Sunday, January 5, 2020

பிரசவத்தில் தாய், குழந்தை பலி அரசு டாக்டர் 'சஸ்பெண்ட்'

Added : ஜன 05, 2020 00:09

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய், குழந்தை பலியான சம்பவத்தில் பெண் டாக்டர் மணிமொழி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடையை சேர்ந்தவர் முருகேசன். வெளி நாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி கீர்த்திகா 22. இவர் டிச.27 இரவு பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 10:00 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது. அதன் பின், சில மணி நேரத்தில் கீர்த்திகாவும் இறந்தார்.கீர்த்திகாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து மருத்துவக்கல்லுாரி டீன் அல்லி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கடாச்சலம் ஆகியோர் விசாரித்தனர். இதையடுத்து அப்போது பணியில் இருந்த டாக்டர் மணிமொழி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...