Wednesday, December 6, 2017

புத்தாண்டு முதல், '4ஜி' சேவை : பி.எஸ்.என்.எல்., துவக்கம்

Added : டிச 05, 2017 22:12 |
தமிழகத்தில், புத்தாண்டு முதல், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' சேவையை துவங்க உள்ளது. 

இது தொடர்பாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலை தொடர்பு வட்ட, தலைமை பொது மேலாளர், கலாவதி கூறியதாவது:


பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், எதிர்பார்க்கும், '4ஜி' சேவை, ஜன., முதல் துவங்கும். அதற்காக, 'நோக்கியா' நிறுவனம் வாயிலாக, 200 கோபுரங்களை நிறுவுவதற்கு, கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. மேலும், 480, '3ஜி' கோபுரங்கள் மற்றும், 265, '2ஜி' கோபுரங்கள் என, 1,000க்கும் மேற்பட்ட கோபுரங்கள், அதற்கான கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான கருவிகள், நோக்கியாவிடம் வாங்கப்படுகின்றன. இதனால், பி.எஸ்.என்.எல்., சேவை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...