Thursday, July 11, 2019

அத்திவரதர் தரிசனம்: இன்று,நாளை நேரம் குறைப்பு

Added : ஜூலை 11, 2019 06:42

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொது மக்கள் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று, நாளை குறைக்கப்பட்டுள்ளது.



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் இன்று ஆனி கருட சேவை நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு இன்று மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஜனாதிபதி வருகை

அத்திவரதரை தரிசிக்க ஜனாதபதி ராம்நாத் கோவிந்த் நாளை காஞ்சிபுரம் வர உள்ளார். இதனை முன்னிட்டு நாளை பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரையில் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் அத்திவரதரை 11 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...