Wednesday, March 25, 2020

" வெளியே போகாதீ்ங்க "- மோடி வேண்டுகோள்

Updated : மார் 24, 2020 20:48 | Added : மார் 24, 2020 20:41 |

புதுடில்லி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று கொரோனா குறித்து மீண்டும் உரையாற்றியாதாவது: உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்கும் தெரியாமலே கொரோனா வீட்டில் உள்ளவர்களுக்கு பரவிவிடும்.


காட்டு தீ போல பரவும் கொரோனா

காட்டு தீ போல கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகக்கடினம். கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொள்கிறேன். நீங்கள் எங்கே இருக்கீறீர்களோ அங்கேயே இருங்கள். கெரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவருகிறது.

அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தவது 100 சதவீதம் சாத்தியம். இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக்கொண்டு கொரோனாவை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 21 நாட்கள் மக்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் ஊரடங்கை விட தற்போது ஊரடங்கு மிக கடுமையானதாக இருக்கும்.

இக்கால கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினால் கொரோனா வீட்டிற்குள் நுழைந்து விடும். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவை வல்லரசு நாடுகளாலேயே கட்டுப்படுத்தமுடியவில்லை.

மக்களின் பாதுகாப்பே முக்கியம்

நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிரமங்களை உணருங்கள். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தும் எடுத்து கொள்ள வேண்டாம். 24 மணி நேரம் பணியாற்றும் ஊடகத்துறையினர், காவல்துறையினருக்காக உள்ளிட்ட சேவைதுறையினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இரவு பகலும் பாடுபட்டுவருகின்றன.

உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்கும் தெரியாமலே கொரோனா வீட்டில் உள்ளவர்களுக்கு பரவிவிடும். கொரோனாவை ஒழிக்க சமூக விலகலே சிறந்த வழி. 21 நாட்களுக்கு நாம் வீட்டிற்குள் இருக்கா விட்டால், 21 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி செல்ல நேரிடும்.

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்

பொருட்களை வாங்க ஒரே இடத்தில் குவிய வேண்டாம். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். சுகாதாரத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்தின் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் முழுமையான அளவில் தயாராக உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

No comments:

Post a Comment

Universities rush to file patents for rankings, few acquire commercial value

Universities rush to file patents for rankings, few acquire commercial value  Experts urge dismantling siloed research ecosystem to accelera...