way to board a bus to have darshan on Tuesday. Police said Rathinam, 65, and her family had come to have darshan. She collapsed at Olimohammed Pettai. A medical team rushed her to the government hospital, where she died.

Tuesday, August 6, 2019

Published:22 Jul 2019 9 PMUpdated:22 Jul 2019 9 PM

இனி, பஸ் டிக்கெட்டுகளுடனே சிறப்பு தரிசனத்துக்கும் முன்பதிவு செய்யலாம்! #Tirupati

எஸ்.கதிரேசன்

திருமலை திருப்பதி செல்பவர்களின் வசதிக்காக, ஆந்திர பஸ் போக்குவரத்துக் கழகம் சார்பில் சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன.



திருப்பதி

சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்களுக்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நான்கு ரயில்கள் மட்டுமே உள்ள நிலையில், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை திருமலைக்குச் செல்லும் விதமாக பேருந்துகள் புறப்படுகின்றன.


திருப்பதி


இந்தப் பேருந்துகளில், 5 வயது முதல் 12 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அரை டிக்கெட் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 10 வயது தாண்டிய குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழாக ஆதார் கார்டை உடன் எடுத்துச்செல்வது நல்லது.

நீங்கள் முன்பதிவு செய்த குறிப்பிட்ட தேதியில், நீங்கள் பயணிக்க முடியாமல் போனால், 25 சதவிகித பிடித்தம்போக தொகையை உங்களுக்குத் தந்துவிடுவார்கள். ஆனால், மாற்றுத் தேதியில் நீங்கள் பயணிப்பதாகக் கூறினால், எந்தவித பிடித்தமும் இல்லாமல் புதிய டிக்கெட்டை பதிவுசெய்து தருவார்கள். இதில் சிரமம் என்னவென்றால், அந்த டிக்கெட்டை நீங்கள் ரத்துசெய்ய முடியாது. அந்தத் தேதியில் நீங்கள் பயணம் செய்துதான் ஆக வேண்டும்.

பக்தர்கள்

இதுதவிர, 60 வயது நிரம்பிய சீனியர் சிட்டிசன்களுக்கு பேருந்துக் கட்டணத்தில் 25 சதவிகிதம் குறைத்து வசூலிக்கப்படுகிறது.

திருமலையில் உடனடியாக சுவாமிதரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு வசதியாக, 300 ரூபாய் சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக இதற்கான முன்பதிவைப் பெறலாம். அதற்கு அவகாசம் இல்லாமல்போனால், பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே 300 ரூபாய் தரிசனத்துக்கும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.



சந்திர பிரபை வாகனம்

திருமலைக்கு பயணிக்கும்போது, யார் யார் செல்கிறார்களோ அனைவரின் ஆதார் கார்டுகளையும் உடன் எடுத்துச்செல்வது டிக்கெட் முதல் தரிசனம் வரை தேவைப்படும்.
உத்தரவை மீறிய கல்லூரிகளும் அதிகாரிகளும்! - ஊழலில் திளைக்கும் தஞ்சை! #EndCorruption

எம்.திலீபன்

vikatan

அரசின் நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு ஆதரவாகச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொண்டிருக்கிறார்கள்.



சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

நமது நாட்டின் தேசிய வியாதி ஊழல் என்பார்கள். அந்த வகையில், அரசு நிலங்களைத் தனியார் கல்லூரிகள் ஆக்கிரமித்து மிகப்பெரிய ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் புகார்கொடுத்தும், பணத்துக்காக நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள், தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள். தஞ்சை மாவட்டம், திருமலை சமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அரசுக்குச் சொந்தமான 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.

``ஊழல் நம் நாட்டின் தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது. ஊழலுக்கு முக்கியமான அதிகாரிகளை எடுக்க வேண்டும்." கரிகாலச் சோழன்

அதேபோன்று ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரியும் 35 ஏக்கருக்கும் மேல் நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளது. அரசின் நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு ஆதரவாகச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கரிகாலச் சோழனிடம் பேசினோம்.

கரிகாலச் சோழன்

``ஊழல் நம் நாட்டின் தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது. ஊழலை ஒழிக்க முக்கியமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்" என்று ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார். "தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக விவகாரம் பல வருடங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கல்லூரி, அரசின் அனுமதி இல்லாமல் அரசுக்குச் சொந்தமான 58 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டி கல்லூரி நடத்திவருகிறது.


ஆக்கிரமிப்பு இடங்கள்

இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று சட்டரீதியாகப் போராடி வருகிறேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு நிலத்தில் கட்டியுள்ள கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் எதையுமே மதிப்பதில்லை. இப்போது சென்னை உயர் நீதிமன்றம், அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று இரண்டு மூன்று முறை உத்தரவு போட்டது. ஆனால், இன்றுவரையிலும் நடவடிக்கை இல்லை. அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகேயுள்ள ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரியும் 38 ஏக்கருக்கும் மேல் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியுள்ளது. இவற்றை மீட்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம்.

அவர், அந்த மனுவை டி.ஆர்.ஓ சக்திவேலிடம் அனுப்பினார். ஆனால், அவருக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்து மாதாமாதம் பணம் மற்றும் விழாக்காலங்களில் பரிசுப்பொருள்கள் வீடு தேடி வருவதால், அவர் அந்தக் கல்லூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.

நீதிமன்றம் சொல்லியும் டி.ஆர்.ஓ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் என்ன அரசியல் பின்புலத்தில் இருப்பார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். டி.ஆர்.ஓ சக்திவேலால் மாவட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவரை இங்கிருந்து மாற்ற வேண்டும்; அப்படி மாற்றம் செய்தால் மட்டுமே தஞ்சாவூருக்கு விமோசனம் பிறக்கும். இல்லையேல் லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடும்” என்று ஆதங்கத்தோடு முடித்துக்கொண்டார்.



டி.ஆர்.ஒ சக்திவேல்

தகவலைச்சொல்லி டி.ஆர்.ஓ சக்திவேலிடம் பேசினோம். முழுமையாகக் கேட்டுக்கொண்ட அவர், "நான் மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுங்கள்" என்று மழுப்பலாக போனைத் துண்டித்தார்.

இதுகுறித்து கல்லூரி தரப்பிடம் கருத்து கேட்பதற்கு, அவர்களைப் பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. இதுதொடர்பாக இதற்கு முன்பு நம்மிடம் பேசியவர்கள், "இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிறகு பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டார்கள்.
240 கி.மீ... 2.55 மணிநேரப் பயணம் - குழந்தையின் உயிரைக் காக்க தங்கள் உயிரைப் பணையம் வைத்த ஓட்டுநர்கள்

குருபிரசாத்  vikatan

தேனியிலிருந்து கோவைக்கு 2.55 மணி நேரத்தில் தங்களின் உயிரைப் பணையம் வைத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசாமி-ஆர்த்தி தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால், அங்கு போதுமான சிகிச்சை வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தனர். ஆனால், தேனியிலிருந்து கோவைக்கு வர 5 மணி நேரத்துக்கு மேல் ஆகும். அது ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையை அழைத்துச் செல்வது என்றால் இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் கொண்டு செல்ல வேண்டும். முடிந்த வரை விரைவாக மருத்துவமனையை அடைய வேண்டும்" என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



ஆம்புலன்ஸ்


இதையடுத்து, கடந்த 30-ம் தேதி இரவு 'ஆபத்தான சூழலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்க உதவி தேவை' என வாட்ஸ்அப் மூலம் வந்த தகவலை அடுத்து துரை டிரஸ்ட் ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் சதீஷ் குமார் என்பவர் இந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தானாக முன் வந்தார். கடந்த 31-ம் தேதி இன்குபேட்டர் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸை கேரள மாநிலத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நண்பர்கள் மூலம் குறைந்த விலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அன்று மதியம் 3.15 மணியளவில் ஆம்புலன்ஸ் தேனி அரசு மருத்துவமனையில் இருந்து, கோவைக்கு கிளம்பியது. மருத்துவரின் ஆலோசனையின்படி செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்படுத்தப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகள் வாட்ஸ் அப் குழுவின் மூலம் நடைபெற்றது. இந்தத் தகவல்கள் தேனி மாவட்ட ஓட்டுநர்கள், திண்டுக்கல் மாவட்ட ஓட்டுநர்கள், திருப்பூர் மாவட்ட ஓட்டுநர்கள், கோவை மாவட்ட ஓட்டுநர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வைத்தது. இதன்படி குழந்தையை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸுக்கு முன்புறம் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. `குழந்தையின் உயிர் ஆபத்தான சூழலில் உள்ளது. உடனடியாக மருத்துவமனையை அடைய வேண்டும். ஆகவே வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கி'ச் செல்ல ஒலிபெருக்கி மூலம் `அலர்ட்' செய்யப்பட்டது. இப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலர் அவரவர் மாவட்டத்தில் தங்களால் முடிந்த உதவி எல்லாம் வழியெங்கிலும் செய்தனர். முதலில் செம்பட்டி முதல் ஒட்டன்சத்திரம் வரை குழந்தையை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸுக்கு முன்பு அலர்ட் செய்துக்கொண்டே தனியார் வாகனம் முன் சென்றது. அதையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வேறொரு ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலான பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் பயணம் செய்தது.


குழந்தை

அதையடுத்து தாராபுரம் முதல் பல்லடம் வரை `பேட்ரோல் போலீஸ்' மற்றும் ஆம்புலன்ஸ் உதவியுடன் பயணம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பல்லடம் பகுதியிலிருந்து காரணம்பேட்டை வரை மீண்டும் வேறு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டது. அதையடுத்து காரணம்பேட்டை முதல் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மாசானிக் ஹாஸ்பிடல் வரை ஹைவேல் பேட்ரோல் போலீஸ் உதவியுடன் வெற்றிகரமாக சுமார் 6.10 மணி அளவில் கொண்டு வரப்பட்டது. குழந்தையை இப்படி வெற்றிகரமாகக் கொண்டுவர தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் சாலைகளில் ஓரத்தில் நின்றுக்கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீரமைத்தனர்.

சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தை 2.55 மணி நேரத்தில் கடந்து உயிருக்குப் போராடிய குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி கொண்டு வந்து சேர்த்தார். குழந்தையை உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் உடனடியாகச் சிகிச்சை அளித்தனர். தற்போது அந்தக் குழந்தை குணமடைந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த சதீஷ்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.


ஆம்புலன்ஸ்

இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதீஷ்குமார், "இந்தக் குழந்தையைத் தேனியில் இருந்து கோவை வரை கொண்டுவர அனைவரின் கூட்டு முயற்சியே காரணம். ஓட்டுநர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்பால் 2.55 மணிநேரத்தில் குழந்தையைப் பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது. குழந்தைக்கு உடனடி சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளது. இந்த நிகழ்வு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
மக்கள் வெள்ளத்தால் திணறும் காஞ்சிபுரம் - இன்று ஒரே நாளில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

JAYAVEL B

vikatan

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். இன்று ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். இன்று ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பக்தர்கள்

இன்று அதிகாலை முதலே காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்றுவரை ரங்கசாமி குளம்வரை இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது காந்தி ரோட்டிலேயே திருப்பி விடப்படுகின்றன.

காந்திரோடு வரை மட்டுமே மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. காந்திரோட்டில் கார்களும் அனுமதிக்கப்படவில்லை. காந்திரோட்டிலிருந்தே பக்தர்கள் சுமார் 2 கி.மீ தொலைவு நடந்தே கோயிலுக்கு வருகின்றனர்.



பக்தர்கள் கூட்டம்

மாஸ் க்ளீனிங் செய்ய சுகாதார பணியாளர்கள் டிகே நம்பி தெருவைக் கடந்து செல்ல முடியாமல் சில இடங்களில் தடுமாறுகின்றனர். வாலாஜாபாத், கீழம்பி தேசிய நெடுஞ்சாலை, ஒலிமுகமது பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

கோயிலில் இருந்து வரும் பக்தர்கள், விஷ்ணு காஞ்சி போலீஸ் ஸ்டேஷன், சேஷாத்ரி பாளையத்தெரு வழியாக விளக்கடி கோயில் தெருவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளனர். இதில், வீல் சேரில் வரும் பக்தர்கள், அந்த வீல் சேர்களைக் கண்ட இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். சிலர், கையோடு எடுத்தும் செல்கின்றனர்.


அத்திவரதர்

இதனால் பக்தர்கள் மிகுந்த அசௌகர்யத்துக்கு ஆளாகின்றனர்.
`எஸ்.எம்.எஸ்ஸில் விடைகள்!' - கேரளாவை அதிரவைத்த காவலர் தேர்வு முறைகேடு 

சிந்து ஆர்  vikatan

போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில், விடைகளை எஸ்.எம்.எஸ் மூலம் பெற்று முதலிடம் பிடித்த எஸ்.எஃப்.ஐ மாணவர்களின் முறைகேட்டை சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.



கேரள அரசு பணியாளர் தேர்வாணயம்

முறைகேட்டில் ஈடுபட்ட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது.

சிவரஞ்சித் & நஸீர்

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி எஸ்.எஃப்.ஐ. மாணவர் சங்க நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆற்றுகால் பகுதி எஸ் எஃப்.ஐ நிர்வாகி அகில் சந்திரன் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் பல்கலைக்கழக எஸ்.எஃப்.ஐ. தலைவர் சிவரஞ்சித், எஸ்.எஃப்.ஐ செயலாளர் நஸீர், பிரணவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிவரஞ்சித்தின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில் பல்கலைக்கழகத் தேர்வுக்கான விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநரின் சீலும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரணை நடத்தியதில் சிவரஞ்சித், கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வில் 96 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் இருப்பது தெரியவந்தது. அதுபோல எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகளில் ஒருவரான பிரணவ் 78 மதிப்பெண் பெற்றிருந்தது தெரியவந்தது. பல்கலைக்கழக விடைத்தாளில் மோசடி நடந்ததா என விசாரணை நடத்துவதற்காக ஏற்கெனவே தேர்வு நடத்தப்பட்ட விடைத்தாள்களை போலீஸ் கேட்டிருந்தது.

கேரள பல்கலைகழகம்

ஆனால், விடைதாள்கள் காணாமல் போய்விட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கேரள அரசுப் பணியாளர் தேர்வின்போது சிவரஞ்சித் மற்றும் பிரணவ் ஆகியோர் மொபைல்போன் பயன்படுத்தியதாகவும். அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் விடைகள் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் எம்.கே.ஸ்க்கீர் கூறுகையில், ``காவலர் தேர்வில் சிவரஞ்சித் மற்றும் பிரணவ் ஆகியோர் இரண்டு மணி முதல் மூன்றேகால் மணிவரை போனில் விடைகளைப் பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவரஞ்சித்துக்கு இரண்டு எண்களில் இருந்தும், பிரணவுக்கு மூன்று எண்களில் இருந்தும் எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.

கேரள அரசு பணியாளர் தேர்வாணயம்


கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நடந்த இந்தக் காவலர் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் மொபைல் எண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மிகப்பெரிய அளவில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வர்களுக்கு வெளியில் இருந்து சிலர் உதவியுள்ளதால் காவல்துறை விசாரணை கோரியுள்ளோம்" என்றார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...