Thursday, February 1, 2018

கடன் வாங்கி தற்கொலையானவர் மகனுக்கு வங்கி,'நோட்டீஸ்'

Added : பிப் 01, 2018 02:19

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, வெங்கமேட்டூரில் வறட்சியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி முத்துசாமி வாங்கிய, மூன்று லட்சம் ரூபாயை செலுத்தும்படி, அவரது மகனுக்கு, வங்கி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கொடுமுடி தாலுகா வெங்கமேட்டூரைச் சேர்ந்தவர் முத்துசாமி, 70; விவசாயி. இவருக்கு சொந்தமாக, 40 சென்ட் நிலம் உள்ளது.

ஐந்து ஏக்கரை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தார். கடந்த, 2015 -1 6 - 17ம் ஆண்டுகளில் கடும் வறட்சியால், இவரது நிலத்தில் நிலக்கடலை உட்பட சாகுபடி செய்த பயிர்கள், நாசமானது.

கொடுமுடி கத்தோலிக் சிரியன் வங்கியில், இவர், மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். தவிர, விவசாய பணிக்காக, தனி நபர்களிடமும் கடன் பெற்றிருந்தார்.

விவசாயம் பொய்த்ததால், கடந்த, 2016 நவ., 19ல் விஷம் குடித்து, முத்து சாமி தற்கொலை செய்து கொண்டார். மாவட்ட நிர்வாகம் மூலம் அவருக்கு, இழப்பீடும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவரது மகன் கணேசனுக்கு, வங்கியில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் செலுத்தும்படி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் முனுசாமி தலைமையில், கலெக்டர் பிரபாகரை, கணேசன் சந்தித்து மனு வழங்கினார்.
'விவசாயம் பொய்த்ததால், தன் தந்தை இறந்துவிட்டார். அவர் இறப்பு, வறட்சியால் நடந்தது என்று அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, அவர் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி, நடவடிக்கை எடுக்க, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

சந்திரசேகர் கூறிய தாவது:

கடனை தள்ளுபடி செய்ய முடியுமா என தெரியவில்லை. இருப்பினும், அந்த வங்கியிடம், அவர் பெற்ற கடன், அவர் திரும்ப செலுத்திய விபரம், மீதமுள்ள தொகை, கடனை தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதா என்ற விபரத்தை அறிய வேண்டும்.

இருப்பினும், கணேசனின் மனுவை அவ்வங்கி மூலம், அவர்களது தலைமைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து வரும் பதிலுக்குப்பின், விபரம் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...