Monday, August 14, 2017

Harsh lessons of the Gorakhpur tragedy

What has happened in Gorakhpur isn’t merely about oxygen cylinders and unpaid bills—it is a symptom of many deeper problems
Livemint




A child admitted in the Encephalitis ward at the BRD Hospital in Gorakhpur. India’s healthcare system is in a shambles. Public spending has increased but only marginally over the past two decades—from 1.1% of GDP in 1995 to 1.4% in 2014. Photo: AFP


The death of over 30 children within a span of 48 hours at the government-run Baba Raghav Das (BRD) Medical College hospital in Gorakhpur last week is in equal parts tragic, shameful and outrageous. But what is perhaps more galling than the death of little babies is that what happened in Gorakhpur was neither the first nor will it be the last. Remember Malkangiri and Malda?

Since 2012, 3,000 children suffering from Japanese Encephalitis have reportedly died at BRD Hospital, which serves as the nodal point for all such cases in the region. This time around, the fatalities have attracted more attention because the state’s callousness seems to have touched a new low. According to initial reports, many of the children died because their oxygen supply was cut off as the hospital hadn’t paid its dues to the supplier—though the Uttar Pradesh government has denied these allegations and the matter is under investigation.

But even if these allegations are found to be true, the fact is that what has happened in Gorakhpur isn’t merely about oxygen cylinders and unpaid bills—it is a symptom of many deeper problems.

At the top of the list is India’s abysmally low public spending on healthcare. That at least partly explains why the country’s healthcare system is in a shambles. Public spending has increased but only marginally over the past two decades—from 1.1% of gross domestic product in 1995 to 1.4% in 2014. The infant mortality rate in India in 2015 was 38, according to the World Bank—far better than the 165 in 1960 but lagging comparable countries such as Bangladesh (31), Indonesia (23) and Sri Lanka (08). And the situation in even worse in some large states such as Uttar Pradesh, where around 50 out of every 1,000 children die before they reach the age of five.

India’s healthcare system is in a shambles. Public spending has increased but only marginally over the past two decades—from 1.1% of GDP in 1995 to 1.4% in 2014

Another problem with India’s healthcare system is acute manpower shortage. The country has only about one doctor for every 1,700 patients whereas the World Health Organization (WHO) prescribes at least one for every 1,000 patients. In other words, there is a shortage of about 500,000 doctors. The Medical Council of India (MCI) will have to reform the entire medical education system if this gap has to be filled, but that will be easier said than done. In the meantime, more healthcare providers need to be brought into the system, including nurses, optometrists, anaesthetists and AYUSH (ayurveda, yoga and naturopathy, unani, siddha and homoeopathy) workers. Nurses especially can and should be empowered so that they can take off some of the load from physicians.

A third problem is that a vast majority of people do not have health insurance in a country where the public health system has collapsed. Health shocks are one of the biggest reasons why people slip back into poverty. India’s efforts to extend coverage over the past decade or so have borne few fruits, even as other countries such as Germany, Japan and Thailand have built effective healthcare systems by insisting on some form of pre-payment and pooling of resources, either through taxation or insurance. India’s inability to find a workable model for itself has left its poor particularly vulnerable.

A vast majority of people do not have health insurance in a country where the public health system has collapsed

Even for those who can afford better, the choices are limited. Most state-run facilities are so poorly managed that they aren’t really an option. Private facilities may offer services, but there are serious quality issues when it comes to the poor. The government has been talking about a stronger partnership with the private sector in the field of healthcare but there has been little progress on the ground.

The problems and solutions are not new. The lack of political will to fix the healthcare system unfortunately means that Gorakhpur-like crises will continue to happen with morbid frequency across the country. The real question to ask is: will these children’s death galvanize the people to demand that their leaders fix the country’s broken healthcare system? Will it force the politicians to make healthcare a serious campaign platform?

Here, there is some soul-searching to be done. The public debate is more about the inadequate supply of healthcare than the lack of demand for it. Indian voters prefer private gains via subsidies rather than public goods such as clean water or good sanitation. There is an entire ecosystem of patronage politics based on this.

The lack of political will to fix India’s healthcare system unfortunately means that incidents like the Gorakhpur tragedy will continue to happen with morbid frequency across the country

As mentioned in these columns earlier, Monica Das Gupta, a research professor at Maryland Population Research Center, has pointed out in a research paper that voters typically prefer public funds to be used to provide private goods (such as medical care), rather than public goods (such as sanitation measures to protect the health of the population as a whole). The non-democratic regimes of East Asia achieved better outcomes by directing scarce resources on public healthcare measures rather than on providing advanced medical care.

Harsh, but true. The challenge is to make the provision of public goods a central feature of our democratic politics. That should be the deeper public policy lesson from the Gorakhpur tragedy.

How do you think India’s broken healthcare system can be fixed? Tell us at views@livemint.com

Gorakhpur deaths: CAG red flagged several flaws in June

Kalyan Ray, New Delhi, DH News Service, Aug 13 2017, 21:22 IST




Disruption in the oxygen supply is not the only deficiency that Gorakhpur's Baba Raghav Das medical college has experienced in the recent months.

The government-run hospital, which is in the eye of the storm following the death of nearly 60 kids in the last few days, was found deficient in using several critical medical equipment, the Comptroller and Auditor General reported in June 2017.

But ironically, it was the paediatrics department that fared better than other departments in terms of having the requisite number of medical instruments as per the Medical Council of India norms. The two worst performers were orthopaedics and ophthalmology departments.

The BRD hospital takes care of the bulk of the acute encephalitis syndrome cases, which is common in Gorakhpur and adjoining areas in the monsoon areas.

“In BRD, Gorakhpur, equipment like colposcope (used for screening of cases of cervix cancer), Nd-YAG Laser (used for intraepithelial lesion treatment), NST machine (used for foetal monitoring during labour) and ultra-sonography machine (used for prenatal diagnosis and gynaecological diagnosis) were not functional for more than five years due to lack of annual maintenance contract,” the CAG said.

The audit watchdog observed that 218 equipment installed in 11 departments of BRD, Gorakhpur was not covered under any annual maintenance contract.

The requests for allocation of funds of Rs 1.05 crore in October 2015 and Rs 1.01 crore in May 2016 were sent by the principal to the Directorate of Medical Education and Training for the AMC.

However, as of August 2016, no funds were allocated to the college, the CAG report noted, red-flagging the systemic flaws associated with the functioning of many government-run medical colleges and hospitals.

The hospital purchased an MRI machine in September 2015, in violation of several government norms giving undue benefit to the suppliers. But almost eight months later, when the hospital was audited in May 2016, the machine was lying unused as the hospital admitted that it didn't have trained staff.

The hospital is located in the constituency of Uttar Pradesh Chief Minister Yogi Aditya Nath.
MCI warns of fake agents from duping parents, kids

DECCAN CHRONICLE.

PublishedAug 14, 2017, 1:02 am IST

The MCI clarified that all the admissions made without the common counselling are illegal.



It has come to the notice of the MCI that unscrupulous elements are misleading students and parents by promising them admissions in the MBBS course in medical colleges.

Hyderabad: All the medical admissions will be based on the common counselling, stated the Medical Council of India (MCI). The council issued this statement following the reports of agents duping students and parents by promising them admissions with counselling.

It has come to the notice of the MCI that unscrupulous elements are misleading students and parents by promising them admissions in the MBBS course in medical colleges. The MCI clarified that all the admissions made without the common counselling are illegal.

While the directorate general of health services in the ministry of health will conduct the counselling for the 15 per cent all India quota and the seats in deemed universities, the designated authority will conduct the counselling for in states, an MCI notice said.

Sri Laxmi, an aspirant’s parent, said, “I am getting calls from the agents who are trying to lure us with the for seat on a daily basis. They are asking Rs 50,000 in advance. But I have fallen into their trap. It is good that MCI has issued a circular warning against these agents. In fact, many parents are not aware of them. So they end up paying money to these agents.”
Medical tragedy in Gorakhpur

DH News Service, Aug 14 2017, 1:19 IST

The utter callousness of authorities in Uttar Pradesh has resulted in the death of over 70 children at a government hospital in Gorakhpur. These deaths occurred over a span of six days. Several of the victims were new-borns in the neonatal ward. While a formal probe is yet to be done, initial investigations reveal that the children died due to a shortage of oxygen, an allegation that the UP government and authorities at the Baba Raghav Das Hospital have denied. It appears that the gas company supplying oxygen to the hospital stopped doing so because BRD Hospital had failed to clear bills of over Rs 68 lakh that were pending for months. Some reports say that the vendor’s contract with the hospital had ended in March. The result of this major lapse on the part of hospital authorities is that patients were denied oxygen. Several of the children were reportedly suffering from lung infections, others had been diagnosed with Japanese encephalitis. They all needed continuous supply of oxygen. 

But BRD Hospital was not in a position to provide them with this basic, yet critical, facility. It is shocking that the hospital management did not act even after several people, including its employees, had raised red flags over the dipping liquid oxygen levels in the plant. A Comptroller and Auditor-General Report in June had drawn attention to the state of affairs at this hospital. It pointed out that there was a 27% shortage of clinical equipment and 56% shortfall in non-clinical equipment against the minimum requirement prescribed by the Medical Council of India. Incidentally, the hospital was not suffering due to a lack of funds. So, why was payment to the oxygen supplier withheld?

The UP government has ordered a magisterial probe into the tragedy. But will anything substantial come of it? Or will it be yet another attempt to cover up the critical and multiple crises that grip India’s public healthcare system? At BRD Hospital, important evidence has already been destroyed. It appears that post-mortems were not conducted. Parents of the deceased children were made to take away the bodies immediately. All this will hinder efforts at establishing the cause of the children’s death.

The tragedy unfolding in Gorakhpur is not new. Similar tragedies occur at government-run hospitals and primary healthcare centres across the country. Patients are denied basic treatment. Lab attendants conduct surgeries because doctors don’t show up. Patients share ward space with stray dogs. Undoubtedly, India’s public healthcare system is in a grave crisis. Hopefully the probe into the Gorakhpur tragedy will throw full light on what ails the system.
குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு 'நோட்டீஸ்'
பதிவு செய்த நாள்14ஆக
2017
01:13

திருநீர்மலை: பல மாதங்களாக குடிநீர் கட்டணம் செலுத்தாத, ௧,200 வீடுகளுக்கு, திருநீர்மலை பேரூராட்சி, 'நோட்டீஸ்' வழங்கியுள்ளது.திருநீர்மலை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நாள் ஒன்றுக்கு, ஐந்து லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கிறது. இதற்காக, வீட்டு இணைப்புக்கு, மாதந்தோறும், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.திருநீர்மலை பேரூராட்சி யில் உள்ள பலர், குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இதனால், பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, 1,200 குடியிருப்புகள், ஓர் ஆண்டுக்கு மேலாக, குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்பது தெரிய வந்தது.இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம், ௧,200 குடியிருப்புகளுக்கு, நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், 'ஏழு நாட்களுக்குள் நிலுவையில் உள்ள தொகையை செலுத்தவில்லை எனில், இணைப்பு துண்டிக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சாலையோரம் கரடிகள் 'வாக்கிங்' : சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்14ஆக
2017
00:02




கூடலுார்: 'முதுமலை, சாலையோரங்களில் சுதந்திரமாக உலா வரும், கரடிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகில், சாலையோரங்களில் வன விலங்கினங்கள் உலா வருகின்றன.நேற்று முன்தினம், சாலையோரம், இரண்டு கரடிகள் உலா வந்தன. சுற்றுலா பயணியர், அவற்றின் அருகே வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்தினர். அங்கு வந்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை கூறி, அனுப்பினர்.

வனத்துறையினர் கூறியதாவது:காலை, மாலை நேரங்களில், சாலையோரம் வன விலங்குகள் வருகின்றன. வாகனங்களை நிறுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், யானை, காட்டெருமை போன்றவை, சுற்றுலா பயணியரை தாக்கும் அபாயம் உள்ளது. 

விலங்குகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில், ஈடுபடுவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'


பதிவு செய்த நாள்14ஆக
2017
04:01


புதுடில்லி: 'ஏசி ஓட்டல்களில் இருந்து, வீடுகளுக்கு வாங்கி செல்லும், 'பார்சல்' உணவுக்கும், 18 சதவீத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும், ஒரே வரி என்ற திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிட, 28 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.
'ஏசி' எனப்படும் குளிர்சாதன வசதி உடைய,  ஓட்டல்கள், மற்றும் மதுபான விடுதிகளுக்கு, 18 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. 'ஏசி' வசதி இல்லாத
ஓட்டல்களுக்கு, 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.எனினும், 'சில ஏசி ஓட்டல்களில், ஒரு தளத்தில் ஏசி பயன்பாடு இல்லை' என கூறி, 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.

இது குறித்து நேரடி வரிகள் வாரியம் கூறியதாவது:

ஏசி ஓட்டல்களில், ஒரு பகுதியில் மட்டும் ஏசி வசதி இல்லை என கூறி, 18 சதவீதத்திற்கு பதில், 12 சதவீத வரி வசூலிப்பதை ஏற்க முடியாது. அங்கிருந்து, 'பார்சல்' உணவு வாங்கி சென்றாலும், அதற்கும், 18 சதவீத வரி கட்டாயம் வசூலிக்க வேண்டும். ஓட்டலில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஏசி வசதி இருந்தாலும், அங்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளது.

திருமங்கலம்- - ராஜபாளையம் நான்குவழிச்சாலைக்கு மூன்று வழிகள் ஆய்வு: ராஜபாளையம் எம்.எல்.ஏ., தகவல்

பதிவு செய்த நாள்13ஆக
2017
23:46

ராஜபாளையம்:திருமங்கலம்- ராஜபாளையம் நான்குவழிச்சாலை பணிக்கு மூன்று வழிகள் ஆய்வு செய்யப்படுவதாக தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; ராஜபாளையத்தில் பை-பாஸ் ரோடு அமைக்க 2010ல் மாநில அரசு அனுமதி அளித்து நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை இணைந்து செய்தன. 

இப்பணியை விரைவுபடுத்தவும், திருமங்கலத்திலிருந்து ராஜபாளையத்திற்கு நான்கு வழிச்சாலை வசதி கோரியும் தேசிய நெடுஞ்சாலை முதன்மை பொதுமேலாளர் சின்னாரெட்டியிடம் மனு கொடுத்தேன். இதனையடுத்து மத்திய அரசு அனுமதி அளித்து பிப்ரவரியில் விரிவான திட்டத்திற்கான டெண்டர் தயாரிக்க ஆய்வுப் பணிக்காக மூன்றுகோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இந்த ஆய்வில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு மூன்று வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. 

மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொதுமேலாளர் நாக்வியை சந்தித்து, 'திருமங்கலத்திலிருந்து குற்றாலம், சபரிமலை கோயில், திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு ராஜபாளையம் வழியாக போக்குவரத்து உள்ளது.
இதனால் ராஜபாளையத்தில் கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்கும் விதமாக திருமங்கலத்திலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லையான சொக்கநாதன் புத்துார் விலக்கு வரை நான்குவழிச்சாலை பணியை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரினேன், அதற்கு அவர் உறுதி அளித்தார்' என தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து சசிகலா கண்ணீர் கடிதம்
'அ.தி.மு.க., என்ற இரும்புக்கோட்டையில், விரிசல் விழுந்து விடக்கூடாது. முன்பை விட, உறுதியாக செயல்பட்டு கட்சியையும், தமிழகத் தையும் காக்க வேண்டும்' என, சிறையில் இருந்தபடி, முன்னாள் முதல்வர், ஜெ.,யின் தோழி சசிகலா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.





பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா,

தொண்டர்களுக்கு எழுதியுள்ள, கண்ணீர் கடிதம்: ஜெயலலிதா நம்மோடு இருந்தால், நாம் எவ்வாறு உணர்வோமோ, அந்த உணர்வோடு தொண்டர்கள் கட்சியில், தாயின் பரிவை, பாதுகாப்பைதொடர்ந்து இனியும் உணரலாம்.

நம் கண் முன், ஜெ., காட்டிய லட்சிய பாதை, விரிந்து கிடக்கிறது. அதில், அ.தி.மு.க., என்ற, இந்த கட்சியின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும். இந்தியாவின், மூன்றாவது பெரிய கட்சி, அ.தி.மு.க., என்ற நிலையில் இருந்து சிறிதும் இறங்கக்கூடாது. 'இரும்பு கோட்டையில் விரிசல்விழுந்து விடாதா; தடி ஊன்றியாவது எழுந்து நிற்க முடியுமா...' என, எதிரிகள் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.

முன்பை விட உறுதியாக, கட்சியையும், தமிழகத்தையும் காக்க வேண்டும்.ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்டுள்ள இடைவெளியை,

எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. ஆண்டு முழுவதும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை, சிறப்பாக கொண்டாட வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

அ.தி.மு.க.,மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன்:அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.வில் இணைகிறார்

பதிவு செய்த நாள்13ஆக
2017
20:05

திருநெல்வேலி:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சென்னைக்கு அமித்ஷா வரும்போதுபாரதிய ஜனதாவில் இணைகிறார்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன்.நெல்லை தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஒரு முறை ஜெ.,அரசின்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். 2016 சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஜெ.,மறைவுக்கு பிறகு டி.டி.வி.,தினகரன்ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். இருப்பினும் அவர் சோபிக்கவில்லை. எனவே சமீபகாலமாக அ.தி.மு.க.,நிகழ்ச்சிகளிலோ அரசு விழாக்களிலோ பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கிறார்.தற்போது அவர் பாரதிய ஜனதாவில் இணைகிறார். வரும் 22ல் சென்னை வரும் பா.ஜ.,தேசிய தலைவர்அமித்ஷா முன்னிலையிலோ அல்லது காரைக்குடியில் நடக்கும் விழாவிலோ இணைகிறார்.இதுகுறித்து பா.ஜ.,மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகபா.ஜ.க.,வை முன்னிலைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமித்ஷாவின்வருகையின் நோக்கமும் அதுதான். தென் தமிழகத்தில் கட்சியில் தலித்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்நோக்கில் அந்த அமைப்பின் பிரமுகர்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சில தலித்கட்சி தலைவர்களிடம் பேசிவிட்டோம். ஒரு கட்சி தலைவர் தற்போதே எங்களுடன் இணைந்துவிட்டார்.

நீட் தேர்வு போன்ற நிலைப்பாடுகளில் எங்களின் குரலை ஒலித்துவருகிறார்.

இதே போல தென்மாவட்டங்களில் வேறு சமூகங்களை சேர்ந்த பிரமுகர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நயினார் நாகேந்திரனிடம் பேசிவிட்டோம். அவர் வெறுமனே வரக்கூடாது. 4 ஆயிரம்பேருடன் இணைய வேண்டும் என்பதுதான் கட்சியின் விருப்பமாகும். அவர் இணைந்ததும் மாநில அளவில் பொறுப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தரப்பில் பேச முயற்சித்த போது அவர் அலைபேசி "ஸ்விட்ச் ஆப் மோடி'லேயே இருக்கிறது. அமித்ஷா வின் சந்திப்பு பிறகு ஓங்கி ஒலிக்கும் போலிருக்கிறது.
சேமிப்பு கணக்கு வட்டியை இந்தியன் வங்கியும் குறைத்தது

பதிவு செய்த நாள்13ஆக
2017
08:21



புதுடில்லி : சமீ­பத்­தில், பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்­கிற்­கான வட்­டியை, 0.50 சத­வீ­தம் குறைத்­தது. இதன்­படி, சேமிப்பு கணக்­கில், 1 கோடி ரூபாய் வரை உள்ள இருப்­பிற்கு, 3.5 சத­வீத வட்டி; அதற்கு மேற்­பட்ட தொகைக்கு, 4 சத­வீத வட்டி தொட­ரும் என, தெரி­வித்­தி­ருந்­தது.இதை பின்­பற்றி, இந்­தி­யன் வங்­கி­யும், சேமிப்பு கணக்­கிற்­கான வட்­டியை குறைத்­து உள்­ளது.இது குறித்து, இந்­தி­யன் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகி­தம், இரண்டு வித­மான வகை­யில் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.இதன்­படி, 50 லட்­சம் ரூபாய் வரை உள்ள, சேமிப்பு கணக்கு இருப்­பிற்கு, 3.5 சத­வீத வட்டி வழங்­கப்­படும். மேலும், 50 லட்­சம் ரூபாய்க்கு மேற்­பட்ட இருப்­பிற்கு, 4 சத­வீத வட்டி விகி­தம் தொட­ரும். இது, வரும், 16 முதல், அம­லுக்கு வரு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

திருச்சுழியில் 32 மி.மீ., மழை

பதிவு செய்த நாள்13ஆக
2017
23:07

விருதுநகர்:பருவமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. தாழ்வான பகுதிகள், ரோடுகளில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை 8.30 மணிப்படி மழையளவு (மி.மீ.,) :அருப்புகோட்டை 9, சாத்துார் 7, ஸ்ரீவில்லிபுத்துார் 4, சிவகாசி 3.20, விருதுநகர் 24, திருச்சுழி 32, காரியாபட்டி 24.20, வத்திராயிருப்பு 7.20, வெம்பக்கோட்டை 1, கோவிலாங்குளம் 14.40. மாவட்டத்திலேயே திருச்சுழியில் அதிகபட்சமாக 32 மி.மீ., மழை பெய்துள்ளது.

ஆக்சிஜன் இருப்பு வைத்துக்கொள்ளுங்க! : மருத்துவ கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு


பதிவு செய்த நாள்13ஆக
2017
23:53



லக்னோ: 'உ.பி.,யில், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும், போதிய மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்' என, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உ.பி.,யில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், 63 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. உ.பி., மாநில அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில், உ.பி., மாநில அரசு கல்லுாரிகளுக்கு, அம்மாநில மருத்துவக் கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், போதிய மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் வைத்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வித்துறை தலைமை செயலர் அனிதா பட்நாகர் ஜெயின், லக்னோவில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கோரக்பூர் சம்பவத்துக்கு பின், அனைத்து அரசுக் கல்லுாரிகளுக்கும், முக்கியத்துவம் வாய்ந்த, மருத்துவ கல்வி மையங்களுக்கும், கடிதம் எழுதி உள்ளோம். மருத்துவமனைகளில், மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல், தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளும்படி, அந்த கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு, பாக்கி வைத்திருந்தால், உடன், அதை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லுாரிகளின் முதல்வர்களையும் தனிப்பட்ட முறையில், தொலைபேசியில் அழைத்து, மருந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். இவ்விஷயத்தில் கவனக்குறைவை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என, கண்டிப்பாக தெரிவித்துள்ளோம்.

கோரக்பூர் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் இறந்ததற்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல. ஆக்சிஜன் சப்ளை நிறுவனங்களுக்கு, பாக்கி எதுவும் வைக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், குழந்தைகள் பிரிவு கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த, கபீல் கான், அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ரூ.85 கோடி செலவில் மருத்துவ ஆய்வு மையம் : குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை தீவிரமாக ஆய்வு செய்ய, உ.பி., மாநிலம், கோரக்பூரில், 85 கோடி ரூபாய் மதிப்பில், பிராந்திய மருத்துவ மையம் ஏற்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட, கோரக்பூர் மருத்துவமனைக்கு, மத்திய சுகாதார அமைச்சர், ஜே.பி. நட்டா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன்பின், அமைச்சர், நட்டா கூறியதாவது:கடந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரின்போது, உ.பி.,யில், மருத்துவ ஆய்வு மையம் அமைக்க உதவுவதாக, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்திடம் உறுதி கூறியிருந்தேன். இங்கு வருவதற்கு முன், கோரக்பூரில், மருத்துவ ஆய்வு மையம், 85 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள், அவற்றுக்கான காரணங்கள் குறித்து, இந்த மையம் ஆய்வு செய்யும்.இவ்வாறு நட்டா கூறினார்.யோகி ஆதித்யநாத் கூறுகையில்,''குழந்தைகள் இறந்ததால், அவர்களின் பெற்றோருக்கு எவ்வளவு வேதனை ஏற்படுமோ, அதை விட பல மடங்கு வேதனை, எனக்கு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.


6 முக்கிய சட்டங்களுக்கு  ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்

புதுடில்லி:ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற மூன்று வாரங்களில், ஆறு முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.



ராம்நாத் கோவிந்த், ஜூலை, 25ல், ஜனாதிபதி யாக பதவியேற்றார்.பார்லிமென்டில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த ஆறு சட்டதிருத்தங்களுக்கு, அவர் ஒப்புதல் அளித்துள்ளார். கடற்பகுதிகளில் நடக்கும்


குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோர் தொடர் பான வழக்குகளை விசாரிப்பதற்கான, அதிகார வரம்பை நீட்டிக்கும் சட்டதிருத்தம், அவற்றில் முக்கியமானது.இதைத்தவிர, 127 ஆண்டு பழமை யான, காலனி ஆதிக்க கோர்ட்டுகளின் அட்மிரல் சட்டம், 156 ஆண்டு பழமையான, அட்மிரல் கோர்ட் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்யும் சட்ட திருத் தத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதற்கான சட்டதிருத்தம், ஏப்., 24ம் தேதி, ராஜ்யசபா வில் நிறைவேறியது; லோக்சபா வில்,மார்ச், 10ம் தேதி, சட்டதிருத்தம் நிறைவேறியது. குழந்தை களுக்கு, இலவச, கட்டாய கல்வி பெறுவதற்கான உரிமை அளிக்கும் சட்டதிருத்தம், ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், சமூக - பொருளாதாரம் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க அதிகாரம் அளிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல்

தரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்கள் சட்டம், தேசிய தொழில்நுட்ப கல்வி மையம், அறிவியல் கல்வி, ஆராய்ச்சி சட்டம் ஆகியவற்றுக்கும், ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
கண்ணனை நினைக்காத நாளில்லையே!இன்று கிருஷ்ண ஜெயந்தி


பதிவு செய்த நாள்13ஆக
2017
21:01



குருவாயூரப்பன்மீது நாராயண பட்டத்திரி பாடிய ஸ்தோத்திரம்நாராயணீயம்.கிருஷ்ண ஜெயந்தியான இன்று இதை படிப்பதன் மூலம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
.
* மஹா விஷ்ணுவே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படுபவனே! ஆனந்த வடிவானவனே! கோபியரின் மனத்தில் இருப்பவனே! துன்பம் நீங்க, பக்தியோடு உன்னை வணங்குகிறேன்.
* மும்மூர்த்தியில் சிறந்தவரே! சர்வேஸ்வரனே! கருமை நிறக் கண்ணா! மந்திர
சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பவன் நீயே என்று கூறப்பட்டுள்ளது. உன்னையே ஆதிசங்கரரும் போற்றி வணங்கியுள்ளார். அந்த திருப்பாதங்களை போற்றுகிறேன்.
* தேவாதி தேவனே! அனைவருக்கும்உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மைஇல்லாதவற்றில் ஆசை கொண்டு துன்பப்படும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா
இன்பத்தையும் அடைவான். ஓடோடி வந்து அருள்புரிய வேண்டுமென உன்னை வணங்குகிறேன்.
* எங்கும் நிறைந்தவனே உடல், மனம்,மொழியால் இந்த பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ அத்தனையையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன்னை நினைக்காத நாளில்லையே! உன் திருவடியில் சரணடைகிறேன்.
* உன்னிடம் சரணடைந்தவர்கள் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவர். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் எனக்கு கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.
* ஜகந்நாதப் பெருமாளே! ஹரியே! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு என
எல்லாவற்றையும்,நண்பர் மட்டுமில்லாமல் எதிரியையும் கூட, உன்னுடைய வடிவமாக உள்ளத்தில் காண்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் கிடைக்கும் பேறு பெற்றேன்.
* பெருமானே! உன்னிடம் ஒன்றி விட்டதால் வழக்கமான பசி, தாகம் மறந்து போனது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனத்தளர்ச்சி என்பதே இல்லை. உன் அருளால், மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.
* பெருமாளே!கலியுகத்தில் உன்பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலும் கூட போதும்! உன் அருள் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் இந்த கலியுகத்தில் அனைவரும் பிறக்க ஆசைப்படுகின்றனர்பாக்கிய வசத்தால் பிறந்த என்னையும்உன் திருவடியில்ஏற்று கொள்வாயாக!
* புருஷோத்தமா! கங்கா நதியில் நீராடுதல், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக் கிராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளுக்கு வழிவகுக்கும். இந்த எட்டு வழிகளிலும் என்னை ஈடுபடுத்தி நல்லருள் புரிவாயாக

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை

பதிவு செய்த நாள்14ஆக
2017
02:57




புதுடில்லி : அண்டை நாடான சீனாவில் உள்ள விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடக்கிறது.

இந்தியா - சீனா இடையே, டோக்லாம் எல்லைப் பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால், இந்திய பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: சமீபத்தில் டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, சீனாவின் ஷாங்கான் புடோங்க் விமான நிலையம் வழியாக பயணம் செய்தேன். புடோங்க் விமான நிலையத்தில், சக்கர நாற்காலி மூலம் செல்லும் பயணியருக்கான வாயிற்கதவு அருகே, இந்திய பயணியரிடம், சீன விமான நிறுவன ஊழியர்கள் அவதுாறாக நடந்து கொண்டனர். நம் நாட்டவரை பழிக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர். இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதன்படி, இந்தப் பிரச்னை குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் புடோங்க் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.


வாக்காளர் பட்டியலில் பெயர்  ஆர்வம் காட்டாத என்.ஆர்.ஐ.,


புதுடில்லி: என்.ஆர்.ஐ., என ஆங்கிலத்தில் சுருக் கமாக அழைக்கப்படும்,வெளிநாடு வாழ் இந்தியர்கள், வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் வசதி அளித்த போதிலும், 24 ஆயிரம் பேர் மட்டுமே, இதுவரை பதிவு செய்து உள்ளனர்.





வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாத வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்தபடியே, தேர்தல் ஆணைய இணைய தளத்தில், 'ஆன்லைனில்' பதிவு செய்து கொள்ள லாம்.இதன்படி, வேறு நாடுகளில் குடியு ரிமை பெறாத, வெளிநாடு வாழ் இந்தியர்கள், வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும்; இந்தியா வில் அவர்களது வசிப்பிடம் உள்ள தொகுதியில் பெயரைபதிவு செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பின், அவர் களுக்கு, தேர்தல் ஆணையம் தகவலை அளிக்கும்; அவர்கள் தொகுதிக்கு வந்து, பாஸ் போர்ட்டை காண் பித்து, ஓட்டுப் போட முடியும்.இந்த வசதியை பயன் படுத்தி 24 ஆயிரத்து,348 பேர் மட்டுமேஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 23 ஆயிரத்து, 556 பேர், கேரளாவை சேர்ந்தவர்கள்; 364 பேர், பஞ்சாபை யும், 14 பேர்,குஜராத்தையும் சேர்ந்தவர்கள்.

புதிய சட்டம்:

தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆர்வமு டன் ஓட்டளிக்கும் வகையில், புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இது, நடைமுறைக்கு வரும்போது, வெளிநாடு வாழ்

இந்தியர்கள், அங்கிருந்தபடியே, தங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை, ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி, ஓட்டுப்போட முடியும்.

செலவு செய்து, இந்தியாவிற்கு வர வேண்டிய தேவை இல்லை என்பதால், இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுப்போட ஆர்வம் காட்டலாம்.


சென்னை:தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.





தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றுவதால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது. இதனால், 17ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு முடிவு அடிப்படை யில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி. எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தகுதி தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது. தமிழகத்தில் மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அதனால், 'நீட்' தேர்வை அடிப்படையாக வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தினால், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, தமிழக அரசு அரசாணை இயற்றியது.

பிரதமருடன் பேச்சு

இதை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், ரத்து செய்தன. அதனால், 'நீட்' தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும் என, முடிவாகியிருந்தது.இந்நிலையில், 'அவசர சட்டம் இயற்றினால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க, மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக, அறிவித்துள் ளார்.

இதுகுறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரத மரையும், என்னையும், சுகாதார அமைச்சர், ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகார அமைச்சர், ஜிதேந்திர சிங் போன்றோரை சந்தித் தனர்.இதில், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள் ளன. தமிழகத்தில், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகளில், 'நீட்' அமலுக்கு வந்துவிட்டது.

'நீட்' தேர்ச்சியில், தமிழக கிராமப்புற மாணவர் கள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், மருத் துவ வாய்ப்புகளை அவர்கள் இழந்துள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை ஆதரிக்க தயார். இதே கோரிக்கையை தான் தமிழக அரசும் வைக்கிறது.

இதுகுறித்து, பிரதமரை சந்தித்து, நானும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பேசினோம். தமிழக அரசு வழங்கியுள்ள புள்ளி விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். அதன்படி, தமிழகத்திற்கு, இந்த ஆண்டு மட்டும், 'நீட்' தேர்வில், விலக்கு கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்.

பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக முதன்மை செயலரிடமும் பேசினோம். அதற்கு, 'நீட் தேர்வு தொடர்பாக, மத்திய அரசு இனி, சட்டம் கொண்டு வராது;

மாநில அரசுஅவசர சட்டம் இயற்றினால், அதற்கு நாம் உதவ தயாராக உள்ளோம்' என, பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

மத்திய அரசு தயார்

எனவே, கிராமப்புற மாணவர்களின் நிலைமையை விளக்கி, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு ஒத்துழைப்பு தர, மத்திய அரசு தயாராக உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து, நிரந்தர விலக்கு கிடையாது. தமிழக, 'மெட்ரிக்' பாடத்திட்டத்தை மாற்றி, கூடுதல் பயிற்சி அளித்து, 'நீட்' தேர்வில் தகுதி பெற வைத்தால், தமிழகத்தில் மட்டு மின்றி, வெளிமாநிலங்களில் உள்ள கல்லுாரி களிலும், தமிழக மாணவர்கள் மருத்துவ இடங்களை பெறலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மத்திய அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அவசர சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் தலைமையில், அதிகாரிகள் குழு, நேற்றிரவு டில்லி சென்று, முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சிக்கு, பலன் கிடைக்கிறது. தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றுவதால், பல மாதங்களாக நீடித்த, மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது.

தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்கு கிடைத்து, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் படி, 'கட்-ஆப்' கணக்கிட்டு, 17ம் தேதி, மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, August 12, 2017


நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !!

நாடு முழுவதும் மே 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசு அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்ைல. நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் அந்த

அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். நீட் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும்’’ என்றார்.

University of Madras

NEET: TN waiting for favourable decision from Centre

 | Updated: Aug 11, 2017, 04:09 PM IST

(Representative image)(Representative image)
CHENNAI: After the Supreme Court dismissed Tamil Nadu's appeal against the Madras high court order that quashed a GO for 85% reservation for state board students in medical admissions, Tamil Nadu chief minister Eddapadi K Palaniswami met Prime Minister Narendra Modi in Delhi on Friday and requested him to exempt the state from NEET for medical admissions.

"We expect a favourable decision from the Centre," the chief minister said after the meeting.

Palaniswami met the PM after the swearing-in ceremony of Vice-President Venkaiah Naidu.

Medical counselling to start next week

Officials in the Directorate of Medical Education said they would have to start counselling by next week so that they could complete the process before the Supreme Court deadline of August 31.

"We have got more time to complete BDS admission as the Dental Council of India has extended deadline by ten days (till September 10). But we are yet to receive any such extension from the Medical Council of India. We will have to start the medical counselling soon," said director of medical education Dr A Edwin Joe.


This year, the state selection committee is in charge of admission of students to MBBS courses in 22 state-run colleges and 10 self-financing colleges as well as BDS students in 19 colleges. While most states and Union territories have completed the first round of counselling and have started the process for the second round, Tamil Nadu is yet to publish its rank list. There are more than 50,000 applications this year for 3,377 MBBS seats.

Latest Comment

When was the SC judgement of squashing TN govt 85% reservation for SB... may be I missed the udgement ... Any way it must be a NEET based ranking, with 69%/31% caste based counselling from this year ... Read MoreGopalarathnam Krishna Prasad

The state put on hold the counselling, scheduled to begin on July 15, after the Madras high court quashed a GO allowing reservation of 85% of medical and dental seats in the government quota for students from the state board.


Selection committee secretary Dr G Selvarajan has said the committee is ready with the rank list in all permutations, with or without NEET, and with or without the 85% reservation. "We will publish it as soon as we get orders from the government," he said.


சத்திரப்பட்டியில் டாஸ்மாக் கடை சூறை ; பெண்கள் ஆத்திரம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:05




சத்திரப்பட்டி; விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி கிழவன் கோயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடினர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இருநாட்களுக்கு முன் சத்திரப்பட்டி கிழவன் கோயில் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. இப்பகுதியை சுற்றி வீடுகள், பேண்டேஜ் ஆலைகள், அகதிகள் முகாம் உள்ளன. கடை முன்புள்ள பாதையை குறவர் காலனி மற்றும் அகதிகள் முகாமில் வசிப்போர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மது குடித்த சிலர் இப்பகுதியில் நடந்து சென்ற சிறுவனை தாக்கினர்.

ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 50 க்கு மேற்பட்டோர் நேற்று காலை டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததையடுத்து, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்தனர். உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த மது பாட்டில்களை பெட்டியுடன் எடுத்து வந்து கடை வாசலில் போட்டு உடைத்தனர். ' சேதமுற்ற மது பாட்டில்களின் மதிப்பு ரூ.4 லட்சத்திற்கும் மேல் இருக்கும் ,'என. கடை மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
இப்பகுதி சந்தனமாரிகூறுகையில்,“ஏற்கனவே வீட்டில் உள்ள ஆண்கள் யாரும் கூலி வேலை சென்று பணம் கொண்டு கொடுப்பதில்லை. இதில் டாஸ்மாக் கடை வேறு திறந்துள்ளதால் வீட்டில் நிம்மதி கெட்டு விடும். அதற்கு பயந்தே எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரிகள் யாரும் வராததால் பாட்டில்களை உடைத்தோம். பெண்களின் பிரச்னைகளை புரிந்து கடையை அகற்ற வேண்டும்,” என்றார். வன்னியம்பட்டி போலீசார் மதுபாட்டில்களை சேதப்படுத்திய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக ஆலோசித்து
வருகின்றனர்.

15ம் தேதி வரை மழை தொடரும்

பதிவு செய்த நாள்12ஆக
2017
04:50


சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும், 15ம் தேதி வரை மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் சில இடங்களிலும், 14 மற்றும், 15ம் தேதிகளில், பல இடங்களிலும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 'சென்னையில் அவ்வப்போது, லேசான மழை பெய்யும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், மழைக்கு அதிக வாய்ப்புள்ளது; வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்' என்றும் அறிவித்துள்ளது.
85 சதவீத ஒதுக்கீடு ரத்து செல்லும் ; 'நீட்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:02


மருத்துவப் படிப்புகளில், தமிழக பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் விதித்த தடையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மருத்துவப் படிப்புகளுக்காக, தேசிய அளவிலான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில், 15 சதவீதத்தை, தேசிய ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அளித்தது. மீதமுள்ள, 85 சதவீத இடங்களில், தமிழக பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீதமும், பிற பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதமும் அளிக்கும் வகையில் உள்ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள்ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்தார்; அதை, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர் அமர்வு, நேற்று தீர்ப்பளித்து.

நீதிபதிகள், தீர்ப்பில் கூறியதாவது:நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்கும்போது, தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கேட்டீர்கள். விலக்கு கேட்டு ஜனாதிபதியிடம் அளித்த மனு நிலுவையில் இருக்கும்போது, உள்ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்? வேறு எந்த மாநிலமும் இதுபோல் செய்யவில்லை. தமிழக அரசு மட்டும், இவ்வாறு செய்து வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. உள்ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவுக்கான தடை தொடரும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

கல்வி செயலரை மாற்ற தடை : ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்11ஆக
2017
23:59

சென்னை: 'கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, அரசு நியமித்துள்ள இரு குழுக்களின் உறுப்பினர்களில், எந்த மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறு ஆய்வு செய்யணும் : காஞ்சிபுரம் மாவட்டம், சதுரங்கபட்டினத்தைச் சேர்ந்த, ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், 'அரசு நியமித்துள்ள இரு குழுக்களின் உறுப்பினர்களும், எந்தவித இடையூறும் இல்லாமல், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். 'இதற்கு, அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குழுக்கள் நியமிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வரை, நீதிமன்ற மேற்பார்வையில், குழு இயங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வால், பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. அதனால், உயர் கல்வியை தொடர்வதில், மாணவர்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது உள்ளது.
எனவே, இரண்டு விதமான குழுக்களை, அரசு அமைத்துள்ளது. பாடத்திட்டத்துக்கான, 10 பேர் அடங்கிய குழு, 13 பேர் இடம் பெற்ற உயர்மட்டக் குழு என, இரு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழுவில், கல்வியாளர்களும், அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுக்கள், ஏற்கனவே செயல்பட துவங்கிவிட்டன. நவீன தொழில்நுட்ப யுகத்தில், சர்வதேச தரத்துக்கு இணையாக, தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அறிக்கையை, குழுக்கள் விரைவில் அளிக்க உள்ளன.

இடையூறு கூடாது : மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கல்வித் துறை செயலர் உட்பட, உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழுவில், அரசு மாற்றம் எதுவும் மேற்கொள்ளக் கூடாது. குழுக்களின் செயல்பாட்டிற்கு, எந்தவிதத்திலும் இடையூறு செய்யக் கூடாது.
அகில இந்திய அளவில் போட்டி தேர்வு எழுத, கல்வியின் தரத்தை மேம்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பள்ளிக்கல்வித் துறை செயலர் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மனித நேயமும் மரித்ததா... ஆம்புலன்சுக்கு தவித்த குடும்பம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:58




பெரம்பலுார்:நோயால் இறந்த கணவரின் உடலை, வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, குழந்தைகள், நான்கு மணி நேரம் மருத்துவமனை வளாகத்தில் தவித்தனர். -

அரியலுார் மாவட்டம், கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ், 55. காச நோயால், மிகவும் அவதிப்பட்ட இவரை, நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, மனைவி ராணியும், மூன்று குழந்தைகளும், 108 ஆம்புலன்சில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவமனை வராண்டாவில், ஆம்புலன்ஸ் ஸ்டெரச்சரில் இருந்த துரைராஜை டாக்டர் பரிசோதித்தார். துரைராஜ் இறந்து விட்டதாகவும், வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படியும் டாக்டர் கூறியுள்ளார். கணவர் உடலை எப்படி எடுத்துச் செல்வது, ஆம்புலன்சுக்கு பணம் வேண்டுமே, என்ன செய்வது என்று வழி தெரியாத ராணி, 9 - 11 வயதுடைய தன் மூன்று குழந்தைகளுடன், இரவு, 9:30 மணி வரை, கதறி அழுதபடி நின்றிருந்தார்.
மருத்துவமனை ஊழியர் களிடம், இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு கதறியுள்ளார்; 

அவர்களும் கண்டுகொள்ள வில்லை. இதை பார்த்து, மருத்துவமனையில்
சிகிச்சையில் இருந்தவர்கள், திரண்டனர்.அதில் ஒருவர், மொபைல் போனில் படமெடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், இரவு, 9:45 மணிக்கு துரைராஜ் உடலை, மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்துச் சென்றனர்.
4 நாட்கள் தொடர் விடுமுறை : கோயம்பேட்டில் நெரிசல்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:01




சென்னை: நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, பல ஆயிரம் பேர், சொந்த ஊர் செல்ல திரண்டதால், கோயம்பேடு பகுதி, போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது. மழையும் பெய்ததால், பயணியர் பெரிதும் திணறினர்.

சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா என, நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் வசிக்கும், பல ஆயிரம் பேர், நேற்று ஒரே நாளில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, சொந்த ஊர் செல்ல முயன்றனர். இதனால், அப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன், நேற்று மாலை திடீரென மழை வெளுத்து வாங்கியதால், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றி வட்டார பகுதிகள் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளித்தது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், வடபழனி, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், வாகனங்கள் நெரிசலில் சிக்கி, பல மணி நேரம், ஒரே இடத்தில் முடங்கின. இதுபோல், சென்னையின் பல பகுதிகளிலும், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: போலீசார் மற்றும் போக்குவரத்து துறையின் குளறுபடியால், சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கிறோம். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய, போதிய போலீசார் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். பயணியர் வசதிக்காக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை இளைஞர் மரணம் : கேரள டாக்டர்கள் கைது?
பதிவு செய்த நாள்12ஆக
2017
00:21

திருவனந்தபுரம்: சிகிச்சை கிடைக்காமல், கேரளாவில், நெல்லை
இளைஞர் இறந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனைகளில் பணியில் இருந்த டாக்டர்களை கைது செய்ய, போலீசார் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன், 21, சமீபத்தில், கேரள மாநிலம், கொல்லத்தில், விபத்தில் சிக்கினார். அவருக்கு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருந்த டாக்டர்கள், சிசிச்சை அளிக்க மறுத்து விட்டனர். 

தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால், ஏழு மணி நேர போராட்டத்துக்கு பின், ஆம்புலன்சிலேயே, முருகன் உயிர் பிரிந்தது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன், சட்டசபையில் பகிரங்க மன்னிப்பு கோரினார். 

இந்நிலையில், முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, இரக்கமில்லாமல் செயல்பட்ட டாக்டர்களை கைது செய்ய, போலீசார் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், டாக்டர்கள் கைது செய்யப்படுவர் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியல்வாதிகளால் கடும் மன உளைச்சல் ரயில் முன் பாய்ந்து கலெக்டர் தற்கொலை

பதிவு செய்த நாள்11ஆக
2017
23:43




காஜியாபாத்: உ.பி.,யில் தற்கொலை செய்த, பீஹார் மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் உடல், காசியாபாத் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் காசியாபாத் ரயில் நிலையத்திலிருந்து, 1 கி.மீ., தொலைவில், ரயில் தண்டவாளத்தில், ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அருகில் கிடந்த, தற்கொலை குறிப்பை படித்த போது, அங்கு கண்டெடுக்கப்பட்ட உடல், பீஹார் மாநிலம், பக்சர் மாவட்ட கலெக்டர், முகேஷ் பாண்டேயுடையது என தெரிய வந்தது.

நம்பிக்கை இழப்பு : தற்கொலை குறிப்பில் எழுதப்பட்டிருந்ததாவது:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான எனக்கு, வாழ்வின் மீதான பிடிப்பு போய்விட்டது. மனிதர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். கடும் மன உளைச்சலால் அவதிப்படும் நான், இனியும் வாழ்வதில் பயனில்லை. என் தற்கொலைக்கான காரணம் குறித்து, விரிவான விபரங்களை, நான் தங்கியிருந்த அறையில் உள்ள பையில் வைத்துள்ளேன். தற்கொலை செய்வதை தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

இரங்கல் : முகேஷ் தங்கியிருந்த ஓட்டலின் ஊழியர்கள் மற்றும் அவரின் நண்பர்களிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். முகேஷ் பாண்டேயின் தற்கொலைக்கு, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வெளுத்து கட்டிய மழை

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:13

மதுரை: மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை பகுதியில் நேற்று முன்தினம் மழை வெளுத்து கட்டியது. பெரியாறு, வைகை அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை.தென் மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலையில் துவங்கும் மழை இரண்டொரு மணி நேரம் தொடர்ந்து பெய்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி சண்முகாநதி 2 மில்லி மீட்டர், வீரபாண்டி 10, வைகை 1, மஞ்சளாறு 1, மருதாநதி 29:6. பேரணை 39, குப்பணம்பட்டி 5.2, ஆண்டிபட்டி 36.6, மதுரை 20.3, சாத்தையாறு 68, கள்ளந்திரி 11, சிட்டம்பட்டி 1, புளிப்பட்டி 3.2, மேலுார் 7.7, தனியா
மங்கலம் 2, கொடைக்கானல் 1 மி.மீ., என மழையளவு பதிவானது.நீர் வரத்து: பெரியாறு அணைக்கு 261 கன அடி வரத்து இருந்தது. வெளியேற்றம் 75. வைகை வரத்து 9. வெளியேற்றம் 40. சோத்துப்பாறை வரத்து 3. வெளியேற்றம் 3. சண்முகாநதி வரத்து இல்லை.
வெறியேற்றம் 10. மஞ்சளாறு, சண்முகாநதி,சாத்தையாறு அணைகளுக்கு வரத்து, வெளியேற்றம் இல்லை. பெரியாறு, வைகை உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணை நீர் மட்டம் உயரவில்லை.

அணைகள் நீர்மட்டம்
(நேற்றைய நிலவரம்)
பெரியாறு : 112.50 (மொத்தம் 152)
வைகை : 30.51 (71)
சோத்துப்பாறை : 70.52 (126)
மஞ்சளாறு : 30.50 (57)
மருதாநதி : 37.08 (64)
சண்முகாநதி : 20.95 (52)
சாத்தையாறு : - (29)
நேர்காணலில் பங்கேற்காதவருக்கு ஓய்வூதியம் நிறுத்தம் : முதன்மை செயலர் உத்தரவு


பதிவு செய்த நாள்12ஆக
2017
05:12


மதுரை: நேர்காணலில் பங்கேற்காத, வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் முதல் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தும்படி கருவூலகணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் உத்தரவிட்டார்.இதுகுறித்து கருவூல மண்டல இணை இயக்குனர்கள், அலுவலர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாவது

:ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, ஓய்வூதியர் நேர்காணல் ஏப்., முதல் ஜூலை வரை நடந்தது. 31.7.2017 தேதியின்படி நேர்காணலுக்கு வராதவர்களின் பட்டியல் தயார் செய்ய வேண்டும். நேர்காணலில் வருகை தராததால், ஆக., முதல் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களின் அலைபேசி எண்ணிற்கு, குறுந்தகவல் மற்றும் பதிவு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும், என கூறியுள்ளார்.''மதுரை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஓய்வூதியர்களில், 700 பேர் நேர்காணலில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் ஆகஸ்ட் முதல் நிறுத்தப்படும்,'' என, மாவட்ட கருவூலர் ஏ.ஜி.முரளி தெரிவித்தார்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிறைவு : 89 ஆயிரம் இடங்களுக்கு ஆளில்லை

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:11

சென்னை: அண்ணா பல்கலை யின் இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இதில், 86 ஆயிரத்து, 355 இடங்கள் நிரம்பியுள்ளன; 89 ஆயிரத்து, 101 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டை விட, 3,414 மாணவர்கள் குறைவாகவே, இன்ஜி., படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 533 இன்ஜி., கல்
லுாரிகளில், 1.80 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 17ல் கவுன்சிலிங் துவங்கியது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு, தொழிற்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலிங் முடிந்தது. பின், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23ல் பொது கவுன்சிலிங் துவங்கியது; 20 நாட்கள் நடந்த கவுன்சிலிங், நேற்று முடிந்தது. 

கவுன்சிலிங்கிற்கு, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 552 பேர் அழைக்கப்பட்டனர்; 48 ஆயிரத்து, 583 பேர் வரவில்லை. 

இறுதியில், 86 ஆயிரத்து, 355 பேர் இடங்கள்   பெற்றனர்; 89 ஆயிரத்து, 101 இடங்கள் காலியாக உள்ளன.

மெக்கானிக்கலில் 19 ஆயிரத்து, 601 பேர் சேர்ந்துள்ளனர்; எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், 16 ஆயிரத்து, 60; கம்ப்யூ., சயின்ஸ், 14 ஆயிரத்து, 769; எலக்ட்ரிக்கல், 10 ஆயிரத்து, 106; சிவில், 8,199 மற்றும் ஐ.டி., பிரிவில், 5,532 பேர் சேர்ந்து உள்ளனர்.

மீதமுள்ள இடங்களுக்கு, வரும், 17ல், துணை கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கு, 16ம் தேதி நேரில் சான்றிதழ்களுடன் சென்று, பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களை, www.tnea.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஏ.டி.எம்.,-களில் ரூ.500, 100 மட்டுமே கிடைக்கும்
பதிவு செய்த நாள்12ஆக
2017
04:56

மதுரை; வங்கி விடுமுறை நாட்களில், பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க, ஏ.டி.எம்.,களில் 500, 100 ரூபாய்களை மட்டுமேவைக்க, ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் சார்பில் தமிழகத்தில் 21 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இரண்டாவது சனி, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினவிழா காரணமாக ஆக., 12 முதல் 15 வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுகிறது. இந்நாட்களில், ஏ.டி.எம்.,களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தேசிய வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏ.டி.எம்.,களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க 500, 100 ரூபாய் வைக்கப்படும். ஒரு ஏ.டி.எம்.,ல் அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை வைக்கலாம். ஏ.டி.எம்.,களுக்கு பணம் எடுத்து செல்ல, ஆக.,14ல் பணபெட்டகத்தை திறந்து வைக்க, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் அன்றாட செலவிற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' மற்றும் கிரடிட், டெபிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனை நடப்பதால், வங்கி விடுமுறை நாட்களில் பெரிய பாதிப்பு இருக்காது, என்றார்.

'கட்டண பாக்கிக்காக மாணவர்கள் சான்றிதழை நிறுத்தக்கூடாது'

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:05


'கட்டண பாக்கியை வசூலிக்க, மாணவர்களின் சான்றிதழ்களை, தராமல் நிறுத்தி வைக்கக்கூடாது' என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.

சான்றிதழ் நிறுத்திவைப்பு : அண்ணா பல்கலை இணைப்பில், தமிழகம் முழுவதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜி.,கல்லுாரிகள், ஆர்கிடெக்சர்மற்றும் மேலாண் நிர்வாக கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த கல்வி ஆண்டில் நடந்த, இறுதி தேர்வுக்கு பின், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதில், பல இன்ஜி., கல்லுாரிகள், கட்டணம் பாக்கி வைத்துள்ளமாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளன. இதனால், உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் செல்ல முடியவில்லை என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கான, மாணவர் விவகாரத்துறை இயக்குனர், இளைய பெருமாள், அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

நடவடிக்கை : அதில், 'கட்டண பாக்கி மற்றும் நிர்வாக பிரச்னைகளுக்காக, மாணவர்களின் சான்றிதழ்களை வழங்காமல், கல்லுாரிகள் நிறுத்தி வைக்கக்கூடாது. சான்றிதழ்களை தரவில்லை என, புகார் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

- நமது நிருபர் -


நீட்' விவகாரத்திற்கு தீர்வு உண்டா?  அரசின் தலையீட்டால் குழப்பம்

'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் தவறான அணுகுமுறையால், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பும் பறிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள் ளனர்.





தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்க, 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும், அவசர சட்டத்தை இயற்றிய தமிழக அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

இதனிடையே, 'நீட் தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்கும்; அதில், தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சத வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஜூலையில், தமிழக அரசு அறிவித்தது. 'நீட் தேர்வே வேண்டாம்' என்ற, தமிழக அரசு, 'நீட் தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும்' என, திடீரென அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவப் படிப்பில், தமிழக அரசின் உள் ஒதுக்கீடு அரசாணையை, உயர்நீதிமன்றம்

ரத்து செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடும், நேற்று தள்ளுபடி யானது. அதனால், தமிழக பாடத் திட்ட மாணவர் களின் மருத்துவ கனவு கானல் நீராகி உள்ளது.

இது குறித்து, கல்வியாளர்களும், ஆசிரியர்களும் கூறியதாவது: உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் பல முறை உறுதியாக பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, வேறு வேறு வடிவங்களில், தமிழக அரசு மனு செய்கிறது. இதன்மூலம், உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கோபத்துக்கு தான், தமிழக அரசு ஆளாகி யுள்ளது. மற்ற மாநிலங் கள், உச்ச நீதிமன்ற உத்தரவைபின்பற்றியுள்ளன.

பொதுவாக, சி.பி.எஸ்.இ., மாணவர்களை விட, தமிழக பாடத்திட்ட மாணவர்கள், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் மற்றும் 'கட் -- ஆப்' பெறுவது வழக்கம். அதே போல், 'நீட்' தேர்விலும், தமிழக மாணவர்கள் ஓரளவு அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., மாணவர்களை பொறுத்தவரை, 'நீட்' தேர்வில், ஓரளவு மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2, 'கட் - ஆப்' மதிப்பெண் வரிசையில், அவர்கள் பின்தங்கி விடுவர்.எனவே, 'நீட்' மற்றும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு, சமமான, 'வெயிட்டேஜ்' வழங்கி, தரவரிசை பட்டியல் தயாரித்தால், தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, 95 சதவீத இடங்கள் கிடைக்கும். இந்த முறையைத் தான், கல்வியாளர் களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், தமிழக அரசு விரிவான ஆலோசனை நடத்தாமல், 'எடுத்தோம், கவிழ்த்தோம்' என, முன் னுக்குப் பின் முரணான முடிவுகளை எடுத்தது, தமிழக பாடதிட்ட மாணவர்களை குழப்பம் அடைய

Advertisement

வைத்துள்ளது. அதே போல்,சி.பி.எஸ்.இ.,க்கு தனி ஒதுக்கீடு, தமிழக பாடத்திட்ட மாணவர் களுக்கு தனி ஒதுக்கீடு என, அரசாணை பிறப்பித்தது, தமிழக மாணவர்கள் மத்தியி லேயே, பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர் களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

'நீட்' தேர்வுப்படி, ஒரு வேளை, சி.பி.எஸ்.இ., மாணவர்களே முன்னணியில் வந்தாலும், தமிழக அரசின் கொள்கைப்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, இடங்கள் ஒதுக்க லாம். எனவே, 'நீட்' தேர்வை பின்பற்றினால், அதிலும், தமிழக மாணவர்கள் மட்டுமே, பயன் பெறுவர் என்பதை, தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைவிடப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

கிராமப்புற மாணவர்களின் நலன் எனக்கூறி, தமிழக அரசு உள்ஒதுக்கீடு அரசாணை கொண்டு வந்தது. பின் தங்கிய மாணவர் களுக்கு,மருத்துவ சேர்க்கையில் இடம் கிடை க்க வேண்டும் என, அரசு நினைத்திருந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், உள் ஒதுக்கீடு என, அரசாணை கொண்டு வந்தி ருக்கலாம். ஆனால், அரசாணையில் அரசு பள்ளிகள் பற்றி எந்த தகவலும் இல்லை.

தமிழக பாடத்திட்டத்தில்,தனியார் பள்ளி களில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 45 லட் சம் மாணவர்கள் படிக்கின்றனர். அதை விட, 55 சதவீதம் குறைவாக, அரசு பள்ளி களில், 21.50 லட்சம் பேர் மட்டுமே படிக்கின்றனர். எனவே, தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை, தனியார் பள்ளிகளுக்கே சாதகமாக உள்ளது.

மாத விலக்கு நாட்களில் விடுப்பு : கேரள சட்டசபையில் விவாதம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:22

திருவனந்தபுரம்: மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாத விலக்கு நாட்களில், விடுப்பு அளிப்பது குறித்து, கேரள சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. ''இது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, மாநில முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை : கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநில அரசின் பல துறைகளில் பணியாற்றும் பெண்கள், மாத விலக்கு நாட்களில், உடல், மன ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும், எனவே, மாத விலக்கு நாட்களில், அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கையானது : இது குறித்து, சட்டசபையில் நேற்று, காங்., உறுப்பினர், கே.எஸ்.சபரிநாதன் பேசியதாவது: பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். மாத விலக்கு காலங்களில், பெண்கள், உடல் மற்றும் மன ரீதியான உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஜப்பான், இந்தோனேஷியா, தைவான் நாடுகளிலும், சீனாவின் சில மாகாணங்களிலும், மாத விலக்கு காலத்தில் பெண் பணியாளர்களுக்கு, விடுப்பு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. பெண்களின் உடல், மன நலம் கருதி, மாத விலக்கு நாட்களின் போது, அவர்களுக்கு விடுப்பு அளிக்கும் வகையில், மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதிலளித்து, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால், மாத விலக்கு ஏற்படுகிறது; இது இயற்கையானது. பணிபுரியும் பெண்களின் செயல் திறன் அதிகரிக்க, அவர்கள், உடல், மன நலத்துடன் இருப்பது அவசியம். 

எனவே, மாத விலக்கு காலங்களில், பெண்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து, சட்டசபையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், மாத விலக்கு காலங்களில், பெண்களை வீட்டை விட்டு ெவளியேற்றுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதாவுக்கு, அண்டை நாடான, நேபாளத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Friday, August 11, 2017

எம்பிபிஎஸ்: 85% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

By DIN  |   Published on : 11th August 2017 12:47 PM  |
SC

புது தில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வு என்பது நாடு முழுவதும் பொதுவான ஒன்று. அப்படி இருக்கையில் மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை கொண்டு வந்தது ஏன்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பிற மாநிலங்கள் கொண்டு வராதபோது தமிழகம் மட்டும் ஏன் கொண்டு வந்தது? மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு என்பது செல்லாது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று தமிழக அரசின் வழக்குரைஞர் விளக்கம் அளித்தார்.
எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு, ஜூன் 22-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஜூலை 14-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள்ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.
தமிழக அரசின் மனுவில், தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை, பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தயாரித்துள்ளது. தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநிலப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன.
இது, மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தை சீர் செய்ய, ஒதுக்கீடு வழங்குவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை சமமாகக் கருத முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டது.
மேல் முறையீட்டு மனு தள்ளுபடி: இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நூட்டி ராம் மோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: நிகழாண்டு (2017 - 18) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக எடுக்க வேண்டும். இதற்கு மேல் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்தக்கூடாது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதற்கான போதிய முகாந்திரங்கள் இல்லை. ஆகையால், அரசின் மேல் முறையீட்டு மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.
மேலும் , இந்த வழக்கைப் பார்க்கும்போது தமிழகம் முழுவதிலும் சமமற்ற நிலை மற்றும் பல இடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை என்று தெரிகிறது. அதேபோன்று, தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிகள் போதியளவில் இல்லை.
அந்த வசதி இருக்கும் பள்ளிகளில், அதற்கான தரம் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படாமலோ அல்லது கண்காணிக்கப்படாமலோ இருக்கிறது. மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் அரசின் கொள்கையானது இயற்கைக்கு முரணானது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள்தான் உயர்கல்விக்கான நுழைவுவாயிலாக உள்ளது. ஆகையால், மாணவர்களின் அறிவு மற்றும் திறமையை மேம்படுத்தும் நோக்கில், பாடத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும் தேசிய அளவிலான தரத்தில் குறையாத வகையில், போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் 3 முதல் 5 ஆண்டு இடைவேளையில் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மேம்படுத்தி மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

ஆகஸ்ட் 12 மின்தடை

By DIN  |   Published on : 11th August 2017 04:38 AM  |  
பராமரிப்புப் பணிகள் காரணமாக அண்ணாசாலை பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
அண்ணாசாலை: கிளப் அவுஸ், எத்திராஜ் கல்லூரி, சத்யமூர்த்தி பவன், ரஹீஜா டவர்ஸ், அண்ணாசாலை கதவு எண். 748 முதல் 727 வரை, ஹோட்டல் கன்னிமாரா, அரசு கலைக் கல்லூரி, பாந்தியன் சாலை, க்ரீம்ஸ் சாலை.

Anna University

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...