Friday, January 24, 2020

'சிம் கார்டு' கடைகளில் போலீசார் சோதனை

Added : ஜன 24, 2020 00:52

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொபைல் போன், 'சிம் கார்டு' முறையாக ஆவணங்கள் பெற்று விற்பனை செய்யப்படுகிறதா என, கடைகளில், போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.காஞ்சிபுரத்தில், கடந்த மாதம், பச்சையப்பன் என்பவரிடம், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், சிம் கார்டு வாங்கி சென்றார். அவர், உரிய ஆவணங்கள் இல்லாமல், அதை பிறருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள், அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாக, 'கியூ' பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, சிம் கார்டு விற்பனை செய்யும் கடைகளை, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் சிம் கார்டு விற்பனை செய்யும் கடைகளில், போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.'உரிய ஆவணங்கள் இன்றி சிம் கார்டுகள் விற்பனை செய்யக் கூடாது' என, கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...