Sunday, August 29, 2021

பறக்கும் பாலம் கட்டுமானப் பணியில் பயிற்சி இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா?- விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சர் உறுதி


பறக்கும் பாலம் கட்டுமானப் பணியில் பயிற்சி இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா?- விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சர் உறுதி


‘‘போதுமான பயிற்சியே இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான சிரமமான பணியில் எப்படி எந்த திட்டத்தின் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்.

மதுரை நத்தம் பறக்கும் பாலம் கட்டுமானப்பணியில் விபத்து நடந்த பகுதியை நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டதாகக் கூறுவது தவறு. கட்டுமானப்பணியின்போது எதிர்பாராத ஒரு செயல் நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் ஹைட்ராலிக் ஜாக்கியை வைத்து காங்ன்க்கீரிட் கர்டரை தூன்கள் மீது தூக்கி வைக்க முயற்சி செய்தபோது ஜாக்கி பழுதடைந்துள்ளது. கான்க்கீரிட் கர்டரை சாதாரணமாக தூக்கி தூன்கள் மீது வைத்திட முடியாது. அதற்காகதான் ஹைட்ராலிக் ஜாக்கி பயன்படுத்தப்படுகிறது. போதிய பயிற்சி, நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு ஹைட்ராலிக் ஜாக்கி பயன்படுத்தப்பட்டதா, அது எதனால் பழுதடைந்தது, இந்த பணி பார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டதா? பராமரிப்பு குறைபாடா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இந்த விபத்தில் எழுகிறது. ஒப்பந்ததாரர்கள் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

உயிரிழந்த நபரின் வயது 24. அதனால், அவர் ஹைட்ராலிக் பணியில் நிபுணத்துவம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் போதுமான பயிற்சியே இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான சிரமமான பணியில் எப்படி எந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காமல் பார்க்க வேண்டும், ’’ என்றார்.

பால வேலை நிறுத்தம்: ஆட்சியர் உத்தரவு:

விபத்தை நேரில் பார்த்த மகேந்திரன் கூறுகையில், ‘‘ஒரு சொந்த வேலை விஷயமாக விபத்து நடந்த பகுதி அருகே நின்று கொண்டிருந்தேன். திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தத்துடன் பாலம் சரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.அடுத்தடுத்து அனைத்து பாலப்பகுதிகளும் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதனால், பதட்டமடைந்த மக்கள் அங்கிருந்து பாலம் இல்லாத பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடங்கள் விபத்து நடந்த பகுதியில் அருகே செல்ல மக்கள் தயங்கினர். கட்டுமானப்பணி சரியான கண்காணிப்பு இல்லாமல் அலட்சியமாகவே நடந்தது. தற்போது நடந்தவிபத்து ஒரு உதாரணம்தான். அதனால், கட்டுமானப்பணி முடிந்த பாலத்தின் அனைத்து பகுதிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், ’’ என்றனர்.

தங்க கணேஷ் கூறுகையில், ‘‘மேம்பாலம் பணி கடந்த 2 மாதமாக சுத்தமாக நடக்கவில்லை. குறைந்த பணியாளர்களை கொண்டு பணி செய்தனர். மக்களும், வாகன ஓட்டிகளும், நத்தம் சாலையில் செல்லும் போது நரக வேதனையை அனுபவித்து வந்தோம். எதிர்கால பயனுக்காக அதனை சகித்து கொண்டோம். ஆனால், இப்போது கட்டும்போதே பாலம் இடிந்து விழுவதை பார்த்தால் எப்படி அதில் பயணம் செய்ய முடியும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. உரிய விசாரணை நடத்தி பாலம் தரமானதா? இல்லையா? அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும், ’’ என்றார்.

நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாலம் தரமாக கட்டப்படுகிறது. தூன்கள் மீது காங்கீரிட் கர்டரை தூக்கு நிறுத்தும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது சரிந்து கீழே விழுந்தது. பராமரிப்பை வைத்துதான் பாலத்தின் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பாலம் சர்வதேச தொழில்நுடப்பத்தில் கட்டப்படுவதால் அதன் தரத்தின் சந்தேகம் தேவையில்லை, ’’ என்றனர்.

பாலம் விபத்தால் ஆட்சியர் அனீஸ் சேகர், தற்காலிகமாக பாலம் கட்டுமானப்பணியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

முழுவிசாரணை தேவை: எம்.பி.

விபத்தை நேரில் பார்வையிட்ட சு.வெங்கடேசன் எம்.பி. கூறுகையில், ‘‘நத்தம் சாலை மேம்பால கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்துள்ள செய்தி மிகவும் துயரமானது. இதிலே இரண்டு விஷயங்களை கவனப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று, இந்த வேலை நடந்து கொண்டு இருந்த பொழுது இரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பணியில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததாக கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது. மிகக்குறைந்த தொழிலாளர்களை ஈடுபத்தியது தான் விபத்துக்கு காரணமா? என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது, தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்ற கேள்வியும் எழுகிறது. இவைகள் குறித்தும், விபத்தின் முழுத்தன்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் முழு விசாரணை மேற்றகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ’’ என்றார்.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம்: 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம்: 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்துமக்கள் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி (திங்கள்) என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் இருந்துஆயிரக்கணக்கான மக்கள் நேற்றுமாலை முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. அதேபோல் ஆம்னி பேருந்து நிலையங்களில் இருந்தும் வழக்கத்தைவிட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடர் விடுமுறையால் நேற்று மாலை முதல் பயணிகளின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து பல்வேறுஊர்களுக்கு 300-க்கும் மேற்பட்டசிறப்பு பேருந்துகளை இயக்கினோம். விடுமுறை முடிந்து மக்கள்சென்னைக்கு திரும்ப வசதியாக போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.

வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக். 26-க்குள் தெரிவிக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக். 26-க்குள் தெரிவிக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு


The Hindu Tamil

சென்னையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கெனவே அமலில் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் வாடகைக்கு வசிப்போரின் விவரங்களை வரும் அக். 26-ம்தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'டூப்ளிகேட்' ரேஷன் கார்டு; தொடர்கிறது தாமதம்


'டூப்ளிகேட்' ரேஷன் கார்டு; தொடர்கிறது தாமதம்

Added : ஆக 29, 2021 00:22

சென்னை-ரேஷன் கார்டு தொலைத்தவர்களுக்கு, 'டூப்ளிகேட்' கார்டு வழங்க, அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

ரேஷன் கார்டை தொலைத்தவர்கள், டூப்ளிகேட் கார்டுக்கு, www.tnpds.gov.in என்ற, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.அதாவது, இணையதள பக்கத்தில், 'நகல் குடும்ப அட்டை' என்ற பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும். அதை, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் அல்லது வட்ட வழங்கல் அதிகாரிகள் சரிபார்த்து, ஒப்புதல் தருவர்.பின், கார்டு அச்சிடப்பட்டு தயாரானதும், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் வழங்கப்படும்; அதற்கு, 20 ரூபாய் கட்டணம். ஊரடங்கு, சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், டூப்ளிகேட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.

தற்போதும் அந்த கார்டை வழங்க, அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.எனவே, டூப்ளிகேட் கார்டை விரைந்து வழங்க, உணவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பயனாளிகளிடம் எழுந்துள்ளது.

அரசு அலுவலர்களுக்கு 'கம்ப்யூட்டர்'பயிற்சி சான்றிதழ் கட்டாயம்


அரசு அலுவலர்களுக்கு 'கம்ப்யூட்டர்'பயிற்சி சான்றிதழ் கட்டாயம்

Added : ஆக 29, 2021 02:25

பெங்களூரு : அரசு அலுவலர்கள் அனைவரும் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ் பெறுவதற்கு, 2022 வரை மாநில அரசு அவகாசம் அளித்துள்ளது.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால், துறை அலுவலர்களும் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசு துறை அலுவலர்கள் அனைவரும், அடிப்படை கம்ப்யூட்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.மாநில அரசின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:மாநில அரசு துறை அலுவலர்கள், கர்நாடாக மாநில எலக்ட்ரானிக்ஸ் மேம்பாட்டு கழகத்தில், கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று, அதற்கான சான்றிதழ் பெறவேண்டும். சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம், 2022 மார்ச் 22 வரை வழங்கப்படுகிறது. அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவது கட்டாயம் மட்டுமின்றி, அடுத்தடுத்த நிலைக்கான பதவி உயர்வுகளுக்கும், பயிற்சி சான்றிதழ் கணக்கிடப்படுகிறது.கால அவகாசத்திற்குள் பயிற்சி முடிக்காதோருக்கு எந்தவித பதவி உயர்வுகளும் வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.கர்நாடகாவில், 2012ல் இதற்கான பொதுசட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது. ஆனால், சட்டத்தை செயல்படுத்துவதற்கு 2017 வரை எந்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை.அதன்பின், பயிற்சியை முடிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அறிவிப்பு பல அலுவலர்களையும், பயிற்சி பெறும் கட்டாயத்தை ஏற்படுத்திஉள்ளது.அடிப்படையான பயிற்சிகளை அனைவரும் அறிந்திருந்தாலும், பயிற்சிக்கான சான்றிதழ் பெற வேண்டும் என்பதால், அலுவலர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது.

சென்னை-- லண்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, வரும் 31ம் தேதி முதல், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தன் விமான சேவையை மீண்டும் துவக்குவதாக அறிவித்துள்ளது.


சென்னை-- லண்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, வரும் 31ம் தேதி முதல், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தன் விமான சேவையை மீண்டும் துவக்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை விமான நிலையம் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்:லண்டன் நாட்டின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு 31ம் தேதி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தன் சேவையை மீண்டும் துவக்குகிறது.


இந்த விமானம், செப்., 1ல் சென்னை விமான நிலையம் வந்து சேரும்.இந்த விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இருக்கும். லண்டனில் இருந்து சென்னைக்கு, ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து லண்டனுக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவை உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

UoM withdraws circular on 6pm curfew

UoM withdraws circular on 6pm curfew

Mysuru:29.08.2021

Following widespread criticism, University of Mysore on Saturday withdrew its order asking women students not to venture out on campus unaccompanied after 6pm. “We have withdrawn the order,” registrar R Shivappa said. A fresh circular issued in its place appeals to students to be careful on campus. The bar on entry at Kukkarahalli Lake after 6.30pm continues.

“We issued the earlier order keeping in mind safety of students. Now we have withdrawn it,” the registrar said, adding security has been tightened around the lake in evenings. The varsity had issued the circular restricting movement of students following security concerns raised by authorities after the August 24 gang rape.

KPCC president DK Shivakumar urged removal of the registrar and said the governor must intervene. “It is the responsibility of police to provide security in public places. Such curbs are not justifiable,” he said. TNN

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...