Thursday, February 1, 2018

வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறு ஆறுதல்:நிலையான கழிவு திட்டம் மீண்டும் அறிமுகம்

Published : 01 Feb 2018 13:19 IST

புதுடெல்லி



வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் மத்திய பட்ஜெட் இருக்கும் நிலையில், சின்ன ஆறுதலாக 1976-ம் ஆண்டு கைவிடப்பட்ட நிலையான கழிவுத்திட்டத்தை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்த நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டு இருந்த முறையே தொடர்வதாக நிதி அமைச்சர் ஜேட்லி அறிவித்தார்..

இதன்படி, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்ற முறையே தொடரும்.

அதேசமயம், கடந்த 1974ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான கழிவுத் திட்டத்தை மீண்டும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். 2006ம் ஆண்டு வரை இருந்த இந்த திட்டத்தை ப.சிதம்பரம் நீக்கினார்.

நிலையான கழிவு திட்டம் என்றால் என்ன?

நிலையான கழிவு திட்டம் என்றால் ஒட்டுமொத்த வருமானத்தில் குறிப்பிட்ட அளவு நமது உறவினர்களுக்கும், மருத்துவத்துக்கும் செலவு செய்வதற்கு கணக்கு காட்டத் தேவையில்லை.

அந்த வகையில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையான கழிவுத் திட்டம் மூலம் வருமான வரி செலுத்துபவர்கள் ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் வரை கணக்கு காட்டிக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள், கார்கள் வைத்திருப்போர் பெட்ரோல், டீசல் போட்டதாகவும் கணக்கு காட்டலாம், குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்ததாகவும் ரூ.40 ஆயிரம் வரை வரிசெலுத்தாமல் கணக்கு காட்டலாம்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...