Thursday, November 9, 2017


எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து


சென்னை: மேற்கு வங்க மாநிலம், காரக்பூரில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், தமிழகத்தில், முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும், எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும், 16ல், மேற்கு வங்க மாநிலம், ஹால்தியாவுக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ்; திருச்சியில் இருந்து, வரும், 17ல், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு இயக்கப்படும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
 புதுச்சேரியில் இருந்து, 18ம் தேதி, மேற்கு வங்க மாநிலம், சந்திரகாசிக்கு இயக்கப்படும், வாராந்திர எக்ஸ்பிரஸ்; சென்னை சென்ட்ரலில் இருந்து, 20ம் தேதி, சந்திரகாசிக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
 மேற்கு வங்க மாநிலம், ஹால்தியாவில் இருந்து, 18ம் தேதி, சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ்; சந்திரகாசியில் இருந்து, 19ம் தேதி, சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும், சந்திரகாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
 மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து, 19ம் தேதி, திருச்சிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்; சந்திரகாசியில் இருந்து, 20ம் தேதி, புதுச்சேரிக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...