Friday, October 4, 2019

Justice Manikumar CJ of Kerala HC

Chennai:04.10.2019

President Ram Nath Kovind on Thursday appointed Justice S Manikumar, a judge in Madras high court, as the Chief Justice of Kerala high court with effect from the date he assumes charge of the office.

Justice Manikumar is a second generation judge; his father, Justice Samidurai, was a HC judge. Justice Manikumar has practiced for nearly 22 years in Madras HC, state and central administrative tribunals. TNN


Thursday, October 3, 2019

நீட் தேர்வு முறைகேட்டில் சிக்கிய மாணவர் இர்பானின் தந்தை போலி மருத்துவர்: சிபிசிஐடி விசாரணையில் தகவல்; மேலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்குகிறார்கள்

தேனி/தருமபுரி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி போலி மருத் துவர் என தெரியவந்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண் டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த சிபிசிஐடி விசாரணையில் உதித் சூர்யாவுடன், பிரவீன், ராகுல் ஆகியோரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் கள் அனைவரும் அவர்களது தந்தையருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தமிழகம் முழுக்க உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டில் பயிலும் மாணவர் களின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவ ணங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இதில், தருமபுரி மருத்து வக் கல்லூரி முதலாமாண்டு மாண வர் முகமது இர்பான் மீது சிபிசிஐடி போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட் டது. அவரது தந்தையான வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது ஷபியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இர்பான் கடந்த 1-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரண டைந்தார்.

முகமது ஷபியிடம் தேனி சிபிசிஐடி போலீஸார் 3 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில் முக மது ஷபி கர்நாடகாவில் உள்ள விஜய்புரி என்ற ஊரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சில ஆண்டுகள் மட்டுமே படித்துள் ளார். படிப்பைப் பாதியிலே நிறுத்தி விட்டு ஊர் திரும்பிய இவர், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் பிற டாக்டர்களை வைத்து கிளினிக் நடத்தி வந்துள்ளார். பின்னர் இவரே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்ட விசாரணை முடி வடைந்த நிலையில் நேற்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முகமது ஷபி ஆஜர்படுத்தப்பட் டார். நீதிபதி பன்னீர்செல்வம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முகமது ஷபி வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் வேலூர் மாவட் டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுந ராக பணிபுரியும் அவர், "நீட் தேர்வு ஆள்மாறாட்டத்துக்கு உதவிய தர கர்கள் ரஷீத், வேதாசலத்தை நான் யாருக்கும் அறிமுகப்படுத்த வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூரில் உள்ள ஜெயராமன் என்பவரிடம் தரகர் குறித்த தகவல்களைத் தெரிவித் தேன்" என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் கோவிந்தராஜ் நேற்று விடுவிக்கப்பட்டார். விசாரணையில் ஜெயராமன் ஓய்வு பெற்ற மருத் துவ அலுவலர் என்பது தெரியவந்து உள்ளது. அவரை பிடிப்பதற்கான முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

2 விதங்களில் நடந்த தவறு

இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸார் கூறியதாவது: கர்நாடகாவைச் சேர்ந்த தரகர் ரஷீத் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளி. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் 2 விதங்களில் நடந்துள்ளது. ஒருவருக்குப் பதி லாக இன்னொருவர் நீட் தேர்வை எழுதுவது அல்லது உண்மையான மாணவரும், போலியான நபரும் ஒரே பெயரில் எழுதி அதில் அதிக மதிப்பெண் அடிப்படையில் கல் லூரியில் சேர்வது என்று இந்தத் தவறுகள் நடந்துள்ளன.

மாணவர்களை நேரில் வர வழைத்து அவர்கள் முன்னிலையில் கல்வி, நீட் தேர்வு சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். இதனால், 20-க் கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்க லாம். இவ்வாறு சிபிசிஐடி போலீஸார் கூறினர்.

இதற்கிடையே மாணவர் இர்பான் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியில் திருச்சி.. பெரிய ஓட்டை போட்டு.. ரூ.50 கோடி நகைகள் அபேஸ்.. லலிதா ஜுவல்லரியில் அட்டகாசம்

| Updated: Wednesday, October 2, 2019, 17:20 [IST]

திருச்சி: சுவரில் உள்ள அந்த ஓட்டையை பார்த்தால் அவ்வளவு பெரிசாக இருக்கிறது. ஒரு ஆள் உள்ளே புகுந்து வெளியே வரும் அளவுக்கு கனகச்சிதமாக ஓட்டைய போட்டு.. லலிதா ஜுவல்லரியில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஆட்டைய போட்டுள்ளனர் கொள்ளையர்கள்!

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே லலிதா ஜூவல்லரி நகைக் கடை உள்ளது. 5 வருஷமாக இங்குதான் செயல்பட்டு வருகிறது.

நேத்து ராத்திரி வழக்கம்போல, கடை ஊழியர்கள் வேலையை முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். எப்பவுமே 6 வாட்ச்மேன்கள் இந்த கடைக்கு வெளியே நைட் டியூட்டியில் இருப்பார்களாம். அப்படிதான், கடைக்கு வெளியே இரவெல்லாம் காவல் இருந்துள்ளனர்.


குழந்தைகள் மாஸ்க் போட்டுக் கொண்டு.. சாவகாசமாக உள்ளே புகுந்த 2 பேர்.. லலிதா ஜுவல்லரி பயங்கரம்!




அதிர்ச்சி

ஆனால் இன்று காலை கடையை திறந்து பார்த்தால், நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது 3 மாடி கட்டிடம்.. இங்குள்ள முதல் தளத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது. ஷோ-கேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் எல்லாமே அபேஸ் ஆகி இருந்தது. இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



விசாரணை

விஷயத்தை கேள்விப்பட்டு, திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜே நேரடியாக கடைக்கு வந்துவிட்டார். பிறகு போலீஸ் அதிகாரிகள் கடையை ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் மேற்கு பகுதியில் உள்ள சுவரில் ஒரு பெரிய துளை இருப்பதை பார்த்தனர். ஒரு ஆள் உள்ளே நுழைந்து வெளியே ஈஸியாக வந்துவிடும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்தது. அந்த துளை வழியாகத்தான் கொள்ளையர்கள் உள்ளே வந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.




ரூ.50 கோடி

ஆனால் கொள்ளையர்கள் யார் என உறுதியாக தெரியவில்லை. அநேகமாக வடமாநில கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எப்படியோ கொள்ளை போன வைரம், தங்க நகைகளின் மதிப்பு 50 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.




மோப்ப நாய்

நைட் டியூட்டி வாட்ச்மேன்களையும் போலீசார் விசாரித்து வருவதுடன், கடைக்கு உள்ளே, கடைக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். இதில் 2 பேர் கடைக்கு உள்ளே வருவது தெரிகிறது. ஆனால் அவர்கள் முகமூடி அணிந்துள்ளனர். இன்னொரு பக்கம் மோப்பநாய், வரவழைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 100 கிலோ நகைகளுடன் மாயமான அந்த கொள்ளையர்களை 7 தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.




அதிர்ச்சி

ஆனால் கொள்ளையர்கள் உஷாராக, கொள்ளையடித்து சென்ற வழி வரைக்கும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றே முக்கால்மணி நேரம் வரை கடைக்குள் பொறுமையாக இருந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில், அதுவும் கடையை சுற்றி இவ்வளவு கேமராக்கள் இருப்பது தெரிந்தும்.. துணிகரமாக இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது சாமான்ய மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மனசு போல வாழ்க்கை 15: மாற்றுக் கையால் எழுதுங்கள்!



டாக்டர் ஆர் கார்த்திகேயன்

நம் வாழ்க்கையை மாற்ற நம் எண்ணங்களை மாற்ற வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் நேர்பட வேண்டும். அதற்குத்தான் இந்த நேர்மறை சுய வாக்கியங்கள் தேவைப்படுகின்றன. உங்களுக்கே தெரியாமல் உங்கள் பழுதுபட்ட எண்ணங்களைச் சீர்படுத்த இவை உதவும். அஃபர்மேஷன் மந்திர வாக்கியம்போல் உங்கள் ஆழ்மனத்தில் செயல்படுபவை. முறையாகப் பயன்படுத்தும்போது இவை நம்ப முடியாத பலன்களைத் தரும்.

மூன்று முக்கிய அம்சங்கள் இந்தக் கட்டமைப்புக்குத் தேவை. ‘நான்’ என்ற தன்னிலையுடன் தொடங்குதல் அவசியம். நிகழ்காலத்தில் வாக்கியம் அமைய வேண்டும். நேர்மறைச் சொல் அல்லது செயல்தான் தெளிவாக இடம்பெற வேண்டும். இவைதான் அஃபர்மேஷன் விதிகள். “நான் நினைச்சது எதுவும் நடப்பதில்லை” என்று சலிப்பவர்கள் இந்தத் தங்க விதிகளை மனத்தில் நிலைநிறுத்திக்கொண்டு தங்கள் சிந்தனையை மாற்றி அமைக்கலாம்.

குழந்தைபோல் குதூகலம் வேண்டுமா?

இதை இடக்கையால் எழுதுவது மிகுந்த பலன் தரும் என்று எழுதி இருந்தேன். அஃபர்மேஷனுக்கு, ஏன் இந்த மாற்றுக் கைப் பழக்கம் தேவைப்படுகிறது? மாற்றுக் கையால் எழுதுதல் உங்களை ஆழ்மனத்துக்கு இட்டுச்செல்லும். அது நம்பிக்கை சார்ந்த விஷயத்தை முழுதாக உள்வாங்கிப் படமாக எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளும். மனத்தின் மேற்பரப்பு தர்க்க அறிவு சார்ந்தது. தவிர அதிகமாகக் கவனம் சிதறக்கூடியது. இரைச்சல்கள் நிரம்பியது. எழுதிப் பழக்கப்பட்ட கையால் அஃபர்மேஷன் எழுதினால் மனம் ஆயிரம் திசைகளில் பாயும். கேள்வி கேட்கும். எழுதும் சுகமோ நிறைவோ தெரியாது.

ஆனால், மாற்றுக் கையால் எழுதுவது கடினமாக இருந்தாலும் குழந்தைக்கு ஏற்படும் குதூகலம் உண்டாகும். எழுத்துகளுக்கு வடிவம் கொடுக்கவே நிறையக் கவனமும் உழைப்பும் தேவைப்படும். கோண லாகப் போகையில்கூட உதடு புன்முறுவல் பூக்கும். எழுதி முடித்த பின் ஒரு சாதனை படைத்த உணர்வு வரும். நான் சொல்வதைப் பரிசோதிக்க ஒரு சின்ன வேலை செய்யுங்கள். உங்கள் பெயரைத் தமிழில் மாற்றுக் கையால் எழுதுங்கள். பள்ளியில் முதன்முதலில் சேர்க்கப்பட்ட குழந்தைபோல உணர்ந்தீர்களா? பக்கத்தில் உள்ளவர்கள் கிண்டல் பேசினார்களா? எழுதி முடித்த பின் ஒரு செயற்கரிய செயலைச் செய்ததுபோல உணர்ந்தீர்களா? அதுதான் மாற்றுக் கையால் எழுதுதலின் மகிமை.

நொடிப்பொழுதில் மாற்றம்

கலையை ஆதாரமாகக்கொண்டு இயங்கும் மனச் சிகிச்சை முறைகளில் இந்த மாற்றுக் கை பழக்கத்தைப் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக சிறுவர், சிறுமியருக்கு. மனக் காயங்களினால் பேசாத குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது ஒரு பயிற்சி கொடுப்பார்கள். பிரச்சினையை ஏதுவான கையில் எழுதச் சொல்ல வேண்டும். அதற்குப் பதில் அளிக்கையில் மாற்றுக் கையால் எழுத வேண்டும்.

இப்படி வலக்கையும் இடக்கையுமாக அவர்களே தங்கள் பிரச்சினைகளை எழுத வேண்டும். வலக்கை உதவி பெறுபவராகவும், இடக்கை உதவி தருபவராகவும் மாறும். இடக்கை பழக்கக்காரர்கள் இதை மாற்றிச் செய்ய வேண்டும். இப்படி ஒருவரே தன்னுடைய பிரச்சினையை ஒரு கையால் எழுதி இன்னொரு கையால் ஆலோசனை பெறச் செய்வதை ‘Other Hand Technique’ என்பார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னால் ‘Art Therapy’ படித்த காலத்தில் இந்தச் சிகிச்சைமுறையைப் பெரிதாகப் பயன்படுத்தியதில்லை. ஆனால், லூயி ஹேயின் தாக்கமும் அஃபர்மேஷன் முறையை நிறைய உடல் உபாதைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்த பின்தான் மாற்றுக் கைப் பழக்கம் பற்றிய தீவிர அனுபவம் வந்தது. இன்று ஒரு எண்ணம் ஸ்திரப்பட வேண்டும் என்றால், அதை முழு வாக்கியமாகக்கூட நான் எழுதுவதில்லை. அதன் ஆதாரச் சொல்லை இடது கையால் சில முறைகள் எழுதுவேன். அதுவே எனக்குப் போதுமானது. எந்தப் பிரச்சினைக்கு எப்படி அஃபர்மேஷன் எழுதுவது என்று அறியப் பயிற்சியும் தேர்ச்சியும் அனுபவமும் அவசியம். என்றாலும், ஒரு நல்ல சொல்லை மாற்றுக் கையால் தொடர்ந்து எழுதி வந்தாலே பலன் கிட்டும். இது என் அனுபவப் பாடம்.

2004-ல் சாண்டி கார்டன் என்ற ஆஸ்திரேலியக் கிரிக்கெட் உளவியல் ஆலோசகர் எம்.ஆர்.எப். பேஸ் பவுண்டேஷனுக்கு வந்து பயிற்சி அளித்தார். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சாந்த், வெங்கடேஷ் பிரசாத் போன்றவர்கள் அணியில் சேராத பாலகர்கள். விளையாட்டு வீரர்களுக்குக் குறுகிய கால உளவியல் ஆலோசனை தருவது எப்படி என்று கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்குக் கற்றுத்தந்தார். நொடிப்பொழுதில் தோன்றும் எண்ணத்தை மாற்றினால் விளையாட்டின் போக்கு மாறும் என்று வகுப்பெடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்த முக்கிய விஷயம் என்ன தெரியுமா? அஃபர்மேஷன்தான்!

கே: அலைபேசி என்பதே ஒரு சாபக்கேடாகிவிட்டது. படிக்க முடியவில்லை. வெளியே போகப் பிடிக்கவில்லை. நண்பர்களிடம்கூட சாட்டிங்தான் செய்கிறேன். சதா இன்ஸ்டாகிராமில்தான் இருக்கிறேன். அல்லது வாட்ஸ் அப், யூடியூப் வீடியோக்களைப் பார்க்கிறேன். தனியே வசித்துப் படிப்பதால் நிறைய நேரம் உள்ளது. எல்லாம் தெரிந்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. இது பிரச்சினையா அல்லது நான் அப்படி நினைக்கிறேனா?

ப: உங்கள் கட்டில் நீங்கள் இல்லை என்று நீங்கள் உணர்ந்தது பாராட்டுக் குரியது. மொபைலை வைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தாமல் இருப்பது மிகக் கடினம்தான். இதுவும் போதைதான். வெளி நடமாட்டத்தை அதிகரியுங்கள். உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு என்று மொபைல் வைத்துக்கொள்ள முடியாத காரியங்களில் முதலில் தொடங்குங்கள். இரவில் தூங்கும்போது மொபைலை அருகில் வைக்காதீர்கள். அடுத்த அறையில் வைத்துவிடுங்கள். 90 சதவீத வாட்ஸ் அப் குழுக்களிலிருந்து வெளியேறுங்கள். பெரும்பாலும், அலைபேசியை ம்யூட்டில் வையுங்கள். சில உயர்ந்த நோக்கங்கள் வைத்து உங்கள் நேரத்தை அதற்குச் செலவழியுங்கள்.

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும்
மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்
டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, இந்து தமிழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: vetrikodi@hindutamil.co.in
கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

(தொடரும்)
கட்டுரையாளர், மனிதவள பயிற்றுநர்.

மனசு போல வாழ்க்கை 16: வாழ்க்கையை வழிநடத்தும் கற்பனை




டாக்டர் ஆர். கார்த்திகேயன்

அசாம், மேகாலயாவுக்குச் கடந்த ஆண்டு சென்றிருந்தேன். அவ்வளவு அழகான ஒரு பகுதியை இதுவரை நான் பார்த்ததில்லை. சிரபுஞ்சி செல்ல ஒரு படு சுமாரான வேன் வந்தது. புறப்படும்போதே லேசான மழை.

மலைப்பாதை பல இடங்களில் அபாயகரமானதாக இருந்தது. ஓட்டுநர் அசரவேயில்லை. எதையோ மென்றுகொண்டே ஒவ்வொரு வளைவிலும் சர் சர்ரென்று திருப்பியது பலர் வயிற்றைக் கலக்கியது.

நிறையப் பாடங்கள் கற்பீர்கள்!

எட்டிப் பார்த்தால் பள்ளத்தாக்கு. கண்ணுக்கு எட்டிய பக்கத்தில் எல்லாம் ஒரு அருவி சன்னமாக வழிந்துகொண்டிருந்தது. ஒரு இடத்தில் ஏழு அருவிகள் ஒட்டுமொத்தமாகத் தெரியும் அபூர்வக் கோணம் கிடைத்தது. அனைவரும் இறங்கி மொபைலில் ஒளிப்படங்கள் சுட்டுத் தள்ளினோம். சிரபுஞ்சியில் ஒரு குகைக்கு டிக்கெட் போட்டு அனுப்பினார்கள். குனிந்தும் தவழ்ந்தும் இருட்டில் ஊர்ந்தும் வழுக்கி விழாமல் வெளியே வந்தது படு சுவாரசியமான அனுபவம். வரும் வழியில் காசிப் பழங்குடிகள் மஞ்சள் உள்ளிட்ட பல விளைபொருள்களை ஆகியவற்றை விற்றனர். குளிரும் பசியும் கொண்ட நேரத்தில் அங்கே குடித்தது
தேநீரே அல்ல; தேவாம்ருதம்!

கட்!

பயணக்கதை போதும். இப்போது சொல்லுங்கள். எப்படி உணர்கிறீர்கள்? மனத்தளவில் எங்கு இருக்கிறீர்கள்? என்ன பார்த்தீர்கள்? குறிப்பாகக் கேட்டால் நான் சென்ற வேன் என்ன கலர்? ஓட்டுநருக்கு என்ன வயது? குகையில் எவ்வளவு வெளிச்சம் இருந்தது? மஞ்சள் தவிர வேறென்ன பொருட்கள் விற்கப்பட்டன? தேநீர்க் கோப்பையில் குடித்தேனா கண்ணாடி கிளாஸில் குடித்தேனா? உங்கள் மனத்தில் ஓடிய படத்தில் என்னென்ன பார்த்தீர்கள்? உங்களுடன் இதே கட்டுரையைப் படித்த தோழியிடம் இதே கேள்விகளைக் கேளுங்கள். உங்களுக்குள் ஓடிய படத்தை அவர்கள் படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நிறையப் பாடங்களைக் கற்பீர்கள்.


வாக்கியத்துக்குக் கதை வடிவம்

மனத்தின் வேலை சொற்களைப் படமாக மாற்றுவது. அந்தப் படமாக்க வேலையில் நிறைய எடிட்டிங் நடக்கும். இல்லாதது சேரும். இருப்பதைப் பெரிதுபடுத்தும். அல்லது சிறிதுபடுத்தும். அல்லது முழுவதுமாக நீக்கிவிடும். ஆனால், மன நிலைக்கு ஏற்ப ஒரு படம் தயாராகும். இப்படிப் படமாவதுதான் பின்னணி இசை சேர்ப்பதுபோல் உணர்வுகளைக் குழைத்து உருவேற்றிக்கொள்ளும். பின்னர் அந்தப் படம் ஒரு நினைவாக நெஞ்சில் நிற்கும். அந்த நினைவு தரும் பாதிப்புகளை உடல் வாங்கிக் கொள்ளும்.

பின் செயல்கள் அதற்கு இசைந்து கொடுக்கும். அதனால் நீங்கள் செய்யும் கற்பனைதான் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துகிறது. அஃபர்மேஷன் எனும் நேர்மறை சுய வாக்கியங்கள் உங்கள் கற்பனையைத் தூண்டக்கூடியவை. அதன் வீரியம்கூடிட அந்த வாக்கியத்தை ஒரு கதையாய் மனத்தில் கற்பனை செய்து பாருங்கள். இதற்கு Creative visualization என்று பெயர்.



பொய்கூட நிஜமாகும்

உங்களுக்கு மேடையில் பேசப் பயம் என்றால் உங்கள் பயம் நீங்கள் தடுமாறுவதைப் போன்ற கற்பனையைத்தான் தரும். அதற்குப் பதில், “நான் இயல்பாக ரசித்துப் பேசுகிறேன்!” என்று ஒரு அஃபர்மேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதைக் கற்பனை சக்தி மூலம் பலப்படுத்தலாம். உங்கள் கற்பனை கீழ்க்கண்டவாறு இருக்கலாம், “நான் மேடை ஏறும்போது கரகோஷம் கேட்கிறது.

நான் உற்சாகமாக ஏறி மைக்கைப் பிடிக்கிறேன். மக்கள் என்னை ஆர்வத்தோடு எதிர் நோக்குகிறார்கள். நான் மிகவும் இயல்பாகப் பேச்சை ஆரம்பிக்கிறேன். நகைச்சுவை தானாக வருகிறது. ஒவ்வொரு சிறப்பான கருத்துக்கும் கை தட்டல் கிடைக்கிறது. எனக்குப் பேசப் பேசத் தெம்பு பிறக்கிறது. கூட்டம் என் கட்டில் இருப்பதை உணர்கிறேன். என் பேச்சாற்றல் எனக்குப் பெருமையை அளிக்கிறது!”

இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்தாலும் பொய்க்கும் நிஜத்துக்கும் பேதம் கிடையாது, மனத்தளவில். அதனால் உங்களுக்கு எது தேவையோ அதை அடைந்ததுபோலவே கற்பனை செய்யுங்கள். நீங்கள் அதுவாகவே மாறுவீர்கள். சந்தோஷமாக இல்லையா? சந்தோஷமாக இருப்பதைப் போலக் கற்பனை செய்யுங்கள். நடியுங்கள். நம்புங்கள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனம் மாறியிருக்கும்!

“Fake it till you Make it!” என்று இதைச் சொல்வார்கள். இதன் அடிப்படையில் நம்பிக்கையும் கற்பனையும் கலந்த சுய வாக்கியங்கள் கண்டிப்பாக இருக்கும். சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாட அவர் கையாளும் உத்தி என்ன தெரியுமா? விளையாடப் போகும் முன்னரே, அதாவது 15 நிமிடங்கள் முன்னரே, அவர் ஆட வேண்டிய ஆட்டத்தை மனத்தால் கற்பனை செய்து பார்ப்பாராம். அது ஊக்கத்தையும் கவனக் குவியலையும் தரும்! உங்களை வாட்டும் பிரச்சினைக்கு ஒரு கற்பனை சிகிச்சை செய்து பாருங்களேன்!

கேள்வி: எனக்கு வயது 39. இதுவரை முயன்ற எல்லாத் தொழில்களிலும் தோல்வி அடைந்துவிட்டேன். இப்போது மீண்டும் வேலைக்குச் சேர்ந்துள்ளேன். என் குழந்தைகளுக்கு முன்னால் தோல்வியாளனாகத் தெரிவது எனக்கு அவமானமாக இருக்கிறது. மீண்டும் வியாபாரம் செய்யத் தயக்கமாக உள்ளது. வாழ்க்கையின் இறுதியிலாவது வெற்றி பெற்ற வியாபாரியாகிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், தோல்வி பயம்தான் அதிகமாக உள்ளது. எப்படி இதை மாற்றுவது?

பதில்: நீங்கள் தோல்வியாளர் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். வெற்றி தோல்வியைத் தாண்டி உங்களுக்கு வியாபாரம் செய்யப் பிடிக்கிறதா? வெற்றிபெற முடியாமல் போனதற்கான காரணங்கள் புரிந்தனவா? வேலையோ வியாபாரமோ பயம் உங்கள் முயற்சியைத் தடுக்கும். குழந்தைகளுக்காக, ஊருக்காக வாழாமல், உங்கள் ஆர்வத்துக்கும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிறந்தது எது என்பதை ஆலோசித்து அதைச் செய்யுங்கள். தொழில்முறை ஆலோசனையும் உங்களுக்கு உதவலாம்.

(தொடரும்)
கட்டுரையாளர்: மனிதவளப் பயிற்றுநர்

கல்வியைப் பரவலாக்கிய பெருந்தகை




கோபால்

காமராஜர் நினைவு நாள்: அக்டோபர் 2

தமிழ்நாட்டு முதல்வர்களில் பலர் பல சாதனைகளைப் புரிந்திருக்கி றார்கள். தமிழகம் இன்று பல அளவுகோல்களில் முதல் இடத்தில் இருப்பதற்குப் பங்களித்திருக்கிறார்கள். அவர்களில் கல்வித் துறையில் தனிக் கவனம் செலுத்தியவர்; வறுமையாலும் பிறப்பாலும் யாருக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகப் பல நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் காமராஜர். இதற்காக லட்சக்கணக்கான குடும்பங்களால் தலைமுறை தலைமுறையாக நன்றியோடு அவர் நினைவுகூரப்படுகிறார். அவருடைய ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்று தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.

அனைவருக்கும் கல்வி

குலக் கல்வித் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால், தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலகியதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் 1954இல் காமராஜர் முதல்வரானார். 1963வரை அப்பதவியில் இருந்தார். ஆறாம் வகுப்புக்கு மேல் கல்விக்கூடக் கல்வியைத் தொடராதவர் காமராஜர். பின்னர் சொந்த முயற்சியில் பல நூல்களைப் படித்தும் அறிவைப் பெருக்கிக்கொண்டார். இருந்தாலும், முறையான கல்வி பெறாததால் பொது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், முறைசார் கல்வியின் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்தியிருந்தன.

எல்லோருக்கும் கல்வி இன்றியமையாதது என்பதை உணர்ந்திருந்த அவர், முதல்வரான பிறகு அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்வதில் தனிக் கவனம் செலுத்தினார். அவர் தொடங்கிய திட்டங்கள் வறுமையில் வாடியவர்களை மட்டுமல்லாமல் அதுவரை கல்வி மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் கல்வி பெற வழிவகுத்தன.

கல்வித் துறைச் சாதனைகள்

காமராஜர் முதல்வரானபின் நிதிநிலையைக் காரணம் காட்டி கல்விக்கு நிதி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஒரே நபரை (சி.சுப்பிரமணியம்) கல்வி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் ஆக்கினார். மாநில பட்ஜெட்டில் 30% கல்விக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டார்.

காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தமிழகத்தின் 15,000 கிராமங்களில், 6,000 கிராமங்களில் மட்டுமே ஏதேனும் ஒரு பள்ளியாவது இருந்தது. பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் இருந்த சிறார்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். வறுமையில் உழன்ற பெற்றோர் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்ததே இதற்குக் காரணம். இதனால் 1960-ல் அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி இலவசமாக்கப்பட்டது.

1964-ல் 11-ம் வகுப்புவரை கல்வி இலவச மாக்கப்பட்டதற்கும் அவரது ஆட்சியில் போடப்பட்ட அடித்தளங்களே காரணம். 1957இல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962 இல் 29,000 ஆக உயர்ந்தது. 1957-ல் 814 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962-ல் 1995 ஆனது. பள்ளியில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் 19 லட்சத்திலி ருந்து 36 லட்சமாக அதிகரித்தது.

இவை தவிர காமராஜரின் ஆட்சிக் காலத்தில்தான் ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடம் தேடி ஆசிரியரே சென்று கல்வி கற்பிக்கவே இந்த ஓராசிரியர் பள்ளிகள். அதேபோல் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் நடைமுறையும் தொடங்கப்பட்டது.

உணவு, உடை கொடுத்த உத்தமர்

தொடக்கக் கல்வி இலவசமாக்கப் பட்டதன் அடுத்த கட்டமாகப் பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்களின் பசிப் பிணியைப் போக்கும் பணியையும் அரசே ஏற்றது. 1962-ல் அரசுப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் அறிமுகப்படுத்தினார். சென்னையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக அந்தக் காலகட்டத்தில் மாபெரும் தொகையான ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தவிர வசதிபடைத்த மக்கள் பணமாகவும் உணவுப் பொருட்களாகவும் இந்தத் திட்டத்துக்குக் கொடை அளிக்க ஊக்குவிக்கப்பட்டனர். அப்படிக் கொடை அளித்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன்.

இப்படிக் காமராஜரின் மூளையில் உதித்து பலரது பங்களிப்பில் உருப்பெற்ற இந்தத் திட்டம், தேசத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது. அதேபோல் மாணவர்களுக்கிடையே சமத்துவத்தைப் பேண அரசுப் பள்ளிகளில் இலவச சீருடையை காமராஜர் அறிமுகப்படுத்தினார். அரசியலில் செய்த சாதனைகளுக் காகவும் பொதுவாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த நேர்மை, எளிமை ஆகிய மேம்பட்ட குணங்களுக்காகவும் ‘பெருந் தலைவர்’ ‘கிங்மேக்கர்’, ‘கறுப்பு காந்தி’ எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார் காமராஜர். கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக ‘கல்விக் கண் திறந்த காமராஜர்’ என்று இன்றளவும் மக்களால் போற்றப்படுகிறார். அது வெற்று அடைமொழி அல்ல, தமிழக மக்களின் நெஞ்சிலிருந்து நவிலப்படும் நன்றி.
மழைக்காலத்தில் படையெடுக்கும் பாம்புகள்: குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்க என்ன செய்யலாம்?



மதுரை

மதுரையில் மழைக்காலம் தொடங்கியதால் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்கத்தொடங்கியுள்ளன. மதுரை மட்டுமல்ல பொதுவாக எல்லா இடங்களிலுமே இச்சிக்கல் இருக்கத்தான் செய்யும்.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் மழை பெய்கிவதனால், அருகில் உள்ள முட் புதர்கள், வயல் வெளிகள், வனப்பகுதியில் இருந்து பாம்புகள், குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவு வருகின்றன.

அச்சமடையும் மக்கள், ஆட்களை அழைத்து அந்த பாம்புகளை அடித்துக் கொல்லுகின்றனர். மிக சிலரே, அடிக்காமல் அதை விரட்டிவிடுகின்றனர். தெரியாமல் மிதித்துவிடுவதால் பாம்புகள் கடிப்பதால் உயிரிழப்பும் மதுரையில் அதிகமாகி வருகிறது.

இதுகுறித்து மதுரை ஊர்வனம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வா கூறுகையில், ‘‘மழைக்காலம் தொடங்கியதும் பாம்புகள் போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் மனிதன் வாழும் பகுதிக்கு படையெடுப்பது இயல்பே. அதற்கு சில காரணங்கள் உண்டு. மழை நீரால் பாம்பின் வாழ்விடமான வலைகள்(பொந்துகள்), வற்றிய நீர்நிலைகள் நீரால் மூழ்கிவிடுகின்றன.

மனிதர்கள் வாழும் வீட்டின் கத கதப்பான சூழல் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்களை ஈர்க்கிறது. மழைக் காலத்தில் தவளை, தேரை போன்ற உயிரினங்களை சாப்பிட பாம்புகள் நடமாட்டம் அதிகரிக்கிறது. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்கக் காலம் என்பதாலும் அவை வெளியே நடமாடத்தொடங்குகின்றன.

கதகதப்பான தார் சாலை குளிர் ரத்த விலங்குகளுக்கு உடல் வெப்பத்தை சீராக்க உதவுவதாலும் அவை வாழ்விடத்தை வெளியேறுகின்றன. எல்லா பாம்பும் நஞ்சுள்ள பாம்புகள் அல்ல. நல்லபாம்பு, கட்டுவிரியன், விரியன், சுறுட்டைவிரியன் ஆகிய நான்கு பாம்புகள் மட்டுமே அதிக மனித உயிர் இழப்புக்குக் காரணமாகிறது.

இவற்றிடம் சற்று எச்சரிக்கையாக இருந்தால்போதும். பாம்பு கடித்தவுடன் பதட்டப்படாமல், அழுகை, கத்துதல், ஓட்டம், ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவிக்கு ஒரு நபரையோ அல்லது 108 அவசர ஊர்தி அல்லது இருக்கும் வாகனத்தில் அரசு மருத்துவமன செல்ல வேண்டும்.

இருக்க கயிறு கட்டுதல் வேண்டாம். கத்தியால் வெட்டி, உறிஞ்ச வேண்டாம். தனியார் மருத்துவமனை அல்லது வேறு வகை வைத்தியம் கால தாமதம் ஏற்படும். பாம்பு க்கடிக்கு நஞ்சு முறிவு மருந்து (ANTI SNAKE VENOM) சரியான நேரத்தில் கொடுக்கப்பட உயிர் பிழைத்து கொள்ளலாம்.

பாம்பைக் கண்டவுடன் அதை கொல்ல முற்படாமல் வனத்துறைக்கு (0452 2536279) அல்லது உங்கள் அருகில் உள்ள பாம்பு மீட்பாளர் உதவியை நாடலாம்" என்றார்.

பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

வீட்டைச் சுற்றி துய்மையாக வைத்துக் கொள்ளவும். பழைய பொருட்கள் அடசலாக வைக்காமல், குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து வெளி வரும் கழிவு நீர் குழாய்கள் சல்லடை போன்ற வலை கொண்டு மூடி வைக்க வேண்டும். தூங்கும் முன் கட்டில்கள், தலையணை, மெத்தை விரிப்பு, மெத்தை அடியில் சோதனை இட வேண்டும். தூங்கும் அறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயிற் கதவின் கீழ் அல்லது பக்கவாட்டு இடைவெளி இல்லாமல் நிரந்தரமாக அடைத்து வைக்க வேண்டும். கழிவறை மற்றும் குளியலறை போதிய வெளிச்சம் மற்றும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

காலணிகளை பொதுவாக ஷு (shoe) தரையில் வைக்காமல், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். நன்கு சோதித்த பின்பு அணிய வேண்டும்.

வாகனத்தை குறிப்பாக கைப்பிடி, முன் பகுதி நன்கு சோதனை செய்து பின் இயக்குவது நல்லது.

குப்பைகள் மற்றும் எலிகளை வீட்டுக்குள்ளும், வீட்டின் சுற்றுப் பகுதியில் இல்லாமல் பார்த்து கொள்வது. இரவில் டார்ச் விளக்கு இல்லாமல் வெளியில் செல்வது கூடாது. தோட்டத்து வேலை செய்பவர்கள் வேலை செய்யும் இடத்தை நன்கு சோதனை இட வேண்டும், சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...