Tuesday, November 14, 2017


வெடிகுண்டு பற்றி பேசிய விமான பயணி கைது

 நவ 13, 2017 22:45

கொச்சி: கேரளாவில், தனியார் நிறுவன விமானம் புறப்படுவதற்கு முன், அதில் இருந்த பயணி ஒருவர், 'ஹேப்பி பாம்' என கூறியதால், சர்ச்சை ஏற்பட்டது. 

கொச்சி விமான நிலையத்திலிருந்து, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது.
அப்போது, அதிலிருந்த பயணி ஒருவர், 'ஹேப்பி பாம்' என கூறியதை கேட்டு, விமான பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த நபரிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். மும்பையில் உள்ள தன் நண்பரிடம், விளையாட்டாக பேசியதாக அவர் கூறினார். அந்த நபரை, போலீசார் கைது செய்தனர். விமானத்தில் இருந்த பயணியர் இறக்கி விடப்பட்டு, அவர்களின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வெடிகுண்டு ஏதும் இல்லாதது உறுதி செய்யப்பட்ட பின், விமானம் புறப்பட்டு சென்றது.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...