Sunday, January 5, 2020

மனநல வகுப்பில் மாணவர் சேர்க்கை அரசுக்கு ஐகோர்ட், 'நோட்டீஸ்'

Added : ஜன 04, 2020 23:41

சென்னை: அரசு மருத்துவ கல்லுாரி களில், மனநல மற்றும் உளவியல் வகுப்புகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் ரங்கநாயகி, தாக்கல் செய்த மனு:தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில், ஒரு லட்சம் பேருக்கு, ஒருவர் வீதம், மனநல சிகிச்சை நிபுணர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மனநல துறையில், நிபுணர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இந்த துறையில், அதிக நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.மருத்துவ கல்லுாரிகளில், மனநல கல்வியில் போதிய இடங்கள் இல்லை. குறைந்த எண்ணிக்கையில் தான், மாணவர்களை சேர்க்கின்றனர். சென்னை மருத்துவ கல்லுாரி தவிர்த்து, மற்ற கல்லுாரிகளில், இரண்டு முதல் நான்கு என்ற அளவில் தான் மாணவர்களை சேர்க்கின்றனர். சில மருத்துவ கல்லுாரிகளில், இந்தப் பாடமே இல்லை.மன அழுத்தம், மன உளைச்சலால், தற்கொலை செய்து கொள்ளும் போக்கு உள்ளது. குழந்தைகள், இளைஞர்களுக்கு, மனநல ஆரோக்கியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில், யோகா சேர்க்கப்பட வேண்டும். அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், மனநல மற்றும் உளவியல் வகுப்புகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது

.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., ௨௬க்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...