Tuesday, March 3, 2020

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம்

By DIN | Published on : 15th February 2020 10:43 AM

புதுதில்லி: ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை (பான் எண்) இணைத்தல் கட்டாயம். மார்ச் 31-க்குள் இணைக்கப்படவில்லை என்றால், பான் எண் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. வருமானவரி தாக்கல் செய்வது, வருமானவரி பிடித்தம் திரும்பப் பெறுவது போன்றவற்றுக்கு இது இன்றியமையாத தேவையாக உள்ளது. ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டு ரத்து செய்யப்படும்.

இந்நிலையில், தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்க ஆதார் எண்ணுடன் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது.

இந்தியாவில் சுமார் 31 கோடி பான் கார்டுகள் ஏற்கெனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 18 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளது.

ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்துள்ளது. மார்ச் 31-க்குள் இணைக்கப்படவில்லை என்றால், பான் எண் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...