Sunday, June 4, 2017

'பேச்சால் கவர்ந்த கலைஞர்': எஸ்.வி.சேகர் வாழ்த்து



பேச்சாற்றலால் மக்களைக் கவர முடியும் என அண்ணாதுரைக்குப் பிறகு நிரூபித்து காட்டியவர் கலைஞர் கருணாநிதி என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி எஸ்.வி.சேகர் தி இந்து தமிழ் இணையதளத்துக்காக அளித்த பிரத்யேக வாழ்த்துச் செய்தியில், "எனக்கு 80-களிலிருந்தே எனக்கு கருணாநிதியுடன் பழக்கம். ராம நாராயணன் படங்களில் நடித்த போது அதன் வெற்றி விழாக்களில் அவரை சந்தித்திருக்கிறேன்.

பிராமண எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு ஆகியவற்றால் கொள்கைரீதியாக நான் அவரை ஏற்றுக்கொண்டதில்லை. எல்லாவற்றையும் தாண்டி, பேச்சினால் மக்களைக் கவர முடியும் என அண்ணாதுரைக்குப் பிறகு நிரூபித்து காட்டியவர் கலைஞர் அவர்கள்.

அவரது மகன் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் என பலருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்படிப் பழகும்போது, தனிப்பட்ட முறையில் நட்புக்கு பெரிய மரியாதை கொடுக்கக்கூடிய மனிதர் என்பது தெரிந்தது. ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர். அற்புதமான நகைச்சுவை உணர்வு உள்ளவர். ஒரே வரியில் நகைச்சுவையாக பதிலளிக்கக் கூடியவர்.

ஒருமுறை நான் அவரது வீட்டுக்கு போன போது, என்ன போன வார ஏதோ நூல் வெளியிட்டீர்களாமே என்று கேட்டார். நான் எனது பூணூலை காட்டி, நான் தினமும் தான் நூலை வெளியே இட்டுருக்கிறேன் என்றேன். அதை அவர் சிரித்து ரசித்தார்.

எனது மகன் திருமணம், எங்களின் 60வது திருமணம் என என் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரை தவறாமல் வந்துவிடுவார். அவருக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அட்சதை தட்டை நீட்டும்போது கைநிறையை அட்சதையை எடுத்துப் போட்டு ஆசிர்வாதம் செய்வார்.

என் மனைவி, எப்போதும் அவருக்குதான் ஓட்டுப் போடுவேன் என்பார். காரணம், கலைஞர் முதல்வராக இருந்தபோதும் நம் அழைப்பை மதித்து வந்துவிட்டு செல்கிறார் என்பார். இதுதான் எதிராளியையும் மாற்றக்கூடியதில் வல்லவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதே போல, சட்டமன்றத்தில் நான் பேசும்போது, "வீர வாஞ்சிநாதனுக்கு மணிமண்டம் கட்ட வேண்டும் என காமராஜர் அடிக்கல் நாட்டியிருந்தார். அந்த அடிக்கல், குற்றாலம் பக்கத்தில் இருக்கும் வண்ணாந்துறை என்ற இடத்தில் துணி துவைக்கும் கல் போல பயன்படுத்தப்படுகிறது. 30 வருடங்கள் ஆகிவிட்டது. மணி மண்டபம் கட்ட வேண்டும்" என சொன்னேன். அதற்கு, "நமது சட்டமன்ற வாஞ்சிநாதன் கேட்கிறார்" என என்னைக் குறிப்பிட்டு கலைஞர் சொன்னார். அப்போது அதிமுக கட்சிக்கும் எனக்கும் சில பிரச்சினைகள் இருந்தது. இருந்தாலும் ஒரு எம்.எல்.ஏவாக என் கடமையை செய்ய வேண்டும் என நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதற்கு சட்டமன்ற வாஞ்சிநாதன் என கலைஞர் குறிப்பிட்டார்.

கலைஞருக்கு இப்போது உடல்நலம் குன்றியதாக கேள்விப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறார் 94 வயது வரை வாழ்ந்து, இப்படி நோய்வாய்ப்பட்டு மீண்டுவருவது மிகப்பெரிய விஷயம்.

கலைஞர் தலைமையின் கீழ் கிடைத்த பயிற்சி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...