Thursday, May 2, 2019

பரிந்துரை கடிதங்களுக்கு தரிசனம் ரத்து

Added : மே 02, 2019 00:03


திருப்பதி:திருமலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள, மே, 23ம் தேதி வரை, வி.ஐ.பி.,க்கள் தரும் பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கப்படும் தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருக்கும் திருமலை தேவஸ்தானம், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பரிந்துரை கடிதங்களுக்கு, 'வி.ஐ.பி., பிரேக்' தரிசனம் வழங்கி வருகிறது.வி.ஐ.பி.,க்கள் நேரடியாக வந்தால், 'லிஸ்ட்-' 1 தரிசனமும், அவர்களின் பரிந்துரை கடிதங்களுக்கு, 'லிஸ்ட்'-2 மற்றும் 'ஜெனரல்' என, மூன்று வகையாக, வி.ஐ.பி., பிரேக் தரிசனம், வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அவை முடியும் வரை, வி.ஐ.பி.,க்களின் பரிந்துரை கடிதங்களுக்கு, தரிசனம் வழங்க கூடாது என, ஆந்திர அரசு, தேவஸ்தானத்திற்கு உத்திரவிட்டுள்ளது.அதன்படி ஓட்டு எண்ணிக்கை நடக்கும், மே, 23ம் தேதி வரை, திருமலையில், பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...