Wednesday, August 26, 2020

கொரோனா பரிசோதனைக்கு பயந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், மலை உச்சிக்கு ஓடிவிட்டனர்.

Added : ஆக 25, 2020 23:32

சேலம்; கொரோனா பரிசோதனைக்கு பயந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், மலை உச்சிக்கு ஓடிவிட்டனர்.

சேலம் மாவட்டம், கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி, தானமூர்த்திகாட்டைச் சேர்ந்த, 53 வயது விவசாயிக்கு, கொரோனா இருப்பது தெரிந்தது.அவரை, கொளத்துார் சுகாதாரத் துறையினர், மேச்சேரி காவிரி பாலிடெக்னிக்கில் தனிமைப்படுத்தினர்.விவசாயி வீடு அருகே வசிக்கும் மக்களுக்கு, சுகாதாரத் துறையினர், நேற்று காலை, தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொண்டனர்.

இதற்கு அச்சப்பட்டு, அப்பகுதியில் வசித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரு மகன்கள், அருகிலுள்ள கருங்கரடு மலை உச்சிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.அவர்களை பரிசோதனைக்கு அழைத்தும் வர மறுத்து விட்டனர்.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த, 17 பேருக்கு பரிசோதனை செய்த சுகாதாரத் துறையினர், முடிவு வெளியான பின், மலைக்கு சென்று, அங்கு பதுங்கியவர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
பத்தாவது முறையாக கொரோனா நிவாரணம்

Added : ஆக 26, 2020 06:06





மதுரை:மதுரையில் யாசகம் பெற்று பூல்பாண்டி என்பவர் கலெக்டர் வினய்யிடம் 10வது முறையாக கொரோனா நிதி வழங்கினார்.

பொதுச்சேவையில் ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.துாத்துக்குடியை சேர்ந்த இவர் மார்ச்சில் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. மதுரையில் பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று முதல்முறையாக ரூ. 10ஆயிரத்தை மே யில் வழங்கினார்.

அதையடுத்து இதுவரை 10 முறை தலா ரூ.10ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1லட்சம் யாசகம் பெற்று நிவாரணமாக வழங்கியுள்ளார். இவருக்கு சுதந்திர தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

அவர் கூறியதாவது: என்னை போல யாரும் யாசகம் கேட்டு பிழைக்கக்கூடாது. உழைத்து வாழ வேண்டும். பணம் மீது எனக்கு ஆசை இல்லாத காரணத்தால் தான் அதை யாசகம் பெற்று சேவைக்காக பயன்படுத்துகிறேன், என்றார்.

பே.டி.எம்., அமேசானில் வீட்டு சிலிண்டர் முன்பதிவு

பே.டி.எம்., அமேசானில் வீட்டு சிலிண்டர் முன்பதிவு

Added : ஆக 26, 2020 00:24

சென்னை; வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'அமேசான், பே.டி.எம்.,' செயலிகளில் பதிவு செய்யும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன.

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 2.38 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அந்நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், குரல் வழி தேர்வு, எஸ்.எம்.எஸ்., - இணையதளம், மொபைல் செயலி, வாட்ஸ்ஆப் எண் ஆகியவற்றில், சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.தற்போது, கூடுதல் சேவையாக, 'பே.டி.எம்., அமேசான்' ஆகிய நிறுவனங்களின் செயலி வாயிலாகவும், சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன. அவற்றின் வழியே, சிலிண்டருக்கான கட்டணத்தையும் செலுத்தலாம்.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமேசான், பே.டி.எம்., செயலியில் சிலிண்டர் பதிவு செய்ய, அவற்றில் உள்ள, 'பே பில்' என்ற பகுதிக்கு சென்று, காஸ் சிலிண்டர் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.பின், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து, பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவிட்டு, சிலிண்டர் பதியலாம்; காஸ் ஏஜென்சி வாயிலாகவே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அரசு பஸ்களை வாடகைக்கு எடுக்க ஆளில்லை

அரசு பஸ்களை வாடகைக்கு எடுக்க ஆளில்லை

Added : ஆக 25, 2020 23:55 | 

விருதுநகர்; கொரோனா ஊரடங்கால் முடக்கப்பட்ட அரசு பஸ்களை வாடகைக்கு விட தயாராக இருந்தும் யாரும் முன் வராததால் நிதியின்றி போக்குவரத்துக்கழகங்கள் திணறி வருகின்றன.

ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள், 21 ஆயிரம் பஸ்களுடன் சென்னை, மதுரை, கோவை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், நெல்லை மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் என எட்டு மண்டலங்களை கொண்டது அரசு போக்குவரத்து கழகம். மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சம்பளம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏற்கனவே கடும் நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் தடுமாறி வருகிறது.

ஊரடங்கால் போக்குவரத்து முடங்கி மேலும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியத்தை அரசு வழங்குகிறது. ஆனால் 2019 மே முதல் ஓய்வு பெற்றோருக்கு பணப் பலன்கள் வழங்கவில்லை. சம்பளம் தவிர இதர செலவுகளை போக்குவரத்து கழக மண்டல நிர்வாகங்கள் ஈடுகட்ட முடிவு செய்தது.

இதன்படி முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அரசு விரைவு பஸ்களை வாடகைக்கு விட அறிவிப்பு வெளியானது.ஊரடங்கால் தொழில்கள் முடங்கிய நிலையில் பஸ்களை வாடகைக்கு எடுக்க யாரும் முன் வரவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்களை இயக்கினால் கட்டுபடியாகாது என பலரும் ஒதுங்கி கொண்டனர்.

இதனால் போக்குவரத்துக்கழகங்கள் செய்வதறியாது திகைத்துள்ளன.அரசு பஸ்களை விரைவில் இயக்கி போக்குவரத்துக்கழக வருவாய்க்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை

அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை

Updated : ஆக 26, 2020 01:12 


புதுடில்லி: பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வின்போது, மெட்ரோ ரயில் சேவை மற்றும் உள்ளூர் புறநகர் ரயில் சேவைகளை இயக்க அனுமதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்லுாரி, பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது; அதே நேரத்தில், தனி கட்டட தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுதும், மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே, 31 வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன், 1ம் தேதி முதல், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கட்டுப்பாடு:

இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு, வரும், 31ம் தேதியுடன் முடிகிறது.அதையடுத்து, நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், செப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. ஏற்கனவே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்ட தளர்வின்போது, மெட்ரோ ரயில் சேவை மற்றும் உள்ளூர் புறநகர் ரயில் சேவைகளை அனுமதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. நாடு முழுதும், 31 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 58 ஆயிரத்துக்கும் அதிக மானோர் உயிரிழந்து உள்ளனர். மஹாராஷ்டிரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில், வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மாநிலங்களில் உள்ள நிலைமைக்கு ஏற்ப, ஊரடங்கு தளர்வு குறித்து, மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுதும், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகளை துவக்க அனுமதி அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், தனி கட்டடத்தில் இயங்கும் தியேட்டர்கள் அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது. மால்கள் மற்றும் பல திரைகள் கொண்ட தியேட்டர்களுக்கு அனுமதி கிடையாது. தனி கட்டடத்தில் இயங்கும் தியேட்டர்களிலும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது.

ஆனால், அவ்வாறு திறப்பது, பொருளாதார ரீதியில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சாதகமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. மிகப் பெரிய அரங்கங்களும், பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது. தற்போதைய நிலையில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், அதிகபட்சம், 50 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'வந்தே பாரத்'

பள்ளி, கல்லுாரிகள் தற்போதைக்கு திறக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக, பெற்றோரின் கருத்துக்களை பல மாநிலங்கள் கேட்டு வருகின்றன. அதே நேரத்தில், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையங்கள், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய நிர்வாகவியல் மையங்கள் மற்றும் பல்கலைகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான தடை தொடரும். வெளிநாட்டு விமான சேவைக்கான தடையும் தொடரும். அதே நேரத்தில், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட சில மார்க்கங்களில் மட்டும், சர்வதேச விமான சேவை இருக்கும். பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் போன்றவற்றுக்கான தடை தொடரும்.

அதே நேரத்தில், 'பார்'களில், மதுபானங்களை வாங்கி செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படலாம் என, தெரிகிறது. பல்வேறு அமைச்சகங்களுடனான ஆலோசனைக்குப் பின், அடுத்த சில நாட்களில், முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'இ - பாஸ்' தேவையில்லை'

மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் பயணத்துக்கு எந்தத் தடையும் இல்லை' என, மூன்றாம் கட்ட தளர்வின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களில் இது கடைப்பிடிக்கப்படவில்லை. அதையடுத்து, 'மாவட்டங்கள் இடையே மற்றும் மாநிலங்கள் இடையேயான போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது; 'இ - பாஸ்' முறையை கைவிட வேண்டும்' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தது.

இயக்க தயார்

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் சண்முகராஜ், விழுப்புரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்று, தமிழகத்தில் அதிகமாக உள்ளதால், தற்போது ரயில்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. தமிழக அரசு வலியுறுத்தினால், ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே தயாராக உள்ளது. கேரளாவில், மாநில அரசு கேட்டுக் கொண்டதால், அங்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

கர்நாடகாவில் 'இ - பாஸ்' ரத்து: தமிழக எல்லை மக்கள் நிம்மதி

கர்நாடகாவில் 'இ - பாஸ்' ரத்து: தமிழக எல்லை மக்கள் நிம்மதி

Added : ஆக 25, 2020 23:30

ஓசூர்; கர்நாடக மாநிலத்தில், 'இ - பாஸ்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தனிமையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்து எந்த தடையுமின்றி வாகனங்கள் செல்ல துவங்கின.

கர்நாடக மாநிலத்துக்குள் வாகனங்கள் நுழைய, அதிகாரப்பூர்வ சேவா சிந்து இ - பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. அங்கு, கடந்த ஜூலை, 14 இரவு முதல், 22 அதிகாலை வரை, தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.

சோதனைச்சாவடி

அதன்பின்னும், 'கொரோனா தாக்கம் குறையவில்லை' எனக்கூறி, ஊரடங்கை முழுதுமாக, அம்மாநில முதல்வர் எடியூரப்பா, கடந்த மாதம் ரத்து செய்தார். ஆனால், இ - பாஸ் நடைமுறை மட்டும், தொடர்ந்து அமலில் இருந்தது.இந்நிலையில், 'மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே, இ - பாஸ் தேவையில்லை' என, மத்திய அரசு அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணி முதல், கர்நாடக மாநில அரசு, இ - பாஸ் முறையை ரத்து செய்தது.

இதனால், அனைத்து வாகனங்களும் எந்த தடையுமின்றி, அம்மாநிலத்துக்குள் சென்று வர துவங்கின. அம்மாநில எல்லையில், கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்துவது மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டு உள்ளது.கர்நாடகா மாநில எல்லையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், தங்களது வழக்கமான பணிகளுக்கு திரும்பியதால், நேற்று அங்குள்ள சோதனைச்சாவடிகள் வெறிச்சோடின.

அதே நேரம், தமிழகத்தில், இ - பாஸ் அமலில் உள்ளதால், தமிழக எல்லையான, ஓசூர் - ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், இ - பாஸ் வாகனங்கள் மட்டும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன.கர்நாடக மாநிலத்துக்கு எளிதாக சென்று வரலாம் என்பதால், ஐந்து மாதங்களாக வேலைவாய்ப்பு, மருத்துவம் என, பல்வேறு தேவைகளுக்கு செல்ல சிரமப்பட்ட, ஓசூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

இதேபோல், நீலகிரி மாவட்டம், முதுமலை அருகே உள்ள, தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லா வழியாக, தமிழகம், கேரள வாகனங்கள் அதிகளவில் செல்ல துவங்கி உள்ளன.அனுமதிதமிழகத்தில் இ - பாஸ் நடைமுறை தொடர்வதால், கர்நாடகாவில் இருந்து வருபவர்கள், இ -- பாஸ் இருந்தால் மட்டும் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.அரசு அதிகாரிகள் கூறு கையில், 'தமிழகத்தில் இ - -பாஸ் முறை ரத்து செய்யப்படவில்லை. அங்கிருந்து வாகனங்களில் வருபவர்கள், இ - -பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்' என்றனர்.

Monday, August 24, 2020

'My Lord Or Your Honour?': How To Address Judges In India?

'My Lord Or Your Honour?': How To Address Judges In India?: On 13th August 2020, an interesting exchange happened between the Chief Justice of India SA Bobde and a lawyer on how to address the Court. A lawyer addressed the bench presided by the CJI, which...

NEWS TODAY 27.01.2026