Thursday, December 26, 2019

Suria Grahanam

இன்று, டிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும். ஆனால், சூரிய கிரகணம் தெரியும் அளவு மற்றும் தெளிவு ஊருக்கு ஊர் மாறுபடலாம். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
'டாஸ்மாக்' விடுமுறை சரக்கு பதுக்கிய வக்கீல் கைது

Added : டிச 26, 2019 00:43

தஞ்சாவூர்,:தஞ்சை அருகே, 10 ஆயிரம் ரூபாய்க்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற வழக்கறிஞரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அடுத்த, மெலட்டூர் - இரும்புதலை சாலையில், நேற்று முன்தினம் இரவு, பாபநாசம் போலீசார், வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த, 'டாடா பொலிரோ' வாகனத்தை சோதனை செய்தனர். அதில், மூன்று அட்டை பெட்டியில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்தது. போலீசார் பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அரித்துவாரமங்கலம் ராஜ்குமார், 35; வழக்கறிஞர் என்பதும், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மூன்று நாட்கள், 'டாஸ்மாக்' கடைகள் விடுமுறை என்பதால், மது பாட்டில்கள் வாங்கி சென்றதும், தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், ராஜ்குமாரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பொங்கல் பொருள் விற்பனை? * உணவு வழங்கல் துறை எச்சரிக்கை

Added : டிச 26, 2019 00:39

சென்னை: 'பொங்கல் பரிசு பொருட்களை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவு வழங்கல் துறை எச்சரித்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட உள்ளது. தற்போது, கடைகளுக்கு, பொங்கல் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மாதா மாதம், கடைகளுக்கு அனுப்பப்படும் ரேஷன் பொருட்களின் விற்பனை முடிந்ததும், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற, விற்பனை முனைய கருவியில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், பொங்கல் பரிசை அதில் பதிவு செய்தால், அது, காசுக்கு விற்பனை செய்த கணக்காகி விடும் என்பதால், அதைத் தவிர்க்குமாறு, ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்த, மாவட்ட வழங்கல் அதிகாரிகளை, உணவு வழங்கல் துறை எச்சரித்துள்ளது.
கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மனைவி, மகள், மருமகள் போட்டி

Added : டிச 26, 2019 01:21

ராமநாதபுரம், : முதுகுளத்துார் ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக டிச.30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதுகுளத்துார் தாலுகா பூசேரி கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் காங்., கிளை தலைவராக இருக்கிறார். இவரது மனைவி நீலாவதி 50, பூசேரி கிராம ஊராட்சித் தலைவருக்கு போட்டியிடுகிறார்.

அதே நேரம் அவரது மகள் இந்துமதி 32, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். இதில் நீலாவதிக்கு ஏணி சின்னமும், மகள் இந்துமதிக்கு பூட்டு சாவி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலைச்சாமியின் சகோதரர் மகனின் மனைவி பிரேமா 33, அப்பதவிக்கு போட்டியிடுகிறார்.

இது குறித்து மலைச்சாமி கூறுகையில், எனது மனைவியின் மனுவை வாபஸ் பெறுவதற்கு தாமதமாகிவிட்டது. மகள் இந்துமதிக்குதான் தற்போது ஆதரவு திரட்டி வருகிறேன், என்றார். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் ஒரே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் களத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலை., மத்திய அரசின் தலையீடு இருக்காது: 

தெளிவுபடுத்தியது மத்திய மனிதவள அமைச்சகம்

Updated : டிச 26, 2019 00:11 | Added : டிச 25, 2019 22:40




சென்னை:மத்திய அரசின் மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து பெற்றாலும், தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்படும் என, மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும், கல்வி நிறுவனங்களின் தரத்தை சர்வதேச அளவில் எடுத்துக்காட்டும் வகையிலும், மத்திய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தர வரிசை பட்டியல்

இதன்படி முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களை, தேர்வு செய்து அவற்றின் கல்வித்தரம், உள்கட்டமைப்பு, தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டுதோறும் தேசிய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறும், உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச அளவிலான உள்கட்டமைப்பு வசதி, மாணவர் சேர்க்கை, கல்வியின் தரம், பேராசிரியர்களின் தரம், மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து என்ற கவுரவத்தை மத்திய அரசு வழங்குகிறது.

'இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ்' என்ற பெயரில், நாட்டிலுள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு, சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுகிறது.தமிழகத்தில், ஐ.ஐ.டி., சென்னை, வி.ஐ.டி., பல்கலை மற்றும் அமிர்தா பல்கலை ஆகியவற்றுக்கு, இந்த அந்தஸ்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் அண்ணா பல்கலைக்கும், இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்ற அந்தஸ்தை வழங்க, மத்திய அரசு முன்வந்துள்ளது.

இது குறித்து, 2018ல் அண்ணா பல்கலை அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, சிறப்பு அந்தஸ்து வழங்கும் உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன், தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் வழங்குமாறு, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன், கடிதம் அனுப்பியது.

இந்த கடிதத்தை தொடர்ந்து, தமிழக அரசு அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதல் கடிதம் வழங்க, காலம் தாழ்த்தி வருகிறது. இதுகுறித்து முடிவு செய்வதற்கு, நான்கு அமைச்சர்கள் அடங்கிய ஆய்வு கமிட்டி ஒன்றை, தமிழக அரசு அமைத்துள்ளது.

மேம்பட்ட அந்தஸ்து

அண்ணா பல்கலையை, இரண்டாக பிரித்து, அதில் ஒன்றை இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்ற உயர் அந்தஸ்துக்கும், மற்றொன்றை தமிழகத்திலுள்ள இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களுக்கும், இணைப்பு அந்தஸ்து வழங்கும் பல்கலையாகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து பெறும் அண்ணா பல்கலைக்கு, மத்திய அரசை முழுமையாக நிதி ஒதுக்குவதற்கும், தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மேம்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட பின், தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கையில், எந்தவித மாற்றமும், மத்திய அரசால் மேற்கொள்ளப்படாது.

தற்போது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபடியே, மேம்பட்ட அந்தஸ்து வந்தபிறகும், அண்ணா பல்கலை செயல்பட வேண்டும்.இதில், மத்திய அரசின் சட்டங்களோ, நிபந்தனைகளோ விதிக்கக்கூடாது என்று தமிழக அரசு தரப்பில், மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளன. அதேநேரம், அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், அந்த நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடுமோ என, கல்வியாளர்கள் தரப்பிலும், தமிழக உயர்கல்வித்துறை தரப்பிலும் சந்தேகங்கள் எழுந்தன.

இது குறித்து, நம் நாளிதழில், சில தினங்களுக்கு முன் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், அண்ணா பல்கலையின் மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து குறித்து, தமிழக அரசுக்கு, மத்திய அரசு தெளிவான விளக்க கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை இயக்குனர் கீர்த்தி, தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத் ராம் சர்மாவுக்கு, அக்., - டிசம்பரில் அனுப்பிய கடிதங்கள், நம் நாளிதழுக்கு கிடைத்துள்ளன.

நிர்வாக தலையீடு

அந்த கடிதங்களில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள அண்ணா பல்கலைக்கு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்ற மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும், அதன் செயல்பாடுகளில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. மத்திய அரசு, எந்த வகையிலும் நிர்வாக தலையீடுகளை மேற்கொள்ளாது.

தற்போது அண்ணா பல்கலை, தமிழக அரசின் சட்டத்தின் கீழ், எந்த நிர்வாகத்தின் அடிப்படையில் செயல்படுகிறதோ, அதே நிலை நீடிக்கும். மேலும், அண்ணா பல்கலை எந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறதோ, அதிலும் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான நிதியை, விரைவாக ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால், இட ஒதுக்கீட்டுக் கொள்கையிலோ, நிர்வாக நடைமுறையிலோ, மத்திய அரசின் தலையீடும், கட்டுப்பாடும் இருக்காது என்பது தெரிய வந்துள்ளது.தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக முடிவெடுத்து, மத்திய அரசுக்கு ஒப்புதல் கடிதம் அளித்து, மேம்பட்ட சிறப்பு அந்தஸ்தை உடனடியாக பெற வேண்டும் என, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
No doctor in Tiruchy, special kids forced to go to Thanjavur for IQ test

During the IQ test, children are often too scared to answer due to unfamiliar surroundings and people.

Published: 24th December 2019 02:29 PM |

By Adilin Beatrice


Express News Service

TIRUCHY: The absence of a clinical psychologist at Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH) is forcing parents of intellectually challenged children to take the kids to Thanjavur Medical College Hospital to undergo IQ test and certificates.

The certificate is compulsory for these children to get scribes for exams. “We were asked to take our son to Thanjavur Medical College Hospital to get the IQ certificate. Tiruchy is also a centre but we do not know why MGMGH has no clinical psychologist.

It is difficult for us to take them to Thanjavur every time. Our children are asked to bring 8th or 10th certificates even to work in a supermarket. They would not be able to write by themselves even with the extra time the board provides to them,” said Malathi B, mother of a child with cerebral palsy.

“The struggle is not just for me. All parents of differently-abled children take their kids to Thanjavur Medical College Hospital to apply for a scribe, which is difficult. We need to be there at 7.30 am to start the procedure. Our children are unable to cope as it is a huge adjustment.

During the IQ test, children are often too scared to answer due to unfamiliar surroundings and people. Doctors judge them on this and mark them with a lesser IQ, which means they would not get a scribe. If they write the exam by themselves, they would be unable to pass,” said Joseph Sahayaraj M, father of a disabled boy.

Starting from this year, the Education department has asked differently-abled people to acquire IQ certificates from government hospitals to apply for a scribe. Until last year, they got certificates from private hospitals in Tiruchy.

Because of the new rule, they are now forced to go to Thanjavur Medical College Hospital. “Most parents do not send their children with disabilities to school. It would be good if the government provides facilities to make things easier,” said Martin S, member of Trichy Disability Forum, a network of NGOs working for persons with disabilities in Tiruchy.

A medical officer at MGMGH said, “We have requested our director to appoint a clinical psychologist, but it’s a long process. It would take some time for someone to be appointed.”
Southern Railway introduces tourist tickets in Chennai suburban areas
There will be no restriction on the number of trips and the ticket holder can board and get down at any station.

Published: 25th December 2019 05:09 AM 

By Express News Service


CHENNAI: Southern Railway has introduced tourist tickets in Chennai suburban routes. Passengers can travel anywhere in suburban section, Beach-Chengalpattu, Beach-Tiruvallur, suburban terminal-Tiruvallur, suburban terminal-Gummidipoondi and Beach-Velachery MRTS section.

There will be no restriction on the number of trips and the ticket holder can board and get down at any station. “The tickets are valid till midnight of the day and can be booked three days in advance”, the release said.

    NEWS TODAY 25.01.2026