Sunday, June 4, 2017

PG Doctors of India must work not more than 48 Hr/week: SC
September 25, 2013

Document source: PG TIMES

As per the directives of the Honourable Supreme Court in its judgment dated,25.9.87, in writ petition No. 348-352 of 1985, all the State Governments, Medical Institutions and Universities are required to amend their rules and regulations to introduce a uniform residency scheme by 1993

“A uniform practice has to be evolved so that the discipline would be introduced. We accordingly allow the present arrangement to continue for a period of five yearsI.e. upto 1992 inclusive. For admission beginning from 1993 there would be only onepattern. All Universities and institutions shall take timely steps to bring about such amendments as may be necessary to bring statutes, regulations, and rules obtaining in their respective institutions in accord with this direction before the end of 1991 so that there may be no scope for raising of any dispute in regard to the matter.The uniform pattern has to be implemented for 1993. It is proper that one uniform system is brought into vogue throughout the country.”
In this connection Ministry of Health & Family Welfare, Govt. of India has sent directive to all states & U.T. administrations vide letter No. S-11014 /3/91/ME (P) dated 05 June, 1992. Unfortunately many States in India refused to obey that orders till date.

Ministry of health and family welfare, Government of India sent consolidated instructions to all states and UT administration vide letter number S-11014 /3/91 ME(P) regarding implementation of Uniform Central Residency Scheme after the directives of the Supreme Court in its judgment dt. 25.9.87 in writ petition No. 348-352 of 1985, The instruction No.13 of this letter ‘Hours of Work’, it is mentioned that

“Continuous active duty for resident doctors will not normally exceed 12 hours per day. Subject to exigencies of work the resident doctors will be allowed one weekly holiday by rotation. The resident doctors will also require to be on call duty not exceeding 12 hours at a time. The junior Residents should ordinarily work for 48 hours per week and not more than 12 hours at a stretch subject to the condition that the working hours will be flexible as may be decided by the Medical Superintendents concerned keeping in view the workload and availability of doctors for clinical work.”
As we see, here total weekly hours of work (48 hrs/week) as well as the maximum hours in single stretch (12 hours) are clearly defined. Of course the authorities may remind us the flexibility given in above instruction. However  We would like to state the following.

a) Any flexibility given by law or constitution should only be used as a special measure and must not be used as ROUTINE. Today Medical colleges in India are forcing Junior doctors to work continuous 24 Hrs (!) and this is being practised routinely for last many years.

b) That flexibility is given for ‘Working hours’ & not for hours of work that is, while authorities are free to post any doctor in day or night or in holidays, they must stick to the norms of “hours of work” that is Maximum 48 hours in a week and 12 hours Finally even if the total no. of doctors posted (when all posts are filled) are not able to cope with work load under normal working-hours-limit then the no. of post must be increased. In no case junior doctors to be forced to work more than what is permitted by law and various recommendations. in a single stretch.

The International Labour Organization, Geneva (India being the member of the same) as early as in 1962 in its recommendation No.116 concerning Reduction of hours of work in its General principle No. 4 states as

PRINCIPLE 4: Normal hours of works should be progressively reduced, when appropriate with a view to attaining the social standard indicated in the Preamble of this recommendation without reduction in the wages of the workers as at the time hours of work are reduced.

PRINCIPLE 6 states as - Where normal weekly hours of work are EITHER FORTY EIGHT OR LESS, MEASURES FOR THE PROGRESSIVE REDUCTION OF HOURS OF WORK in accordance with paragraph-4 should be worked out and implemented in a manner suited to the particular national circumstances and the conditions in EACH sector of economic activity.

Further in Determination of Hours of works 12(1) it states: The calculation of normal hours of work as on average over a period longer than one week should be permitted when special conditions in certain branches of activity or technical needs justify it.
Recently ILO in its Night Work Recommendation 1990 (No. 178) states that “the normal hours of work of night workers should generally be less on average than those of workers performing the same work to the same requirements by day.”

Considering that today in India in 5 days week most of the office workers perform a 42-43 hours/week and the maximum limit is set as 48 hours/week for all including the health sector, the total hours of work of doctor (especially Junior doctors , interns) per week must be less than this (i.e. 48 hours/week) as they perform most (all) of the night duties.

Further in this recommendation it is clearly stated that IN NO CASE should two consecutive full time shifts be performed, except in cases of FORCE MAJEURE (The allowed hours of shift in a single stretch is MAXIMUM 12 hours) & In No case further extension of this limit (12 hours) should be done. Presently, we Junior doctors are forced to work continuous 24 Hours (!) in a single stretch. In many departments weekly hours (Normal average) are 65-80 hrs/week & it crosses even 100(!)Hrs/week.
Further it states that at least 11 hours of rest period should be granted between two shifts (One must remember, shift are of Maximum 12 hours) as far as possible.

Presently Resident doctors (Post graduate students in Medical colleges) in India are forced to work 85-105 hrs/week in most of the clinical departments without the protection of any service rules because they are students. This is done under the instruction of the Head of the Departments concerned. Junior doctors pursuing their post graduation course, whose final assessment are in hands of these authorities, i.e. HODs. Therefore no one normally risks their career. This way exploitation of this floating population of junior doctors goes on and on the other hand patients suffer routinely and many times even die due to this forced negligence. While stretching duty hours our learned authorities simply forget the proven fact that errors and accidents increases sharply (An exponential graph) in mental and physical work, when duty hours are stretched beyond 10-12 hours continuous duty.

As the graph of errors and accidents increases steeply this 100% increase (24 hrs continuous duty in place of 12 hours maximum limit) in duty hours is sufficiently enough to do BLUNDERS AND ENDANGER human life.

“A doctor at his 20th-24th hour of continuous duty in Emergency ward, if not able to provide proper care to the patient for whom even a single minute can prove life saving or Fatal. This way if patients suffer than who will be HELD RESPONSIBLE, the Doctor on duty or the HOD or DME or the Govt.?”
Because doctor is performing unofficial extended hours, and he/she has the reason to state that doctor was not in his/her proper mental and physical condition due to chronic sleep deprivation and exhaustion. In fact this extended hour coincides with the mid night and early morning time, when all those patients who come to casualty irrespective of there diagnosis, feel that if

they will delay till morning it may be harmful/fatal to them and most of the times indeed these emergencies are life threatening. With great hope in mid night when they visit hospital for proper care, they find a drowsy, tired, exhausted doctor, who is not even able to examine properly. The general impression becomes that doctor has neglected him, where as patient hardly knows doctor’s real condition. After all patients do deserve the proper and efficient care, especially when there is no scarcity of doctors and this duty regime is artificially motivated. The finding of Justice Ranganath Mishra, former National Human Rights Commission, about delay and negligence in treatment of accident victims, are actually related with this illegal duty hour practice. Under growing public demands for health quality services the question which involves life of human beings, cannot be left unanswered.

After approximately eighteen hours of work Doctors have got the equivalent psychomotor dysfunction as having a blood alcohol level of .05. So not only at .05 you’re not allowed to drive but at the equivalent level of psychomotor dysfunction you’re allowed to look after patients. And by the time you’ve worked for twenty-four hours you’ve got the equivalent of having a blood-alcohol level of .1 and that’s just ridiculous.

In most of the countries there is a limitation on extra hours, the average over month or quarterly it must be with in norms, which varies 40 to 48 hours per week in different countries. In most of the states in India no duty hour’s norm exists. Most hospital authorities do not even bother how many hours a junior doctor has worked, and so it increases up to inhumane levels as high as 103 hours in a week.
One should also note that a number of countries have enacted duty hours regulations for doctors. In Denmark, Norway and Sweden, residents work only 37-45 hours per week. In Netherlands, residents’ duty hours are limited to 48 hrs per week. France has a 35 hour per week limit.

The unexpected death of Libby Zion, 18 yr old daughter of an attorney and writer for the New York Times, at New York hospital in 1984, led to series of investigation that resulted in profound changes in residency duty hours in USA.

In similar situation in London in December 1990 a junior doctor obtained a preliminary judgement from the court of Appeal on a claim for damages against Bloomsbury Health Authority. The court said that health authorities could not lawfully require junior doctors to work for so many hours that there was a foreseeable risk of injury to their health. The Vice-Chancellor, Sir Nicolas Browne-Wilkinson, said: “In any sphere of employment other than that of junior doctors, an obligation to work up to 88 hours in any one week would be rightly regarded as oppressive and intolerable.” The doctor had served a writ on the health authority in March 1989 after working a 112-hour week which included a 49-hour shift over a weekend. He felt that his health had suffered so much that he resigned from his job at University College Hospital, London, and gave up medicine for a time.

Great public and media attention was drawn in September 1990 when two doctors in the neonatal pediatrics unit of the Southern General Hospital, Glasgow, were threatened with dismissal for refusing to carry on working 115 hours a week. After two sessions working the 115-hour week, the doctors said that chronic sleep deprivation was severely impairing their medical judgment and putting the lives of new-born babies at risk. In the same month a hospital patient in Middles borough died after a tired doctor gave her the wrong injection. The doctor had been on duty for 30 hours with just three hours interrupted sleep when she gave the fatal injection.

The comments of the acting coroner in the inquest into the death of a New Zealand woman, the innocent party in a car crash, reinforce the importance of addressing the issue of fatigue. The patient survived the accident, but died following a mishap while in hospital. A significant issue for the coroner was the extent to which the fatigue of one of her doctors may have played a part in her demise. The coroner remarked that there was a growing level of concern, both nationally and internationally, over the hours of work of doctors in hospitals, and suggested that the medical professional bodies address the issue of extended periods of work.

Hope in India, justice will not get delayed until some VIP will die. Negligence and irritative behaviour (due to chronic sleep deprivation) of doctors in government hospitals are known to every one and the death due to such forced negligence are nothing but routine (!) death of hospitals.
With great hope, that commission will look in to the matter and take necessary steps to end this violation of human rights of both patients and junior doctors.

Ref.
1. Honorable Supreme Court in its judgment dated, 25.9.87, in writ petition No. 348-352 of 1985
2. Letter No. S-11014/3/91/ME (P) dated 05 June, 1992.
3. Letter No. S-11014/25/89- ME(P).
4. Letter No. S-11014/39/80-ME(P)
5. Conclusion from general report (Latest), Standing technical committee for Health & Medical Services, ILO, Geneva.
6. ILO`s recommendation No. 178, 116.
7. Swan, N. Juniors’ Hours: International Overview. BMJ 1990; 301: 830-832.
8. Olson LG, Ambrogetti A. Working harder — working dangerously. Fatigue and performance in hospitals. Med J Aust 1998; 168: 614-616.
9. Williamson A. The effects of workload and long hours of work on medical officers. Sydney: National Institute of Occupational Health and Safety (WorkSafe Australia ), 1995.
10. Nocera A, Khursandi DS. Doctors’ working hours: can the medical profession afford to let the courts decide what is reasonable? Med J Aust 1998; 168: 616-618.
11. Fein EB. Flouting law, hospitals overwork novice doctors. New York Times, 14 December 1997; 1.
12. Holmes G. Hospital medical officers: hours of work and workloads, A strategic approach to occupational health and safety. Canberra: Australian Medical Association, 1995.
13. Department of Transport. Investigation into the Kings Cross Underground Fire. London: HMSO, 1998.
14. Coroner’s Court. In the matter of the death of Patricia Margaret Ross. Rotorua, New Zealand : 15-17 October 1997; 18-20.
15. Permanent Working Group of European Junior Hospital Doctors. Working conditions for doctors in training. Conference Proceedings, Executive Summary. Brussels: European Union Publications Office, December 1995.
16. European Union. Directive on Working Time, 93/104. Brussels: European Union Publications Office, 1993.
17. NHS Management Executive. Hours of work of doctors in training:

NEET PG scam: Medical entrance server was hacked, two held, say cops
April 30, 2017

PG TIMES


With the arrest of two people, Delhi Police have cracked a case wherein computer servers were allegedly hacked during the National Eligibility and Entrance Test (NEET-PG), held to admit students into postgraduate medical courses in December, 2016. Raids are also being held in Delhi, Bengaluru, Bihar and other cities to nab the rest of the accused, which include some doctors, police said. Police said the arrested persons have been identified as Abhishek Singh, a native of Varanasi, and Atul Vats, a native of Patna.

“Police received information on January 20 that some people cracked the online medical entrance examination, held between December 5 and December 13, after hacking the servers. With the help of technical surveillance, police identified the accused and teams were formed to unearth the conspiracy,” police sources said, adding that a case has been registered following a complaint by Inspector Ashish Kumar, who was the leading the investigation team before Inspector Lokendra Chauhan took over.

The two arrests were made on April 10 and the men were taken into police custody for 10 days. Explaining the modus operandi of the gang, police said they charged a huge amount of money from aspirants after assuring them of good ranks in the NEET postgraduate examination.
“The accused zeroed in on aspirants and struck a deal with them after taking a hefty amount. Vats met a person looking after the software used for the examination and roped him in. Singh, meanwhile, asked some doctors for help. The doctors would sit in a hotel in Dwarka and take the exam from there,” a senior officer said.

“On the day of the examination, the candidate at the examination centre would be able to send the questions to the doctors as the servers were compromised. The paper was solved by experts sitting in a hotel in Dwarka, who would send the answers back to them,” an officer said.
“Since the exam was computer-based, an agency from the US providing Educational Testing Services is being roped in to unearth the larger conspiracy,” the officer said.
இக்கட்டான சூழலிலும் சென்னை சில்க்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் பணி


சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் தீயை அணைக்கும் வீரர்கள். | படம்: க.ஸ்ரீபரத்

தீ விபத்தால் பெரும் இழப்பை சந்தித்துள்ள சூழலிலும், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க நகை மாளிகை கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாத சம்பளமும் அவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டு கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு பணிபுரிந்த 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு கடந்த மாதம் பணி செய்ததற்கான சம்பளம் கிடைக்காது என எண்ணினர். ஆனால், இக்கட்டான சூழலிலும் சென்னை சில்க்ஸ் நிர்வாகம் உடனடியாக அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளத்தையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை மற்றும் குமரன் தங்க நகை மாளிகை ஆகியவற்றில் பணி செய்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு அருகே உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவன கிளையில் தற்போது எந்த பணி, என்ன பிரிவில் இருந்தார்களோ அதே பணியில் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம். புதிய கட்டிடம் கட்டிய பிறகு அவர்களுக்கு தகுந்த பணி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற நிறுவனங்களின் ஆதரவு

சென்னை சில்க்ஸ் நிறுவனம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து அப்பகுதியில் 3-வது நாளாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் அதிக அளவிலான தங்கம், வைர நகைகள் இருப்பதால் 24 மணிநேரமும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீஸாருடன் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட நிறுவன பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். போலீஸாருக்கு மோர் உள்ளிட்ட குளிர்பானங்களையும் அவர்கள் அவ்வப்போது வழங்கி வருகின்றனர்.
வாடகைக்கு வீடு தேடுகிறீர்களா?



புதிய ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி பிறக்கிறது. ஆனால் பட்டிக்கிற பிள்ளைகளின் கணக்குப்படி ஜூனில்தான் ஆண்டு தொடங்குகிறது. அதைக் கல்வியாண்டு என்கிறோம். இந்தக் கல்வியாண்டைக் கணக்கு வைத்து வேலை மாற்றம், வீடு மாற்றம் எல்லாம் நடக்கும். வீட்டை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவது, ஒரு ஊரிலிருந்து மற்றொருக்கு மாற்றுவது எல்லாம் இந்தச் சமயத்தில் நடக்கும். அதனால் வாடகைக்கான வீடுகள் இந்த மாதத்தில் அதிகம் காலியாகும். இதனால் வாடகை வீட்டை மாற்ற நினைப்பவர்களும் இந்த மாதத்தில் வீடு பார்க்கத் தொடங்குவர்.

இந்தக் காலகட்டத்தில் வீட்டுக்கு முன்பணம் கொடுப்பத்தில் தொடங்கி வாடகை வீடு குறித்துப் பல சந்தேங்கள் வரும். இதைத் தீர்க்கம் பொருட்டு வாடகை வீடு குறித்த சந்தேகங்களும்:

வாடகைக் கட்டணமும் முன் பணமும்

வாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.

வாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.

வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.

வாடகைதாரர் எந்தக் காரணங்களுக்கு காலிச் செய்யச் சொல்லலாம்?

உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.

வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.

வீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தாலும் காலிசெய்யச் சொல்லலாம். வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது... அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தாலும்(மலைவாசஸ்தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது) காலி செய்யச் சொல்லலாம்.

வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு பெற முடியுமா?

வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.

வாடகைதாரர் வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.

வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?

சென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.

இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா?

தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.
வாரிசு, இறப்புச் சான்றிதழ் அவசியமென்ன?



வாரிசுச் சான்றிதழ்

ஒரு குடும்பத் தலைவர் இறந்து விடுகிறார். அவரது பெயரில் சொத்துகள், வங்கிப் பணம், முதலீடுகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவர் யாருக்கும் சொத்துகளை எழுதிவைக்கவில்லை என்றால் மனைவி, பிள்ளைகள் போன்ற அவரது வாரிசுதாரர்கள் அந்தச் சொத்தில், பணம், முதலீடுகளில் உரிமைகோர குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் போதுமானதல்ல. வாரிசுச் சான்றிதழ் அவசியம். வாரிசுச் சான்றிதழ் வாங்கியிருந்தால் அந்த நிலத்துக்கு உரிமை கோருவதை யாராலும் தடுக்க முடியாது. வாரிசுச் சான்றிதழ்பெறுவதற்காக விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசின் இணையத்தில் (http://cms.tn.gov.in/sites/default/files/forms/cert-legalheir_0.pdf) கிடைக்கிறது.

இந்தப் படிவத்தை நிரப்பி அத்துடன் இறப்புச் சான்றிதழ், வாரிசு உரிமை கோருபவர்களின் இறப்பிடச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். வட்டாட்சியருக்குத்தான் வாரிசுச் சான்றிதழ் கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களின் விசாரணைக்குப் பிறகு இந்தச் சான்றிதழ் வழங்கப்படும்.இறப்புச் சான்றிதழ்

இந்தியப் பிறப்பு/இறப்புச் சட்டத்தின்படி (1969) இறப்புகளைப் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரச் சான்றிதழ் ‘இறப்புச் சான்றிதழ்’தான். இறந்தவரின் பெயரில் உள்ள நிலம், வீடு, முதலீடு போன்றவற்றை உரிமை கோர இறப்புச் சான்றிதழ் அவசியம். இறப்பு நிகழ்ந்த ஊரின் உள்ளாட்சி அமைப்புகள்தான் இறப்புச் சான்றிதழ் தரக்கூடிய அதிகாரம் பெற்றது. உதாரணமாக நகராட்சி, மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் போன்ற அதிகாரிகளிடம் இறப்புச் சான்றிதழ் பெறலாம்.

மருத்துவமனையில் இறக்கும்போது, இறந்தவரின் பெயர், வயது உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனையில் தெரிவித்து, இறப்பு நிகழ்ந்ததற்கான காரணத்தைக் குறிப்பிடும் படிவம் IV-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும். வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், அதை அருகில் உள்ள பிறப்பு/இறப்பு பதிவாளரிடம் தெரிவித்து படிவம் IV-ஏ-வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இறப்பை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ். ஒருவர் இறந்த பிறகு முப்பது நாட்களுக்குள் இறப்பைப் பதிவுசெய்ய வேண்டும். இல்லையெனில் தக்க காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
'பேச்சால் கவர்ந்த கலைஞர்': எஸ்.வி.சேகர் வாழ்த்து



பேச்சாற்றலால் மக்களைக் கவர முடியும் என அண்ணாதுரைக்குப் பிறகு நிரூபித்து காட்டியவர் கலைஞர் கருணாநிதி என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி எஸ்.வி.சேகர் தி இந்து தமிழ் இணையதளத்துக்காக அளித்த பிரத்யேக வாழ்த்துச் செய்தியில், "எனக்கு 80-களிலிருந்தே எனக்கு கருணாநிதியுடன் பழக்கம். ராம நாராயணன் படங்களில் நடித்த போது அதன் வெற்றி விழாக்களில் அவரை சந்தித்திருக்கிறேன்.

பிராமண எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு ஆகியவற்றால் கொள்கைரீதியாக நான் அவரை ஏற்றுக்கொண்டதில்லை. எல்லாவற்றையும் தாண்டி, பேச்சினால் மக்களைக் கவர முடியும் என அண்ணாதுரைக்குப் பிறகு நிரூபித்து காட்டியவர் கலைஞர் அவர்கள்.

அவரது மகன் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் என பலருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்படிப் பழகும்போது, தனிப்பட்ட முறையில் நட்புக்கு பெரிய மரியாதை கொடுக்கக்கூடிய மனிதர் என்பது தெரிந்தது. ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர். அற்புதமான நகைச்சுவை உணர்வு உள்ளவர். ஒரே வரியில் நகைச்சுவையாக பதிலளிக்கக் கூடியவர்.

ஒருமுறை நான் அவரது வீட்டுக்கு போன போது, என்ன போன வார ஏதோ நூல் வெளியிட்டீர்களாமே என்று கேட்டார். நான் எனது பூணூலை காட்டி, நான் தினமும் தான் நூலை வெளியே இட்டுருக்கிறேன் என்றேன். அதை அவர் சிரித்து ரசித்தார்.

எனது மகன் திருமணம், எங்களின் 60வது திருமணம் என என் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரை தவறாமல் வந்துவிடுவார். அவருக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அட்சதை தட்டை நீட்டும்போது கைநிறையை அட்சதையை எடுத்துப் போட்டு ஆசிர்வாதம் செய்வார்.

என் மனைவி, எப்போதும் அவருக்குதான் ஓட்டுப் போடுவேன் என்பார். காரணம், கலைஞர் முதல்வராக இருந்தபோதும் நம் அழைப்பை மதித்து வந்துவிட்டு செல்கிறார் என்பார். இதுதான் எதிராளியையும் மாற்றக்கூடியதில் வல்லவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதே போல, சட்டமன்றத்தில் நான் பேசும்போது, "வீர வாஞ்சிநாதனுக்கு மணிமண்டம் கட்ட வேண்டும் என காமராஜர் அடிக்கல் நாட்டியிருந்தார். அந்த அடிக்கல், குற்றாலம் பக்கத்தில் இருக்கும் வண்ணாந்துறை என்ற இடத்தில் துணி துவைக்கும் கல் போல பயன்படுத்தப்படுகிறது. 30 வருடங்கள் ஆகிவிட்டது. மணி மண்டபம் கட்ட வேண்டும்" என சொன்னேன். அதற்கு, "நமது சட்டமன்ற வாஞ்சிநாதன் கேட்கிறார்" என என்னைக் குறிப்பிட்டு கலைஞர் சொன்னார். அப்போது அதிமுக கட்சிக்கும் எனக்கும் சில பிரச்சினைகள் இருந்தது. இருந்தாலும் ஒரு எம்.எல்.ஏவாக என் கடமையை செய்ய வேண்டும் என நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதற்கு சட்டமன்ற வாஞ்சிநாதன் என கலைஞர் குறிப்பிட்டார்.

கலைஞருக்கு இப்போது உடல்நலம் குன்றியதாக கேள்விப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறார் 94 வயது வரை வாழ்ந்து, இப்படி நோய்வாய்ப்பட்டு மீண்டுவருவது மிகப்பெரிய விஷயம்.

கலைஞர் தலைமையின் கீழ் கிடைத்த பயிற்சி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
ஒரு வாழைப்பழத்தை ஒரு ஆள் சாப்பிட முடியாது: கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை
கா.சு.வேலாயுதன்



ஒரு நேந்திரன் வாழைப் பழத்தை ஒருவர் சாப்பிட்டாலே மூச்சு முட்டும். அந்தச் சராசரி அளவு நேந்திரன் வாழைகளைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மெகா சைஸ் நேந்திரன் வாழைகளைத் தற்போது கேரளத்து விவசாயிகள் பயிரிட்டுக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

புதிய வகை

பொதுவாக ரஸ்தாளி, பூவன், நாடன், விருப்பாச்சி, கற்பூரவல்லி, கதளி, மலை, நேந்திரன் எனப் பலவகை வாழைகள் பயிரிடப்படுகின்றன. இதில் கிடைப்பதிலேயே பெரிய அளவில் இருப்பது நேந்திரன் வாழை. அது கேரளாவில் சிப்ஸ் போடுவதற்கு பரவலாகப் பயன்படுகிறது. அங்கு நேந்திரன் வாழைக்கான தேவை அதிகம் இருப்பதால், தமிழக விவசாயிகள் நேந்திரன் வாழையைப் பயிரிட்டுக் கேரளத்துக்கு அனுப்பிவருகிறார்கள்.

இப்போது அந்த நேந்திரன் வாழைகளைப்போல் மூன்று மடங்கு பெரிய அளவில் புதிய வாழை ரகம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது திருவனந்தபுரம் வாழை ஆராய்ச்சி மையம். இதைப் பாலக்காடு மாவட்டம் உள்படக் கேரளத்தின் பல்வேறு மாவட்ட விவசாயிகளும் வாங்கிப் பயன்படுத்திவருகிறார்கள்.

பெரிய அளவு காய்கள்

இது குறித்து அட்டப்பாடியில் இந்த வாழையைப் பயிரிட்டுள்ள விவசாயி ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டது:

“நேந்திரன் வாழைமரம் 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. 10 முதல் 12 சீப்புகள் வரும். அதில் ஒரு சீப்பில் 12 முதல் 18 காய்கள்வரை காய்க்கும். இப்போது திருவனந்தபுரம் வாழை ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாழை ரகம், நேந்திரன் வகையைச் சேர்ந்தது என்றாலும் காய் குண்டு குண்டாக உள்ளது. ஒரு குலை 30 கிலோ முதல் 40 கிலோவரை வருகிறது. ஒரு வாழைப்பழம் எனத் தனியாக எடுத்தால் அரை கிலோ முதல் முக்கால் கிலோ எடை வருகிறது. ஐந்து அல்லது ஆறு சீப்பு மட்டுமே காய்க்கிறது. ஒரு சீப்பில் 11 முதல் 13 வாழைக்காய்கள் காய்க்கின்றன. முற்றிய இந்த வாழைக்காயைப் பயன்படுத்திச் சிப்ஸ் போட்டால் அது பப்படம் போல் பெரிய சைஸில் இருக்கிறது. காயும் பழுத்த பின்பு சுவையாக உள்ளது. இந்த ரகத்தின் ஒரு முழு வாழைப்பழத்தை ஓர் ஆளால் சாப்பிட முடியாது.

சொந்தமாக வளர்க்க வேண்டும்

எனக்கு இரண்டு வாழைக் கன்றுகள் மட்டுமே கிடைத்தன. ஒரு கன்று ரூ. 30-க்கு வாங்கி வந்தேன். எனக்கு முன்னதாக அட்டப்பாடி அகழி பகுதியில் உள்ள சம்பார்கோடு கிராமத்தில் மாத்யூ என்பவர் பயிரிட்டிருந்தார். அவர் ஒரு விளைச்சலும் எடுத்துவிட்டு, தற்போது அதில் வந்த பக்கக் கன்றுகளைப் பயன்படுத்திப் புதிதாக இரண்டாவது விதைப்பும் செய்திருக்கிறார். நேந்திரன் வாழையைவிட இதில் சத்து அதிகம் என்று ஆராய்ச்சி நிலையத்தினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால், போதுமான எண்ணிக்கையில் இவை கிடைப்பதில்லை. நாமே இரண்டு வாழைக் கன்றுகள் வாங்கிவந்து நட்டுவைத்து, பக்கக்கன்றுகள் மூலம் விதைக்கு எடுக்க வேண்டும்!”.
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!

நமது நிருபர்

நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்... தவறான வாழ்க்கை முறை. அதற்கு ஒரே ஒரு சிகிச்சைதான் இருக்க முடியும், அது சீரான, ஒழுங்கான உணவு முறை. உண்ணும் உணவில் கவனமில்லாமல் இருப்பதுதான் பல நோய்களுக்கு அடிப்படை. நாம் பல்பொருள் அங்காடியில் வாங்கும் பல பொருள்களை நாள்பட உபயோகிக்க என்று ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம். நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே வைக்கக் கூடாத பழங்கள், காய்கறிகள், உணவுகள் பட்டியல் இங்கே...



வாழைப்பழம்

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.



தேன்

இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான். சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.



அவகேடோ

அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.



சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்கத் தோதானவை அல்ல. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும். மேலும், அதன் தோலை பாதித்து பளபளப்பையும் மங்கச் செய்துவிடும்.

ஸ்டோன் வகை பழங்கள்

ப்ளம், பீச், ஆஃப்ரிகாட், நெக்டாரின் போன்ற மேல்நாட்டு ஸ்டோன் வகைப் பழங்களுக்கும் ஃபிரிட்ஜ் ஒத்து வராது. வாங்கும்போது அதிகம் பழுக்காதநிலையில் இருக்கும் இவற்றுக்கு சாதாரணச் சூழல்தான் ஏற்றது. குளிரில் வைத்திருந்தால் அதிகம் பழுக்காது; சுவை கூடாமல் போய்விடும்.



மூலிகைகள்

மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைத்து வீணடிக்கக் கூடாது, ஏனென்றால், அவற்றின் சத்துகள் குறைந்துபோய்விடும். சாதாரணச் சூழலில், நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப் பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும், தளதளவென்று உலர்ந்து போகாமல் இருக்கும்.

பெர்ரி வகைப் பழங்கள்

சாதாரண தட்பவெப்பத்திலேயே நல்லநிலையில் இருக்கும் இந்தப் பழங்கள் நல்ல சுவையைத் தரக்கூடியவை. அதிக நேரம் குளிரில் வைக்கப்பட்டால், இதன் சுவையும் கெட்டு வடிவமும் மாறிவிடும்.



வெங்காயம்

ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதது வெங்காயம். குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காய மணம் மணக்கும்படி மாற்றிவிடும். உலர்ந்த சூழலே வெங்காயத்துக்கு ஏற்றது. பேப்பர் பைகளில் வெங்காயத்தைப் போட்டு வைத்திருப்பதே போதுமானது. அதிக வெப்பமில்லாத இருண்ட சூழலில், வெங்காயத்தை வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உருளைக்கிழங்குக்கு அருகே வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கில் இருந்து வெளியாகும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுகச் செய்துவிடும். கவனம்!

பிரெட்

பிரெட் போன்ற பேக்கரி பொருள்களும் ஃபிரிட்ஜுக்கு ஆகவே ஆகாதவை. சாதாரண தட்பவெப்பத்தில் சுவையும் மெதுவான தன்மையும் அதிகம் கொண்ட பிரெட், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெட்டு, கெட்டித்துவிடும். ஆகவே இருளான, அதிக வெப்பமில்லாத சமையலறை அலமாரிகளிலேயே டிபன் பாக்ஸ்களில் மூடிவைத்தே பிரெட்டைப் பாதுகாத்துவைக்கலாம்.



மிளகாய்

சிவப்பு, பச்சை, மஞ்சள் என எந்த மிளகாயையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃபிரிட்ஜின் அதிகக் குளிர் இவற்றை அழுகச் செய்துவிடும். சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் வைப்பதே போதுமானது.

குளிர்ச்சி தரக்கூடிய காய்கள்

பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற குளிர்ச்சியை தரக்கூடிய காய் வகைகளையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். அவற்றின் இயற்கையான நீர்ச்சத்து மாறி, சுவை மாறிவிடக்கூடும்.



எண்ணெய்

எந்த எண்ணெயும் ஃபிரிட்ஜில் வைக்க கூடியவை அல்ல. குளிரில் எல்லா வகை எண்ணெயும் உறைந்து போய், கடினமாகி கலங்கிவிடும். இதனால் எண்ணெயின் சுவையும் சத்தும் கெட்டுவிடும். சாதாரணச் சூழலே எண்ணெய்க்கு உகந்தது. உதாரணமாக, ஃபிளாக்ஸ் விதை எண்ணெய் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், உறைந்துவிடு; சீக்கிரமே கெட்டும் போய்விடும்.

நீர்ச்சத்து மிகுந்த காய்கனிகள்

பூசணி, தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து மிக்க காய்கறிகளையும் பழங்களையும்கூட ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் இந்த வகை காய்கனிகள் குளிரால் உடைந்து குழைந்துவிடும். ஆனால், இவ்வகை காய்கனிகளை நறுக்கி, நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.



ஊறுகாய்

மசாலா சேர்க்கப்படாத, காயவைக்கப்பட்ட ஊறுகாய் எதையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. உலர்ந்த, காற்றோட்டமான இடத்திலேயே ஊறுகாய் கெடாமலும், சுவை பாதிக்காமலும் இருக்கும்.

பூண்டு

`காயக் காயத்தான் பூண்டின் சுவை கூடும்’ என்பார்கள். அதனால் திறந்தவெளியில் பூண்டை வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும்.



சில்லி சாஸ்

வினிகர், மிளகாய் சாஸ் போன்ற உணவுக்கு சுவையூட்டும் பொருள்களைச் சாதாரண சூழலில் அடுப்படியில் பாட்டில்களில் பாதுகாத்து வைப்பதே சிறந்தது. தரமான சாஸ்கள் பல நாள்கள் வரை கெடாமல் இருக்கக்கூடியவை. இதனால் இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளால் கெடாமல் சாஸ்களைப் பாதுகாக்க, அடிக்கடி பாட்டில்களைச் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சில்லி சாஸின் சுவையும் காரமும் குறைந்துவிடும் என்பதே உண்மை.

மசாலா பொருட்கள்

மிளகாய், மிளகு, மல்லி போன்ற மசாலா தூள்கள் எதையும் ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை.



காபி

காபி தூள் அல்லது காபி கொட்டை இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.

சாலட் அலங்கரிக்கும் க்ரீம்கள்

காய் மற்றும் கனிகளை கொண்டு செய்யப்படும் சாலடுகளுக்கு அலங்கரிக்கவும், சுவையூட்டவும் பயன்படும் எந்த வித க்ரீம்களையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். `இனிப்புத் தயிர்’ எனப்படும் யோகர்ட் உள்ளிட்ட க்ரீம்கள், ஃபிரிட்ஜில் நீர்த்துப்போய் கெட்டுவிடும்.

நட்ஸ்

முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற எந்த உலர்க்கொட்டைகளும் ஃபிரிட்ஜில் வைக்கத் தேவையில்லாத பொருட்கள். குளிர்ந்த ஈரப்பதம் இந்த வகை நட்ஸ்களின் உள்ளிருக்கும் எண்ணெய்ப் பொருள்களைப் பாதித்து, கெட்டுவிடச் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் வேறு பொருள்களின் வாசத்தால் மாறிவிடும். காற்றுப்புகாத பாத்திரங்களில் மூடி வைத்தாலே இவை கெடாமல் இருக்கும். ஒருவேளை அதிகமான அளவில் நட்ஸ்களைப் பாதுகாக்க ஃபிரிட்ஜில் வைக்க வேண்டி வந்தால், அவற்றை உபயோகிக்கும் முன்னர் பாத்திரத்தில் வைத்து வறுத்த பிறகே உபயோகிக்க வேண்டும்.

உலர்பழங்கள்

திராட்சை, அத்தி, பேரீச்சை போன்ற உலர்பழங்களுக்கும் ஃபிரிட்ஜில் இடமில்லைதான். உலர்ந்த பழங்கள் அதன் உலர்ந்த தன்மைக்காகவே விரும்பப்படுகின்றன. அந்தத் தன்மையை ஃபிரிட்ஜின் குளிர் காற்று பாதித்துவிடும்.

தானிய வகைகள்

தானிய வகைகள் சாதாரணச் சூழலில் வைக்கப்படவேண்டியவை. ஈரப்பதமான சூழல் அவற்றைக் கெட்டுப்போகச் செய்துவிடும்.

ஜாம்கள்

பழங்களால் செய்யப்பட்ட ஜாம்களை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டியது இல்லை. ஜாம்களைப் பாதுகாக்க அதனுள் சேர்க்கப்படும் பொருள்கள் அதிகக் குளிரால் உறைந்து, சுவை மாறிவிடுகின்றன.



உருளைக்கிழங்கு

மண்ணில் விளைந்து, ஈரம் போகக் காய்ந்து நம்மிடையே வரும் உருளைக்கிழங்கு காய்ந்து இருப்பதே நல்லது. இது, ஈரத்தில் முளைத்துவிடும் தன்மை கொண்டது. சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் சுற்றிவைப்பதே உருளைக்கு நல்லது. பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைத்தால், உருளைக்கிழங்கின் ஈரப்பதத்தால் சீக்கிரமே கெட்டுவிடும் ஆபத்து உண்டு.

கெட்ச்சப்

கெட்ச்சப் எனும் சுவையூட்டும் கூழ்கள் தற்போது எல்லா வீட்டிலும் காணப்படுகின்றன. இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்.



தக்காளி

அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதே இல்லை. எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.

நிலக்கடலை வெண்ணெய்

நிலக்கடைலையால் செய்யப்பட்ட வெண்ணெய் தற்போது சுவையூட்டியாகப் பயன்பட்டு வருகிறது. இதுவும் ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமில்லாத பொருளே.



மீன்

மீனையோ, பேக் செய்யப்பட்ட மீன்களின் இறைச்சியையும் ஃபிரிட்ஜில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டாம். மீன் நாற்றம் மற்ற பொருள்களுக்கும் பரவி அவற்றின் தன்மையைப் பாழடித்துவிடும். ஃபிரிட்ஜில் மீனை வைப்பதற்கென்றே ஓர் இடம் இருக்கும். அதில் வைக்கலாம்.
கொழுப்பைக் குறைக்க தேங்காய்; இளமை நீட்டிக்க கொப்பரை; உடலுக்கு ஊட்டமளிக்க நீராபானம்!
எம்.மரிய பெல்சின்

‘தேங்காய் தின்னது ஒருத்தன், தெண்டங்கட்டுனது ஒருத்தன்', `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்' - தென்னை பற்றிய பழமொழிகள் இவை.

`தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி...' - 1984-ல் வெளிவந்த முடிவல்ல ஆரம்பம் படத்தின் பாடல் வரி இது. மனதுக்கு இதம் தரும் இந்தப் பாடல் வரி இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது.



தென்னை... இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெறா (Cocos nucifera L.). இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்பில் வளரக்கூடிய தென்னையில் அனைத்து உறுப்புகளும் பயன்தரக்கூடியவை. சங்க நூல்களில் தென்னை மரத்தை தெங்கு என்றும், தாழை என்றும் அழைத்திருக்கிறார்கள். தென்னிந்தியா குறிப்பாக தென் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களின் சமையலில் தேங்காய் முக்கிய இடம்பிடிக்கிறது.

இளநீர்

தென்னை மரத்தில் பூ பூத்து வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர். செவ்விளநீர், பச்சை இளநீர், சிவப்புநிற இளநீர் என வேறுபாடுகள் இருந்தாலும் இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, ஜமைக்கா, பிரேசில் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும் இளநீரே சிறந்தவை. பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள புரதம் தாய்ப்பாலில் உள்ள புரதத்துக்கு இணையானது.



இன்றைக்கு நம்மில் பெரும்பாலோரின் காலை உணவாக இளநீர் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் உண்பது ஏற்புடையதல்ல; உண்டால் வயிற்றில் புண்ணை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், இளநீருக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. குறிப்பாக வாதம், பித்தம், கபம் போன்றவற்றை போக்கக்கூடியது; வெப்பத்தைத் தணிக்கக்கூடியது. வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு, இளநீர் சிறந்ததொரு டானிக்காகச் செயல்படுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது, இளநீரை உட்கொள்வதன்மூலம் நிவாரணம் கிடைக்கிறது. குறிப்பாக அவசர நிலையில் நரம்புகளின்மூலம் இளநீர் செலுத்தப்படுவதுண்டு. காலரா நோயாளிகளுக்கு, இளநீரின் வழுவழுப்புத்தன்மையும் உப்புத்தன்மையும் மிகவும் நல்லது. அம்மைநோய், வயிற்றுப்போக்கு காலங்களில் இளநீர் நல்ல மருந்தாகச் செயல்படும். மேலும், சிறுநீரகத்தை சுத்திகரிப்பதோடு விந்து எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாகும். ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருள்களை அகற்றும் திறன் படைத்தது இளநீர்.

தேங்காய்

தென்னையின் பழமே தேங்காய். இதைத் தெங்கம்பழம் என்றும் சொல்வார்கள். கெட்டியாக இருப்பதால் தேங்காய் என்றே அழைக்கிறார்கள். தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது. உடல் எடையையும் குறைக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக Medium Chain Fatty Acid தேங்காயில் அதிகம் இருப்பதால் அது உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது.



புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய்ப்பால் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. தேங்காயை அரைத்து அதனுடன் நாட்டுச்சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.

கொப்பரை

தேங்காய் அளவுக்கு மீறி முற்றியிருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றிவிடும். இத்தகைய முற்றிய தேங்காயே கொப்பரை எனப்படும். நீர் முழுவதும் வற்றாத தேங்காயை வெயிலில் உலர்த்தி கொப்பரை ஆக்குவதும் உண்டு. அதிலிருந்தே எண்ணெய் எடுக்கப்படுகிறது. முற்றிய தேங்காய் ஆண்மையை பெருக்குவதோடு அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தாமதப்படுத்த உதவும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.



சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும். முகம் பொலிவுப் பெற உதவும். கேரளத்துப்பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.



நீரா பானம்

இவைதவிர நீரா என்ற பானம் தயாரிக்கப்படுகிறது. நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட ஒரு பானம். இது மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம். ஆல்கஹால் இல்லாததால் உடல்நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானமாகும்.

தென்னையில் இருந்து இன்னும் ஏராளமான பொருள்கள் ரிக்கப்படுகின்றன. தென்னை விசிறி, குடிசை போட பயன்படும் தென்னை ஓலையால் பின்னப்படும் கிடுகு, தென்னை மட்டை, தேங்காய் ஓடு, தேங்காய் நார்க்கழிவு என தென்னையின் பல பாகங்களும் பல வழிகளில் மனிதனுக்குப் பயன்பட்டு வருகின்றன.
ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?

தி.முருகன், ஓவியம்: ஹாசிப்கான்

எளிய மக்களின் கைகளில் இருந்து இன்னமும் பிடுங்காமல், நம் ஜனநாயகம் விட்டு வைத்திருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டு. அதற்குத்தான் அத்தனை அரசியல்வாதிகளும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆட்சிகள் மலர்வதும், நாற்காலிகள் கவிழ்வதும், அதிகாரத் திமிரோடு பேசுகிறவர்கள் அடுத்த தேர்தலில் அடையாளம் இல்லாமல் போவதும், இந்த ஆயுதத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்துகிறது. ஆனால், ஓர் இயந்திரத்தில், மோசடி செய்து ஓட்டு வாங்கிவிட முடியும் என்றால், மக்களைத் தேடி அரசியல்வாதிகள் ஏன் வர வேண்டும்?

‘நீ எனக்கு ஓட்டுப் போடாவிட்டாலும் பரவாயில்லை; உன் ஓட்டை எனக்கு விழுந்ததாக மாற்றிக்கொள்ள முடியும்’ என்று ஒரு மோசமான அரசியல்வாதி தீர்மானித்தால் என்ன ஆவது?



‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், முறைகேடும் மோசடியும் நடக்கிறது’ என எழுந்த குற்றச்சாட்டு, இந்தியா முழுக்கப் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலிலும், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும், டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் பி.ஜே.பி பெற்ற வெற்றிகளை அசைத்துப் பார்க்கின்றன இந்தக் குற்றச்சாட்டுகள். இந்தியா முழுவதிலுமிருந்து 42 கட்சிகளின் பிரதிநிதிகளைக் கூப்பிட்டுத் தேர்தல் ஆணையம் கூட்டம் நடத்தும் அளவுக்கு இந்தப் பிரச்னை சீரியஸ் ஆகியிருக்கிறது. கடைசியில், ‘‘உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். முறைகேடு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்” என சவால் விட்டிருக்கிறார், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி.

ஜூன் 3-ம் நாள் இதற்கான தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘‘பல நிபந்தனைகளோடு தரப்படும் இந்த வாய்ப்பு வெளிப்படையானது இல்லை’’ என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது.

இந்தியத் தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. 107 சட்டமன்றத் தேர்தல்களையும், மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களையும் இந்த இயந்திரங்களை வைத்து நடத்தியிருக்கிறார்கள். ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும்போது, அதுகுறித்த சந்தேகங்களும் வதந்திகளும் எழுவது இயல்புதான். ஆனால், இந்த இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை, ஆரம்பத்தைவிட இப்போதுதான் அதிகம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, ‘எந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுவதற்காக அழுத்தினாலும், பி.ஜே.பி-க்கே ஓட்டு விழுகிறது’ எனக் குற்றச்சாட்டு எழுந்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, ‘தேர்தலை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டுகளை வைத்துப் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. மகாராஷ்டிராவில், வாக்குப்பதிவு இயந்திரம் போன்ற பொம்மை ஒன்றை சடலம் போல வைத்து, சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரிக்கும் போராட்டம் நடத்தினார்கள் அங்குள்ள எதிர்க்கட்சியினர். மும்பை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், ‘‘நான் வாங்கியது ஜீரோ ஓட்டு. என் ஓட்டை எனக்குத்தான் செலுத்தினேன். என் குடும்பமும் எனக்கே வாக்களித்தது. அதெல்லாம் எங்கே போயின?” எனப் பரபரப்புக் குற்றச்சாட்டு கிளப்பி, அது வாட்ஸ்அப் வைரல் ஆனது. ``பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கும், டெல்லி மாநகராட்சித் தேர்தல் தோல்விக்கும் இயந்திர மோசடியே காரணம்'' எனச் சொன்னார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால். எல்லாவற்றுக்கும் க்ளைமாக்ஸாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சௌரவ் பரத்வாஜ், ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும்’ என டெல்லி சட்டமன்றத்திலேயே, ஒரு மாதிரி இயந்திரத்தை வைத்து டெமோ செய்து காண்பித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளில், எந்த அளவு உண்மை இருக்கிறது? சிலவற்றைப் பொய் என்று தேர்தல் ஆணையம் நிராகரித்தாலும், இன்னும் சில மர்மங்களாகவே நீடிக்கின்றன.





* அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நாடாளுமன்றத் தொகுதியில் 2014 தேர்தலின்போது, அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் முன்பாக வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்கிக் காண்பித்தனர் தேர்தல் அதிகாரிகள். வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் வைக்கப்பட்ட அந்த இயந்திரத்தில், எந்த பட்டனை அழுத்தினாலும், பி.ஜே.பி-க்கே ஓட்டு விழுவதாகக் காண்பித்தது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். அந்தக் கட்சிப் பிரதிநிதிகள், ‘அசாம் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சோதிக்க வேண்டும்’ எனப் புகார் செய்தனர். ‘சில இயந்திரங்களில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்த மாட்டோம்’ எனத் தேர்தல் ஆணையம் சொன்னது. ஜோர்ஹட் தொகுதியில், அதற்குமுன்பு ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றிருந்த காங்கிரஸ், அம்முறை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

* மகாராஷ்டிரா மாநிலத்தின் யெரவாடா என்ற வார்டில், மொத்தம் 33,289 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஆனால், எண்ணும்போது 43,324 ஓட்டுகள் பதிவாகியிருப்பதாகச் சொன்னார்கள். தோல்வி அடைந்த 15 வேட்பாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். ‘தேர்தல் அதிகாரி கூட்டும்போது தவறு செய்துவிட்டார்’ என்று காரணம் சொன்னது, மாநிலத் தேர்தல் ஆணையம். ‘‘ஜெயித்தவர்களைத் தோற்றவர்களாக அறிவித்து ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் நடந்துகொள்ள வாக்குப்பதிவு இயந்திரமே காரணமாக இருந்தது’’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

* கடந்த 2014-ம் ஆண்டு, மகாராஷ்டிராவின் பர்வாட்டி சட்டமன்றத் தொகுதித் தேர்தலில், போட்டியிட்டுத் தோற்றவர் காங்கிரஸ் வேட்பாளரான அபய் சாஜெத். குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியில் இருந்த இயந்திரங்களில், மோசடி நடந்ததாக மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை ஏற்று, குறிப்பிட்ட அந்த இயந்திரங்களை ஹைதராபாத் மத்திய தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இந்தியாவிலேயே தடயவியல் பரிசோதனைக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. ‘ரிமோட் மூலம் இவற்றை யாராவது இயக்க முடியுமா? முடிவுகளை மாற்றும்விதமாக, கூடுதலாக ஏதாவது மெமரி சிப் உள்ளே இருக்கிறதா?’ என்பவை உள்ளிட்ட ஒன்பது கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி, பரிசோதித்து பதில் தருமாறு கேட்டிருக்கிறது.

* உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய வழக்கு இருக்கிறது. விகாஸ் நகர், முசௌரி, ராஜ்பூர் ரோடு, பெல் ராணிபூர், ராய்பூர், பிரதாப் நகர் மற்றும் ஹரித்வார் ரூரல் ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளில், தோற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த எல்லா தொகுதிகளிலும் ஜெயித்தவர்கள், பி.ஜே.பி-யினர். ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது’ எனப் போடப்பட்ட இந்த வழக்குகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ‘ஒரு நீதிபதியின் முன்னிலையில், 48 மணி நேரத்துக்குள் இந்தத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் செய்து, பாதுகாப்பாக வைக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்குக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறை. ‘‘இந்த உத்தரவால், தேர்தல் ஆணையம் பதற்றமாகி இருக்கிறது. இதைத் தடுக்க அவர்கள் எவ்வளவோ முயன்றனர்’’ என வெளிப்படையாகச் சொல்லி இருந்தார், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்.

* மத்தியப் பிரதேச மாநிலம் அடெர் தொகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் நடந்தது. இங்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிகாரிகள் ‘டெமோ’ செய்து காண்பிக்கும்போது, எல்லா ஓட்டுகளும் பி.ஜே.பி-க்கே விழுவதாக சர்ச்சை கிளம்பியது. தேர்தல் ஆணையம் உடனே களத்தில் இறங்கி 19 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது; சிலரை இடமாற்றம் செய்தது. தீவிர விசாரணை செய்துவிட்டு, ‘டெமோ சமயத்தில், நான்கு ஓட்டுகள் போடப்பட்டன. அவற்றில் ஒன்றே ஒன்றுதான் பி.ஜே.பி-க்கு விழுந்தது’ என விளக்கம் கொடுத்தது. தேர்தலில், காங்கிரஸ் ஜெயித்ததால், சர்ச்சை பெரிதாகவில்லை.

* ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் இடைத்தேர்தலிலும் இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்தது. ‘10 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டிருந்தது. அதனால் வந்த பிரச்னை இது. அவற்றை அகற்றிவிட்டோம்’ எனத் தேர்தல் ஆணையம் சொன்னது.

வாக்குப்பதிவு இயந்திரம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. வாக்காளர்கள் வாக்களிப்பது ஒரு பகுதியில்; இன்னொரு பகுதியானது, வாக்குச்சாவடி அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்கும். அதில் அவர் ஒப்புதல் கொடுத்தால்தான், ஒருவர் ஓட்டு போட முடியும். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் உள் கட்டமைப்பு யாருக்கும் தெரியாமலே இருந்தது. ஆனால், ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுநர் ஹரிபிரசாத் என்பவர் மட்டுமே அவற்றின் படங்களை வெளியிட்டு இருந்தார்.

‘‘இந்த இயந்திரங்களின் பெரும்பாலான பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டாலும், மத்திய அரசின் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள்தான் இவற்றை உருவாக்குகின்றன. 94 சுற்றுகளில், இவை பாதுகாப்பு தர பரிசோதனைகளை முடித்து வருகின்றன. இவற்றின் புரோகிராமை ஒருமுறை எழுதினால், யாராலும் படிக்கவும் முடியாது; மாற்றவும் முடியாது. வயர்லெஸ், ப்ளூடூத், வைஃபை என எந்த சிக்னல் மூலமும் இதன் செயல்பாட்டில் குறுக்கீடு செய்ய முடியாது. மற்ற நாடுகளில், வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையதளம் மூலம் இணைத்திருக்கிறார்கள். அதனால், அவற்றில் குறுக்கீடு செய்து மோசடியில் ஈடுபடுவது சாத்தியம். நம் இயந்திரங்கள் இயங்க இணைய வசதி தேவையில்லை. எனவே, இவை உச்சபட்ச பாதுகாப்பானவை’’ என்பது தேர்தல் ஆணையத்தின் வாதம்.

இந்த இயந்திரங்கள் தொடர்பாக உலகப் புகழ்பெற்ற இன்ஜினீயர்களும் அறிவியலாளர்களும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு திறந்த மடல் அனுப்பியுள்ளார்கள். அவர்களில், அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியர் பூர்வி வோராவும் ஒருவர். ‘‘இதுவும் ஓர் இயந்திரம். எந்த இயந்திரத்திலும் முறைகேடு செய்வது சாத்தியம். எந்த ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் அல்லது ஹார்டுவேரிலும், யாருடைய கவனத்துக்கும் வராமலே மாற்றங்கள் செய்ய முடியும். இணையதள இணைப்பு இல்லை என்றாலும், குடோனில் இருக்கும்போதே அதில் மாற்றங்கள் செய்வது சாத்தியம். இதில் இருக்கும் பிரச்னைகளை நாங்கள் சொல்கிறோம். இதையெல்லாம் தீர்த்து, 100 சதவிகிதம் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்’’ என்கிறார் அவர்.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வென்றபோது, பி.ஜே.பி இதே குற்றச்சாட்டைச் சொன்னது. இப்போது பி.ஜே.பி-யை நோக்கி எல்லாக் கட்சிகளின் விரல்களும் நீள்கின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்திருந்தால், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றிருக்க முடியாது; சமீபத்திய பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்திருக்கவும் முடியாது.

‘இதுவரை மோசடி நடக்கவில்லை’ என்பதற்கும், ‘மோசடியே செய்ய முடியாது’ என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ‘இப்படி நடந்தால் என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு நியாயமான பதிலைத் தேர்தல் ஆணையம் தர வேண்டும்.

அரசியல்வாதிகள், தங்கள் தோல்வி பற்றிய ஆத்ம பரிசோதனையை அரசியல்ரீதியாகச் செய்ய வேண்டுமே தவிர, டெக்னாலஜிமீது பழிபோட்டுத் தப்பிக்கக் கூடாது.



ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுநர் ஹரிபிரசாத். ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்’ என்று முதலில் குரல் எழுப்பியவர் இவர்தான். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி டெல்லி பிரஸ் கிளப்பில் இதற்கான ‘டெமோ’வை அவர் செய்து காட்டினார். ரிமோட் மூலம் அதைக் கட்டுப்படுத்தி, எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரே வேட்பாளருக்கு ஓட்டு விழுவது மாதிரி செய்து காட்டினார். அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் ஹால்டெமேன், நெதர்லாந்தைச் சேர்ந்த ராப் காங்ரேய்ப் ஆகியோர் அவருக்கு உதவினர். ‘Citizens for Verifiability, Transparency and Accountability in Elections’ என்ற அமைப்பின் மூலமாகச் செயல்பட்டு வந்த ஹரிபிரசாத், ‘‘யாரோ ஓர் அரசியல்வாதி பணம் செலவழித்து சில ஹேக்கர்களை ஏற்பாடு செய்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறிவிடும். சிலர் நினைத்தால், ஒரு தேர்தல் முடிவையே மாற்றிவிடலாம் என்ற நிலை எவ்வளவு பயங்கரமானது! இதன் தொழில்நுட்பத்தை இன்னும் வலுவாக்க வேண்டும்’’ என அக்கறையோடு சொன்னார்.

ஆனால், தேர்தல் ஆணையம், இயந்திரத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதை விட்டுவிட்டு, `ஹரிபிரசாத் எங்கிருந்து அந்த இயந்திரத்தை எடுத்தார்?' என்று சீரியஸாக ஆராயத் தொடங்கியது. மும்பை மாநகராட்சி குடோன் ஒன்றிலிருந்து அதை எடுத்தார் என்பது தெரியவே ஐந்து மாதங்கள் ஆகின. வாக்குப்பதிவு இயந்திரத்தைத் திருடியதாக ஹரிபிரசாத் கைது செய்யப்பட்டார். ‘‘தேர்தல் இல்லாத நாட்களில் இந்த இயந்திரங்கள் சீல் செய்து வைக்கப்படுவதில்லை. குடோன் பாதுகாப்புக்கும் சாதாரண காவலாளிகள்தான். யாரும் உள்ளே புகுந்து எந்த மோசடியும் செய்யலாம். நான் ஓர் அதிகாரிபோல நடித்து அங்கு போனதும், குடோனைத் திறந்து என்னிடம் இதைக் கொடுத்தார்கள்’’ என வாக்குமூலம் கொடுத்தார் அவர்.

அவரது சொந்தத் தொழிலை முடக்கும் அளவுக்குப் போனது போலீஸ். கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அலையவிட்டு நிம்மதியைக் கெடுத்தார்கள். ‘‘உங்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்தி என்னை ஜெயிக்க வைத்தால், கோடிகளில் கொண்டுவந்து கொட்டுகிறோம் என சில அரசியல்வாதிகள் என்னிடம் பேரம் பேசினார்கள். ஆனால், எனக்கு தேசநலன்தான் முக்கியம்’’ என்றெல்லாம் சொன்னார் ஹரிபிரசாத்.

மேலை நாடுகளில், இதுபோன்ற டெக்னாலஜி ஹேக்கர்களை மதிக்கிறார்கள். ஹரிபிரசாத்தோடு இணைந்து இந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்த அலெக்ஸ் ஹால்டெமேன் ஏற்கெனவே, 'அமெரிக்க வாக்குப்பதிவு இயந்திரத்திலும், முறைகேடு செய்து முடிவை மாற்றிக் காட்ட முடியும்' என நிரூபித்திருந்தார். உடனே அவரை, தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஆலோசகராக கலிஃபோர்னியா மாகாண அரசு நியமித்தது. இங்கே ஹரிபிரசாத்? ‘நமக்கு ஏன் வம்பு’ என ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஓட்டு சொல்லும் சீட்டு!

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள், மோசடி செய்ய முடியாத அளவுக்குப் பாதுகாப்பானவை இல்லை’ எனக் கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் சொன்னது. இதைத் தொடர்ந்து, ‘அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரத்தை வரும் 2019-ம் ஆண்டுக்குள் பொருத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Voter-Verified Paper Audit Trials (VVPAT) எனும் இந்த வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரம் இருந்தால், ஒருவர் ஓட்டு போட்டதும், 'யாருக்கு ஓட்டு போட்டார்?' என ஒரு பிரின்ட் ஸ்லிப் வந்துவிடும். ஏதாவது வித்தியாசம் இருந்தால், தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யலாம். ‘ஏதாவது சந்தேகம் வந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தும்போது, இந்தத் துண்டுச்சீட்டுகளை எண்ண வேண்டும்’ எனப் பல கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன.
வாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதாம்...!
இரா. குருபிரசாத்

தொப்பையைக் குறைப்பதில் ஆரம்பித்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரை பல நோய்களுக்கு வாக்கிங் பரிந்துரைக்கப்படுகிறது.




இப்படி பல்வேறு நோய்களில் இருந்து விடுவிக்கும் நடைபயிற்சியால், மேலும் ஒரு பலன் குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், வாக்கிங் செல்வதால், மூளை இயக்கம் சீரடைவதாக தெரியவந்துள்ளது. மூளை பாதிப்பு உள்ளவர்களை வைத்து, வாரத்துக்கு மூன்று மணி நேரம் வீதம், ஆறு மாதத்துக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முடிவில், அவர்களின் மூளை இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வு சிறிய அளவிலானதுதான். விரைவில் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

செ.சங்கீதா

பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும்... நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை. சரி... காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்க்கலாம்...



பலன்கள்...

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அவை...

புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..



இதய நோய் வருமா?

`முட்டை நல்ல உணவல்ல’ என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association - AHA) அறிவித்தது. `இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்’ என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ `அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’ என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.

எத்தனை சாப்பிடலாம்?

தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்னை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.

இதன் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்புள்ள நபர்களுக்கு வேறுவிதமான உணவு முறை தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.



எச்சரிக்கை!

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

எதனுடன் சாப்பிடலாம்?

முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகியவற்றை இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லேட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம். எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

ஜி.லட்சுமணன்

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.



கீரை

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.



முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.



காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.



சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.



உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.



சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.



பீட்ரூட்


பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.
சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநருக்குக் கிடைத்த டாக்டர் மகள்... நெகிழ்ச்சிக் கதை!

எம்.குமரேசன்


செய்த வினை, நம்மைத் தொடரும் என்பார்கள். எட்டு வருடங்களுக்கு முன் ரிக்‌ஷா ஓட்டுநர் செய்த நன்மைக்கு, இப்போது பலன் கிடைத்துள்ளது. மகள் இல்லாத அந்தத் தந்தைக்கு, ஒரு மகள் கிடைத்துள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆகாஷ் என்பவர், பப்லு ஷேக் என்கிற ரிக்‌ஷா ஓட்டுநரின் கதையை ஃபேஸ்புக்கில் பதிவிட, அது வைரலானது. அந்தப் பதிவில் சொல்லப்பட்ட விஷயம் இதுதான்!



`நான் ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர். 34 ஆண்டுகளாக ரிக்‌ஷா ஓட்டிவருகிறேன். மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தந்தை. மனைவியிடம் `நமக்கு ஒரு மகள் இல்லையே ’ என அடிக்கடி ஆதங்கப்படுவேன். ரிக்‌ஷாவில் ஏறுபவர்களில் பாதிப்பேர் கோபத்தில் இருப்பார்கள். மீதிப்பேர் 'அப்படிப் போ... இப்படிப் போ' என கட்டளையிட்டுக்கொண்டே வருவார்கள்.

ஒருநாள் காலை, இளம் பெண் ஒருவரின் தந்தை என்னிடம் வந்தார். தன் மகளை பத்திரமாகக் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். புறப்படும்போது மகளிடம், 'ரிக்‌ஷாவை நன்றாகப் பிடித்துக்கொள்' எனக் குழந்தைக்குச் சொல்வதுபோலச் சொன்னார். என்னிடம் 'பள்ளம் மேடு பார்த்து ஓட்ட வேண்டும். குலுங்கவே கூடாது ' என்றார். அந்தப் பரிதவிப்பில், மகள்மீது அவர் வைத்திருந்த பாசம் மட்டுமே எனக்குத் தெரிந்தது.

நானும் கவனத்துடன் ஓட்ட ஆரம்பித்தேன். சிறிது தொலைவுதான் போயிருப்பேன். ரிக்‌ஷாவில் இருந்த பெண் கேவிக் கேவி அழத்தொடங்கினார். அழுவதை நிறுத்தவே இல்லை. நான் திரும்பிப் பார்த்தால், என்னைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். மொபைல்போனில் யாரையோ அழைத்தார். போனில், `காச் மூச்' எனக் கத்தினார். ஏதோ... காதல் விவகாரம் என்று மட்டும் புரிந்தது. எதிர்முனையிலிருந்து என்ன பதில் வந்தது எனத் தெரியவில்லை. திடீரென ரிக்‌ஷாவிலிருந்து குதித்துவிட்டார். இருக்கையில் பணம் இறைந்து கிடந்தது. நானும் பின்னாலேயே ஓடினேன்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரயில் தண்டாவளத்தை நோக்கிப் பாய்ந்தார். எனக்கு அந்தப் பெண்ணின் தந்தை முகம் நினைவில் வந்துபோனது. மகள்மீது அக்கறைகொண்டு அவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணோ, ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்திருந்தார். `தயவுசெய்து தண்டவாளத்தைவிட்டு வெளியேறுங்கள்' எனக் கெஞ்சினேன். அந்தப் பெண்ணோ, 'படிக்காத முட்டாளே... இங்கிருந்து போய்விடு' எனக் கத்தினார். கதறி அழுதுகொண்டே இருந்தார். நான் அமைதியாக அவர் முன்னால் நின்றேன். ரயில் வருகிறதா... என அவ்வப்போது பார்த்துக்கொண்டேன்.

`கதறி அழட்டும், அழுகை ஓய்ந்தபிறகுப் பேசிக்கொள்ளலாம்' எனக் காத்திருந்தேன். அழுகை நிற்க, மூன்று மணி நேரம் ஆனது. பொறுமையாக நானும் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். ரயில் வரவில்லை; மழை வந்தது. மழைத்துளிகள் விழுந்தன. சிறிது நேரம் கழித்து என்னைப் பார்த்தார். நான் அமைதியாக முன்னால் அமர்ந்திருந்தேன். சைக்கிள் ரிக்‌ஷாவைக் கொண்டுவரச் சொன்னார். மனம் மாறியதால் எனக்குள் மகிழ்ச்சி. நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ரிக்‌ஷாவைக் கொண்டு வர ஓடினேன்.

ரிக்‌ஷாவில் ஏறியதும் என்னைப் பார்த்து, 'அங்கிள், இங்கே நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது. இனிமேல் என் வீட்டுப் பக்கம் உங்களைப் பார்க்கக் கூடாது' என்றார். அதற்குமேல் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அவரை வீட்டில் இறக்கிவிட்டேன். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இரவு உணவைச் சாப்பிட மனம் இல்லை. மகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த என் மனம், `இப்போது மகள் இல்லாமல் இருப்பதே நல்லது' என்றது.

சமீபத்தில் நடந்த விபத்தால் நான் சாலையில் மயங்கிக் கிடந்தேன். நினைவில்லாத நிலையில் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். நினைவு திரும்பியதும்... வார்டில் பரபரப்புடன் பெண் ஒருவர் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்ததாக நினைவு. உற்று கவனித்தேன். ஆஹா.... இது அந்தப் பெண் அல்லவா? எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த ரயில் பாதை சம்பவம் நினைவுக்கு வந்தது. அதே பெண்தான். இப்போது கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் வெள்ளை உடை அணிந்து டாக்டராகியிருந்தார்.

என்னை பெரிய டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் 'தன் தந்தை' என அறிமுகப்படுத்தினார். பெரிய டாக்டர், அவரைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கேட்டார். 'அன்று இந்த அப்பா இல்லைன்னா நான் டாக்டராகியிருக்க மாட்டேன்' என பதில் வந்தது. ஒரு மகளுக்குத் தந்தையான தருணத்தை அப்போது உணர்ந்தேன். அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்தத் தந்தை ஸ்தானம் கொடுத்த பரவசத்தை உணர்ந்தேன். இப்போது எனக்கும் ஒரு மகள் கிடைத்திருக்கிறாள்... அதுவும் டாக்டர் மகள்!

பெற்றால்தான் பிள்ளையா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்... தேர்தல் கமிஷன் முக்கியத் தகவல்!
ர.பரத் ராஜ்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு எதிர்க்கட்சிகள், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளன. யாருக்கு வாக்கு செலுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு வாக்கு பதிவாகும்படி அது வடிவமைக்கப்பட்டு உள்ளது' என்று குற்றம் சாட்டின. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. சில கட்சிகள் இதற்கும் ஒருபடி மேலே போய், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருக்கும் எனப் பரவலாக புகார்கள் வருவதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.' என்றும் தெரிவித்தன.



இந்நிலையில்தான் தேர்தல் கமிஷன், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையில் குறை இருக்கும் என்று சந்தேகிக்கும் கட்சிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்யலாம்' என்று கூறியிருந்தது. இதையடுத்து அதற்கான நிகழ்ச்சியை நேற்று ஒருங்கிணைத்திருந்தது தேர்தல் கமிஷன். ஆனால் இந்த சோதனை செய்யும் நிகழ்ச்சியில் தேசிய அளவில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே பங்கேற்றன.

அந்தக் கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யாமல் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டன.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி, 'இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. அதில் எந்தவித கோளாறுகளும் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது. இனிமேல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்ய எந்தவித சவால்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்று சோதனை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு கட்சிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி வேலை செய்யும் என்பதைப் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.' என்று கூறினார்.
'ஒரு இட்லி ரெண்டு ரூவா!' - தெருத்தெருவாய் இட்லி விற்கும் சேலம் பாட்டி

VIJAYSURYA M

சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள போண்டா மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் பச்சியம்மாள். 80 வயதான இவர், தினமும் தெருத்தெருவாகச் சென்று இட்லி வியாபாரம் செய்துவருகிறார். இவருக்காகவே தினமும் பல குழந்தைகள் காத்திருப்பார்களாம். குறைந்த விலையில் நிறைவான உணவை விற்பனை செய்யும் அந்தச் சிறுதொழில் தொழில்முனைவோரைச் சந்தித்தேன்.



``இந்த வியாபாரத்தை நீங்க எப்போ ஆரம்பிச்சீங்க?''
``எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல என்னோட மாமனார் வீட்டுல ஹோட்டல் வெச்சு நடத்தினாங்க. அங்கே சமையல் வேலை செஞ்சிட்டிருந்தேன். ஒருகட்டத்துல நானே தனியா இட்லி விற்க ஆரம்பிச்சேன். தெருத்தெருவாகப் போய் விற்பேன். அப்ப ஒரு ரூபாய்க்கு பத்து இட்லி குடுப்பேன். இப்பதான் விலைவாசி ஏறிப்போச்சு. இருந்தாலும் இப்பவும் நான் பத்து ரூபாய்க்கு அஞ்சு இட்லியும், பத்து ரூபாய்க்கு மூணு தோசையும் குடுக்கிறேன். 40 வருஷங்களா இந்த வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கேன்.''

``உங்களைப் பற்றியும் உங்க குடும்பத்தைப் பற்றியும் சொல்லுங்க பாட்டி?''
``எனக்கு 80 வயசு. என்னோட கணவர் பேரு சுப்பிரமணி. அவர் இறந்து மூணு வருஷம் ஆகுது. எனக்கு மூணு பசங்க. ஒருத்தன் இறந்துட்டான். ரெண்டு பேருக்குக் கல்யாணம் ஆகிருச்சு. இப்ப வரைக்கும் நான் என்னோட சொந்த உழைப்புலதான் சம்பாதிச்சு வாழ்ந்துட்டிருக்கேன். என் மருமகள் அப்பப்போ எனக்கு உதவியா இருப்பா. நான் காலையில இட்லி கொண்டுபோவேன். எனக்காக பல பேரு காத்துட்டு இருப்பாங்க. பள்ளிக்கூடம் போகும் புள்ளைங்க எல்லாரும் நான் இட்லி கொண்டு வர்றதைப் பார்த்துட்டு, 'ஐ! பாட்டி வந்திருச்சு... பாட்டி வந்திருச்சு'ன்னு கத்துங்க. அதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்னோட பேரப் புள்ளைங்களா அவங்களை நினைச்சுக்குவேன்.''



``உங்களுக்கு அரசு உதவி ஏதாவது கிடைச்சுதா?''
``நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். அரசாங்கத்துல இருந்து எந்த உதவியும் வரலை. ஏரியா தலைவர்கிட்ட சொன்னேன், இன்னிக்கு வரைக்கும் கண்டுக்கவே இல்லை. நடக்கவே முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏதோ என்னால முடியுற வரைக்கும் தெருத்தெருவாப் போய் இட்லி வியாபாரம் செய்றேன். ஆனா, இதைத் தொடர்ந்து செய்ய முடியுமான்னு தெரியலை'' என்றார் உதிர்ந்த குரலில்.

தன் உழைப்பால் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பாட்டியும் ஓர் சாதனைப் பெண்மணிதான். அகத்துக்குள் ஆழமான நம்பிக்கைவைத்து வாழ்க்கையைக் கடத்திவரும் இந்தப் பாட்டிக்கு அரசு உதவ வேண்டும்.
75 நகரங்களில் ஜிப்மர் நுழைவுத் தேர்வு - 1.89 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

கார்த்திக்.சி




புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்தியா முழுவதும் 75 நகரங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட்தேர்வு கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சில் விலக்கு அளித்துள்ளது. இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 75 நகரங்களில் 339 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 19 மையங்களிலும் புதுச்சேரியில் 6 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 200 இடங்களுக்கு 1.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Less than 1 lakh applicants for engineering counselling Jun 4, 2017, 6:13 am IST

Chennai: In what could be termed a significant decline in interest among parents and students of the state in pursuing engineering education, applications for engineering counselling is struggling to reach one lakh this year.

The last date for submitting applications for engineering counselling was  Saturday. “Around 1.6 lakh students have registered online for engineering counselling. As on Saturday, the Tamil Nadu Engineering Admissions Committee (TNEA) has received nearly one lakh applications,” sources said.

“We expect the applications to go up as a lot of students submitted their applications on the last day. The committee has received thousands of applications by post and those applications are yet to be counted,” they added. Last year TNEA received 1.34 lakh applications. This year the number of applications is down by around 30,000 applications.

A few years ago the engineering counselling had attracted over two lakh applications. The sharp reduction in campus placements and job cuts in IT companies are seen as the major reasons for the decline of interest among students.

PG Times

Doctors with PG from abroad can teach in medical colleges


PG Times

Physicians holding postgraduate medical qualifications awarded in countries like the US, the UK, Canada, Australia and New Zealand will now be eligible to teach in medical colleges in India. 
Medical Council of India (MCI) has amended the Indian Medical Council Act, 1956 to usher in the change which could help meet the shortage of teachers in Indian medical colleges, including those in the state where numerous teaching posts are lying vacant. Till now, those with an overseas PG medical degree had to clear an eligibility test for registration and thereafter apply for a teaching job in Indian medical schools.

A postgraduate degree — MD/MS/DM/MCh — is the minimum qualification required to apply for the post of assistant professor in Indian medical colleges.

While students with medical degrees from the US, the UK, Australia, New Zealand and Canada were exempted from the Foreign Medical Graduates (FMGA) examination in order to pursue medical practice in India, they were not allowed to hold teaching posts. Now, MCI has allowed these doctors to teach as well, explained an MCI official. 

The MCI's move has met with mixed response from the medical fraternity. While health officials hope it will help them fill teaching vacancies in medical colleges, others wonder why would doctors with foreign MD degrees take up low-paying jobs at government medical colleges. Teaching posts are lying vacant in almost every department across medical colleges in the state. Qualified physicians are often reluctant to take up teaching since salaries are low and there are hardly any perks.

"Those returning to India to take up a teaching job will demand a higher remuneration and facilities as good as abroad. Only private hospitals outside Bengal may be able to afford them," said Amiya Maity, a former SSKM teacher. There are others who believe the MCI move would improve the quality of medical education in the country. 
"Having teachers from abroad will make a huge difference on three counts. First, they practice evidence- based medicine which is the most scientific method and accepted all over the word. In India, the accent is still on experience-based practice and teaching, which is obsolete. Secondly, those trained abroad always audit their work. Also, they are far ahead in communication which is now a very important aspect of medicine. Finally, this new rule provides a much-needed opportunity to Indian doctors trained and settled abroad to return and serve in a medical college here," said Diptendra Sarkar, head of the department of breast cancer, Institute of Post-graduate Medical Education and Research.

Former director of medical education, Sushanta Bandyopadhyay feels that there is a shortage of physicians as well as teachers in the state. "In the level of professors and associate professors there is a larger number of vacancies. If the state government plans expansion of medical courses and builds more hospitas then there will be an immediate need for more teachers," Bandopadhyay said.

Postal Recruitment

தபால் தேர்வில் முறைகேடு: ஹரியானாவசிகளின் தமிழ் புலமை

தமிழ் நாட்டிற்கான தபால் தேர்வில் ஹரியானாவை சேர்ந்த பலரும் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சி.பி.ஐ விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

தமிழ் நாடு வட்டாரத்திலுள்ள தபால் ஊழியர் மற்றும் அஞ்சல் காவலாளர்களுக்கான 128 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு டிசம்பர் 11, 2016 அன்று தமிழ் நாட்டிலுள்ள 5 மையங்களில் நடைபெற்றது. எழுத்து தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய நான்கு பாடங்களில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் படுவார்.

இன்னிலையில் இதற்கான தேர்வு முடிவு மார்ச் 2017-ல் அறிவிக்கப்பட்டது. அதில் ஹரியானாவைச் சேர்ந்த பலரும், மேலும் ஹரியானாவிலிருந்து பதிவு செய்த மகாராஸ்டிரா மற்றும் பஞ்சாபை சேர்ந்தவர்களும் தமிழில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் ஏதோ தவறுள்ளதாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்த விசாரணை துவங்கப்பட்டது.

தமிழில் அதிக மதிப்பெண் வாங்கிய ஹரியானாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஹரியானா மாநில கல்வி முறையின் கீழ் பயின்றவர்கள், அதன்படி தமிழ் மொழி அவர்களின் பாடத்திட்டத்திலேயே கிடையாது. விசாரணையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த போதிலும் ஹரியானாவைச் சேர்ந்த 47 விண்ணப்பதாரர்கள் ஒரே ஐபி முகவரியில் உள்ள கணினியை உபயோகித்ததும், மேலும் 36 விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்ததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.  

விசாரணையில் ஏதோ சில பொதுத்துறை அதிகாரிகளின் உதவியோடு விண்ணப்பதாரர்கள் முறைகேட்டில் இடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் அரசு ஆன்லைன் தேர்வு முறைகளின் மேலுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

Posted by kalviseithi.net 

Telangana

 TELANGANA

With no scrutiny, corrupt Sub-Registrars had their way

Marri Ramu

HYDERABAD, JUNE 04, 2017 00:00 IST

As there is no system in place for superiors to review the registrations done by them , facilitating fraudulent land deals became easy

Can a Sub-Registrar register five entire villages on someone’s name and yet his or her bosses in the Registration and Stamps Department be unaware of it?

An affirmative answer to this question explains how seeds were sown for the two biggest land scams of Miyapur and Balapur in the three-year-old history of Telangana State. The Sub-Registrar, who is in-charge of registration of specific area (described as sub-district) in the district, is the key position in the department. On the face of it, all transactions in the department were computerised. But the absence of a system to review the work executed by Sub-Registrars by their superiors (immediate boss is District Registrar) makes them all the powerful and immune from scrutiny.

For example, a SR registers sale of a building in Abids and the details are recorded in the office computer. “The software we use doesn’t send any message or alert to the DR or other higher-ups about the registration of the property,” a top official unwilling to be named said.

In other government wings like in the police department, the moment a First Information Report (FIR-which means registration of a case) is issued, all the officers in the department can access it and will get a copy of it in their intra-network. Some of them can be even accessed by the general public. “When the SR finalises a registration, none of the seniors can know about it and that created scope for the scam,” an investigator said.

The only way the DR can find out about such transactions is to specifically seek details of a registration and get the papers. “In a city like Hyderabad where real estate boom is on, the number of registrations would be too high each day and reviewing each registration on day-to-day basis is practically not feasible,” says an official.

Using this loophole in the department, the masterminds of the land scams got the registrations carried out as they wished. In Balanagar land scam, the registered document states that one person had sold five entire villages to another. It sounds ridiculous but the SR apparently went ahead with it since chances of superiors questioning the registration were nil. The two scams are a wake-up call to start corrective measures.

Mysuru will go Trin Trin

Mysuru will go ‘Trin Trin’ from Sunday

Laiqh A Khan

MYSURU, JUNE 04, 2017 00:00 IST

Bright yellow bikes set to boost non-motorised transport, in first-of-its-kind project

The humble bicycle, which has been edged out by cars and other vehicles on Mysuru’s roads over the last few decades is all set to make a comeback.

Trin Trin, the country’s first smartcard-based public bicycle sharing (PBS) initiative will be launched in the City of Palaces on Sunday.

With broad tree-lined roads, steady tourism and smartphone-savvy citizens, Mysuru scored over other cities when Karnataka’s Directorate of Urban Land Transport (DULT) looked for a candidate for the bike venture.

About 450 bicycles will be available, reviving memories of a Mysuru that had neighbourhood bicycle rental shops. But unlike those, Trin Trin offers commuters, for a fee, the convenience of picking up a bicycle from one of 48 docking stations across the city and dropping it off at another. After a month-long trial in December 2016, Trin Trin is all set for a formal launch.

Renting is free for the first one hour and users have to pay Rs. 5 for up to two hours, Rs. 10 up to three hours and so on. Of the 450 bikes, 30 geared ones are for those pedalling up to Chamundi Hills, a distance of seven km from the docking station at the foothills.

Bike sharing offers the city with 8.87 lakh people an alternative as it grapples with 8.15 lakh vehicles. The Comprehensive Traffic and Transportation Plan prepared by DULT for Mysuru had projected that the traffic woes would worsen if, along with public transport, walking and cycling were not promoted.

“Mysuru is a heritage city with good ambience and a strategy to promote cycling was necessary to ensure that the city continues to be liveable and exudes the same timeless charm,” said Murali Krishna, nodal officer from DULT for implementing the project. An opinion survey conducted about four years ago indicated that an overwhelmingly large number of people in the city were ready to use cycles. PBS, in its present form, does not envisage exclusive bicycle lanes at least for the next two years.

Project cost

The cost of the project, partly funded by World Bank’s Global Environmental Facility, for the next six years is Rs. 20.5 crore, covering the maintenance of the docking stations and bicycles. One of the key objectives of the project is to encourage local commuters as well as visitors — Mysuru receives more than 20 lakh tourists annually, including 5 lakh from foreign countries — to use bicycles as a preferred mode of travel.

To rent a bicycle, the citizens of Mysuru or tourists need to register themselves either online or by visiting one of the six registration centres situated close to tourism centres and obtain a smart card after paying Rs. 350, including a refundable deposit of Rs. 250.

At the docking stations, which are largely unmanned, but monitored by CCTV cameras, the commuter should place the smart card on the reader next to the bicycle, which facilitates its release from the dock. While returning, the commuter should slide the bicycle clip into an empty dock before placing the smart card on the reader to lock the bicycle.

Though the bicycles are equipped with a basket and a bell, the absence of a helmet and a rearview mirror was sorely felt during the trials. The authorities will be holding talks with Green Wheel Ride, a Mysuru-based enterprise to which the operations of the project are outsourced, to equip the cycles with a helmet and rearview mirror.

Renting a bycycle

Those who want to rent a bicycle need to register themselves either online or by visiting one of the six registration centres

They will have to obtain a smart card after paying Rs. 350, including a refundable deposit of Rs. 250

Renting is free for the first one hour

Users have to pay Rs. 5 for up to two hours, Rs. 10 up to three hours and so on

Of the 450 bikes, 30 geared ones are for those pedalling up to Chamundi Hills

Pondicherry Medical Admissions

Kiran Bedi reiterates allegation of violations in medical admissions

S Senthalir

PUDUCHERRY, JUNE 04, 2017 00:00 IST

‘Candidates forced to sign bond that they will serve colleges after completing course’

Alleging that candidates selected through Centac counselling for PG medical and dental courses under the State quota were either denied admission or were being admitted under unjust conditions in medical institutions in Puducherry, Lieutenant Governor Kiran Bedi on Saturday said: “We have on record from the candidates the kind of exploitation, violations and irregularities that they have been put through.”

Several candidates who were denied admission for not remitting the fees demanded by the self-financing medical colleges and deemed universities were present at Raj Nivas on Saturday morning for a meeting convened by the Lieutenant Governor to get their feedback on grievances related to the admission process.

After collating the feedback forms from the candidates, the L-G told the media: “The candidates have come here on our request. Each one of the students has suffered in one form or the other. We wanted to hear them out as to what has transpired during the process of counselling or admission. They have given us very valuable feedback of irregularities and injustice meted out to them at such an important point of their life. We have heard them and will proceed on what is needed to be done.”

A common complaint, she added, was that some medical institutions were asking for an unjust bond stipulating that after completing the course, the candidates would have to work for the institution for a specific duration.

“We will put in place a system to ensure that the undergraduate students do not undergo what the PG students experienced,” she said.

Parents agitated

Harried parents of candidates who were denied admissions in the self financing medical colleges and deemed universities in Puducherry waited at Bharathi Park for nearly three hours in anticipation of a solution to the imbroglio.

The parents told The Hindu that a few self-financing colleges and deemed universities were forcing the candidates to sign a bond that states they have to work in the medical colleges for five years after completing the PG courses. “Nowhere in the country has any institution asked the students to sign such a bond at the time of admission. Those who have refused to sign are denied admission,” said the father of a candidate on condition of anonymity.

Another parent added their son was asked to pay Rs. 35 lakh in addition to Rs. 5.5 lakh demand draft (DD) remitted at the Centac office. “What is the purpose of conducting counselling or constituting a Fee Committee? Why has the government not approached the courts? They could have filed contempt of court case against these institutions that are violating the law,” he said.

“It has been a month since we slept in peace,” said a mother. Her daughter who got a seat under merit list through Centac counselling under state quota was denied admission in a deemed university. “We need a solution. How long does the government expect us to run for admission? Why cannot they frame clear guidelines for the institutions and ensure that they follow them?,” she said.

Another parent claimed that his daughter was refused admission in a private medical institution even after the the Health Minister intervened. “This is happening despite the UGC giving clear guidelines. The second counselling had to take place only after the candidates selected in the first counselling were admitted in the colleges. We have lost so many seats under state quota because of this uncertainty,” he said. Many parents said their children would have easily got a seat in other States. “As the Centac counselling was conducted many were confident that they could pursue the course in Puducherry.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...