Tuesday, May 16, 2017

Bus strike

மீண்டும் எஸ்மா... அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நீதிமன்றம் உத்தரவு!

 ர.பரத் ராஜ்

கடந்த மூன்று நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல மனு மீது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாள்களாக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. மாநிலம் தழுவிய அளவில் நடந்த இந்தப் போராட்டத்தால் கிட்டத்தட்ட 80 சதவிகித போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் எஸ்மா சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில்குமாரய்யா தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 'தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் நடப்பதை ஊக்குவிக்க முடியாது. பணிக்குத் திரும்பாவிடில் 'எஸ்மா' சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நீதிபதிகள் முரளிதரன், சேஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

Raid


   
 ஒன்இந்தியா

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு ஏன்? சிபிஐ அதிகாரி சொல்லும் காரணம் இதுதான்!

டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை குறித்து சிபிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ சோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் அவரின் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த 2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்நிலையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மொரீசியஸை சேர்ந்த 3 நிறுவனங்கள் ஐஎன்எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ரூ 4.6 கோடிக்கு அனுமதி பெற்று பல கோடி ரூபாய் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு பங்குக்கு ரூ 800 கூடுதல் என்ற கணக்கில் இந்தியாவுக்குள் கூடுதல் முதலீடு வந்துள்ளது. கூடுதலாக கொண்டு வரும் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தது ஐஎன்எக்ஸ் நிறுவனம். கூடுதலாக கொண்டு வரப்பட்ட முதலீடுக்கு கார்த்தி சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் உதவி செய்துள்ளது. கூடுதல் முதலீட்டுக்கு அனுமதி பெற்று தந்து ரூ10 லட்சத்தை அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Bus strike


பஸ்ஸில் ஏறினால் 10 ரூபாய்... சென்னைக்கு வந்துவிட்டது மினி பஸ்!

மே 15-ம் தேதியில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர்களின் ஸ்டிரைக் தொடங்கி இருக்கிறது. இதனால், சென்னையில் 3,000 பஸ்கள் ஓடாமல் அப்படியே டெப்போக்களில் முடங்கிக் கிடக்கிறது. தமிழகம் முழுவதும் டவுன் பஸ், விரைவு பஸ், மலைப்பகுதி பஸ், வெளிமாநிலங்களுக்குச் சென்றுவரும் பஸ் என்று மொத்தம் உள்ள 20,839 பஸ்களில் 19 ஆயிரம் பஸ்கள் இரண்டு நாட்களாக ஓடவில்லை. சென்னையில் ஓடவேண்டிய  3,685 மாநகர பஸ்களில் 3,000 பஸ்கள் ஓடவில்லை. பஸ்களில் தினசரி பயணிக்கும் 47 லட்சம் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைச் சமாளிக்க வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று (15-05-17) மட்டும் 600 மினி பஸ்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனையடுத்துத் தமிழகம் முழுதும் ஓடும் 3,959 மினி பஸ்களில் உடனடியாக 1,500 மினி பஸ்களைச் சென்னைக்குக் கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வெளியூர்களில் ஓடும் தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பேர் பஸ்களைச் சென்னைக்குத் திருப்பிவிட அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். சென்னைக்கு வந்துள்ள இந்த மினி பஸ்களில் 10 ரூபாய், 20 ரூபாய், 30 ரூபாய் என்று மூன்றுவிதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கடலூர் மாவட்டத்தில் இருந்து வந்து தாம்பரம் டு பிராட்வே ரூட்டில் மினி பஸ் ஓட்டும் நடத்துநர் பெருமாள் கூறுகையில், ''கிராமத்து மக்கள் பயன்பெற வேண்டும் என்றுதான் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தப் பஸ்களை இப்போது சென்னைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால், கிராமப்புற மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எங்களுக்கும் சென்னையில் பஸ் ரூட்கள் ஒன்றும் புரியவில்லை. பஸ் டெப்போக்களுக்குள் எங்களை விடவில்லை. அதனால், ஓய்வு எடுக்க முடியாமல், குளிக்க மற்றும் காலைக்கடன் முடிக்க வழியில்லாமல் தவிக்கிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்கள் கோரிக்கை நியாயமானது என்றாலும் எங்கள் வயிற்றுப் பிழைப்புகாக சென்னை வந்துள்ளோம். ஸ்டிரைக் முடியும்வரை சென்னைதான் என்று எங்கள் பெர்மிட்களைச் சென்னையில் குறிப்பிட்ட ரூட்களில் போட்டுத் தந்துள்ளார்கள்" என்றார்.

இந்த நிலையில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எஃப், டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எஃப்., ஏ.ஏ.எல்.எல்.எஃப்., டி.டபிள்யூ.டி தொழிற்சங்க அமைப்புகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின் சுருக்கம் வருமாறு: ''போக்குவரத்து ஊழியர்களின் 7 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் செலவழித்துள்ளன. ஓய்வுபெற்று வீட்டுக்குச் செல்கிறவர்களின் சேமிப்புத் தொகை 1,700 கோடி ரூபாயைப் பல ஆண்டுகளாக வழங்காத பாதகத்தை அரசு செய்துள்ளது. இதில், '500 கோடி ரூபாயை இப்போது வழங்குவோம் என்றும், இன்னொரு 500 கோடி ரூபாயை அடுத்த செப்டம்பரில் வழங்குவோம்' என்றும் அமைச்சர் கூறுகிறார். மொத்தத்தில் இப்போது வழங்கியுள்ள 750 கோடி ரூபாயும்கூட நீதிமன்ற உத்தரவுகளின்படியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளவற்றுக்காகவும் தரப்பட வேண்டிய தொகைதான். புதிதாகத் தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுத்ததைப் போன்ற தோற்றத்தை உண்டாக்க அரசு முயற்சிக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் அரசின் கொள்கை மற்றும் சமூகத்துக்குச் செய்யும் உதவிகள் காரணமாக இழப்பைச் சந்திக்கின்றன. மாணவர் இலவச பயணம், நஷ்டமான வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது போன்றவை மிகவும் தேவையான சமூக நடவடிக்கையாகும். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்புகளை அரசு ஈடுசெய்ய வேண்டும். இதற்கான கொள்கை அறிவிப்பை நம்பகத்தன்மையுள்ள அளவில் அரசு எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறைவேறாமல் உள்ள ஓய்வுக்கால சேமநல நிதித் தொகை உட்பட அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம், மாநிலத்தின் இதர பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளது. இது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எதிரான வஞ்சனையாகும். இவற்றைச் சரி செய்து 13-வது ஊதிய ஒப்பந்தத்தைப் போட வேண்டும். 1.4.2013-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களின் ஓய்வூதியம், தினக்கூலி, தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை ஒப்பந்தப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைநிறுத்தத்தை உடைக்க வேறு பேருந்துகளை இயக்குவது, புதியவர்களைவைத்து ஓட்டுவது போன்றவை ஐ.எல்.ஓ விதிமுறைகளுக்கு விரோதமானவை. இதுபோன்ற அபாயகரமானச் செயல்களில் ஈடுபடாமல் பிரச்னைக்கு முடிவுகாண அரசு முன்வர வேண்டும். 'மாவட்ட ஆட்சியர்கள், வெளியாட்களைவைத்து பேருந்துகளை இயக்குவோம்' என்று பேட்டி அளிப்பது அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொழிலாளர்களின் பணத்தைக் கையாடியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பணத்தைப் பறிகொடுத்த ஊழியர்களுக்கு எதிராகக் பாயக்கூடாது" என்று கூட்டு அறிக்கையில் கூறி இருக்கிறார்கள்.

குட்டித் தூக்கம்

இதமான, இனிமையான குட்டித் தூக்கம்... பலன்கள், பக்கவிளைவுகள்!

ச.மோகனப்பிரியா

முதல் நாள் இரவு 10 மணிக்குப் படுத்திருப்போம். அம்மா காலை 6 மணிக்கு எழுப்புவார். செல்லம் கொஞ்சி, திட்டி எழுப்பினாலும் எழுந்திரிக்க மனம் வராது. `இன்னும் அஞ்சு நிமிஷம்மா...’ என முனகலாக குரலை வெளியே அனுப்புவோம். 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கியிருந்தாலும், அந்த 5 நிமிடத் தூக்கம் பலருக்கும் சொர்க்கம்.  சிலருக்கு தெளிவும் திருப்தியும் கிடைப்பது இந்தக் குட்டித் தூக்கத்தில்தான். குட்டித் தூக்கம் ஏன் அவ்வளவு இதமாக, மனதுக்கு இனிமையானதாக இருக்கிறது? விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி...

குட்டித் தூக்கம்

சீரான தூக்கத்தின்போது, `ரெம்’ எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் (REM -Rapid Eye Movement) கனவுகள் வருகின்றன. இந்த நிலையில் நம் முழு உடலும் சுயக் கட்டுப்பாட்டை இழந்து மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். சீரான தூக்கத்தின்போது சுழற்சி முறையில் ரெம் மாறிமாறி ஏற்படும். இந்தச் சுழற்சியில் இடையூறுகள் ஏற்படும்போது `நாப்’ (Nap) எனப்படும் குட்டித்தூக்கம் பகல் நேரங்களில் தேவைப்படுகிறது.

இந்தக் குறைந்த நேரத் தூக்கத்தைத்தான் ஆங்கிலத்தில் `நாப் ஸ்லீப்’ (Nap sleep) என்கிறார்கள். நன்றாக உண்ட பகல் பொழுதில், வேலைக்கு நடுவே களைப்பில் எட்டிப் பார்ப்பது, மனச்சோர்வின்போது கண்களை மூடிக்கொண்டு கண் அயர்வது.... போன்ற பல தருணங்களில் இந்த குட்டித் தூக்கம் வரும்.

ஒரு குட்டித் தூக்கம்தான் போட்டிருப்பார்கள். ஆனால் பலரும் தூங்கி எழுந்ததும், `நான் அதிக நேரம் தூங்கினது மாதிரி இருக்கு’, `வேற ஒரு கிரகத்துக்குப் போயிட்டு வந்ததுபோல இருக்கு’, `ஆழ்ந்த தூக்கம்’, `நல்ல தூக்கம்’, `இந்தக் குட்டித் தூக்கத்துலயும் கனவு வந்துச்சு பாரேன்...’ என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம்..

சீரான தூக்கத்துக்கும் குட்டித் தூக்கத்துக்கும் என்ன வித்தியாசம்?

சீரான தூக்கம் 6 - 8 மணி நேரம் வரை இருக்கும். இரவில் வருவது தூக்கம் . நாப், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள், அதிக பட்சம் ஒரு மணி நேரம் இருக்கும். 10 - 20 நிமிடங்கள் வரையிலான நாப் தூக்கமே சிறந்தது.வேலைக்கு இடையே, இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் குட்டித் தூக்கம் வரும். தூக்கத்தின் நேரம், உறங்கும் கால அளவு இவையெல்லாம் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். பல கார்ப்பரேட் நிறுவனங்களில் `நாப் தூக்கம்’ போட வசதி செய்துதருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள்...

* மூளை புத்துணர்வுப் பெற உதவும்.

* வேலையைச் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் செய்ய உதவும்.

* மனச்சோர்வைப் போக்கும்.

* மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

* சிந்தனையை ஊக்குவிக்கும்.

புத்துணர்வு தரும்

பக்கவிளைவுகள்...

* இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

* ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டரை (Sleeping Disorder) ஏற்படுத்தலாம்.

* இயல்பான தூங்கும் நேரம் குறையும்.

தூக்கம்

யாருக்கெல்லாம் நாப் (குட்டித் தூக்கம்) வரலாம்?

* இரவு குறைந்த நேரம் தூங்குபவர்களுக்கு.

* உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு.

* மனச்சோர்வு மிகுந்த வேலைப்பளு உள்ளவர்களுக்கு.

* இரவுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு.

* இரவில் கண்விழித்துப் படிப்பவர்களுக்கு.

குறிப்பு: நாப் ஸ்லீப் அனைவருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. மேலும், இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஏற்படுவது.

Doctor suicide

பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை... ஜிப்மர் மருத்துவமனையில் அதிர்ச்சி

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசிபோட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவத்தால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுவை கதிர்காமம் ஆனந்தா நகர் இளங்கோ வீதியில் உள்ள கணபதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஷாலினி. இவரின் மகள் ரேஷ்மி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்களுக்குச் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூரு. ரேஷ்மி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. படிப்பை முடித்து,பின்னர் ஜிப்மர் மருத்துவமனையிலேயே டாக்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் ரேஷ்மியின் தாயார் ஷாலினி மைசூருக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்றுக் காலை வெகுநேரமாகியும் ரேஷ்மி மருத்துவமனை டியூட்டிக்கு வரவில்லை. இதனால் அவருடன் பணிபுரியும் சக டாக்டர்கள் ரேஷ்மியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் செல்போனை எடுக்கவில்லை.

உடனே ரேஷ்மிவசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அவருடைய வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரேஷ்மி அவருடைய அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அங்கிருந்து மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ரேஷ்மி இறந்து விட்டது தெரியவந்தது. ரோஷ்மி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷ்மி சாவுக்கான காரணம் என்ன? காதல் தோல்வியா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் ஜிப்மர் மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Source: tamil.oneindia.com

Dailyhunt

Transport strike


Tamil News >> Newsfast தமிழ்

Tuesday, 16 May, 4.57 pm

எஸ்மா சட்டம் பாயும்! டிரைவர், கண்டக்டர்களை கண்டிக்கும் உயர்நீதிமன்ற கிளை...

அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் அடங்கும் அரசு பேருந்து போக்குவரத்து துறையின் ஸ்டிரைக்கால் தமிழ்நாடு தாங்க முடியாத சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடியான கால கட்டத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தாங்க இயலாத அளவுக்கு கட்டண கொள்ளையில் இறங்கி சாகடிக்கின்றனர் மக்களை.எங்கும் நகரமுடியாமல் அவதிப்படும் மக்கள் நிம்மதியிழப்பு, பொருளிழப்பு என்று எல்லா வகையிலும் துயரத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் எனும் வழக்கறிஞர் தொடுத்த பொது நல வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவுக்கு கீழ் படிந்து போக்குவரத்து துறை ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்களா அல்லது உச்சநீதிமன்றத்திடம் முறையிடுவார்களா என்பது விரைவில் புரியும்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு நிலைமை சீரானால் நீதித்துறையின் மாண்பு பாதுகாக்கப்படுவதோடு மக்களின் துயரும் தீர்க்கப்படும்.

ஏற்கனவே பழைய ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நெடு நாள் நீண்டபோது இந்த எஸ்மா சட்டம் பயன்படுத்தப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது இந்த எஸ்மா சட்டம் பாய்ச்சப்பட்டு கைது நடவடிக்கைகள் வெடித்தது நினைவிருக்கலாம்.

Dailyhunt

MR students demand scribes for college exams

DECCAN CHRONICLE. | SHWETA TRIPATHI

Representative image

Chennai: After the Plus-2 results were declared, Raghav S, a student of Anugraha School for Deprived was very enthusiastic about getting into college.

Though living with dyslexia, he wants to pursue higher education in computer science, but a college where he desired to study refused to give him the assistance of a scribe for writing exams.

Raghav is now doubtful about joining the college and pursuing his dreams. The story is not above one Raghav and one college. It’s about the bias that the TN Government seems to show towards students with mental disorders. There are no guidelines for colleges and universities to provide special services for students with Dyslexia, Att-ention Deficit Hyperactive Disorder, Irlen Syndrome, slow learners and mentally unsound students.

Admissions seem to be a difficult task for many such students, as they are not granted any additional help. Most autonomous colleges and private universities provide scribe only for visually challenged students.

“Students are granted scribe after assessment either by Department of Psychiatry, or by Certified Registration Professionals (CRP) number at Rehabilitation Council of India till they are in school, but there is no such procedure that should be followed by the colleges and universities for aiding such students,” said Harini Mohan, an official at Rehabilitation Council of India.

However, sources in Madras University say that colleges under it need to refer such students to the university and a scribe will be provided. “But no concrete guidelines in the form of an assessment are followed to decide on provision of scribes for MR students, as no guidelines have been laid by the Department of Higher Education,” the official said.

With graduation exams round the corner in some private universities, the students are worried about their performance, due to the non-provision of scribes by respective universities.

Anna University cuts intake for courses in 44 engineering colleges across Tamil Nadu

By S Mannar Mannan  |  Express News Service  |   Published: 16th May 2017 04:25 AM 
COIMBATORE: Inspection teams of Anna University, which visited private engineering colleges across the State, have found that select courses offered by 44 engineering colleges are not supported by adequate faculty strength and infrastructure. The university has therefore decided to reduce the number of students allowed for these courses.
Ahead of the new academic year, Anna University had sent separate inspection teams to around 530 self-financing engineering colleges to check whether they have adequate faculty strength and infrastructure, including classrooms, laboratories and libraries. The visits, which began in mid-February, were completed recently.
The university had sent notices to the colleges short of the required faculty and infrastructure, asking them to rectify the shortfalls. They were also asked to send compliance reports. Based on the compliance reports, the university has taken a final call.
“As per the Supreme Court order, we have to complete the affiliation process before May 15. The final decision on extending the affiliation of engineering colleges was taken during a meeting on Saturday,” said a highly placed source in the university.
“The university has decided to reduce the intake of some courses offered by 44 private engineering colleges, as they were found short of faculty and infrastructure. Some of them have rectified the deficiency highlighted by the university and they have been granted affiliation and allowed full intake,” the source added.

Meanwhile, 11 existing private engineering colleges did not apply for affiliation this year. “These colleges will be closing down from this academic year. Existing students could be shifted to other colleges,” the official said. The university has completed its affiliation process and is now awaiting the extension of approval process by the AICTE.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது: பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்

பிரகாஷ் ஜவடேகர் | கோப்புப் படம்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உச்ச நீதிமன்ற தீர்ப்புப் படியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) அண்மையில் நடந்து முடிந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 8-ல் வெளியாக உள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் ஒப்புதலை எதிர்பார்த்து இருப்பதாலேயே இன்னும் மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ''நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்கிறோம். குடியரசுத் தலைவர் ஒப்புதலை எதிர்பார்த்து இருப்பதாலேயே இன்னும் மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மத்திய அரசின் முடிவுக்குப் பின்னரே மருத்துவ விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Anna university


compassionate postings..court


Rajini


போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் : பாதியில் இறக்கி விட்ட பயணியர்

பதிவு செய்த நாள் 15 மே
2017
22:06

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், போதையில் பஸ் ஓட்டிய டிரைவரை, பயணியர் பாதி வழியில் இறக்கி விட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை அடுத்து, தற்காலிக டிரைவர்கள், அண்ணா தொழிற்சங்க டிரைவர்களை வைத்து, பஸ்களை இயக்கி வருகின்றனர்.

முந்தைய நாள் பணிக்கு பின், ஓய்வில் மது அருந்தி, போதையில் இருந்த டிரைவரை, ராமநாதபுரம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பணியில் ஈடுபடுத்தினர். ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து, 18 கி.மீ.,யில் உள்ள பாண்டியூர் கிராமத்திற்கு, நேற்று மதியம், 12:00 மணிக்கு சென்ற டவுன் பஸ்சை, போதையில் டிரைவர் கண்டபடி ஓட்டினார். இதை பார்த்த பயணியர், உயிர் பயத்தில் அலறினர். டிரைவர் போதையில் இருப்பதை அறிந்ததும், பயணியர் வலுக்கட்டாயமாக, பஸ்சை நிறுத்தி, டிரைவரை இறக்கி விட்டனர். வேறு டிரைவர் வரவழைக்கப்பட்டு, பஸ் இயக்கப்பட்டது. போதை டிரைவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுற்றுலா, ஆம்னி பஸ்களை 'பர்மிட்' இன்றி இயக்க உத்தரவு

  பதிவு செய்த நாள் 15 மே2017 22:05

 போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை முறியடிக்கும் வகையில், நேற்று தமிழகம் முழுவதும், 'பர்மிட்' இல்லாத சுற்றுலா பஸ்களின் இயக்கத்துக்கு, அதிகாரிகள் அனுமதி அளித்தனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்கால், பயணியருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தனியாருக்கு சொந்தமான ஸ்பேர் பஸ்கள், ஆம்னி பஸ்கள், சுற்றுலா பஸ்களை இயக்கிக் கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள், போக்குவரத்து துறை மூலம் அனுமதி அளித்தது.

சேலம் மாவட்டத்தில், 120 பஸ்கள், நாமக்கல், 80, ஈரோடு, 90, தர்மபுரி, 60, கிருஷ்ணகிரி, 90 என, தனியார், ஆம்னி, சுற்றுலா பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பஸ்கள், கூட்டம் அதிகமாக காணப்படும் வழித்தடங்களை தேர்வு செய்து, அவற்றில் மட்டுமே இயக்கப்பட்டன. குறிப்பாக, சேலத்தில் இருந்து திருச்சி, நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. ஆனால், நீண்ட வழித்தடங்களான, சேலம் - மதுரை, சேலம் - பெங்களூரு வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை.

வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது: முதல்வரின் சேலம் மாவட்டம், போக்குவரத்து துறை அமைச்சரின், கரூர் மாவட்டங்களில், பயணியருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சுற்றுலா, தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எழுத்துப்பூர்வமான, 'பர்மிட்' வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி, வாய்மொழி அனுமதியில், பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மறுகூட்டல்: ஒப்புகை சீட்டு எண் முக்கியம்


பதிவு செய்த நாள்

15 மே
2017
21:45



சென்னை: பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோர், ஒப்புகை சீட்டு எண்ணை பாதுகாக்குமாறு, தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 12ல் வெளியான நிலையில், 'மதிப்பெண்ணில் சந்தேகம் இருப்போர், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்தது. இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. இந்நிலையில், 'மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு எண் மூலமே, மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்; விடைத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும்' எனவும், தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

என் வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடாதீங்க: மலிவு விலை உணவகத்தில் மனைவி புகார்

:பிண்டி: 'ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட, அரசின் மலிவு விலை உணவகத்தில், அரசு ஊழியரான என் கணவருக்கு உணவு அளிக்க வேண்டாம்' என, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், புகார் அளித்துள்ளார்.

ம.பி., மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழை மக்கள் வயிறார உணவருந்தும் வகையில், தீன்தயாள் உணவகம் திறக்கப்பட்டது. இங்கு, முழு சாப்பாடு, ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அதில், சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறி கூட்டு, சாம்பார் போன்றவையும் உண்டு.

தனியார் நிறுவனம் இந்த உணவகத்தை நிர்வகித்து வருகிறது. பிண்டி மாவட்டம், நிராலா ரங் விஹாரில் துவக்கப்பட்ட மலிவு விலை உணவகத்துக்கு வந்த ஒரு பெண், ஒரு கடிதத்தை, அதன் நிர்வாகியிடம் கொடுத்தார்.

அதில், அவர் எழுதியிருந்ததாவது: என் கணவர் மின்சார வாரியத்தில் பணியாற்றுகிறார்; மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாய். சமீபகாலமாக, நான் கொடுத்து அனுப்பும் மதிய உணவு, அப்படியே திரும்பி வருகிறது. விசாரித்தபோது, என் கணவர், இந்த மலிவு விலை உணவகத்தில், மதிய உணவு சாப்பிடுவது தெரியவந்தது.

ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட இந்த உணவகத்தில், என் கணவர் போன்ற அதிக வருமானம் உள்ளவர்களுக்கு, தயவு செய்து உணவு அளிக்க வேண்டாம். அதிக வருமானம் உள்ளவர்கள் சாப்பிடுவதால், ஏழைகளுக்கு உணவு கிடைக்காமல் போய் விடும்.இவ்வாறு அந்த கடிதத்தில், அவர் எழுதியிருந்தார். இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PG Medical admissions.Pondy

PG medical seat woes continue as govt. drags its feet

S. Senthalir

PUDUCHERRY, MAY 16, 2017 00:00 IST

Colleges refuse to obey government order on fees and turn candidates away while the Fee Committee is yet to meet

Candidates selected for PG medical seats through CENTAC stare at uncertainty with the Government of Puducherry remaining non-committal in ensuring their smooth admission into deemed universities and self-financing colleges.

Apart from extending the joining date to the PG medical courses for the state quota of self-financing colleges (and not deemed university) till Wednesday, the government has only announced a fee structure, which, on Monday, it claimed was only temporary as the Fee Committee is yet to meet.

Meanwhile, all the three self-financing colleges, including Pondicherry Institute of Medical Sciences (PIMS), Sri Manakula Vinayagar Medical College and Hospital and Sri Venkateshwaraa Medical College and Hospital have turned away the candidates who went for admission with the Demand Draft (DD) despite the government order.

A candidate, seeking anonymity, said that when he went to the medical institution with the DD of Rs. 3 lakh as announced by the government for the government quota, he was sent back stating that he needs to pay Rs. 38 lakh.

The Chief Secretariat (Health), on May 14, 2017, passed an order fixing fee for the PG medical or dental courses for the academic year 2017-18. The order stated, “The Chairman, Fee Committee vide his letter has stated that as the Fee Committee in Puducherry is yet to meet and discuss the fee for the PG medical courses and the counselling has also begun, the fee fixed by the Tamil Nadu Fee Committee may be collected in Puducherry also, for the time being, by getting an undertaking from the student or parent that the fee is being collected subject to the fee that would be fixed by the Fee Committee, Puducherry.”

‘A temporary measure’

In view of the above, they fixed a fee structure as a ‘temporary measure’ that would be subject to revision. “Based on the order, we took the demand draft to the colleges. But, we were refused admission. We were waiting to meet the Chief Minister and Health Minister but were not given appointment till late Monday evening,” a candidate rued.

Another candidate added, “The institutions are disobeying the government order. Everyone came with Rs. 3 lakh but were turned away. What is the point in holding CENTAC counselling when the institutions have refused to abide by the rules?”

Even the deemed universities in Puducherry refused to accept the fees from the candidates who were selected through CENTAC for PG Medical courses. On Monday afternoon, the candidates who were denied admissions, staged a protest before the CENTAC office. Subsequently, the CENTAC office accepted the DD.

Out of the 76 candidates, only 12 had paid the fees to the CENTAC. Another candidate said that a deemed university had issued a slip to the candidates stating that in “all allotment letters the word ‘government quota’ should be removed, the student should be willing to pay the fee as notified by the institution in the website and the sealed buildings in our campus which are kept under lock and key should be re-opened and the building plan should be released at the earliest as confirmed by the health minister”.

A parent, who was waiting to meet the ministers at the Legislative Assembly, questioned how can counselling for medical colleges be conducted without the announcement of a fee structure? Even primary schools announce the fee structure before admission. “Since we were not aware of the fee structure, we chose a deemed university that is demanding Rs. 40 lakh per year. How can a person from middle class or lower middle class pay this huge amount? The government has let us down. We are angry with this government for not taking appropriate measures at the right time,” added the parent.

Alagappa University

NAAC awards ‘A plus’ grade to Alagappa University

SPECIAL CORRESPONDENT

KARAIKUDI, MAY 16, 2017 00:00 IST

The accreditation will be valid for a period of seven year, says V-C

Alagappa University, which was awarded ‘A plus’ grade by the National Assessment and Accreditation Council (NAAC) has become the only and first university in south India to obtain the grade with 3.64 Cumulative Grade Point Average (CGPA) on the four-point scale.

Announcing this at a press conference here on Monday, Vice Chancellor Professor S. Subbiah said among the four State universities which were accredited with ‘A plus’ grade in the country, Alagappa University was one of the youngest institutions to secure the grade and top the State.

The other three state universities which obtained ‘A plus’ grade were SavitribaiPhule Pune University of Maharastra, Utkal University of Odisha and University of Jammu of Jammu and Kashmir, with CGPA of 3.60, 3.53 and 3.51 respectively, he said.

The NACC has awarded the grade to Alagappa University in the third cycle of accreditation and declared that the grade would be valid for a period of seven years with effect from May 2, 2017, he said. Instead of five years, the extended validation was given in view of the university’s consistency in achieving accreditations in the first and second round assessments in 2005 and 2011, he added.

NAAC had assessed 86 universities and deemed universities and awarded ‘A plus’ to nine universities, including four state universities, he said. NAAC Peer Team has given the highest point to Alagappa University for its sophisticated science laboratories, experienced and committed faculty, good physical and IT infrastructure, eco-friendly environment and good alumni support, Professor Subbiah said.

The team was also impressed with the university’s linkages with local industries, augmented placement services and skill training across several sectors, he added.

“We have exhibited improved performance in all spheres - curricular aspects, teaching-learning and evaluation, research consultancy and extension, infrastructure and learning resources, governance leadership and management and innovations and best practices to stand tall amongst our peers,” he said.

Professor V. Balachandran, Registrar (incharge), M. Selvam, syndicate member and H. Gurumallesh Prabu, controller of examinations, were present.

NEWS TODAY 23.12.2025