Friday, November 11, 2016

பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம்

அதிக அளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் பல்வேறு வங்கிகளின் கிளைகளில் மாறி மாறி செலுத்தினால், வருமான வரித் துறையிடம் இருந்து தப்பிக்க முடியுமா என்பது குறித்து அதிகாரி கள் விளக்கம் அளித்துள்ளனர்.
காலாவதியாகும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய 2000, புதிய 500 ரூபாய் நோட்டுகள் அல்லது 100, 50, 20 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘500, 1000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் வைத்திருப்பவர்கள் ஒரேயடியாக வங்கியில் செலுத்தினால்தான் கேள்விகள் எழும். அதற்கு பதிலாக, பல்வேறு வங்கிகளின் கிளைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் செலுத்தினால், வருமான வரி செலுத்தாமல் தப்பிவிடுவார்களே’ என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது சாத்தியமா? என்று கேட்டதற்கு வருமான வரித் துறை மற்றும் வங்கி அதிகாரிகள் அளித்த விளக்கம் வருமாறு:

எந்த வங்கிக் கிளையிலும் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்தும்போதோ, எடுக்கும்போதோ கண்டிப்பாக வருமான வரி நிரந்தர கணக்கு (PAN) எண்ணை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும்போது, பல் வேறு வங்கிகளின் எத்தனை கிளை களில் தனித்தனியாக பணம் செலுத் தினாலும், குறிப்பிட்ட நபரின் பணப் பரிவர்த்தனை முழுவதும் ‘பான் எண்’ வாயிலாக வருமான வரித் துறையினருக்கு தெரிந்துவிடும்.

கணிசமான தொகையை பரிவர்த் தனை செய்பவர்கள் பற்றிய விவரங் களை வங்கி நிர்வாகமே வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதும் உண்டு. ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்’ (நோ யுவர் கஸ்டமர்) என்ற முறையின் கீழ் வங்கிகள் சேகரித்து வைத்திருக்கும் வாடிக்கையாளர் விவரங்களை வருமான வரித் துறையினர் கேட்டுப் பெறவும் செய்யலாம்.

ஒருவர் குறிப்பிட்ட வங்கியின் பல்வேறு கிளைகளில் வங்கிக் கணக்கு தொடங்கும்போது கணக்கு வைத்திருப்போருக்கான பிரத்யேக எண் (வாடிக்கையாளர் ஐடி) ஒன்று ஏற்படுத்தப்படும். அது வாடிக்கை யாளருக்கு தெரியாது. அவர் எத் தனை கிளையில் கணக்கு தொடங்கி னாலும் அவருக்கு ஒரே ஒரு எண் தான். அந்த எண் மூலம் அவரது மொத்த பணப் பரிவர்த்தனை விவரங்களை அந்த வங்கியிடம் இருந்து வருமான வரித் துறையினர் பெறலாம்.

அதேநேரத்தில், பல்வேறு வங் கிக் கிளைகளில் தினமும் ரூ.49 ஆயி ரம் வீதம் பணம் செலுத்தினால், அதைக் கணக்கிட இயலாது. அது போன்ற சூழலில், யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டாலோ, புகார் வந் தாலோ, அதன் அடிப்படையில் குறிப் பிட்ட நபரின் பணப் பரிவர்த்தனை சோதித்து அறியப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித் தனர்.

இதற்கிடையே, குறிப்பிட்ட வங் கிக் கணக்கில் தினமும் ரூ.49 ஆயிரம் வீதம் பணம் செலுத்துவோர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை வருமான வரித் துறை கேட்டிருப்பதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...