Saturday, April 3, 2021
Parents Being Harassed Via SMS To Pay School Fees, Even For Lockdown Duration: Plea Alleges Before Allahabad High Court
Parents Being Harassed Via SMS To Pay School Fees, Even For Lockdown Duration: Plea Alleges Before Allahabad High Court: Whereas the Uttar Pradesh Government is yet to respond to a query put by Allahabad High Court regarding regulation of school fees during suspension of physical classes, yet another PIL has been...
விதிகளின்படி மருத்துவக் கல்லுாரி கட்டடம் தேசிய மருத்துவ கமிஷன் ஆய்வுக்கு உத்தரவு
விதிகளின்படி மருத்துவக் கல்லுாரி கட்டடம் தேசிய மருத்துவ கமிஷன் ஆய்வுக்கு உத்தரவு
Added : ஏப் 02, 2021 23:41
சென்னை:தமிழகத்தில், புதிதாக கட்டப்படும், 11 மருத்துவக் கல்லுாரிகள், விதிகளின்படி கட்டப்படுகிறதா என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்யும்படி, தேசிய மருத்துவ கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுதும், 75 மருத்துவக் கல்லுாரிகளை கட்ட, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு, 11 கல்லுாரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.புதிய மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கட்டப்பட வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடுத்தார்.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பழைய விதிகளின்படி கட்டம் கட்டும்படி, மனுதாரர் கோரியுள்ளார். 2018 - 2020ம் ஆண்டுகளில் புதிய விதிகள் வந்து விட்டன. புதிய விதிகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது' என்றார்.
இதையடுத்து, 'எந்த குறுக்கீடும் இன்றி, திட்டப்பணிகளை மேற்கொள்ளலாம்; தேசிய மருத்துவ கமிஷனின் விதிகளுக்கு உட்பட்டு, மருத்துவக் கல்லுாரி கட்டடங்கள் கட்டப்படுகிறதா என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் தர நிதி ஒதுக்கீடு
தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் தர நிதி ஒதுக்கீடு
Added : ஏப் 02, 2021 23:24
சென்னை:ஓட்டுச்சாவடிகளில், தேர்தலன்று பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, 71.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், வரும், 6ம் தேதி நடக்க உள்ளது. அன்று வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஆறு ஊழியர்கள் பணியில் இருப்பர். அவர்களுக்கும், இதர தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க, முதல் கட்டமாக, 71.21 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது.
ஓட்டுச்சாவடி தலைமை அலுவலருக்கு, 1,700 ரூபாய் முதல், கடை நிலை ஊழியர்களுக்கு, 600 ரூபாய் வரை, அவர்களின் நிலைக்கேற்ப ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிதேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறை, வனத்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, சிறைத்துறை, மத்திய ஆயுதப்படை போலீசார், மாநில ஆயுதப்படை போலீசார் ஆகியோருக்கும் ஊதியம் வழங்க, 21.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில், இன்ஸ்பெக்டர்கள் நிலையில், 400 ரூபாய்; ரிசர்வ் போலீசாருக்கு, 150 ரூபாய் வீதம், அவர்களின் நிலைக்கேற்ப, நான்கு நாட்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதிய துணைவேந்தர் தேர்வு தேடல் குழு நியமனம்
புதிய துணைவேந்தர் தேர்வு தேடல் குழு நியமனம்
Added : ஏப் 02, 2021 22:56
சென்னை:அண்ணா பல்கலை புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம், வரும், 11ம் தேதி முடிகிறது.
புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.பல்கலை வேந்தரான கவர்னர் தரப்பில், மூன்று பேர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டுஉள்ளது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், கவர்னர் பிரதிநிதியாகவும், குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட உள்ளார்.பல்கலையின், 'சிண்டிகேட்' குழு பிரதிநிதியாக, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் தியாகராஜன், அரசு தரப்பு பிரதிநிதியாக ஷீலாராணி சுங்கத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கமிட்டி சார்பில், மூன்று மாதங்களுக்குள் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
தரிசன முன்பதிவுடன் அறை முன்பதிவு
தரிசன முன்பதிவுடன் அறை முன்பதிவு
Added : ஏப் 03, 2021 00:14
திருப்பதி:திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தங்கும் அறையும் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில், தேவஸ்தான இணையதளத்தில், விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
முன்பதிவு
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.அதில் பங்கேற்ற பக்தர்களுக்கு, தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர்ரெட்டி பதிலளித்தார், நிகழ்ச்சி நிறைவுக்கு பின், அவர் கூறியதாவது.கிராம மக்கள் இடையே ஹிந்து தர்மத்தை போதிக்க, தேவஸ்தானம் புதிய நடவடிக்கைககளை மேற்கொள்ள உள்ளது.
அதற்காக பஜனை மண்டலிகள், கோசாலை நிர்வாகிகள், விஷ்ணு சகஸ்ரநாமபாராயணம், லலிதா சகஸ்ரநாமபாராயணம் மண்டலிகள், ஸ்ரீவாரி சேவார்த்திகள் விவரங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் சேகரித்து வருகிறது.கொரோனா தொற்று மீண்டும் பரவத் துவங்கி உள்ளதால், திருமலைக்கு வரும் பக்தர்கள் முககவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக, திருமலையில் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் முதலில், மத்திய விசாரணை அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்து துணை விசாரணை அலுவலக்திற்கு சென்று, அறை பெற்றுக் கொள்ளும் முறை தற்போது அமலில் உள்ளது.
வசதிகள்
இதை எளிதாக்க, அறை முன்பதிவு செய்த பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடந்ததும், குறுந்தகவல் வாயிலாக, அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய துணை விசாரணை அலுவலக எண்கள், அவர்களது 'மொபைல் போன்' எண்ணிற்கு அனுப்பப்படும். பக்தர்கள் நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று, தங்கள் அறையை பெற்றுக் கொள்ளலாம். இம்முறை இன்னும், 10 நாட்களில் அமலுக்கு வர உள்ளது.
மேலும், இணையதளம் வாயிலாக விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள், அதே பக்கத்தில் தங்கும் அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளும் விதம் இணைய தளத்தில் சில மாற்றங்களை, தேவஸ்தானம் செய்ய உள்ளது. விரைவில் இந்த வசதியும் அமலில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Modern bus shelter at Saidapet opens for public
Modern bus shelter at Saidapet opens for public
TIMES NEWS NETWORK
Chennai:03.04.2021
Now, commuters walking out of the Saidapet metro station can cool off at a modern bus shelter before they hop on a south-bound MTC bus. Chennai Metro Rail Limited (CMRL) has completed construction of the bus shelter linking one end of it with the entry point of Saidapet metro station to provide commuters with easy access to both the metro and MTC bus services. The bus shelter has replaced the old one, which was partially demolished in 2012 to make way for the construction of the underground metro station.
A metro rail official said besides the bus shelter, an exclusive pathway has also been built to prevent crowding in the area. Other facilities at the bus shelter include circular LED lights, steel benches and display units for bus timings. “We have extended the bus shelter up to one of the entry points of the metro station for commuters to easily walk in from the station to the bus stand,” the official said. “We have also installed a roof to cover the exclusive pathway behind the bus stop,” the official said.
Like the bus stop at DMS, all MTC buses heading towards the southern part of the city must stop at the Saidapet bus stand. Buses proceeding towards East Coast Road, Guduvancherry, Mahabalipuram, Thiruporur, Poonamallee, Kundrathur, Sunguvarchatram and Vellore either stop or originate from the Saidapet bus stand.
CMRL had started reconstruction of the bus shelter more than two years ago, but the work slowed down due to the pandemic induced lockdown in 2020. “We used to walk at least 100 to 200 metres from the station to board an MTC bus earlier,” said K Vijay, a regular metro rail user, adding, "It's more convenient now."
Not all metro stations in the city are directly linked to MTC bus stops as promised, however. Stations like Nanganallur Road, Ekkattuthangal, Vadapalani, Nehru Park and Shenoy Nagar either have no bus stops nearby or are far away, forcing passengers to walk long distances or look for private transportation like cabs and autorickshaws.

COOL SHELTER: The modern bus shelter at Saidapet also has an exclusive pathway to prevent crowding in the area
Paid holiday for all workers on poll day
Paid holiday for all workers on poll day
TIMES NEWS NETWORK
Chennai:03.04.2021
In the view of upcoming Tamil-Nadu legislative assembly elections that are scheduled to be held on April 6, the state government announced compulsory paid holiday to all the workers.
This includes daily wages, temporary and contract labour employed in factories, in Chennai and Chengalpet districts.
The state government said action will be taken against those who flout the norms. The paid holiday is to enable public to cast their vote on the election day.
Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...