Monday, June 27, 2016

ஈ, எறும்புக்கு கூட தீங்கி நினைக்காதவர் சுவாதி: தோழிகள் கண்ணிர்...DINAMANI

ஒரு ஈ, எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவர் சுவாதி என அவரது உறவினர்கள், தோழிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் மகள் சுவாதி (24), பரனூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராகப் பணியாற்றி வந்தார்.
இவரை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன்.24) காலை அவரது தந்தை அழைத்து வந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார். ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோது, சுவாதியின் தலை, முகம், கழுத்தில் கத்தியால் இளைஞர் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த கொலை சம்பவம் அவரது குடும்பத்தினரையும், தோழிகளையும் சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அதில் இருந்து நிச்சயமாக ஆயுளுக்கும் அவர்களால் மீண்டுவர முடியாது.

எப்போதுமே பெண் பிள்ளைகள் மீது அப்பாக்கள் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். சுவாதியின் மீது அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் வைத்திருந்த பாசத்துக்கு எல்லையே இல்லை. தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையில் பி.இ முடித்தவுடன் இன்போசிஸ் நிறுவனத்தில் உடனடியாக பணியும் கிடைத்தது.

சிறுவயதில் இருந்தே இளகிய மனம் கொண்ட சுவாதி, வளந்த பின்னரும் அதே மனநிலையில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சமீபத்தில் சென்னையில் பெய்த பேய்மழையில் மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது, அப்போது சுவாதி ஓடோடி சென்று உதவிகளை செய்துள்ளார். சூளைமேடு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொட்டலங்களை தயார் செய்துகொண்டு போய் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இப்படி மற்றவர்களுக்கு புன்னகையுடன் உதவி புரிந்துவந்த சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சியை யாராலும் மறந்து விடமுடியாது. யாரிடமும் அதிர்ந்து பேசாத குணம் கொண்ட சுவாதி, அருகில் உள்ள குடும்பத்தார்களிடமும் அன்பாக பழகியுள்ளார். எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத சுவாதிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று குடும்பத்தினரும், தோழிகளும் கண்ணீர் வடிக்கும் காட்சி பார்கும்போது கள்நெஞ்சம் கொண்டவர்களின் மனதையும் கரையை வைக்கிறது.
ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வெளியூர்களிலிருந்து பேசுபவர்கள் எல்லாம் இப்போது கேட்கும் கேள்வி இதுதான் "சென்னையில... என் நடக்குது" என்று கேட்கும் அவர்கள், சுவாதியின் கொலை சம்பவம் பற்றியும் பேட்க தவறவில்லை.

சுவாதியின் மரணம் தொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும் காரசாரமான கருத்துக்கள் மனசை போட்டு கசக்கும் விதத்தில் உள்ளன. தமிழகத்தையே உலுக்கிப் போட்டிருக்கும் சுவாதியின் கொலைக்கு உரிய நீதியும் நியாமும் கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து தசரப்பினரின் ஆவேச குரலாக உள்ளது. காவல்துறை அதிரடியாக செயல்பட்டு கொலையாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...